Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uchithanai Muharnthal
Uchithanai Muharnthal
Uchithanai Muharnthal
Ebook163 pages1 hour

Uchithanai Muharnthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703926
Uchithanai Muharnthal

Read more from Vidya Subramaniam

Related to Uchithanai Muharnthal

Related ebooks

Reviews for Uchithanai Muharnthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uchithanai Muharnthal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    உச்சிதனை முகர்ந்தால்

    Uchithanai Muharnthal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ஆர்ப்பரிக்கும் அலை வாயிலிருந்து விடுபட்டுச் செங்கோளமாய் ஜொலிக்க ஆரம்பித்தான் சூரியன். கீழ் வானம் முழுவதும் அக்னியைப் பூசிக்கொண்டதால் கடல் அலைகள் தகதகவென்று ஒளிர்ந்தன.

    ஜன்னலில் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் அக்காட்சிகளைப் பருகிக் கொண்டிருந்தாள் சரண்யா. பால் குக்கர் சப்தமிடத் தொடங்கியது. ஓடிப்போய் அணைத்துவிட்டு பெட்ரூமுக்குள் எட்டிப் பார்த்தாள்.

    ஒருக்களித்து, ஒரு தலையணையை அணைத்துப் பிடித்தபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் பத்மா. சரண்யா அம்மாவையே பரிவுடன் பார்த்தாள். இரவு முழுக்க ரெக்கார்டு நோட்டுப் புத்தகங்களைத் திருத்திய களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. பெட்ரூம் கதவைச் சாத்திக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். சூடாகக் காப்பி கலந்து குடித்து விட்டு ப்ரிட்ஜிலிருந்து தோசை மாவை எடுத்து வெளியில் வைத்தாள். மாவு அறை வெப்பத்திற்கு வருவதற்குள் தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு விட்டு, தேவையான தோசைகளை வார்த்து விட்டு மேடையைச் சுத்தம் செய்து விட்டு தோசை இருந்த பாத்திரத்தை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள். பூச்சாடியின் மலர்களைச் சரிபண்ணினாள். திரும்பவும் வந்து ஜன்னலருகில் நின்றபடி கடலை வேடிக்கை பார்த்தாள்.

    திடுதிப்பென்று தூக்கம் கலைந்து எழுந்த பத்மா சுர்ரென்று அடிக்கும் வெயிலைக் கண்டு பதறிப்போய் எழுந்து வெளியில் வந்தாள். ஜன்னலருகில் நின்ற சரண்யாவைக் கண்டதும்,

    குட்மார்னிங் சரண்! அம்மாவை எழுப்பக் கூடாது? என்றாள். சரண்யா திரும்பினாள்.

    ராத்திரி நீ தூங்கும் போது மணி ரெண்டிருக்குமா? அதான் எழுப்பலை. பல்தேச்சுட்டு வா. காப்பி ரெடி.

    தேங்க்யூ! என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள் பத்மா.

    அவள் பல் தேய்த்துக் குளித்து விட்டு வரும் போது மிக்ஸி சப்தம் கேட்டது.

    உன்னை எழுப்ப வேண்டாம்னு அப்ப மிக்ஸி போடலை! சரண்யா சிரித்தாள். ஓ! டிபன் கூட ரெடியா? ப்ஸு! நீ என்னை எழுப்பியிருக்கலாம்.

    ஒரு நாளைக்குத் தான் நல்லா சாப்பிடுவோமே!

    ச்சீ … நாட்டி!

    சட்னியைப் பாத்திரத்தில் மாற்றி டேபிளில் கொண்டு வந்து வைத்து விட்டு ப்ளேட்டுகளை வைத்தாள்.

    எட்டரை மணிக்கு மிஸஸ் மாத்யூஸை மீட் பண்றதா சொல்லியிருக்கேன். மணி இப்பவே ஏழே முக்கால். எட்டரைக்குள்ளே மாத்யூஸ் வீட்டுக்குப் போக முடியுமா சரண்? ஈரத்தலையை அவசரமாகத் துடைத்தபடி கேட்டாள் பத்மா.

    நீ ரெடியாய்ட்டா கால் மணி நேரத்துல போய்டலாம்! ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து விட்டு ட்ரெஸ் பண்ணிக் கொள்ளச் சென்றாள்.

    அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் தயாராகி வெளியில் வந்தனர். சரண்யா இரண்டு பேருக்கும் டிபன் பாக்ஸில் தோசையை வைத்து மூடினாள். பத்மா மகளையே பார்த்தாள்.

    வெளிர் நீல நிற ஆர்கண்டியில் தேவதையாய்த் தோன்றிய பெண்ணைப் பெருமை பொங்கப் பார்த்தாள். சாயலில் அம்மாவைக் கொண்டிருந்தாலும் மூக்கும் அந்த அழுத்தமான உதடுகளும் மட்டும் அப்பாவிடமிருந்து பெற்றிருந்தாள் சரண்யா. அழகான மூக்கும் அடர்ந்த மீசைக்கடியில் புன்சிரிப்பு நெளிய அமைந்திருக்கும் உதடுகளும் தான் நந்தகோபாலின் கவர்ச்சியை மேலும் கூட்டிக் காட்டும்.

    அப்பா அவளுக்கு ரொம்ப சீக்கிரம் தான் கல்யாணம் பண்ணிவிட்டார். பதின்மூன்று வயதில் பெரியவளானதும் வரன் பார்க்கத் தொடங்கி, பதினைந்தில் அவள் கால் வைத்த போது இருபத்தைந்து வயது நந்தகோபாலை அவளுக்குப் புருஷனாக்கிவிட்டார். பதினாறாம் வயதில் சரண்யாவைப் பெற்றெடுத்தாள். வாழ்வின் நெளிவு சுழிவுகள், இன்ப துன்பங்கள் எதையும் உணரும் பக்குவம் வருவதற்குள் ஒரு குழந்தையைச் சுமப்பது மிகவும் கொடூரம் என்றால் அதைத் தான் அனுபவித்தாள் அவள். நந்தகோபாலுக்கோ அவள் கர்ப்பமானதே பிடிக்கவில்லை. அதுவுமின்றிச் சடங்கு சம்பிரதாயம் என்ற போர்வையால் இருவருக்கும் இடையில் பெரியவர்கள் போட்ட திரை அவன் எரிச்சலைக் கிளறிவிட்டது. வாழ்வின் சுகங்களை முழுவதும் அனுபவிப்பதற்குள் சம்சார சாகரத்தில் முழுவதும் அமிழ்ந்து தோளுக்கு மேல் பொறுப்புக்களைச் சுமத்திக் கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

    திருமணமான ஒரு ஆண்டுக்குள் ஆடி பிறந்துவிட்டதும் ஒரு மாசம், மசக்கை பிறந்தகம் என்று ஒரு மாதம், அதன் பிறகு அவ்வப்போது உடம்பு சரியில்லை என்றால் அழைத்துப்போய் விடுவார்கள். பிறகு எட்டாம் மாதம் சீமந்தம் முடிந்ததும் பிறந்தகம் சென்றவளைக் குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம் தான் அவனிடத்தில் கொண்டு விட ஏற்பாடு செய்தனர். வருடத்தில் முக்கால்வாசி நாட்களைப் பிறந்தகத்திலேயே அவள் கழித்து விட்ட எரிச்சலில் இருந்தவன் திடுதிப்பென்று ஒரு நாள் வேட்டகம் வந்தான். வந்த இடத்தில் கொஞ்சமும்! தயங்காமல் பத்மாவின் தாயிடம், குழந்தை இங்கேயே இருக்கட்டும். பத்மா ரொம்பச் சின்னவ. ஒரு குழந்தையை வளர்க்கற அளவுக்கு அவளுக்குப் பக்குவம் போறாது. ரெண்டு மூணு வயசு வரை கொழந்தை இங்கேயே இருக்கட்டும். அப்பப்போ வந்து பார்த்துக்கறோம், என்ற போது திகைத்துப் போனாள் பத்மா. பெற்றவர்கள் பதறினார்கள்.

    எவ்வளவு சின்ன வயசானா என்ன? தாய்ங்கற ஸ்தானம் வந்துட்டா, அவகிட்ட தானா பால் சுரக்கலையா? அது மாதிரி பக்குவம் தன்னால வந்துடும். தாயையும் கொழந்தையையும் பிரிக்கறது ரொம்ப பாவம். பத்மா வேலைக்குப் போற பொண்ணுன்னாலும் பரவாயில்லை. வீட்டுல இருக்கப் போறவ தானே. கொழந்தையைக் கண்ணுங் கருத்துமா பார்த்துப்பா! பணிவோடு நயமாகச் சொல்லிப் பார்த்தாள் பத்மாவின் தாய்.

    நந்தகோபால் எதற்கும் மசியவில்லை. தன் எண்ணத்திலேயே பிடிவாதமாய் இருந்தான். பத்மாவோ குழந்தையை விட்டுச் செல்ல மறுத்து ‘ஓ’ வென்று அழுதாள்.

    உனக்கு நான் வேணுமா கொழந்தை வேணுமான்னு யோசி! அதுதான் வேணும்னா தாராளமா அதோட நீயும் இருக்கலாம். இங்கேயே! என்றான் அழுத்தந் திருத்தமாய்.

    பத்மா ஒரு கணம் அதிர்ந்தாள். குழந்தையையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தவள், மறுநிமிடம் குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு அழுதபடியே உள்ளே ஓடினாள். நந்தகோபால் ஆத்திரத்துடன் வெளியேறினான்.

    சாப்பிடும் போது என்னம்மா யோசனை? சட்னி நல்லாயில்லையா?

    நோ நோ! நல்லாயிருக்கே. மிஸஸ் மாத்யூஸைப் பத்தி நெனைச்சேன்.

    என்ன விஷயமா மாத்யூஸைப் பார்க்கப் போறே?

    "காலேஜ்ல ஒரு அழகுப்போட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். அதுல சீஃப் கெஸ்ட்டா மாத்யூஸைக் கூப்பிடணும்ங்கறது பிரின்ஸிபாலோட எண்ணம். அது சம்பந்தமா பேசத்தான் போன் பண்ணிக் கேட்டேன். எட்டரைக்கு

    வரச்சொன்னா."

    ஏம்மா பேசாம நாம்ப நம்ம ப்ரொஃபஷனை மாத்திக்கலாமா? பாங்க் ஜாப் எனக்கு அலுத்துப் போச்சு. காலேஜ் லெக்சரர்னா ஜாலியான வேலை இல்லை?

    போடி அசடு! இக்கரைக்கு அக்கரை எப்பவும் பச்சை தான். நாழியாறது சரண் … ப்ளீஸ்!

    ஓகே ஓகே! சரண்யா எழுந்து கையை அலம்பித் துடைத்துக் கொண்டு ஹாண்ட் பேக் சகிதம் வெளியில் வந்து இரண்டு மாடி இறங்கி தனது சில்வர் ப்ளஸ்ஸைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு வெளியில் வந்து ஸ்டார்ட் செய்ய, பத்மா பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

    ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? காற்றில் பரந்த கேசத்தைத் தள்ளியபடியே கேட்டாள் சரண்யா.

    என்ன?

    மிஸஸ் மாத்யூஸ் ஒரு டிவோர்ஸின்னு தெரியும் இல்லே.

    அதான் ஊருக்கே தெரியுமே.

    இப்ப அவ வேற ஒருத்தரைத் திருப்பிக் கல்யாணம் பண்ணிண்ட விஷயம் தெரியுமா?

    அப்படியா? எப்போ?

    நேத்திக்குத்தான்! நேத்து சாயங்காலம் சாந்தோம் பீச்ல ஷீ காட் மேரிட் அகெய்ன்.

    இஸ் இட்! சொல்லவேல்லியே! ஒரு இன்விடேஷன் கூட …

    குடுக்க மாட்டாம்மா. குடுக்க … பயம்! என்னயிருந்தாலும் மனசு உறுத்தத் தானே செய்யும்.

    என்ன சொல்றே நீ?

    அவ திரும்பவும் கல்யாணம் பண்ணிண்டிருக்கறது வேற யாரையும் இல்லை, மிஸ்டர் நந்தகோபாலைத்தான். அதாவது உன்னோட மாஜி புருஷனை!

    பின்னாலிருந்து எந்தச் சத்தமும் வராமல் போகவே லேசாய்க் கழுத்தைத் திருப்பிப் பார்த்தாள் சரண்யா. பத்மா உதட்டைக் கடித்தபடி எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

    என்னம்மா. அப்ஸெட் ஆயிட்ட? மாத்யூஸ் வீட்டுக்குப் போறதா வேண்டாம்னா?

    இல்லை! போகத்தான் வேணும். இது என் உத்யோக விஷயம். இதுக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்லை.

    சரண்யா அம்மாவை நினைத்துப் பெருமைப்பட்டாள். எப்படியிருந்த அம்மா! தொட்டதற்கெல்லாம் நடுங்கிச் சாகும் பிள்ளைப்பூச்சி போன்றவளுக்கு இந்த அளவுக்கு உறுதியும் தெளிவும் வந்திருக்கிறது என்றால் காரணம் வாழ்வில் அவள் பட்ட துன்பங்கள் தான். துன்பம் பயம் போக்கி இருக்கிறது.

    வலி என்று வந்துவிட்டால் தாங்கித் தானே தீர வேண்டும். தாங்கத் தாங்க வலி பழகிவிட்டதால் ‘ச்சே போ!’ என்ற மனப்பான்மை வந்திருக்கிறது. புத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1