Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veppamarathu Pookkal
Veppamarathu Pookkal
Veppamarathu Pookkal
Ebook139 pages1 hour

Veppamarathu Pookkal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101004112
Veppamarathu Pookkal

Read more from Ga Prabha

Related to Veppamarathu Pookkal

Related ebooks

Reviews for Veppamarathu Pookkal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veppamarathu Pookkal - GA Prabha

    http://www.pustaka.co.in

    வேப்பமரத்துப் பூக்கள்

    Veppamarathu Pookkal

    Author:

    ஜீ.ஏ.பிரபா.

    GA Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது.வழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது.

    நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து வீட்டில் உலகாளும் ஈசனே உமா மகேஸ்வரா என்று பாடல் ஒலிக்கும்போது எழுந்து வாக்கிங் கிளம்பி விடுவார். இருபது வருடமாக இங்கு வீடு கட்டி வந்த காலத்திலிருந்து வழக்கம்.

    சிறு வயதிலிருந்து ஒன்றாகப் படித்த மூன்று பேர் மொத்தமாக இடம் வாங்கி அருகருகே வீடு கட்டிக் கொண்டார்கள். கீழே ஒரு போர்ஷன், மாடியில் ஒன்று. வலப்பக்கம் ராமானுஜம். இடப் பக்கம் சங்கர நாராயணன். வரிசையாக எல்லார் வீட்டு வாசலிலும் வேப்ப மரங்கள். பூவரசு, காகிதப் பூ செடிகள். வண்ண மயமாக, வேப்பம்பூக்களின் நறுமணத்துடன் பொழுது விடிகிறது.

    இப்போதும் கம்மென்று மணம். மூச்சை இழுத்து விட்டார்.

    புது வாசனையோடு பூக்களின் மணம் நாசிக்குள் நுழைய குட் என்று துள்ளிக் குதித்து எழுந்தார். அம்பத்தி நாலு வயசுக்கு உடம்பு நல்ல ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்தது. கண் மூடி நன்றி இறைவா என்று கை கூப்பி வணங்கினார்.

    அஞ்சரை மணிக்கே நல்ல வெளிச்சம் வந்து விட்டது. மார்ச் இறுதி. மாசி பிறந்து பாதி கடந்து விட்டது. மரங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பித்து, வீட்டு வாசல் முழுதும் வெள்ளை நிறத்தில் வேப்பம்பூக்களும், பழங்களும் உதிர ஆரம்பித்து விட்டது.

    ரகுராமன் ரூம் லைட்டை அனைத்து விட்டு வெளியில் வந்தார்.

    மேல் போர்ஷனில் அவரின் மூத்த சகோதரி பிரேமா இருக்கிறாள். அவள்தான் எல்லோருக்கும் மூத்தவள். அடுத்து கௌசல்யா. பக்கத்திலேயே இருக்கிறாள். கடைசி ரகுராமன்.

    திருமணம் ஆன நாளிலிருந்து இங்குதான் இருக்கிறாள். மாமாவுக்கு சொந்த பிசினஸ். ஒரே பையன். அவன் பி.ஈ முடித்து விட்டு ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறான். அடிக்கடி நான் இங்கிருந்து போறேன் என்று சொல்லிக் கொண்டே, முப்பது வருஷமாக இதே வீட்டில் இருக்கிறாள். அம்மாவுக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.

    கௌசல்யா எங்கோ தள்ளி இருக்கிறாள் என்று வருத்தம். நீ பக்கத்துலேயே ஒரு போர்ஷன் கட்டு. அதுல அவ வந்து இருக்கட்டும் என்று நச்சரித்தாள். ஆனால் கௌசல்யா மறுத்து விட்டாள். நான் தூரவே இருக்கேன். அப்பப்போ வந்து பாத்துக்கறேன் என்றவள் ரகுராமனிடம் தம்பி உன் பக்கத்துல நாகப் பாம்பு இருக்கு. ஜாக்கிரதை என்று எச்சரிப்பாள்.

    தெரிகிறது. ஆனாலும் என்ன செய்ய? அம்மாவுக்கு மூத்த பெண் செல்லம். அதுவும் அம்மாவுக்கு பக்கவாதம் வந்த பின் பிரேமாவின் உதவி அதிகம் தேவை. சில சௌகர்யங்களுக்காக சில விஷயங்களை அட்ஜஸ்ட் செய்துதான் போக வேண்டியிருக்கிறது.

    பிரியம், மனிதாபிமானம், முக தாட்சண்யம் என்றே வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்தாகி விட்டது. சொல்லப் போனால் வாழ்க்கையையே.

    ரகுராமன் நினைவை ஒதுக்கி விட்டு கிச்சனில் சென்று அடுப்பை பற்ற வைத்து பாலைக் காய்ச்சி அம்மாவுக்கு பனங்கல்கண்டு போட்டு தனியாக எடுத்து வைத்து விட்டு தனக்கு பிளாக் காபி கலந்து கொண்டார்.

    "எழுந்துட்டியா? அம்மா சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வந்தாள்.

    நான்தான் வாக்கிங் போகணும். நீ எதுக்கு சீக்கிரம் எழுந்துண்டே?

    தூக்கம் வரலைடா

    என்ன கவலை உனக்கு. அதான் பெரிய பொண்ணு கூடவே இருக்கா. சின்னவ டெய்லி வந்துட்டு போறா? என்ன கவலை?

    உன்னை நினைச்சுத்தான். சின்ன வயசு. இப்படி வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறே.

    உனக்கு நான் சின்னப்பையன். ஆனா எனக்கு அம்பது வயசு ஆறது சிரித்தார்.

    பார்த்தா தெரியலை. இன்னைக்கெல்லாம் வயசு ஒரு காரணமே கிடையாது. பிரேமாவோட சின்ன மாமனார் அறுபது வயசு. போன வாரம் புதுசா ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுண்டு வந்திருக்கார். நேத்து நைட் பூரா பிரேமா அதைப் பத்திதான் பேசிண்டு இருந்தா.

    ஓஹோ நேத்து நைட்டு பூரா தூங்காம அவர் மண்டையைத்தான் உருட்டிட்டு இருந்தீங்களா? அவர் சின்னப் பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கலை. அவருக்கு சமமான வயசுதான். அவருக்கு உடம்புல பல நோய்கள். மனைவி இல்லை. வயசுக் காலத்துல ஒரு துணை அவசியம்னு செஞ்சுண்டிருக்கார். அதைப் பத்தி அவங்களே கவலைப் படலை. உங்களுக்கு என்ன?. உங்க குடும்பத்தைப் பத்திப் பேசுங்க.

    சிறிது கோபத்துடன் பேசினார்.

    அதுக்கிலடா. உனக்கு அம்பதுதான் நடக்கறது. நீ ஏன் வேற கல்யாணம் செஞ்சுக்க கூடாது?

    அம்மா அதைப் பத்திப் பேசாதே. முடிஞ்சு போன விஷயம். ஒரு தடவைதான் கல்யாணம் செஞ்சுக்க முடியும். அதுவும் முடிஞ்சு போச்சு.

    அவ உன்னை உதறிட்டுப் போயிட்டா. நீ இன்னும் அவளையே நினைச்சிண்டே இப்படி ஒத்தை மரமா நிக்கறியேடா

    இப்படி நிக்கறதை பத்தி நானே கவலைப் படலை.

    பெத்துட்டேனே.

    ஏன் பெத்தே. ரெண்டு போதும்னு நிறுத்தியிருக்கலாம்ல?

    என்னவோ, இதானும் ஆம்பளைப் குழந்தையா பிறக்காதான்னு ஒரு ஆசை.

    எதுக்கு ஆம்பளைப் பையன். அவன் வாழ்க்கையை இழந்துட்டு உன் பொண்களை எல்லாம் காப்பாத்தணும்னா.- வெடுக்கென்று கேட்டார்.

    ‘வீட்டுக்கு ஒரு ஆம்பளைப் பையன் நீ. கூடப் பொறந்தவாளுக்கு நீதானே செய்யணும்? இப்படி சலிச்சுக்கலாமா?"

    அம்மா சலிப்போடு காபித் தம்ளரை நீட்டினார்.

    வார்த்தைகளை யோசித்துப் பேசு. யார் சலிச்சுக்கறா? உன் ரெண்டு பொண்களுக்கு கல்யாணம் செஞ்சு, இன்னை வரைக்கும் சீர் செய்யறேன். பிரேமாவோட பையன், கௌசல்யாவோட பொண்ணு எல்லோருக்கும் நான்தான் பீஸ் கட்டினேன், கட்றேன். பிரேமா நம்ம வீட்டிலேயேதான் இருக்கா. சாப்பிடறா. அதுக்கு நான் காசு கூட வாங்கறதில்லை.

    நான் வேணா அவகிட்ட சொல்லி பணம் வாங்கித் தந்துடறேன்.

    ஏம்மா, நீ நினைச்சதைத்தான் பேசுவியா? என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா?

    .............

    உனக்கு உன் பொண்ணுங்க உசத்திதான். ஆனா என்னையும் சிந்திச்சுப் பாருன்னு சொல்றேன். இவ்வளவு செஞ்சும் சலிச்சுக்கறேன்னு நீயே சொன்னா எப்படி? இன்னும் என்ன செய்யணும்? உனக்கு, அக்காவுக்காகன்னு நிறையச் செஞ்சாச்சு. என் வாழ்க்கையையே வேண்டாம்னு ஒதுக்கியாச்சு. இதுக்கே மேலயும் என்ன வேணும்?"

    அம்மாவின் மனம் உறுத்தியது. மெதுவாகப் பேசினாள்.

    அப்படி இல்லைடா. உனக்கும் ஒரு வாழ்வு வேணும்னு விரும்றேன்.

    ஏன் அவளையும் துரத்தி விடவா?

    ‘ஏண்டா, நான் அப்படி நினைப்பேனா? –அம்மா ஆதங்கத்தோடு கேட்டாள்.

    நான் சொல்றதை நீயும் புரிஞ்சுக்கலை.

    புரியுதும்மா. ஆனா என்னை இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லாதே.

    அவதான் போயிட்டாளே. எங்க இருக்கான்னு தெரியலையே.

    அவளா போகலையே.

    சரி, நாங்கதான் துரத்தி விட்டோம்.

    புரிஞ்சா சரி.

    ஆனா நீ ஏன் அப்போ அமைதியா இருந்தே?

    ஆமாம். தன் அமைதிதான் கல்யாணியை வெகுளச் செய்திருக்கும்.

    "தன்னை துகிலுரிந்ததை விட ஐந்து கணவர்களும் காப்பாற்ற முடியாமல் நின்றதுதான் பாஞ்சாலியைக் குறுகச் செய்திருக்கும். அதேபோல்தான் நானும். உங்க அக்கா என்மேல பழி

    Enjoying the preview?
    Page 1 of 1