You are on page 1of 7

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு

உள்ளங்களுக்காக …

என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி ,  நல்ல சூட்டிப்பு. அவளுக்கு


இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு
வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல ,  சும்மா பேச்சுக்குக் கூட
ஒரு பையன வட்டுக்குக்
ீ கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ
? –  ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும் …  திடும் …  திடும் …

கலாச்சாரக் காவலர்கள் ,  கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை.  Drop


your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில் ,  கவலைப்பட்டவரும் ஒரு


ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க  “ உன் வாழ்க்கை உன் கையில் ”


னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள் ,  அதுக்கு முறையாக சென்ட்-ஆப்
பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல் ,  காலேஜ் ,  வேலைக்குப் போயி , 


கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார்
ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே


நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க.   (
இங்க “ செட்டில் ”  ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர்
வேறுபட்டாலும் ,  சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற
விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம் ,  மத


சடங்குகளைத் தவிர்த்து ,  பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான்
இருக்கும். சில வட்டுல
ீ சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க ,  சில
வட்டுல
ீ ஒத்தப்படை ,  கண்டம் ,  திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா  “


அழுத புள்ளைக்குதான் பால் ” னு புரிஞ்சுக்கிட்டு ,  வட்டுக்கு
ீ போனப்
போடும்போதெல்லாம் “ இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன் , 
ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன் ” னு ஜாடையா பிட்டப் போட்டுப்
பாப்பாங்க. அசரலேன்னா ,  கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு  “ அப்புறம்.. ,  இவனுக்கு
எப்போ ” னு மெதுவா வட்டுல
ீ கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா
கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி
பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற
மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட
கல்யாண ஆசைய வட்டுக்குத்
ீ தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வட்டுல


ீ இருந்து , “ சரி உனக்குப் பாக்கலாமாப்பா ” னு கேட்டா
மட்டும் ,  உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப்
புடிக்காதுங்கற மாதிரி  “ ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம் ” னு சலிச்சுக்குவானுக.

அவங்களும்  “ வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா ” ன்னு இவன்


கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன்
எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம்
சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே ? 
கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு  ”  சரி என்னமோ பண்ணுங்க
போங்க ”  அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா  “ என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது ?” ன்னு அவங்க


கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த


விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொர கனவு இருக்கும். சிலருக்கு  “ சின்ன
வடு
ீ ”  பாக்யராஜ் மாதிரி ,  சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு
பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய ,  திறமையான மற்றும்
அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு ,  பத்தாததுக்குத் தன்னோட
குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும் ,  உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும் , 
பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும் ,  பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும் ,  அப்படி
,  இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன்


அழகா இருக்கணும் ,  ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும் ,
ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும் , 
ஆனா மினிமம்  H1B  விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி
இருக்கணும் ,  ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும்  –  அப்படிங்கற ரேஞ்சுல
அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க.   ( இத பத்தி வாலி கூடக் கொஞ்சம்
விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க ,  இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட


இருக்கற ஒரு பொண்ணோ ,  பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட
சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு  “ எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும் ” னு


புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி  “ பெரியவங்க ,  நீங்களாப் பாத்து எதச்
செஞ்சாலும் ,  அத நான் ஏத்துக்கறேன் ” னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா ,  ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால  “


ஆயிரத்தில் ஒருவன் ”  மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா
இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட் ,  ரயில்வே ஸ்டேஷன் ,  சினிமா


தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும்
அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல , “ வாடா ,  கல்யாணத்துக்குப் போகலாம் ” னு கூப்பிட்டா , “ வேற


வேலை இல்லை உங்களுக்கு ” ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப்
போயிருவான். ஆனா இப்போ  , “ ஏம்மா ,  இந்த மாசம் யாருக்கும் கல்யாணம்
வைக்கலையா ,  ஒரு பத்திரிகைக் கூட வரலே ” ன்னு கேக்கற அளவுக்கு மாறிப்
போய்டுவான். ஏன்னா ,  எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும் ,  இந்த
மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு
பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.
ஆக  “ ஒரு கல்யாணத்துக்கோ ,  கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன்
,  குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன் ” ங்கறத அன்னலட்சுமி
சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா  “ தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா ”
ன்னு வட்டுல
ீ கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி ,  அந்த நல்ல போட்டோவ
அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“ மாப்ள ,  என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா ”  (MANI,KATHIR and ESWAR ,SHIVA)  ன்னு
எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா , “ சோலோ ” 
அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே ? ன்னெல்லாம் அறிவு பூர்வமா
ஆராய்ச்சி பண்ணாம ,  அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ
எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு
சொல்லிறலாம்.

“ ப்ள ீஸ்டா ,  மறுபடியும் எட்றா ,  தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன் ” னு


கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க …

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும் ,  ஷாம்பூ


கீ ம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும் ,  தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற
நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு
கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க ,  உலகத்துலேயே பெரிய


பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு.  “ நான் பார் உன்ன நச்சுனு
எடு்திருக்கேன் ,  நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே ” ன்னு அடிச்சுக்குவாங்க.
இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா  300 ல இருந்து  500 
வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா
இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு
அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா ,  ரகம்
ரகமா ட்ரை பண்ணி ,  ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும்
அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி ,  சாந்தமா முகத்துல பால் வடிய ,  ஒரே
ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா ,  ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு


சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள்  –  மாட்ரிமோனி சைட் , 
மங்கள சந்திப்பு , சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி ,  இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும் ,  கனிவாவும் , 


கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப  “ என்ன
பாஸ் ,  உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல ?  நம்புளுது ஒண்ணும் முடிவே
தெரியல ?” னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத்
தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும்.   (“
இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு ” னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா ,  இவன் ஒரு ரெண்டு பேர


செலக்ட் பண்ணி ,  அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி , 
லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி ,  அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன்
இருக்காரே ,  அதாங்க ஜோசியரு ,  அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன
சொல்லிடுவாரு , “ ரெண்டு பொருத்தம் கூட இல்ல ,  மீ றிப் பண்ணி வெச்சா  2012 ல
உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம் ” ங்கறா மாதிரி எதாவது
சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வட்டுலயும்


ீ நடக்கும். பெரும்பாலும் நம்மாள்
செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு ,  இவனப் பத்துல எட்டு
ஆக்கி வெச்சிருக்கும். ஆக ,  என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ
அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி ,  வெறப்பா  “ மணல்


கயிறு ”  கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற  AND Gate
எல்லாத்தையும்  OR Gate ஆ மாத்திப் பாப்பாங்க ,  அப்புறம் நாள்பட ,  நாள்பட
கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில ”
பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது ,  பந்தம் கெடச்சாக் கூடப் போதும் ”
னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே
விவாகம் ,  காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க
புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி ,  ஜோசியர் சார் ஓகே பண்ணி ,  ஒரு
நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும்
போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு
பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி
மௌனம் ,  முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள் , கொஞ்சம் உபசரிப்பு ,  சில சுய
தம்பட்டம் , “ அது தெரியுமா ,  இது தெரியுமா ”, “ இது புடிக்குமா ,  அது புடிக்குமா ”, 
இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய
வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா ,  பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன ? 


திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா ,  பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ


இல்லையோ ,  நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன ?

சங்கீ த ஸ்வரங்கள் ஏழே கணக்கா ,  வேறே ஏதும் இருக்கா ?

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே ,  ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான்


பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க
இதுக்குன்னு தனியா  “ சங்கீ த ஸ்வரங்கள் ” னு ஒரு ஸ்கீ ம் விட்டாலும் விடுவாங்க
போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க ,  பேட்டரி மாத்தி ,  சிம் மாத்தி ,  போன்


மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது ,  விடிய விடியப் பேசறது ,  விடிஞ்சு
எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறதுன்னு ,  தொடர்ந்து நாப்பது மணி நேரம்
பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான்
இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த
எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.
போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ ,  பீச்சுக்கோ ,  பார்க்குக்கோ
வட்டுக்குத்
ீ தெரிஞ்சோ ,  தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல
நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும் ,  வரவசனம்



பேசிய பல  ‘ மௌனம் பேசியதே ’  சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும்
சரித்திரம் சிரிப்போடு ,  சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க ,  பத்திரிகை விநியோகம் ,  புதுத் துணி


எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு


பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி , “Please
consider this as my personal invite” னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை
முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து , “ மனம் கவர்ந்த
மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே ” ன்னு ஆட்டோகிராப்
போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு , 
அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக்
கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க
முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும் ,  கல்யாணத்துக்கு வர்ற நம்ப


நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க
ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல
ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல ( Tupperware)  சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக


வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே  ,  கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு
பெருமா ….. ற்றதுக்குத் தயாராகுங்கள்!

You might also like