Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkaiyil Vetri Pera 38 Padigal
Vazhkaiyil Vetri Pera 38 Padigal
Vazhkaiyil Vetri Pera 38 Padigal
Ebook171 pages1 hour

Vazhkaiyil Vetri Pera 38 Padigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110803904
Vazhkaiyil Vetri Pera 38 Padigal

Read more from Udayadeepan

Related to Vazhkaiyil Vetri Pera 38 Padigal

Related ebooks

Reviews for Vazhkaiyil Vetri Pera 38 Padigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkaiyil Vetri Pera 38 Padigal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    வாழ்க்கையில் வெற்றி பெற 38 படிகள்

    Vazhkaiyil Vetri Pera 38 Padigal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மற்றவர்களின் மனதைப் படியுங்கள்

    2. பிறர் குறைகளை சுபாவமாக எடுத்துக் கொள்ளுங்கள்

    3. பிறரை பாராட்டுங்கள்

    4. நினைவாற்றலைப் பெருக்கிக்

    கொள்ளுங்கள்

    5. உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்

    6. படிப்பில் சாதனைகளைச் செய்யுங்கள்

    7. அசாதாரண பிறப்புகள்

    8. வாழ்வில் இலக்கை உறுதிப்படுத்துங்கள்

    9. கவனித்து முன்னேறுங்கள்

    10. தடைகளைக் கடந்து விடுங்கள்

    11. உண்மைக்குள் நடந்து செல்லுங்கள்

    12. எதிலும் உயர்வாக நடந்து கொள்ளுங்கள்

    13. மற்றவர்களை விட்டு மாறுபட்டு இருங்கள்

    14. நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

    15. உடன்பாட்டு எண்ணங்களில் இருங்கள்

    16. தீர்க்கமான முடிவுகளை எடுங்கள்

    17. அடுத்தவரை அவர் இடத்தில் இருந்து மதிப்பிடுங்கள்

    18. நீங்கள் நீங்களாக இருங்கள்

    19. பழைய நினைவுகளை மறந்து விடுங்கள்

    20. உள் உணர்வுகளின் வழிகாட்டலில் செயல்படுங்கள்

    21. உங்களின் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்

    22. கனவு காணுங்கள் நினைத்தது

    நிறைவேறும்

    23. தன்னை வெல்பவன் வீராதி வீரன்

    24. எதையும் ஒருவித அழகுடன் செய்யுங்கள்

    25. ஒரு பெண் உங்களை விரும்ப வேண்டுமா?

    26. படிக்கும் நேரம் காதலுக்குரியதல்ல

    27. இருப்பதில் திருப்தியை அடையுங்கள்

    28. உங்களுக்குள் எல்லையற்ற ஒரு சக்தி உலகம் உண்டு

    29. வாய்ப்புகளை உருவாக்குங்கள்

    30. தலைமைச் சக்தியாக இருங்கள்

    31. மறந்து மன்னித்து விடுங்கள்

    32. எளிமையாக சிரித்து வாழுங்கள்

    33. நன்றிக்கு வித்தாக இருங்கள்

    34. சிந்தனையில் துன்பங்களை வெல்லுங்கள்

    35. தன்னம்பிக்கை எண்ணங்கள்

    36. மனைவி பிள்ளைகளை புரிந்து

    கொள்ளுங்கள்

    37. இருப்பதில் பிற உயிர்களுக்கும் அளியுங்கள்

    38. மனிதனுக்குள் இல்லாத சக்திகள் இல்லை

    என்னுரை

    மனிதன் தனக்குள் இருக்கிற மனோசக்தியினால், நாளும் தவறான வழிகாட்டப்படுகின்றான். ஒளியைக் காட்டிலும் அதிக வேகம் கொண்ட, இம்மனோசக்தியின் பின்னால், அதன் யோசிக்காத, பின் விளைவுகளை சிந்திக்காமல் செல்லும் அதன் மாய, அபூர்வ, சுழற்சியில் மனிதன் அடையும் தினத்தொல்லைகளுக்கு ஓர் அளவு இருக்கிறதில்லை.

    தன் இறுதி எல்லைக்கு மனிதன் மரணத்திற்கு, அவன் நிரந்தரத் தூக்கத்திற்கு, அழைக்கப்படுகிற வரைக்கும் கவலை, விரக்தி, வேதனை, அலுப்பு, சலிப்பு, திருப்தியின்மை இவைகளால் சூழப்பட்டு, அவன் திக்குதிசை தெரியாமல் திண்டாட்டத்தில் இருக்கிறான்.

    தன்னுள் இருக்கும் மனோ சக்தியினால் மனிதன் துன்பங்களை அடையாமல் இருக்கவும், மகிழ்ச்சி, சந்தோஷம், நிம்மதியை அடையவும், இந்த மனத்தை திட்டமிட்ட வழிகளில் தன் பின்னால் அழைத்துச் செல்வதற்கும் உரிய அரிய வழிகள் வாழ்க்கையில் வெற்றி பெற 38 படிகள் என்ற இந்நூலில் கூறப்பட்டிருக்கின்றன.

    மனிதனுக்கு வழிகாட்டும் இந்நூலில், தடைகளைக் கடக்கும் வழிகள், தன்னை வெல்லவும், உண்மைக்குள் செல்லவும், நேரத்தைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ளவும், தன்னம்பிக்கை கொள்ளவும், தீர்க்கமான முடிவுகள் எடுக்கவும் இதில் மிகச் சிறப்பான வழிகள் கூறப்பட்டிருக்கின்றன.

    பழைய நினைவுகளை அழித்து, தனது உள் உணர்வுகளை வெற்றி கண்டு, கனவுகளைக் கண்டு, அடைய வேண்டிய இலக்கை அமைத்து, எச்செயலையும் ஒரு வித்தியாசத்தில், அழகுடன் செய்து, பிறர் மனத்தைப் படிக்க இதில் இனிய முறைகள் தரப்பட்டிருக்கின்றன!

    மேலும், பிறர் குறைகளை அவரது சுபாவமாக எடுத்துக் கொண்டு, தன்னுள் நினைவாற்றலைப் பெருக்கி, உடல் நலன், மனநலன் இவற்றில் கவனம் செலுத்தி, இளம் வயதில் காதல் இல்லாத படிப்பில் அதன் உச்சத்தை எட்டி: மனிதன் தலைமைச் சக்தியாக இருக்கவும், தன் உள் சக்திகளில் அமிழ்ந்து அதன் அசாதாரண சக்திகளை அடையவும், நன்றிக்கு வித்தாகி உங்கள் துன்பங்கள், தடைகளைக் கடக்க, உங்களுக்குள் உள்ள இருட்டுக்களைக் கடக்க, அற்புத வழிகளை இந்நூல் உறைக்கின்றது.

    இனி வெற்றியின் உச்சியை நோக்கி நடக்கவும், குன்றின் உச்சியில் இட்ட விளக்காய் நீங்கள் ஒளிரவும் ஆன, உங்களின் இனிய பயணம் தொடரட்டும்.

    அன்பார்ந்த ஆசிரியன்.

    உதயதீபன் எம்.ஏ.

    1. மற்றவர்களின் மனதைப் படியுங்கள்

    வாழ்க்கையின் நகர்வுகளில் மிக முக்கியமானது, பிறரை படித்தல் என்பது தான். பிறரை படிக்க நிறைய வழிகள் இருக்கின்றன.

    மனிதனைப் படியுங்கள்

    வார்த்தைகளை பிறர் உபயோகிப்பதை வைத்து அவர்களை நன்கு அடையாளம் கண்டு கொள்வது எளிது. எனக்கு ஜாலிதான் தேவை. வாழ்க்கையை அனுபவிச்சுக்கணும், அப்புறம் செத்தமான்னு இருக்கணும் என்று பேசுபவர் பொறுப்புகளை ஏற்க தகுதி கொண்டவர் அல்ல. இவர், ஒரு போதும் தன் உடலை வளைத்து, குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யக்கூடியவர் அல்ல.

    இவர், பிறர் உழைக்க, அதில் உட்கார்ந்து சாப்பிடும் ஒரு ரகமாக இருக்கிறவர். இவரிடத்தில் பணம் கொடுத்து, சரி நீ இந்த வேலையை பாரு என்று சொன்னால், பணம் இவருக்குப் பலியாகிவிடும். கொடுக்கப்பட்ட வேலை நிச்சயம் இவரால் நடக்காது. நடைபெற வழி இல்லை.

    அவர் அப்பணத்தை கொண்டு குடித்துக் கொண்டு இருப்பார். இல்லை, நண்பர்களோடு சேர்ந்து சீட்டாடிக் கொண்டு இருப்பார். இல்லை என்னும் எத்தனையோ வேறு வழிகளில் அப்பணத்தைத்தான் தெண்டச் செலவு செய்து, அதில்தான் மகிழ்ந்து கொண்டிருப்பார்.

    இவரை நம்பி, எக்காரியத்தை ஒப்படைத்தாலும், அதில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் தான் வரும். வேலை ஆகாது.

    நல்ல மனிதனை அடையாளம் காணுங்கள்

    எனக்கு நன்றி கெட்டவர்களைப் பிடிக்காது; துரோகம் செய்கிறவர்களைப் பிடிக்காது என்று சொல்கிறவர்கள் நிச்சயமாக ஒரு நேர்மை வாதியாக இருப்பார்கள். இவர்களை நம்பி, எந்தக் காரியத்தையும் ஒப்படைக்கலாம். பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்பவர்கள், இவர்கள் நல்லவர்கள்.

    அதிகாரம் செலுத்தும் மனிதன்

    சிலரோ, சதா அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். இப்படித்தான் நடக்கணும்; இதைத்தான் செய்யணும், என் அனுமதியின்றி இந்த வீட்டில் எதையும் செய்வது கூடாது என்று.

    இவர்கள் அதிகாரப் பிரியர்கள். அடுத்தவர்கள், வீட்டில் தனக்குப் பயப்பட வேண்டும், என்பது இவர்களது எண்ணம், கத்து, சப்தம், சண்டை வம்பு இதெல்லாம் இவர்கள் இருக்குமிடத்தில் சகஜமாய் இருக்கும். வீடு அமைதிக்குள் இருக்காது. இவர்களால் குடும்ப நிம்மதிக்கு பாதிப்பு வரும்! ஆனால், இவர்கள் அதிகாரம் செலுத்தினாலும் நம்பத் தகுந்தவர்கள்.

    கண்டிப்பு குடும்ப நன்மைக்காக

    இவர்கள் கண்டிப்பது, குடும்பத்தில் ஒரு ஒழுங்கு நல்லது நடக்க. இவர்கள் கண்டிப்புக்கு ஒத்துப் போகும் பிள்ளைகள் பிற்காலத்தில், இவர் கண்டிப்புகள் தந்த பாடத்தில் சிறப்பாகவே வாழ்வார்கள், உயர்வார்கள்.

    பொறுப்பற்ற மனிதர்கள்

    சிலர் சிரித்து மழுப்புவார்கள். உண்மையை வெளியில் கூறமாட்டார்கள். அதிக செலவு செய்பவர்களாக இருப்பார்கள். ஆரம்பத்தில் பிறரிடத்தில் பிரியம்கூடித் தெரிவார்கள். எதையும் நுணுக்கமாக, திட்டமிட்டு சரியாக செய்யத் தெரியாதவர்கள் இவர்கள்.

    இவர்களை நம்பி எல்லாம், எதையும் செய்வது நடக்காது. சரியான, கழுத்தறுப்புப் பேர்வழிகளாக இவர்கள் இருப்பார்கள். எல்லாவற்றிலும் தோற்று, ஒரு நிலையில் இருக்கத் தெரியாமல், தன்னை வழி நடத்திக் கொள்ள அறியாமல், இருக்கும் இவர்கள் பிறர் எப்படியோ போகட்டும் என்று தன் பிள்ளைக் குட்டிகளை மனைவியை விட்டு தன் சுகத்திற்காக இவர்களை விட்டு பிரிந்து வீட்டைவிட்டு வெளியேறி விடவும் செய்வார்கள்.

    இத்தகையவர்களை நம்பி, மனைவி மக்களும்கூட இருப்பது நல்லதல்ல. இவர்களால் யாருக்கும் நன்மைகள் நடக்காது.

    இதில் பொதுவாக மனிதனைப் புரிந்து கொள்வது நல்லது. எந்த மனிதனாக இருந்தாலும் அவன், சிலவற்றில் வெகு பிடிவாதம் கொண்டு விட்டுக்கொடுக்க மறுத்துவிடுவான்.

    குழந்தைப் பிடிவாதம் வளர்ந்த மனிதனிடத்தில்

    இது இவனுக்குள் உள்ள, அவனுக்குப் பிடித்ததை விட்டுக் கொடுக்காத பிடிவாதம். இது எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கும் ஒன்றுதான்.

    வளர்ச்சியில் மனிதனின் உடல் வளர்ந்திருந்த போதும், ஒரு ஐ.ஏ.எஸ் கூட தன் பிடிவாதத்தில் உறுதியாக விட்டுத் தரமாட்டான் என்று நிற்பது

    நிர்வாகத்தை, அவன் நடத்திச் செல்வதற்காக மட்டும் அல்ல, அவனுக்குள் ஒளிந்திருக்கும் தன் குழந்தை கால பிடிவாதத்திற்காகவும் அவன் இப்படிச் செயல்படுகிறான்.

    குழந்தை எப்படி தனக்குப் பிடித்ததை விட்டுக் கொடுக்க அழுது, அரற்றி, முரண்டு பிடிக்கிறதோ அதே போன்ற ஒரு குழந்தைத் தனம் ஒவ்வொரு மனிதனிடத்திலும், அவனது வளர்ந்த நிலையிலும் இருக்கிறது. மனிதன் பிடிவாதத்தில், அதிகம் முரண்டு பிடித்தால் அப்போது விட்டுக் கொடுத்து விடுவது தான் நல்லது. ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது குழந்தைப் பிடிவாதம் அவனை தொடர்ந்து பின்வந்து கொண்டுதான் இருக்கிறது.

    மனிதனின் உள்ளே பயணம்

    பிறரின் மனத்துக்குள் நாம் செல்வது நம்வாழ்க்கையின் வெற்றிக்கான அடித்தளமாக அமையும்! எந்த முக்கியமான மனிதனிடத்தில் பேசும் போதும், முதலில் அவரது பேச்சில் உள்ளதைப் புரிந்து கொண்டு, நீங்கள் சொல்வது சரிதான். அதுதான் நிஜம், வாஸ்தவம் என்று அவர்கூட ஒத்து வாசிக்கும் போது

    Enjoying the preview?
    Page 1 of 1