Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhamal Vandha Varam
Ezhamal Vandha Varam
Ezhamal Vandha Varam
Ebook190 pages1 hour

Ezhamal Vandha Varam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125803856
Ezhamal Vandha Varam

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Ezhamal Vandha Varam

Related ebooks

Reviews for Ezhamal Vandha Varam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhamal Vandha Varam - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    எழாமல் வந்த வரம்

    Ezhamal Vandha Varam

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    வகுப்பறையை விட்டு வெளியே வந்த ஹம்ஸா கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு நடக்கத் துவங்கினாள்..

    அப்போது... கைப்பேசி சிணுங்கியது. எடுத்து

    சொல்லு ஹரிதா என்றாள்.

    அக்கா... வீட்டில் நிலவரம் சரியில்லை... உன் சம்பந்தமாய் ஏதோ பிரச்சினை. முதலே எச்சரிக்கலாம் கூப்பிட்டேன்.. வெச்சிடட்டுமா?

    என் சம்பந்தமாய் என்ன பிரச்சினை...? ஹலோ..

    ஹம்ஸா கேட்பதற்குள் ஹரிதா போனை வைத்து விட்டிருந்தாள்.

    'என்ன பிரச்சினை...? சமீபத்தில் யாரும் அவளைப் பெண் பார்க்க வரவில்லையே... வழக்கம்போல் 'நோ' சொல்லியிருந்தாலோ. வரதட்சிணையை உயர்த்திப் பேரம் பேசியிருந்தாலோ.. தான் வீட்டில் நிச்சயம் ஒரு விவாதப் பொருளாகியிருப்பாள். ஆனால் சமீபத்தில் அப்படி ஏதும் நிகழாததால் அதற்கான வாய்ப்பில்லை... அப்படி இருக்க...' - ஹம்ஸா குழம்பிய மனதுடன் பஸ் பிடித்து ஆர்.கே. புரத்தில் இருந்த தங்கள் வீட்டை அடைந்தாள். உரத்த குரலில் கத்தி வீட்டையே இரண்டு பண்ணிக் கொண்டிருந்த அண்ணன் பசுபதி ஹம்ஸாவைப் பார்த்ததும் அடங்கிப் போனான். அவன் கத்துவதைப் பிரமிப்புடன் பார்த்த வண்ணம் நின்றிருந்த ஹரிதாவும் தம்பி முரளியும் உள்ளே, ஓடிப்போய் விட்டார்கள். அம்மா கமலா சமையலறைக்குள் புகுந்து கொண்டு தன் கோபத்தை பாத்திரங்களின் மேல் காட்டிக் கொண்டிருந்தாள்.

    அப்பா சோமசுந்தரம் அங்கிருந்த சூழ்நிலையில் தான் சம்பந்தப்படாதவர் போல் 'இண்டியா டுடே'யை வைத்துக் கையில் புரட்டிக் கொண்டிருந்தாலும் முகம் கடுகடுவென்றிருந்தது.

    ஹரிதா எச்சரித்ததைப்போல்..

    ஏதோ விபரீதம் நடக்கத் தான் காரணமாகி விட்டோம் என்று இவர்கள் நம்புகிறார்கள் போலும். அதைத் தன்னிடம் விளக்கம் கேட்டுத் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கூடாதா? எதற்காக இந்தக் கொதிநிலை எல்லோரிடமும்? அது எதுவாயினும் சரி.

    அவர்களாக அதைப் பிரஸ்தாபித்தாலொழிய அவள் எதையும் கேட்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டவளாய் முன் வாயிலைக் கடந்து, வீட்டுக்குள் நுழையும் முன் இருந்த வராந்தாவில் ஓரமாக இருந்த ஷெல்பில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டுக் குளியலறைக்குச் சென்று கைகால், முகம் கழுவிக் கொண்டாள்.

    'இவர்கள் கோபத்துக்கு என்ன காரணம் இருக்கும்?' என்று மனம் தவித்தது. அவள் தெரிந்து எந்தத் தவறும் செய்யவில்லையே, டில்லிப் பட்டிணத்தில் எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு, பி.ஹெச்.டிக்கு படித்துக் கொண்டு கூடவே பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்க்கிறவளைப் போலவா அவள் இருக்கிறாள்? கைத்தறி சேலையைத் தவிர அவள் வேறு எதுவும் அணிவதில்லை.

    பஸ்ஸில் பெண்களுக்கான இருக்கையில் இடம் கிடைத்தால் மட்டுமே உட்காருவாள். கல்லூரியில் இடைவேளை நேரத்தில் சக லெக்சரர்கள் காண்டீனுக்குச் சென்று சனா படூராவையும், பீஸ்ஸா, பர்கரையும் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவள் மட்டும் அடக்கமாக ஸ்டாஃப் ரூமில் ஒரு பக்கமாய் உட் கார்ந்து அம்மா கட்டிக் கொடுத்த ஆறிப்போன புளியோதரையையோ, சப்பாத்தி சப்ஜியையோ, தயிர்சாதம் மாவடுவையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். –

    சினிமா பார்க்கிற ஆசை அவளுக்கு என்றுமே இருந்ததில்லை. சினிமா நடிக நடிகையர்களைப் பற்றிய கிசு கிசுக்களை தன் சிநேகிதிகள் விவாதிக்கையில் அவள் அதில் சுவாரஸ்யம் காட்டியதில்லை.

    "ஹம்ஸான்னு பெயர்தான் நாகரீகமாய் இருக்கு. –

    உனக்கு எதில்தான் ஈடுபாடு...?" என்று அவளுடைய சிநேகிதிகளான காவ்யாவும், ரேணுகாவும் கிண்டலடித்ததைக்கூட அவள் பொருட்படுத்தியதில்லை.

    தில்லியில் பேருந்துகளை மட்டும் நம்பி வேலைக்குப் போய் வருகிற பெண் அவள் ஒருத்திதானோ...? அதுவே பெரிய சாதனைதான்!

    முற்றும் துறந்த முனிபுங்கவியாய் அவள் வாழ்ந்தும் வீட்டிலுள்ளவர்களுக்கு அப்படி என்ன அவள் மேல் கோபம்?

    ஹம்ஸா முகத்தைத் துவாலையால் துடைத்தவாறு சமையலறையில் நுழைந்தாள்.

    வழக்கமாக காபியைக் கலந்து கையில் கொடுக்கும் அம்மா, இன்று அவளைப் பார்த்ததும் காபி டம்ளரை மேடையில் அவள் எதிரில் 'ணக்' என்று வைத்தாள்.

    ஹம்ஸாவுக்குப் பயங்கரமாய் பசித்தது. அலமாரியைத் திறந்து பிஸ்கட் டப்பாவை எடுக்க முடியாமல் அம்மா நந்தி மாதிரி அதன் முன் நின்று கொண்டிருந்தாள்.

    "நீ கெட்ட கேட்டுக்கு பசி வேறா?' என்று அவள் தன்னையே கேட்டுக் கொண்டு, காபியை எடுத்துக் குடித்து விட்டு டம்ளரைக் கழுவி மேடைமீது கவிழ்த்து விட்டு அங்கிருந்து போக முயன்றபோது...

    நில்லு! அம்மாவின் குரல் அதட்டலாக வந்தது.

    ஹம்ஸா நின்று திரும்பிப் பார்த்தாள்.

    எத்தனை நாளாய் இது நடக்குது?

    எது?

    ரொம்ப டிராமாப் போடாதே. உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நீ சொல்லுவே. அதை நாங்க நம்பிடணுமா?

    ஹம்ஸாவுக்கு இப்போது உண்மையிலேயே கோபம் வந்தது.

    அம்மா! இங்கே பாருங்க. எதையும் நேரடியாகச் சொல்லாமல் இப்படி புதிர் போட்டால் எனக்கு எப்படிப் புரியும்? நானும் வந்ததிலேருந்து கவனிச்சுக்கிட்டிருக்கேன். ஏதோ விபரீதமாக நடந்து விட்ட மாதிரியும், அதுக்கு நான் தான் பொறுப்பு என்கிற தினுசில் நீங்க ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டிருக்கீங்க. எதையும் சொல்லாமல் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லறது?

    இதற்கு பதில் சொல்லு அம்மா கமலா அலமாரியில் டப்பா வரிசைக்கு இடையில் செருகி வைக்கப்பட்டிருந்த கடிதத்தை எடுத்து அவள் முன் பொத்தென்று போட்டாள்.

    'கடிதமா? அவளுக்கு யார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்?' ஹம்ஸாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பி.ஏ. முடித்ததுமே அவளுடைய நெருங்கிய சிநேகிதிகள் திருமணமாகி சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா என்று கிளம்பிப் போய் விட்டார்கள். முதல் ஒரு சில மாதங்களுக்கு கடிதங்கள், மின் அஞ்சல் என்று அவளுக்கு அனுப்பிய அவர்கள் குழந்தை பிறந்து குடும்பப் பொறுப்புகள் கூடுதலானதும் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்புவதே பெரிய காரியமாக இருந்தது. பிறகு அதுவும் நின்று விட்டது.

    அம்மா அப்போதெல்லாம் புலம்புவாள். உன் வயசுப்பெண்கள் அவங்க எல்லாம் கல்யாணமாகி செட்டிலாயிட்டாங்க. உனக்கு இன்னும் வேளை. வரலியே... பாக்கிற வரனெல்லாம் கை நழுவிப் போயிடுது.

    ஆனால் நான் அவங்க மாதிரி நார்மலாகப் பிறக்கலியே அம்மா. இதயத்துல ஒரு ஓட்டையை வெச்சுக்கிட்டு பிறந்து அதுக்காக ஒரு அறுவை சிகிச்சையையும் செய்துக்கிட்டிருக்கேன். டாக்டர் 'இவள் சாதாரணப் பெண்ணைப்போல் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளலாம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம்' என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கார். ஆனால் நம்மால் பிள்ளை வீட்டாருக்கு அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்னு சொல்லுவாங்க. அந்தப் பொய்யில் எனக்கு ஆபரேஷன் நடந்திருக்கிற விஷயத்தை மறைப்பதையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டாமே என்று நினைச்சோம். ஆனால் அதைக் கேட்டுட்டு நமக்கு இந்த இடம் வேண்டாமேன்னு ஒதுங்கினவங்கதான் அதிகம் இல்லையா அம்மா?

    ஹம்ஸா சொன்னதும் உண்மைதான். அவளுடைய அழகும் மற்ற தகுதிகளும் எடுபடாமல் போனதற்கும் அவளுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தான் காரணம்.

    டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்கலாம். ஆனால் என் பிள்ளைக்கு இந்த இடம் வேண்டாமேன்னு பார்க்கிறேன் என்று அவள் தந்தையிடம் சொல்லிவிட்டுக் கழன்று கொண்டவர்கள் பலர். ஹம்ஸாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததை தாங்கள் ஒரு பெரிய குறையாக நினைக்காதவர்களைப்போல் அவளைப் பெண் பார்க்க வந்தவர்களும் இருந்தார்கள். அதற்கான காரணம் பிறகே தெரிய வந்தது.

    மிஸ்டர் சோமசுந்தரம்! உங்களுக்கு ஒரு இக்கட்டு, இருக்கிற மாதிரி எங்களுக்கு ஒரு நெருக்கடி இருக்குது. என் பிள்ளை நொய்டாவிலே ஒரு ஃப்ளாட் புக் பண்ணியிருக்கான். கையிருப்பு அத்தனையையும் இறக்கினால் கூட அஞ்சு லகரம் துண்டு விழுது. நீங்க அந்தத் தொகையைக் கொடுத்து டீசென்டாய் கலியாணம் பண்ணிக் கொடுத்தீங்கன்னா போதும். முகூர்த்தத் தேதியை இப்பவே தீர்மானிச்சுடலாம்,

    பிள்ளையைப் பெற்றவர் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் சொன்ன விதம் ஹம்ஸாவுக்கு எரிச்சலூட்டியது. அவளுடைய ஆபரேஷனுக்கு அப்பா வாங்கிய கடனை அடைக்கவே வருஷக் கணக்காயிற்று. அவளுக்கு அடுத்தபடி ஹரிதாவும் முரளியும் படிப்பை முடிக்க வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க கணிசமான தொகை தேவைப்படும். இத்தனை சுமைகளுக்கு நடுவில் ஐந்து லட்சத்தை அப்பா உடனடியாக எப்படிப் புரட்டுவார்? ம்ஹூம்... அதை அவள் அனுமதிக்க மாட்டாள்.

    மற்றவர்களுடைய பலவீனங்களைத் தங்களுக்கு ஆதாயமாக்கிக் கொள்ள நினைக்கும் சுயநலவாதிகளை என்னவென்று சொல்வது? இவர்களைத் திருத்த எந்தச் சட்டத்தால் முடியும்? ஹம்ஸா தனக்குத் திருமணமே அவசியமில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.

    *****

    2

    சோமசுந்தரம் மத்திய அரசில் சாதாரண வேலையில் இருந்தார். அவர் ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகளே இருந்தன. மூத்த பிள்ளை பசுபதி பி.காம். வரை ஒழுங்காகப் படித்துக் கொண்டிருந்தவன். எம்.காமில் சேர்ந்து டொனேஷனையும் அழுதுவிட்டு, ஃபீஸ் கட்டி, புத்தகங்கள் வாங்கி ஒரு வாரம் மட்டுமே வகுப்புகளுக்குச் சென்று வந்து விட்டு திடீரென்று புத்தி வக்கரித்து படிப்பை உதறிவிட்டு தான் பிசினஸ் பண்ணப் போவதாக அறிவித்ததும் பெற்றவர்களுக்கு பகீர் என்றது. மூலதனம் எதுவுமே இல்லாமல்.. அதுவும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் பிசினஸ் செய்கிறேன் என்று இறங்க முடியுமா? போதாததற்கு உதவாக்கரை நண்பர்கள் சிலர் கூட்டுச் சேர்ந்து அவனைத் தங்கள் போக்கிற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1