Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbe Aaruyire...
Anbe Aaruyire...
Anbe Aaruyire...
Ebook134 pages50 minutes

Anbe Aaruyire...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நித்யாதரன் தனது தாய், தந்தையை இழந்து தன் உயிர் நண்பனான சரவணனுடன் வளர்கிறான். தாமினிக்கும் நித்யாதரனுக்கும் காதல் மலர அதே பெண்ணை சரவணனும் விரும்புகிறான். இதற்கிடையில் வித்யாதரன் வாழ்க்கையில் ஒரு சுழல் வீசுகிறது. அந்த சுழல் தாமினியை நித்யாதரனுடன் இணைக்கிறதா? இல்லை சரவணுடன் இணைக்கிறதா? வாங்க வாசிக்கலாம்...
Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123904049
Anbe Aaruyire...

Read more from Indhumathi

Related authors

Related to Anbe Aaruyire...

Related ebooks

Reviews for Anbe Aaruyire...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbe Aaruyire... - Indhumathi

    http://www.pustaka.co.in

    அன்பே ஆருயிரே...

    Anbe Aaruyire...

    Author

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    கொட்டக் கொட்ட இருட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமினி. தூக்கம் வராமல் தவித்தாள். உடம்பிலுள்ள அத்தனை செல்களும் திடீரென்று அதிகம் வேலை செய்வதை உணர்ந்தாள். மனசு பரபரப்பதைக் கேட்டாள்.

    போ... எழுந்து போய் நித்யாவுக்கு டெலிபோன் பண்ணு...

    மெதுவாக எழுந்து வெல்வெட் தரையில் நடக்கிற மாதிரி நடந்து போய் அப்பாவும் அம்மாவும் தூங்கிவிட்டார்களா என்று பார்த்தாள். அப்பாவின் குறட்டை சத்தம் கதவருகிலேயே கேட்டது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அப்பா உறுமுகிறார் என்றால் தூங்கும்போது கூட உறுமுகிறாரே... இந்தச் சத்தத்தில் அம்மாவால் எப்படித் தூங்க முடிகிறது...?

    ப்சூ... ரயில்வே லயன் பக்கத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவங்களுக்கு ரயில் சத்தம் கேட்கலேன்னால் தூக்கம் வராது. அந்த மாதிரித்தான் அம்மாவும் ஆகிப்போயிருக்கிறாள். அப்பாவின் குறட்டை சத்தமில்லேன்னா அம்மாவால் தூங்க முடியாது.

    ‘சீ என்ன இது...? அப்பாவோட குறட்டை சத்தத்தை ஆராய்ச்சி பண்ணவா நடுராத்திரியில் எழுந்து வந்திருக்கோம்...?’

    அவர்களின் படுக்கையறை வாசலைவிட்டு நழுவி முன் அறைக்கு வந்தாள். சுதாகரின் அறைக் கதவு மூடப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

    தூங்கறானா... இல்லை, இன்னும் படிச்சுக்கிட்டிருக்கானா...?

    கீழே தரைக்கும் கதவுக்கும் நடுவிலிருந்த நூலிழை இடைவெளியில் டியூப்லைட் வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்தாள். இருட்டாக இருந்தது. வெள்ளையாய் கோடு விழவில்லை. சுதாகர் தூங்கி விட்டிருப்பான். +1 படிப்பவனுக்கு பதினொன்றரை மணிக்கு மேல் படிப்பதற்கு ஒன்றும் இருக்காது. பத்து மணி வரை படிப்பதே அதிகம். பத்து மணிவரை கூட சுதாகர் எனிட்பிளைட்டன் படிப்பான். ஆர்ச்சி படிப்பான். ஜெக்கட் ஜோன்ஸ் படித்துக் கொண்டிருக்கிற போதே தானாக வாய்விட்டு பெரிதாக சிரித்துக் கொள்வான். அவனது அந்த ரசிப்புத் தன்மையில் இவள் உதட்டிலும் புன்னகை மலரும். ‘சுதா இன்னமும் குழந்தையாகவே இருக்கிறான்’ என்று தோன்றும் சொன்னால் ‘நீ மட்டும் என்னாவாம்...?’ என்று சண்டைக்கு வருவான்.

    பதினேழு வயசாறது... பர்ஸ்ட் இயர் படிக்கிற... இப்போ கூட பாண்டி விளையாடச் சொன்னால் விளையாடுவ...

    பாண்டி விளையாடினா தப்பா...?

    காமிக்ஸ் படிக்கிறப்போ வாய்விட்டு சிரிக்கிறது தப்பா...?

    தனக்குத் தானே சிரிச்சுக்கிட்டா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. கீழ்ப்பாக்கம் கேஸ்ன்னு நினைச்சுப்பாங்க.

    நீ மட்டும் என்னவாம்...? சில சமயம் காலேஜ் புஸ்தகத்தைக் கைல வச்சுக்கிட்டு எங்கேயோ பார்த்து சிரிக்கற...? அதை யாரும் கீழ்பாக்கம் கேஸுன்னு நினைக்க மாட்டாங்களா...?

    அதற்குமேல் ஏதாவது பேசினால் விஷயம் அம்மா காதை எட்டும். இந்த வயதில் ஒரு பெண் தனக்குத்தானே சிரிக்கிறாள் என்றால் என்ன அர்த்தம் என்று அம்மா யோசிக்க ஆரம்பிப்பாள். பாம்பின் கால் பாம்பறியும் என்கிற மாதிரி கண்டுபிடித்து விடுவாள். ‘எங்கப்பா குதிருக்குள் இல்லை’ என்றாற் போல் விஷயம் வெளியில் வந்து விடும். அப்புறம் அப்பா காதிற்குப் போய்... அவர் ருத்ர தாண்டவம் ஆடி, ஒரு முறை முறைத்தால் போதும். சப்த நாடிகளும் ஒடுங்கிப் போகும். அதனால் சுதாகரிடம் அதற்குமேல் பேச்சு கொடுக்கக் கூடாது. வெள்ளைக்கொடி காட்டி விடுவதுதான் நல்லது.

    சட்டென்று அடங்கிப் போவாள் அவள்.

    ஐயோ... நீ எவ்வளவு வேணும்னாலும் சிரி. நான் வேணாம்னு சொல்லலை. இப்போ ஆளைவிடு.

    இந்துமதி மெதுவாகக் கழன்று அந்தப் பேச்சைவிட்டு நழுவி விடுவாள்.

    அதெல்லாம் கிடக்கட்டும். இப்போது அவன் தூங்குகிறானா, இல்லை முழிச்சுக்கிட்டிருக்கானா...?

    ஓசைப்படாமல் நடந்து போய் அவனது அறைக் கதவைத் திறந்து பார்த்தாள். ஹாலின் ஸீரோ வாட் வெளிச்சத்தில் இரு கால்களுக்கிடையில் தலையணை அழுத்திக்கொண்டு அவன் தூங்குவது தெரிந்தது. ‘தாங்க் காட்’

    கதவு மூடிக்கொண்டு வந்தாள். இதயம் இன்னும் வேகமாக இயங்கத் தொடங்கியது. நைலான் வயர் பின்னிய மர சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். பக்கத்து பழைய ஸ்டூலில் இருந்த டெலிபோன் ரிஸீவரை எடுத்தாள்.

    தாங்க்யு மிஸ்டர் கிரஹாம் பெல். தாங்க்யு ஸோ மச். நீங்க மட்டும் இந்த டெலிபோனைக் கண்டுபிடிக்கலேன்னால் என்னவாகி இருக்கும்...?

    என்னவாகி இருக்கும்..? இந்த மாதிரி திருட்டுத்தனமாக நித்யாகூடப் பேச முடியாமல் போயிருக்கும். ஐ லவ் யு சொல்ல முடியாமல் போயிருக்கும். செல்லமாய் கொஞ்ச முடியாமல் போயிருக்கும்...

    தன்னியல்பாய் கை விரல்கள் நித்யாவின் எண்களைச் சுழற்றியதில் அவனது கம்பீரமான ஆண்மை ததும்பும் குரல்கேட்டது.

    ஹலோ...?

    நான்தான்? அவள் குரல் ஒட்டு மொத்தமாகத் தழைந்து தானாகக் குழந்தை வடிவம் பெற்றது.

    அவன் முகமும் பளிச்சிட்டது. திடீரென்று பெற்ற சுறுசுறுப்பில் கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். வேண்டுமென்றே அவளைச் சீண்டத் துவங்கினான்.

    நான் தான்னா யாரு?

    நான் தான்னா நான்தான்.

    ஓஹோ... நேற்று வரை நான்தான்னா நீங்கதான்னு சொல்வாயே அது இப்போ மாறிடுச்சா...?

    இல்லை. மாறலை. உங்களைப் பொருத்தவரை எதுவும் எப்போதும் மாறாது. எல்லாம் அப்படியேதான் இருக்கும். நான் சாகிறவரை இருக்கும்.

    அப்போ சொல்லு.

    என்ன சொல்லணும்?

    வழக்கமா என்ன சொல்வ?

    ஐ லவ் யு

    அது மட்டும் தானா...?

    ஐ அடோர் யு

    அப்புறம்?

    ஐ அட்மயர் யு.

    அதுக்கும் அப்புறம்?

    ஐ ஆனர் யு.

    ம்... மேல...?

    ஐ ஒர்ஷிப் யு. ஐ நீட் யு. ஐ கெனாட் பி வித் அவுட் யு. ஐ வில் டை வித் யு. போறுமா...?

    தாங்க்யு டியர். அவன் குரலும் குழைந்து நெகிழ்ந்தது.

    வெறும் தாங்க்ஸ் மட்டும் தானா...?

    இன்னும் என்ன வேணும்?

    வழக்கமாகத் தர்றது...?

    கேட்டு வாங்கிக்கிறது. நான் கேட்டு வாங்கிக்கலை...?

    தினமும் கேட்டா தரீங்க...?

    இன்னிக்குக் கேட்டால்தான் கிடைக்கும்.

    ஏன், இன்னிக்கு என்ன விசேஷம்?

    இப்போ மணி என்ன பாரு...?

    பனிரெண்டு பத்து.

    நான் பிறந்து பத்து நிமிஷமாச்சு.

    ஐய்யோ... உங்களை விஷ் பண்ணனும். முதல்ல விஷ்பண்றது நானாகத்தான் இருக்கணும்னு ஓடிவந்து போன் பண்ணிட்டு அதை மறந்துட்டேன் பாருங்க. மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் திஸ் டே வித்யா... மெனி மெனி மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்.

    ம்ஹும். அது போறாது.

    பின்ன... இன்னும் என்ன வேணும்?

    உனக்கே தெரியும்.

    ச்ச்சூ...

    அது முன் நெற்றிக்கு.

    ச்ச்சூ...

    இது ஒரு கன்னத்துக்கு.

    இது இன்னொரு கன்னத்துக்கு.

    ச்ச்சூ...

    இது உதட்டுக்கு.

    இதுக்கு மேல கிடையாது.

    ஏன்?

    கல்யாணத்துக்கு அப்புறம்தான்.

    ப்ளீஸ். ப்ளீஸ். ஒண்ணே ஒண்ணும்மா...

    எங்கைக்கு?

    உனக்கே தெரியும்.

    சீ... உங்களுக்கே வெட்கமாக இல்லை?

    இல்லையே...

    எனக்கு இருக்கே...

    நேர்லதான் வெட்கப்படற. தரமாட்டேன்ற போன்ல தர்றதுக்கு என்னவாம்...?

    "போன்லயும்

    Enjoying the preview?
    Page 1 of 1