Merke Veesum Thendral
()
About this ebook
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.
விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.
இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.
கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.
இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Read more from Lakshmi Ramanan
Anusha Appadithan! Rating: 0 out of 5 stars0 ratingsSakunthala Rating: 0 out of 5 stars0 ratingsVanathile Pootha Vanna Nila Rating: 5 out of 5 stars5/5Anaiya Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsTherinthu Kollalame! Rating: 0 out of 5 stars0 ratingsGanga Nathi Theerathile Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Endrendrum Neethane…. Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsMamallan 88 Marmam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Yutham Rating: 0 out of 5 stars0 ratingsAathma Samarpanam Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsMarainthirukkum Marmam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therintha Manam Rating: 0 out of 5 stars0 ratingsVaazhviyal Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsEzhamal Vandha Varam Rating: 5 out of 5 stars5/5Sittukuruvi Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Alaigal... Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Rating: 0 out of 5 stars0 ratingsMella Thiranthathu Vazhi Rating: 0 out of 5 stars0 ratingsBrahmopadesham Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Menmaiyanavai Rating: 0 out of 5 stars0 ratingsMeera Pallikoodam Pogiraal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Merke Veesum Thendral
Related ebooks
Bramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neerum Pournami Nilavum Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsCorona Kalathu Kurunovelgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsEllaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Kaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5Rajashyamalavin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Inaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPencil Meesai Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsEnnavarey Mannavarey Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPonnezhil Poothathu Pudhu Vaanil... Rating: 0 out of 5 stars0 ratingsNeethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsKarumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Ennuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Ellai Kodu Rating: 3 out of 5 stars3/5Vanna Kanavugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Merke Veesum Thendral
0 ratings0 reviews
Book preview
Merke Veesum Thendral - Lakshmi Ramanan
http://www.pustaka.co.in
மேற்கே வீசிய தென்றல்
Merke Veesum Thendral
Author:
லக்ஷ்மி ரமணன்
Lakshmi Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
பதிப்புரை
எங்களது பதிப்பகம் மூலமாக கடந்த சில ஆண்டுகளாக எழுத்தாளர் திருமதி. லஷ்மி ரமணன் அவர்களின் சிறுகதைப் படைப்புகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.
இந்த ஆண்டும் எழுத்தாளர் திருமதி. லஷ்மி ரமணன் அவர்களின் மேற்கே வீசிய தென்றல் என்ற புதினத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
இவரது சிறுகதைகள் எந்தளவு சிறப்பாக இருக்கின்றதோ, அதே அளவு இவருடைய புதினங்களும் மிகவும் சிறப்பாக இருக்கும். படிக்கப் போகும் உங்களுக்கே இது நன்றாகப் புரியும்.
எழுத்தாளர் திருமதி. லஷ்மி ரமணன் அவர்கள், எழுதிய மற்ற நூல்களைப் போலவே இந்த நூலும் உங்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
மேற்கே வீசிய தென்றல்
1
படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொண்ட மனு, இதமான பஞ்ச மெத்தைப் போர்வைக்குள் இன்னும் உடம்பைச் சுருக்கிச் சோம்பலுடன் முடங்கிக் கொண்டான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை பத்து மணிக்கு முன்னால் அவனுக்குப் படுக்கையைவிட்டு எழுந்திருக்க மனம் வராது. வாரம் முழுவதும் ஒடுகிற ஓட்டத்தின் களைப்பைச் சனி, ஞாயிறு இந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் தீர்த்துக்கொண்டு விட வேண்டும் என்கிற ஆதங்கம் அவனுக்கு.
நவீனும் ரமாவும் அதைப் புரிந்து கொண்டு அவனுடைய அறைப்பக்கம்கூட வரமாட்டார்கள். இந்தியாவில் இருந்தவரை அவனுடைய பழக்கங்கள் வேறாக இருந்தன, கல்லூரியில் சேர்ந்த பிறகு கூட அம்மாதான் அவனுடைய உடமைகளை எடுத்துச் சேகரித்து அறையைச் சீர்ப்படுத்தி வைப்பாள்.
அவன் உபயோகித்த பிறகு அறை மறுபடியும் அலங்கோலமாகக் கிடக்கும்.
மனு! உன் ரூமைப் பார்த்தால் யாரோ தீவிரவாதி போகிற போக்கில் ஒரு குண்டை வீசிட்டுப் போன மாதிரி இருக்குது
என்று தங்கை புவனா கேலி செய்வாள். மனுவின் மனசுக்குள் தன் எதிர்காலத்தைப்பற்றிய ஏகப் பட்ட கனவுகள் இருந்தன.
அவனை உற்சாகப்படுத்திக் கடிதம் எழுதி ஆசைகளை வளர்த்தவன் அமெரிக்காவில் இருந்த அவன் மாமா பிள்ளை நவீன், அவன் மனுவை விடச் சில வருடங்கள் வயதில் பெரியவன். ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயன்ஸில் தேர்வு பெற்று அமெரிக்காவில் படிப்பைத் தொடர்ந்து அங்கேயே வேலை ஏற்றுக் காலூன்றிக் கொண்டுவிட்டவன்.
அவன் அளித்த உற்சாகம் மனுவின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தியது. ஆனால், அவன் தன் இலட்சிய ஆவேசத்தை வீட்டில் யாரிடமும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை, அதை 'போன்ஸஸாய்' வடிவில் தன் மனசுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தான். படிப்பைத் தவிர வேறு எந்த விஷயமுமே அவன் கவனத்தைக் கவர்ந்ததில்லை.
கல்லூரிக்குக் கிளம்பும் கடைசி நிமிஷத்தில்தான் அவன் சாப்பிட வருவான். அப்போதும் கையில் ஒரு புத்தகம் பிரித்த நிலையில் இருக்கும். என்ன சாப்பிடுகிறோம் என்கிற பிரக்ஞைகூட அவனுக்கு இருக்காது. அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து விடுவான். வீட்டில் யாருக்குமே அம்மாவுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்கிற இங்கிதம் இருந்ததில்லை. அப்பாராஜசேகரன் வீட்டில் இருக்கிற நேரங்களில் தாம் உட்கார்ந்திருக்கிற ஈசிச்சேரிலிருந்து அவசியமான காரியமானால்தான் எழுந்திருப்பார். அழைப்பு மணிக்குப் பதில் சொல்லக்கூட அம்மாதான் ஓடியாக வேண்டும்.
காலைவேளை. வீட்டில் எல்லாருக்குமே அவசர நேரம். ராஜசேகரன் ஏ.ஜி. அலுவலகத்தில் கிளார்க்காக இருந்தார். மற்றவர்களுக்குக் காலேஜ், ஸ்கூல் என்று போகிற அவசரம். அப்போதுதான் கீரைக்காரியிலிருந்து அத்தனை பேரும் வருவார்கள்.
வண்ணான் வந்து இஸ்திரி துணிகளை எடுத்துப் போக நிற்பான். புவனா! கொஞ்சம் கணக்கை எழுதி இஸ்திரிக்குத் துணி கொடு.
அம்மா கெஞ்சும் குரலில் சொல்லுவாள்.
பெரியவள்வந்தனாகலியாணமாகி ஜம்ஷெட்பூரில் இருந்தாள். அவள் புக்ககம் போகும்வரை துளசிக்கு அவ்வளவு சிரமம் இல்லாமல் இருந்தது. புவனா அப்படி இல்லை. ரொம்ப குறும்புக்காரி. சோம்பல் வேறு உண்டு. தனக்குச் சொல்லப்படும் வேலையை யார் தலையில் கட்டலாம் என்று யோசிப்பாள்.
போம்மா! எனக்கு ஏற்கனவே லேட்டாயிடுச்சு. இந்த முறை போர்ட் எக்ஸாம் தரணும். ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. மனுவைக் கணக்கு எழுதச் சொல்லேன். ஆண் பிள்ளை வீட்டு வேலை செய்தால் குறைஞ்சிடுவானா? நாளைக்கு வரப் போகிறவளுக்குப் புடவைகூடத் தோய்த்துப் போட வேண்டி வரலாம். இப்பவே பழகிக்கட்டும்
புவனாமுடிப்பதற்குள் மனு வேகமாய்க் குளியலறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொள்ளுவான்.
அம்மா! இந்த மனுவைப் பாரு!
என்று அலறி புவனா குளியலறைக் கதவைப் படபடவென்று தட்டுவாள்.
யூ ஸ்டுப்பிட்!
மனு உள்ளிருந்து கத்த வீடே திமிலோகப்படும்.
இத்தனை அமர்க்களத்தில் வண்ணான் வந்து வாசலில் காத்துக் கொண்டிருப்பது எல்லாருக்குமே மறந்து போகும்.
அப்போ நான் பிறகு வரட்டுங்களா?
என்று கேட்டு அவன் தான் இருப்பதை நினைவுப்படுத்த அம்மாதான் கணக்குப் புத்தகத்துடன் போக