Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Yutham
Innoru Yutham
Innoru Yutham
Ebook97 pages51 minutes

Innoru Yutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125803963
Innoru Yutham

Read more from Lakshmi Ramanan

Related to Innoru Yutham

Related ebooks

Reviews for Innoru Yutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Yutham - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    இன்னொரு யுத்தம்

    Innoru Yutham

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    புஷ்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    தான் அன்று காலை ஏழு மணிக்கு ஐ.ஸி.யுவில் பார்த்த போது அந்தக் குழந்தை ஆபத்தான கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

    இரண்டே மணி நேரத்தில் அந்தக் குழந்தை, குழந்தைகளுக்கான பொது வார்டில் கட்டிலில் எப்படிக் கொண்டு வந்து விடப்பட்டிருந்தது? அதுவும்... அதன் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதபோது.

    அதை அங்கே அனுப்பி வைத்தது யார்?

    அருகில் அதன் தாய் எதுவும் புரியாதவளாய் விழித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

    புஷ்பா குனிந்து கட்டிலில் இணைக்கப்பட்டிருந்த மெடிகல் ரிப்போர்ட்டை எடுத்துப் புரட்டினாள்.

    திடுக்கிட்டவளாய், என்ன நடக்குது இங்கே? என்று கோபப்பட்டாள்.

    அடுத்த கட்டிலில் இருந்த குழந்தையைப் பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டர் பிரசன்னா விரைந்து வந்து, எனி ப்ராப்ளம்? என்றான்.

    அபாய கட்டத்தில் இருக்கிற குழந்தையை டாக்டர் தியாகி டிஸ்சார்ஜ் பண்ணி இருக்கிறார்.

    இருக்காதே.

    இதைப் படியுங்க.

    அவன் ரிப்போர்ட்டைப் பார்ப்பதற்குள்…

    அநியாயம். வரவர இங்கே நடக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை பிரசன்னா.

    ப்ளீஸ் - புஷ்பா! தயவுசெய்து உங்கள் அபிப்பிராயங்களை இங்கே வெளிப்படையாகச் சொல்லாதீர்கள், அது நோயாளிகளின் மனதில் சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும், தியாகி அனுபவமிக்கவர், அவர் காரணமில்லாமல் அப்படிச் செய்திருக்க மாட்டார்னு தோணுது. அவன் சொன்னதைக் கவனிக்காமல் புஷ்பா, குழந்தையின் தாயிடம் பேச்சுக் கொடுத்தாள்.

    டாக்டர் என்னம்மா சொன்னார்

    மருந்து மாத்திரை எல்லாம் எழுதிக்குடுக்கறோம். சரியாயிடும். வீட்டுக்குப் போயிட்டு அடுத்த வாரம் குழந்தையை செக்கப்புக்குக் கூட்டியாங்கன்னு சொன்னார்.

    நீங்க யாருக்காகக் காத்துக்கிட்டிருக்கீங்க?

    ரூல்ஸ்படி பதினோரு மணி வரை இங்கே இருந்துட்டுப் போகணுமாம். அதனால நாஸ்டா சாப்டுட்டு ஆட்டோ கொண்டார தம்பிய வெளியே அனுப்பியிருக்கேங்க.

    உனக்கு வேறு யாரும் இல்லியா?

    புருஷன் இருக்காரு. அவரு கட்சி விஷயமா மீட்டிங்குனு வெளியூர் போயிருக்காரு.

    சரி... குழந்தைய ஜாக்கிரதையாப் பார்த்துக்கங்க என்ற பிரசன்னா, புஷ்பாவைத் தள்ளாத குறையாக வெளியே அழைத்து வந்தான்.

    இது அநியாயம் இல்லாமே வேறு என்ன? டாக்டர்கள் நோயைக் குணப்படுத்துவாங்க என்கிற நம்பிக்கையில்தானே ஜனங்க மருத்துவமனைக்கு வராங்க.

    உங்க ஆதங்கம் புரியுது. அதை இத்தனை தாரம் கோபமாக வெளிப்படுத்த வேண்டாம்னு தோணுது.

    என்ன பிரசன்னா! நீங்களே இப்படிப் பேசினால் ஆச்சரியமாக இருக்கு.

    டாக்டர் தியாகி மருத்துவமனை விதி எதையும் மீறவில்லை. இங்கே ஐ.ஸி.யுவிலிருந்து நேரடியாக யாரையும் டிஸ்சார்ஜ் பண்ணக் கூடாது என்பது ரூல், குறைந்தது இரண்டு மணி நேரமாவது பொதுவார்டில் இருந்த பிறகே வீட்டுக்கு அனுப்பப்படலாம். அந்த விதியைத் தியாகி மீறவில்லை.

    என்ன ரூல்... என்ன விதி? இந்தக் குழந்தைக்குக் குடலில் இருந்த அடைப்பை நீக்கி, மேஜர் சர்ஜரி ஆகி மூன்று நாள் தான் ஆகியிருக்கு. இன்னும் தையல் போட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிவது நிற்கவில்லை, அதை நிறுத்தி குழந்தையின் உடல்நிலை சரியாகும் வரையில் - அதற்கு மெடிக்கல் அட்டென்ஷன் தேவை என்பது டாக்டர் தியாகிக்குத் தெரியாதா? அதற்குள் ஏன் டிஸ்சார்ஜ் பண்ணினார்? எனக்கு அந்தக் காரணம் தெரிகிறவரையில் நான்.விட மாட்டேன். நிச்சயம் அவரிடம் கேட்கப் போகிறேன்.

    இங்கே என்ன சர்ச்சை நடக்குது? என்று கேட்டவண்ணம் டாக்டர் ரவி வந்தான்.

    பிரசன்னா நடந்ததை விவரித்தான்.

    இதுதானா விஷயம். என்கிட்டே கேட்டிருந்தால் நான் காரணத்தைச் சொல்லிடரிருப்பேன். அந்தக் குழந்தை பிழைப்பது கஷ்டம். இது நம் எல்லாருக்குமே தெரியுமே, அதனாலே அதை ஐ.ஸி.யுவிலே தொடர்ந்து வெச்சு மன்றாடிக்கிட்டு எதுக்கு டிராமாப் போடணும்னு தியாகி என்னைக் கேட்டார், என்னாலே பதில் சொல்ல முடியல்லே, அதன் அப்பா ஏதோ ஒரு கட்சித் தொண்டனாம். அதோடு ரவுடித்தனத்துக்குப் பெயர் எடுத்தவனாம், குழந்தை மருத்துவமனையில் செத்து வெச்சா, ஏதாவது பிரச்னையைக் கிளப்பி அடாவடி பண்ணுவானோன்னு சந்தேகப்பட்டு...

    என்ன அடாவடி....

    சரியான கவனிப்பு குடுக்கல்லேன்னு தகராறு பண்ணலாம் இல்லையா?

    அதுக்காக.... ஒர் உயிரைக் காப்பாத்த இறுதிவரை போராடறது டாக்டருடைய கடமை இல்லையா?

    டாக்டர் என்பவர் கடவுள் இல்லை மிஸ் புஷ்பா. நாம் நோயுடன்தான் போராடலாம். நோயாளியின் தலைவிதியுடன் போராட முடியாது.

    குட் ஆர்க்யுமென்ட். நீங்க டாக்டருக்குப் பதில் வக்கீலுக்குப் படிச்சிருந்தால் நன்றாய்ப் பிரகாசிச்சிருப்பீங்க.

    தாங்க்ஸ் புஷ்பா என்றான்

    Enjoying the preview?
    Page 1 of 1