Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaigarai Kolangal
Vaigarai Kolangal
Vaigarai Kolangal
Ebook109 pages41 minutes

Vaigarai Kolangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604042
Vaigarai Kolangal

Read more from Devibala

Related to Vaigarai Kolangal

Related ebooks

Reviews for Vaigarai Kolangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaigarai Kolangal - Devibala

    http://www.pustaka.co.in

    வைகறைக் கோலங்கள்

    Vaigarai Kolangal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஜெயனுடைய மிகப்பெரிய பலவீனமே அவனது குணம்தான். இவனால் எதையும் உருப்படியாக சாதிக்க முடியாது! தன்னைவிட உயர்ந்து நிற்கும் மற்றவர்களைப் பார்த்து, பொறாமையில் பொசுங்கிப் போவான்!

    அந்தப் பொறாமைத் தீ அவனை வளரவிடாமல் ஆரம்பம் முதலே தடுத்துவிடுகிறது!

    இன்று நேற்றல்ல! பிறந்த முதலே அவனுடன் வளர்ந்து வரும் சுபாவம், இது!

    குடும்பத்தில் மூத்த பிள்ளை ஜெயன்.

    அவனுக்கு நாலு வயது இளையவன் அவன் தம்பி உதயா! அழகிலும், படிப்பிலும், புத்திசாலித்தனத்திலும் உதயா பளிச்செனத் தெரிவான்!

    பழகும்போது அழகான சிரிப்பால் இனிமையான பேச்சால் சுலபத்தில் மற்றவர்களை தன் பக்கம் இழுத்துவிடுவான்.

    அதனால் பெற்றவர்களுக்கே உதயா மேல் அதிகம் ஈர்ப்பு உண்டு. உதயாவுக்குப் பிறகு மூன்று ஆண்டு கழித்துப் பிறந்தவள் சின்மயி! ஒரே பெண் குழந்தை என்பதால் அவளுக்கு அதிகச் செல்லம்!

    இதுவும் ஜெயனுக்குப் பிடிக்காது!

    படிக்கும் பால் பருவத்தில் வீட்டில் பொறாமை, பள்ளிக் கூடத்தில் சக மாணவர்களைக் கண்டு பொறாமை- இப்படி பொறாமையின் மொத்த வடிவமாக ஜெயன் வளர்ந்ததால், அவனது முன்னேற்றம் தடைபட தொடங்கியது.

    பள்ளி இறுதி வகுப்பில் வெகு சுமாரான மதிப்பெண் பெற்றதால், அவனைக் கல்லூரியில் சேர்ப்பதற்குள் அப்பாவுக்கு நாக்கு தள்ளிவிட்டது.

    அங்கும் சக மாணவர்களோடு மாணவிகள் நெருங்கிப் பழகுவதைப் பார்த்து ஜெயனுக்கு வயிறு எரியும்!

    பெண்கள் யாரும் இவனைத் தேடி வரமாட்டார்கள்.

    அவர்களை வசீகரிக்கும் எந்த ஒரு நாசூக்கும், நளினமும் இவனுக்கு இல்லை!

    ‘சிடுமூஞ்சி’ என மற்றவர்களால் பெயர் சூட்டப்பட்டதால், அவர்கள் நெருங்குவதே இல்லை!

    நண்பர்களே இல்லை!

    ஓரிருவர் நெருங்கிப் பழகினார்கள். அவர்களையும் ஏதோ ஒரு கோபத்தில் இவன் கடுமையாக பேச, அந்தக் கூட்டமும் விலகிப்போனது!

    இவன் மூன்றாவது ஆண்டு பி.காம் படிக்கும்போது தம்பி உதயா மாநில அளவில் அதிக மதிப்பெண் வாங்கி மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிட்டது!

    குடும்பமே ஒரு மருத்துவர் உருவாகப்போவதை நினைத்து குதூகலத்தில் கூத்தாடியது!

    ஜெயனால் மட்டும் அதை ஜீரணிக்கவே முடியவில்லை! பொசுங்கிப்போனான். தம்பியிடம் முகம் கொடுத்துப் பேசுவதைக்கூட நிறுத்தினான்.

    இந்தப் பொறாமைக் கனல் உள்ளே அவனை பலமாகத் தாக்கியது. பி.காம் தேர்வில் தோல்வியடைந்தான். அது இன்னும் அவமானமாகிவிட்டது!

    பிறகு தனியாக எழுதி, ‘பாஸ்’ ஆனான். அடுத்து வேலைப் பிரச்சினை!

    பல நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்தான்.

    ‘எப்படி பேசுவது? என்ன அணுகுமுறை?’ என எதையும் வளர்த்துக்கொள்ளாததால், வேலை கிடைப்பது கஷ்டமாகி விட்டது!

    அந்தக் கோபங்களை தம்பி, தங்கையிடம் வீட்டில் காட்ட அப்பா கடுப்பாகிவிட்டார்.

    இதோபாரு ஜெயன்! அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில எப்படி முன்னேறி உச்சிக்கு வரலாம்னு தன்னைப் பற்றி மட்டும்தான் யோசிக்கிறாங்க! அதனால் மேலே வர்றாங்க! நீ மத்தவங்களை குறை காண்றதும், கோவப்படுறதும், பொறாமையில பொசுங்கிப்போறதுமா இருக்கிற காரணமா, உன்னால் உலகத்தையே புரிஞ்சுக்க முடியலை!

    ..

    அடுத்தவங்களை பழிவாங்கத் துடிக்கிற நேரத்தை உன் வளர்ச்சிக்கு செலவழி! நீ முன்னேறலாம். குற்றம் கண்டுபிடிச்சே, குள்ளமா ஆகாதே!

    அப்பா ஜாடைமாடையாக பல ஆண்டுகளாக இதைச் சொன்னதுண்டு!

    இப்போது தாளமுடியாமல் நேராகச் சொல்லிவிட,

    என்னை நீங்க அவமானப்படுத்திட்டீங்க! ஒரு டாக்டர் இந்த வீட்டுல உருவாகிற காரணாமா, நான் கேவலமாயிட்டேன். பெத்தவங்களுக்குக்கூட இந்தக் காலத்துல பணம் கொண்டுவர்ற பிள்ளைகளைத்தான் பிடிக்குது!

    நிறுத்துடா! என்ன பேசுறே நீ? அவனுக்கு படிப்பே முடியலை! எனக்கு அவன் இலட்சக்கணக்காவா கொட்டி கொடுத்தான்?

    நாளைக்குத் தருவானில்லை?

    தரட்டும்! வாங்கிப்பேன். என் மகனை ஆளாக்கின எனக்கு அந்த உரிமை உண்டு! நீயும் அண்ணன்தானே? வாங்கிக்கோ!

    எனக்கு யாரும் பிச்சை போட வேண்டாம்!

    சரி விடு!

    நான் இந்த வீட்டுல இனி இருக்கமாட்டேன்!

    தாராளமா போ! தோளுக்கு உசந்த பிள்ளை தோழன். தடுத்து நிறுத்த நான் தயாரா இல்லை!

    அம்மா பதறிவிட்டாள்.

    என்ன பேசுறீங்க?

    நிறுத்துடி! பெத்த அப்பாகிட்ட பேசுற மாதிரியா பேசுறான்? மிரட்டுறானா அவன்? தாராளமா போகட்டும்டி! இவன் பொறாமை, தாழ்வுமனப்பான்மை எல்லாம் தெரிஞ்சு நாம எத்தனை அனுசரிச்சுப் போறோம்? அட, பெத்தவங்க நம்மை விடு! இவனுக்கு பிறகு பிறந்த பிள்ளைங்க ரெண்டும் இவனால் படுற வேதனைகள் கொஞ்சமில்லை! எத்தனை நாளைக்கு இவனுக்கு அடிபணிய முடியும்? சொல்லுடி!

    அம்மா! என்னை யாருக்கும் பிடிக்கலை. நான் போறேன்!

    ஏன் பிடிக்கலைன்னு யோசிடா! நம்மகிட்ட உள்ள நிறை குறைகளை அலசிப் பார்க்க ஒரு மனுசனுக்குத் தெரியணும்! சரி, வீட்டுல நாங்க எல்லாரும் மோசம். வெளியில ஒரு மனுசன்கூட உனக்கு நண்பனா இல்லையே! ஏன்?

    என்னங்க!

    "இருடி!

    Enjoying the preview?
    Page 1 of 1