Kanne Undhan Nizhalavean
()
About this ebook
Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.
She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.
Read more from Uma Balakumar
Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Mazhai Tharumo En Megam…! Rating: 4 out of 5 stars4/5Manam Vizhithathu Mella! Rating: 2 out of 5 stars2/5Ullam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Nesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsEn Sorgam Nee Penne Rating: 5 out of 5 stars5/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Manathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Vaanam Thodatha Nilavu! Rating: 3 out of 5 stars3/5Gnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratingsSwasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnai Neenga Maatten! Rating: 5 out of 5 stars5/5Theendi Sendra Thendral Rating: 5 out of 5 stars5/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nirai Porsudare Rating: 0 out of 5 stars0 ratingsVaram Tharum Vasanthame! Rating: 5 out of 5 stars5/5Un Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsNeethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Nee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsMounam Kalaindha Devathai! Rating: 2 out of 5 stars2/5Maruva Kaadhal Kondean! Rating: 5 out of 5 stars5/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5
Related to Kanne Undhan Nizhalavean
Related ebooks
Nee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nirai Porsudare Rating: 0 out of 5 stars0 ratingsNooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsUllam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Varam Tharum Vasanthame! Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5En Sorgam Nee Penne Rating: 5 out of 5 stars5/5Naan Unnai Neenga Maatten! Rating: 5 out of 5 stars5/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Neethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Manathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Swasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Malarntha Nesapoove! Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Sippi Vantha Muthu... Rating: 4 out of 5 stars4/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Ennai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thodatha Nilavu! Rating: 3 out of 5 stars3/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsAnalukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kanne Undhan Nizhalavean
0 ratings0 reviews
Book preview
Kanne Undhan Nizhalavean - Uma Balakumar
http://www.pustaka.co.in
கண்ணே உந்தன் நிழலாவேன்!
Kanne Undhan Nizhalavean!
Author:
உமா பாலகுமார்
Uma Balakumar
For more books
http://www.pustaka.co.in/home/author/uma-balakumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
அந்த ஏகாந்த இரவில்... பெளர்ணமி ஒளிச் சாரலில், உலகே மஞ்சள் உடை உடுத்திய தேவதையாய் காட்சியளித்தது!
ஒவ்வொரு மலரையும் ஒரு நேசக் கவிதையாய் உதிர்த்து, பூமிக்குத் தூதனுப்பிக் கொண்டிருந்தன... குல்மொஹர் மரங்கள்!
அந்த ரயில் நிலையத்தில் இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக நின்றிருந்த அந்த ரயிலில் ஏறி அமர்ந்தாள் சம்வர்த்தினி.
ஜாக்கிரதைடி! ஊருக்குப் போய் சேர்ந்தவுடனே எனக்கு போன் பண்ணு!
ஜன்னல் வழியே அவள் கையைப் பிடித்தபடி மீரா கூற, பெட்டியையும், ஏர் பேகையும் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு அவளிடம் விடைபெற்றுக் கீழே இறங்கினார் மீராவின் தந்தை சபாபதி.
'சரிடி...! உனக்கும் அங்கிளுக்கும் ஒரு வாரமா ரொம்பத் தொல்லை குடுத்திட்டேன்... அங்கிள் இல்லேன்னா எனக்கு இந்த வேலையே கிடைச்சிருக்காது! ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்!"
அவள் குரலில் கசிந்த நன்றியுணர்வு, சபாபதியை பெரிதும் நெகிழச் செய்வதாய்!
எனக்கு நீயும் மீராவும் ஒண்ணுதாம்மா வர்த்தினி... இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்! அங்கே உனக்கு வேலை பிடிக்கலைன்னா எப்ப வேணாலும் எங்க வீட்டுக்கு நீ திரும்பி வரலாம்!
வாஞ்சையுடன் உரைத்தவரிடம், சிறு கலக்கத்துடன் விடைபெறும்போதே, ரயில் நகரத் துவங்கியது.
மீரா சிறிதும் தூரம் அவள் கையைப் பிடித்தபடியே ஓடி வர, நட்பின் உன்னதம் அந்த நேரம் புரிவதாய்!
என்னுடைய தாய், மனதிற்குப் பிடித்த வேலை, உயிராய் வளர்த்த மாமா அனைவரையும் விட்டு விட்டு இப்படி எங்கோ அநாதையாகச் செல்கிறேனே
வென்ற தவிப்பும் வேதனையும் அவளை வெகுவாய் ஆட் படுத்தின.
மெதுவாகப் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள். ரயிலின் வேகத்திற்கு எதிர் மாறாய்க் கடந்து செல்லும் இயற்கைக் காட்சியாய், நினைவுகள் பின் நோக்கிப் பயணிக்கத் துவங்கின.
***
வர்த்தினிம்மா! இன்னிக்கு ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் போகணும்னியே எழுந்திரிக்கலையாடா?
அம்மா சுகந்தியின் குரல் மயிலிறகாய் இன்னும் செவி மடலை வருடுவது போல்!
மெதுவாக விழித்தவளின் முன்னால், நெற்றியில் சிறு கீற்று விபூதியுடன் தேஜஸ் மிளிர நின்ற தாயின் உருவம்!
ம்... மாமா ஏதும் போன் பண்ணினாங்களாம்மா?
கேட்டபடி எழுந்து அமர்ந்தாள் வர்த்தினி!"
இல்லைடா! நீ சரியான நேரத்துக்கு வந்திடுவேன்னு தான் அண்ணனுக்குத் தெரியுமே! அதான் பண்ணலைன்னு நினைக்கிறேன்...
சரிம்மா! நீங்க எப்போ ஸ்கூலுக்குப் போகணும்?
எனக்கு எப்பவும் போல ஒன்பது மணிக்குத்தான்... இன்னிக்கு என்ன பங்ஷன்மா?
என்னம்மா... மறந்துட்டீங்களா? மாமா ஹாஸ்பிடல் ஆரம்பிச்சி பதினேழு வருஷம் முடியப் போகுதேம்மா! அதான்! இன்னிக்கு ஃபங்ஷன் இருக்கு!
என்றபடி தயாராகி மருத்துவமனைக்கு வந்தாள் அவள்.
சம்வர்த்தினி, பி.பி.ஏ. படித்து விட்டு ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் கோர்ஸும் படித்தவள்... இப்போது எம்.பி.ஏ. தபாலிலும் பயின்று வருகிறாள்!
அவளுடைய மாமா சுந்தர மகாலிங்கத்தின் மருத்துவ மனையில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசராகப் பணி புரிந்து வருகிறாள்.
மருத்துவமனைக்குச் சென்றவள், அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்வையிட்டு விட்டு முன்புறம் வந்தாள்.
மேடம்! நீங்க வந்தவுடனே சீஃப் உங்களை வந்து பாக்கச் சொன்னாங்க!
ரிசப்ஷனிஸ்ட் கூறியதும், இரண்டாவது ப்ளோருக்குச் சென்றபோது அவளுக்காகக் காத்திருந்தார் சுந்தர மகாலிங்கம்.
வர்த்தினி! வா... வா! உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன்டா... எல்லாம் ரெடியா?
ஆர்வத்துடன் விசாரித்தார்.
ம்... பாத்துட்டுதான் வரேன் அங்கிள்! நீங்க டிபன் சாப்பிட்டாச்சா?
இல்லைடா! உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்... வா... ரெண்டு பேருமா சாப்பிடலாம்! நீ சீக்கிரம் வருவேன்னு தான் தெரியுமே... சேத்துதான் ஆர்டர் பண்ணியிருக்கேன்.
இருவரும் சாப்பிட்ட பிறகு அன்றைய விழாவிற்கான வேலைகள் தொடர், கேக் வெட்டி கோலாகலமாகக் கடந்த பதினேழு வருட இனிய வெற்றியைக் கொண்டாடி முடித்தனர்.
எப்போதும் போல், முதல் கேக் துண்டை அவளுக்கே மகாலிங்கம் ஊட்டிவிட, அவளுக்கோ பெரும் நெகிழ்ச்சியாய்!
வர்த்தினியின் சிறு வயதிலிருந்தே ஒரு பெறாத தந்தையாய்... பாசமிகு மாமாவாய் அவளை அன்புடன் வளர்த்தவர் அவர்!
இன்றுவரை அவளுடைய படிப்பு செலவையும் ஏற்று, அவளைத் தன் சொந்தப் பெண்ணாகவே பாதுகாப்பவர்!
அவள் தாய் சுகந்திக்கு தூரத்து உறவில் அண்ணன் முறையென்றாலும், தனக்கென்று யாருமே இல்லாததால், அவர்களையே தன் குடும்பமாக வரித்திருப்பவர் மகாலிங்கம்!
மருத்துவப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்து, திருமணமே செய்து கொள்ளாமல் இன்றும் தனிமையிலேயே வாழ்பவரை வர்த்தினி தன் தந்தைக்கும் மேல் நேசித்திருந்த தருணமது!
நினைவு தெரியாத சிறு வயதிலேயே தந்தை இறந்த பிறகு, ஒரு தந்தையாய், நண்பராய், பாதுகாவலராய் அவளுடைய உணர்வுகளைப் புரிந்து நடப்பவர் அவர்.
தனக்குப் பிறகு இந்த மருத்துவமனையை கவனிக்க, பொறுப்பேற்க அவள் ஒரு டாக்டராக வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஆனால் அவளுக்கோ மருத்துவத் துறை எடுத்துப் படிக்க ஆர்வமில்லாததால், அவளுடைய விருப்பத்தை மதித்து தேர்ந்தெடுத்த துறையில் படிக்க அனுமதி வழங்கி, இன்று வரை அவளுக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றும் வருகிறார்.
என்ன வர்த்தினி! அப்படியே அமைதியா உக்காந்து யோசிச்சிட்டிருக்கீங்க?
நர்ஸ் தேவகியின் குரல் அவளைக் கலைக்க நிமிர்ந்தால், தான் மாமாவைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து, சுற்றுப்புறத்தை மறந்து நின்று விட்டது புரிவதாய்!
ம்... ஏதேதோ பழைய ஞாபகங்கள் தேவகி!
என்றபடி விலகிச் சென்றவள், அன்று மாபெரும் இடியொன்று தனக்காகக் காத்திருப்பதை அறியவில்லை!
***
ரிசப்ஷன் அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து கண் மூடி யோசித்திருந்தவளைக் கண்ட வரதன் என்ற அந்த மனிதருக்கோ, யோசனையாய்!
தன் உறவினர் வீராச்சாமியின் மறு பதிப்பாய் உயரமாக, தீர்க்கமான அழகு முகத்துடன் அவள் தெரிய, உடனே சென்று அவளிடம் பேச வேண்டும் போல்!
ஆனால் மறுகணமே அவள் எழுந்து உள்ளே சென்று விட, தான் பார்க்க வந்த நோயாளியின் அறைக்கு யோசனையுடன் விரைந்தார் அவர்.
அன்று முழுவதும் மருத்துவமனையைத் தேனியாய் சுற்றி வந்தவள், வீட்டிற்குக் கிளம்பத் தயாராகியபோது, மகாலிங்கம் அவளை செல்லில் அழைத்தார்.
உடனே சென்று அவரிடம் மருத்துவமனை தொடர்பான சில விபரங்களைப் பேசி விட்டு வெளியே வரும் போதுதான், அந்த வரதன் அவளை வழி மறித்தார்.
சுந்தர மகாலிங்கத்தையும் அவளையும் ஒன்றாய் பார்த்தவருக்கோ, தாங்க முடியாத அதிர்ச்சியும், கோபமும்! இது எப்படி...?
வீராச்சாமி இறந்ததற்குப் பிறகு அவர் குடும்பத்தாருடன் தொடர்பின்றிப் போனது அவருக்கு ஞாபகம் வருவதாய்!
கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு மேல் ஆயிற்று... அவர் சுகந்தியைப் பார்த்து!
வீராச்சாமி இறந்த பிறகு கணவரின் சொந்த ஊருக்கே வராமல் எங்கோ சென்று விட்ட கனகத்தைப் பற்றியும், அவள் குழந்தையைப் பற்றியும் ஊரே மறந்து போயிருந்தது.
இன்று, தன் உறவினர் வீராச்சாமியின் மறு பதிப்பாய் பெண் உருவாய் அவளைக் கண்டதும் மகிழ்ந்தவர், அவளை சுந்தர மகாலிங்கத்தோடு கண்டதும் வெகுவாய் அதிர்ந்துதான் போனார்.
இந்த மனிதனுடன் வீராச்சாமியின் மகள் எப்படி... இவன் யாரென்று இந்தப் பெண்ணிற்குத் தெரியுமா... பதறித் துடித்தது இதயம்!
மறுகணமே அவளைத் தொடர்ந்தவர், பார்க்கிங் ஏரியாவில் அவளைக் கண்டு பிடித்துவிட்டார்.
தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்து உயிர்ப்பிக்க முயலும்போதுதான், ஒரு குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
ஒரு நிமிஷம்மா! நீ வீராச்சாமி அண்ணன் மகதானே?
அவர் கேட்டதும் வியப்புடன் திரும்பியவளுக்கு அவரின் அடுத்த கேள்வி பேரிடியாய்!
"எப்படிம்மா நீ இந்த டாக்டரோட... உங்கப்பாவைக் கொன்னவனோடவே நீ எப்படி... ரொம்ப