Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetkathile Oru Venpura
Vetkathile Oru Venpura
Vetkathile Oru Venpura
Ebook105 pages1 hour

Vetkathile Oru Venpura

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903911
Vetkathile Oru Venpura

Read more from Pattukottai Prabakar

Related to Vetkathile Oru Venpura

Related ebooks

Reviews for Vetkathile Oru Venpura

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetkathile Oru Venpura - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    வெட்கத்திலே ஒரு வெண்புறா

    Vetkathile Oru Venpura

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    'காலங்கார்த்தால' என்கிற வார்த்தையை உபயோகிக்கின்ற நேரம். சூழ்நிலைக்கு அழகு சேர்ப்பதற்காக பறவைகள் பயணம் புறப்பட்டிருந்தன. பல்துலக்கியபடி பார்க்கிற சில கவிஞர்களுக்கு மட்டும் மலர்கள் மவுன மொழியில் சூரியனுக்கு வரவேற்புக் கவிதை படித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். பூமிக்கு குளிர்விட்டுப் போயிருந்தது. பெட்ரோல் சுவாசத்துடன் வாகனங்கள் சாலைகளை அளந்து கொண்டிருந்தன.

    மயிலாப்பூரில் முற்றம் வைத்த அந்த வீட்டில் கம்பிகள் வழியாக வீரியம் ஏறிக்கொண்டிருக்கும் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் அடிபம்ப்பு. அதில் பிடிக்கப் பட்ட தண்ணீர் பித்தளை அண்டாவில்.

    செய்தித்தாளை தரையில் விரித்துப் போட்டு, 'மணமகள் தேவை' பகுதியில் விரலை ஓட்டி விபரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்மந்தம். சமையலறையிலிருந்து தாளிக்கிற சத்தம். அடுத்த விநாடி அதன் வாசனை.

    நினைவு வந்தவராக அருகில் வைக்கப்பட்டிருந்த காபியை எடுத்துப் பருகியபடி செய்தித்தாளில் பார்வையைத் தொடர்ந்தார்.

    அழுக்கு உறைந்து வெள்ளை நிறத்திலிருந்து எப்போதோ மாறியிருந்த பனியன் அணிந்த சம்மந்தம் ஒரு கொட்டாவியை மென்றார். தலையை விரல்களால் கோதியபடி கலைத்துக் கொண்டார். அங்கங்கே வெள்ளிக் கொத்துகள்.

    சம்மந்தம் படித்தவர். அந்தக் கால பி.ஏ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வாத்தியாராக வேலை பார்த்ததில், போன வருடம் பணம் வசூலித்து, கூட்டம் நடத்தி, பொன்னாடை என்று சொல்லி கதராடை போர்த்தி, ‘இவரைப் பிரிவதை நினைத்து பள்ளி நிர்வாகம் வேதனைப்படுகிறது' என்றெல்லாம் பேசி,கைதட்டி, ரோஜா மாலையும், லாரியின் முகப்பு போல பார்ப்பதற்கு பயங்கரமாகத் தோன்றும் ஒரு அகல ரேடியோப் பெட்டியும் கொடுத்து, வீட்டிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

    அந்த ரேடியோப் பெட்டியிலிருந்துதான் தற்சமயம் 'ஆல் இந்தியா ரேடியோ- சென்னை வானொலி நிலையம்' இயங்கி காற்றெல்லாம் வயலின் இசையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

    முற்றம்கொண்ட இந்த வீடு தாத்தாவுக்குத் தாத்தா காலணாவுக்கு மூணு தோசை காலத்தில் வாங்கிப் போட்டதில் 'உனக்கென்னய்யா, மயிலாப்பூர்ல சொந்த வீடு வைச்சிருக்கே, இன்னைய தேதிக்கு கண்ணை மூடிக் கிட்டு இருப்பது கொடுப்பான்’ என்று சொந்தக்காரர்களைப் பொறாமைப்பட வைக்கிறது.

    வழி வழியாய் வந்த குடியிருக்கும் வீட்டுக்கு விலை போட்டுப் பார்ப்பதேக்கூட ஒருபாதகமான செயல் என்பது சம்மந்தத்தின் கருத்து.

    அவரின் நண்பர் ஒரு வெற்றிலை அரட்டை நேரத்தில் 'ஏன்யா சம்மந்தம், எதுக்கு இப்படி ஓட்டை’ சைக்கிளை வைச்சிகிட்டு அல்லாடிட்டு இருக்கே? நான் ஒரு யோசனை சொல்றேன். வீட்டை வித்துடு. இருபது இலட்சம் கிடைக்கும். இரண்டாயிரம் வாடகையில ஒரு நல்ல வீடு கிடைக்கும். அஞ்சி இலட்சம் செலவு பண்ணி கார், நகை, வீட்டுக்கு வேண்டிய எல்லா நவீன சாமான்களும் வாங்கிப் போடு. மீதி பதினைஞ்சு இலட்சத்தை வங்கில போடு. மாசா மாசம் வட்டியே ஒரு பெரிய தொகை வந்து நிக்கும். உனக்குப் புதுசா எதில் செலவு பண்றதுன்னு திணற வேண்டியதா இருக்கும். எப்படி யோசனை?' என்று சொன்னபோது...

    சம்மந்தத்திற்கு ஏகமாய் கோபம் வந்து காட்டுக் கத்தலாய்க் கத்திவிட்டார்.

    'யோவ்! உங்கப்பன், தாத்தன் எல்லாரும் வாடகை வீட்லயே இருந்து வந்தவங்க.’ அதனால் சொந்த வீட்ல குடியிருக்கிறதுன்னா அதோட பெருமை என்ன, சுதந்திரம் என்னன்னு புரியாமயே வளர்ந்துட்டியேய்யா! உன் மனசுல இருக்கிற நினைவுகளை எல்லாம் வித்துடுன்னு சொன்னா விப்பியா? அப்படித்தான்யா இந்த வீடும் எவ்வளவு பேர் வாழ்ந்திருக்காங்க! எவ்வளவு நல்லது, கெட்டது நடந்திருக்கு!

    இந்த வீட்டுல நாப்பத்தஞ்சு கல்யாணங்கள் நடந்திருக்கு தெரியுமா? இப்பதான் எல்லாரும் கல்யாண மண்டபத்துக் கும், ஓட்டலுக்கும் ஓடறாங்க. அந்தக் காலத்தில ஏது கல்யாண மண்டபம்! எனக்கு நினைவு தெரிஞ்சே பல கல்யாணங்களைப் பார்த்திருக்கேன். முத்தத்திலேதான் மணவறை போட்டு பொண்ணு, மாப்பிள்ளையை உக்கார வைப்பாங்க. சுத்தி நாலு பக்கமும் ஜமுக்காளம் விரிச்சி வந்தவங்க உக்காந்துக்குவாங்க. பின்பக்க தோட்டத்தில அடுப்பு போட்டு சமையல் நடக்கும். மொட்டைமாடியிலே பந்தல் போட்டு பந்தி நடக்கும். கையலம்ப நான் தண்ணி மொண்டு கொடுத்திருக்கேன். வீட்டை விக்கிறதாம். காரு வாங்கறதாம்! காரு ரிப்பேராகும்யா. இந்த வீட்டுல இத்தனை ஆண்டுல ஒரு ரிப்பேர் செலவு உண்டா? ஒரு புயல், மழைக்காவது ஒழுகியிருக்கா? அத்தனையும் தேக்கு மரம்! இன்னைக்கு இப்படி தேக்குல நாலு தூண் செஞ்சு நிறுத்தணும்னா அதுக்கே இலட்சக்கணக்கில ஆகும். இப்போ வீட்ல எந்த சாமான் இல்லை? யாரு சந்தோசமா இல்லை? நல்லா சொன்னே பாரு யோசனை!'

    அதற்குப்பின் அந்த நண்பர் வெற்றிலை போடுவதென்றால் தன் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து போட்டுக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

    வீட்டுக்குள்ளே நிலை வாசலில் இடித்துக்கொள்ளாமல் லேசாகக் குனிந்தபடி உள்ளே வரவேண்டும். உடனே தெரிவது முற்றம். இடதுபுறம் ஒரு அறைக்கான கதவு. வலது புறம் ஒரு அறைக்கான கதவு. முன்புறம் விட்டத்திலிருந்து தொங்கும் இரண்டே நபர்கள் உட்கார முடிகிற தேக்கு மரத்தாலான

    Enjoying the preview?
    Page 1 of 1