Ennakinaru!
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSirithe Ahavendiya Chinna Chinna Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSundakkai Sithar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Mahabalipurathu Arpangal! Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsRajini Illathil Ragalai Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Seitha Kidney Thaanam Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Virumbiya Arputha Kattalaigal Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ennakinaru!
Related ebooks
Boodha Kannadi Samy! Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSollattuma Konjam? Rating: 0 out of 5 stars0 ratingsMithavai Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Mamisap Padaippu Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsVerpidi Man Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Roja Rating: 5 out of 5 stars5/5Mathorubagan Rating: 5 out of 5 stars5/5Sirai! Rating: 0 out of 5 stars0 ratingsNanavodai Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsOorkkolam Rating: 0 out of 5 stars0 ratingsThirumathi Thirupathi Crorepathi Rating: 0 out of 5 stars0 ratingsAppa Ennai Mannichuduppa Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMouna Pillaiyar Rating: 0 out of 5 stars0 ratingsNinaipathu Niraiverum Rating: 0 out of 5 stars0 ratingsVithi Pichai Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Uzhal Valigal Rating: 0 out of 5 stars0 ratingsNandhini En Nandhini Rating: 5 out of 5 stars5/5En Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ennakinaru!
0 ratings0 reviews
Book preview
Ennakinaru! - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
எண்ணக்கிணறு!
Ennakinaru!
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
1
பக்தர்களுக்கு ஒரு யோசனை. பூஜை அலமாரியில் தெய்வங்கள் மூச்சுவிடத் திணறுகிற அளவு அவைகளின் திருவுருவங்களை அடைத்து வைக்கிறோம்.
பூ விற்கிற விலையில் (முழம் இருபது ரூபாய்) அனைத்துத் தெய்வங்களுக்கும் பூவை சமர்ப்பிக்க முடிவதில்லை. வருத்தப்பட வேண்டாம்.
தினமும் ஏதாவது ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் எல்லாப் பூவையும் போடுவது என்று ஒரு முறை வைத்துக்கொண்டால் நல்லது
என்கிறான் நண்பன் நாராயணன்.
அவன் ஒரு சிறிய பித்தளைத் தட்டில் தினமும் ஏதாவது ஒரு சாமியை மட்டும் உட்கார வைத்து எல்லாப் பூவையும அதற்கே போட்டு மனத் திருப்தி அடைகிறான்.
நாளைக்கு இன்னார், அடுத்த நாளைக்கு இன்னார் என்று கணக்கு வைத்துக்கொண்டு தெய்வ உருவங்களுக்கு பூ போட்டு மகிழ்கிறான். இத்தகைய வழிபாடு ஓரளவு மனத்தை சமாதானப்படுத்துகிறது
என்கிறான் நாராயணன்.
2
எருமை குட்டி போடுமா, குஞ்சு பொரிக்குமா?
குட்டிதான் போடும்.
ஆனால் சேலம் மாவட்டத்தில் எருமைச் சாணியால் தட்டப்படும் வரட்டியை 'எருமா முட்டை' என்று குறிப்பிடுவார்கள்.
சுவரில் அணிஅணியாக எருமா முட்டைகள் காணப்பட்டாலும் ஒரு தரம் கூட எருமைக் குஞ்சு அதிலிருந்து வெளிப்பட்டதில்லை.
உபரித் தகவல்: தற்சமயம் எல்லாப் பொருள்களும் விலையேறிவிட்டதைப் போல எருமா முட்டையும் விலையேறிவிட்டது. ஒரு முட்டை (வரட்டி) 5 ரூபாய்!)
3
அடுத்த வீட்டுத் தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய்கள் அடிக்கடி எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் தொப் தொப்பென்று விழுவது வழக்கம். தலையில் விழுந்து விடப் போகிறது என்ற அச்சம் எனக்கு. அடிக்கடி கம்ப்ளெயிண்ட் செய்வேன்.
சமீபகாலமாக ஒரு தேங்காய் இருபத்தைந்து ரூபாய் அல்லது முப்பது ரூபாய்க்கு விற்பதால் நான் இப்போதெல்லாம் கம்ப்ளெயிண்ட் செய்வது இல்லை. விழும் தேங்காயை 'அமுக்ஸ்' செய்துவிடுவேன்.
ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் என்னைவிட மகா சுறுசுறுப்பு.
முன்பெல்லாம் தேங்காய் விழுந்தால் தேடி வரமாட்டார். இப்போது 'தொப்' சத்தம் இரவு பன்னிரண்டு மணிக்குக் கேட்டால்கூட உடனே என் வீட்டு கேட்டைத் திறந்துகொண்டு விழுந்த தேங்காயைத் தேடி எடுத்துப் போய் விடுகிறார்.
4
அது ஒரு புத்தக வெளியீட்டு விழா. பெரும்பாலும் பத்திரிகையாளர், எழுத்தாளர், பதிப்பகத்தார் கூடியிருந்த கூட்டம்.
வளைகுடா நாட்டிலிருந்து வந்த ஒரு 'குட்டி வள்ளல்' விருந்தளித்தார். வந்திருந்த ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை எடுத்துப் பேசினர்.
என் அருகிலிருந்த ஒரு பிரபல ஓவியர், தன் இளமைக் காலத்தைப் பற்றி விவரித்தார்.
அந்தக் காலத்தில் அவர் பத்திரிகைகளுக்குப் படம் போட அலைந்தது, பத்திரிகைகள் போதுமான சன்மானம் தராதது ஆகியவற்றை விவரித்தார்.
இப்போது அவர் வசதியான நிலைமையிலிருந்தாலும் பழைய துன்பத்தின் சாயலே அவரது பேச்சில் தூக்கலாக இருந்தது. குறிப்பாக இளமையில் அவருக்கு உதவிய ஒரு பிரபல பத்திரிகையைத் தாக்கிப் பேசி முடித்தார்.
மிகக் குறைந்த சன்மானம்தான் அந்தப் பத்திரிகை அவருக்கு அப்போது வழங்கியதை சாடிப் பேசினார்.
அருகில் அமர்ந்திருந்த எனக்கு சங்கடமாகிவிட்டது. ஓவியரின் பேச்சு சபை நாகரிகமாகத் தெரியவில்லை.
அவரை அடுத்துப் பேசிய பிரபல நகைச்சுவை நடிகர், ஓவியரின் கூற்றுக்குப் பதில் சொல்வதைப்போல, அந்தப் பத்திரிகை எவ்வாறு எழுத்தாளருக்குரிய சன்மானத்தை, மேட்டர் அப்ரூவ் ஆனதுமே எழுத்தாளருக்கு அனுப்பி வைத்து விடும் என்பதையும், பத்திரிகை வெளிவருமுன் எழுத்தாளனுக்கு சன்மானத்தை அனுப்பி வைத்த ஒரே பத்திரிகை அதுதான் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
என் மனம் குளிர்ந்தது. அந்த நகைச்சுவை நடிகரை எனக்கு ஏற்கனவே ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இப்போது அந்த மதிப்பும் நட்பும் மேலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்து விட்டது. தாங்க் யூ எஸ்.வி. சேகர்.
பொது இடத்தில் யாரையாவது யாராவது தாக்கி விமரிசித்தால் நீங்கள் ரசித்து சிரித்துக்கொண்டிருக்காதீர்கள்.
மேடையில் உங்களுக்குப் பேச வாய்ப்பு வரும்போது தாக்கப்பட்டவர் செய்த நல்ல காரியங்களை, அவரது நல்ல பழக்கங்களை வெளியிடுங்கள்.
5
'விளம்பரம் வந்தால் வேறு சேனல் மாற்றி விடுவேன்' என்றான் நண்பன் நாராயணன்.
சில சமயம் விளம்பரங்களிலும் நல்ல பொன்மொழி கிடைக்கிறது.
ஒரு சோப்பு விளம்பரத்தில் நான் கேட்ட வசனம்.
'அடுத்தவங்க இடத்தைப் பறிக்க முடியாது. ஜெயிக்கணும்.'
6
விளக்கில் வீழ்ந்து இறக்கும் விட்டிலின் செயலை மடத்தனமானது என்று இகழ்வது சரியல்ல!
தன் உயிர் போனாலும் தன் இனம் அந்தத் தீயில் விழுந்துவிட கூடாது என்பதற்காகவே தியாகத்தனமாக அது அந்தத் தீயில் விழுகிறது!
7
புத்தக தானம் செய்பவர்கள் மூன்று வகைப்படுவார்கள்.
1. தான் எழுதியதை மட்டும் தருபவர்கள்.
2. பிறத்தியார் எழுதி தனக்கு வந்து சேர்ந்தவைகளை மட்டும் தருபவர்கள்.
3. பொது லைப்ரரியிலிருந்து அமுக்கி வந்த புத்தகங்களை மட்டும் தருபவர்கள்.
8
கோலமிட்ட தரையில் ஏற்றி வைக்கப்படும் குத்து விளக்கும், கோலமிடப்படாத தரையில் ஏற்றி வைக்கப்படும் குத்து விளக்கும் ஒரே அளவு வெளிச்சத்தைத் தந்தாலும் கோலத்தில் வீற்றிருக்கும் குத்து விளக்குக்கே அதிக மதிப்பு - பிரசாதத்துக்கும், பிச்சைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல.
9
தண்டோரா போடுவது என்னும் வழக்கம் பழைய காலத்தில் கிராமங்களில் இருந்து வந்தது.
கோவிலிலிருந்து சுவாமி புறப்படுகிறார் என்றால் எத்தனை மணிக்கு எந்தெந்தத் தெருவழியாக ஊர்வலம் வரும் என்பது போன்ற விஷயங்களை தண்டோரா போட்டு மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பார்கள்.
'சவுடேஸ்வரி சாமி ராத்திரி பத்து மணிக்கு மெரமணை (ஊர்வலம்) வருது. தேங்கா பழம் வையுங்க சாமியோவ்!' என்ற தண்டோரா சத்தம் கேட்டவுடன் தெருவாசிகள் பூஜைத் தட்டு ஏற்பாடு பண்ணி தயாராக வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு தூங்கப் போய்விடுவார்கள். வீடு தேடி சாமி வந்தாலும் ஆளில்லை.
சிலபேர் மட்டும் பூஜைத் தட்டுடன் ராத்திரி பதினோரு மணிக்கு குடும்பத்துடன் விழித்திருப்பார்கள்.
அது குடும்பத்துக்கு ஒரு பரவசமான அனுபவம். சில சிறுவர்கள் சாமி வரும்போது எழுப்பினால் எழுந்திருக்காமல், மறுநாள் காலை நான் பார்க்கலையே சாமி
என்று அழுது அட்டகாசம் பண்ணுவது உண்டு. அவர்களுக்குத் தனியாக 'பூஜை' நடக்கும்.
இப்போதும் கிராமங்களில் சுவாமி ஊர்வலம் சாவகாசமாக எங்கள் தெரு வழியாகவும் வருகிறது.
நண்பன் நாராயணன் சொல்கிறான். தேங்காய்ப் பழத் தட்டை மட்டும் வாசல் திண்ணையில் வைத்துவிட்டு (மூங்கில் தட்டு) வீட்டுச் சொந்தக்காரர்கள் கதவைத் தாழிட்டுக் கொண்டு தூங்கி விடுகிறாரக்ள். சாமி என்ன தேங்காய்ப் பழ கலெக்டரா?
10
'பழைய கவலைகளையே திரும்பத் திரும்ப நினைக்கிறவர்கள் சோர்ந்து போவார்கள்.
அவ்வப்பொழுது புதுப் புதுக் கவலைகளையும் சேர்த்துக்கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்'.
இது நண்பன் நாராயணனின் சமீபத்திய கண்டுபிடிப்பு.
11
தொண்டை டாக்டர் சொன்னார் :
பேசாதீர்கள் சிரிக்காதீர்கள்.
பின்னே எதற்குத்தான் வாழ்வது?
அவருக்குப் பீஸ் தரவேண்டுமே.
12
ராஜு, நீ பஜ்ஜியெல்லாம் சாப்பிடக்கூடாது
என்று கணவன் சொன்னால் அடுத்த விநாடி ராஜு நீ பஜ்ஜி சாப்பிடலாம்
என்று மனைவியின் அவசரக் குரல் ஒலிக்கிறது.
இந்த லட்சணத்திலே தம்பதிகள் இருந்தால் குழந்தை உருப்பட்டாப் போலேதான்
என்கிறார் ரசனை குறைந்த என் நண்பர்.
13
முதிய பாரத்ததினாய் வா! வா! வா!
பாரதத்தின் உயர்வுக்காக முதுகு நிறைந்த புத்தக பளுவை சுமந்து பொறுப்பாக தங்கள் குழந்தைகள் பின்னே செல்லும் முதிய பாரதத்தை இனி நான் ஜன்னல் வழியே பார்க்க முடியாது.
வாசல் கேட்டை உயர்த்தப் போகிறார்களாம்.
14
உங்களுக்குப் பிடித்த குறள் ஒன்றைத் தினமும் காலையில் ஒரு தரம் நிறுத்தி நிதானமாக எழுதும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
ஒரே ஒரு குறள் அழகாக எழுத வேண்டும் என்ற நினைப்போடு எழுதவேண்டும்.
எழுதிவிட்டு அதை பார்த்து சந்தோஷப்படுங்கள்.
அந்த எழுத்துக்களை டைரக்ட் செய்யுங்கள்.
உதாரணமாக அகர முதல
என்று தொடங்கியிருக்கிறீர்கள். அ
வை நிதானமாக கவனியுங்கள்.
அந்த அவை இன்னும் நன்றாக எழுத உங்களால் முடியுமோ.
அ
என்ற முதல் எழுத்தில் துவங்கும் சில வார்த்தைகளை எழுதிப்பாருங்கள்.
அன்பு
அன்னை
அவன்
அப்பா
அம்மா
எல்லா அ
வும் ஒரே மாதிரி இருக்கிறது. இத்தனை அ
களில் எந்த அ
அழகாக உள்ளது. ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். ரசியுங்கள். நீங்கள் அழகாக எழுதிய அ
.
இதையும்விட அ
வை உங்களால் அழகாக எழுதமுடியும் எழுதித்தான் பாருங்களேன்.
நைனா, ஒரே ஒரு அ
எழுதிப் பாருங்கள்.
நீங்கள் ரசிக்கிற அளவு ஓர் அ
எழுதிவிட்டால் பயிற்சி (அன்றைய) முடிகிறது. மறுதினம் அந்த அவை மறுபடி பாருங்கள். ரசியுங்கள்.
அதை மேலும் இம்ப்ரூவ் செய்யுங்கள்.
அந்த அ
வோடு சில நாள் பழகியதும் அதனோடு ஒரு நட்புணர்வு, மரியாதை, அன்பு, பிரியம் இவை ஏற்படும் அட்டாச்மென்ட் ஏற்படும்.
வேலை கெட்ட வேலை என்று சலித்துக் கொள்கிறவர்கள்.
ஆயுளுக்கும் கோழிகளாக சபிக்கப்பட்டவர்கள்!
15
தினமும் விடிந்ததும் மடத்தில் சில வளர்ந்த யானைகள் ஒரு குட்டி யானைக்கு பூஜை செய்கின்றன. கெஜபூஜை!
பூஜையின்போது ஓரொரு வாழைப் பழமாக, ஆப்பிளாக யானைக்குத் தருவது பூஜை மாதிரி தெரியவில்லை. திகில் கலந்த ஒரு விளையாட்டு மாதிரிதான் தெரிகிறது.
ஒரு அகன்ற தொட்டியில் பழ வகைகளைப் போட்டு (நிரப்பி) யானை முன் வைத்தால் தாராளமாக அது சுதந்திரமாக எடுத்துச் சாப்பிடும்.
சுற்றிலும் பழங்களை இறைத்துவிடப் போகிறது, வீணடித்துவிடுமே என்று மனிதன் நினைக்கிறான்.
சகல ஜீவ ராசிகளுக்கும் இவன்தான் ஒவ்வொன்றாக எடுத்து ஊட்டுகிறானா? இந்தியக் காட்டில் நூற்றுக்கணக்கான புலிகள், சிங்கங்கள், மான்கள் உள்ளன.
இந்தியாவின் கால்நடை எத்தனையோ கோடிகள். ஒரு கோழிக் குஞ்சுகூட இவன் ஊட்டித்தான் இரை உண்கிறதா என்ன?
கிளியைக் கூட்டில் அடைத்து ஓரொரு நெல்லாகத் தருகிற கஞ்சப் பிரபு அல்லவா இவன்?
தினமும் தீனி வைத்துவிட்டு ஏதோ ஒரு தினம் அறுத்துத் தின்னுகிற கொலைகாரன்.
பிராணிகள் இவனிடம் இரை வாங்கித் தின்ற பாவத்தைச் சேர்த்துக்கொண்டதன் விளைவாக இவன் கையாலேயே கொல்லப்படுகின்றன.
ஆகவே இவன் பிராணிகளுக்கு செய்கிற பூஜைகளெல்லாம் வெறும் வேஷம். கடவுளுக்கும் அதுவே. (உனக்கும் பே! பே! உங்கப்பனுக்கும் பே! பே!)
16
மஹாத்மா காந்தி 'ஹிந்த் ஸ்வராஜ்' என்ற நூலில் (1909ல் எழுதியது) ரயில்களைத் தாக்கோ தாக்கென்று தாக்கி எழுதியிருக்கிறார். ரயில்களே பயங்கரமான பிளேக் நோயைப் பரப்பிவிட்டன. ரயில் வசதி யிருப்பதால் மக்கள் தங்களிடமிருக்கும் தானியங்களை கிராக்கியுள்ள இடங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். மனிதனிடமிருக்கும் கெட்ட சுபாவங்களை ரயில்வேக்கள் கிளறிவிடுகின்றன.
ரயில்மீது இப்படித் துவேஷம் கொண்டிருந்ததால்தான் தென் ஆப்ரிக்காவில் அது பழி தீர்த்துக்கொண்டதோ? வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாயிற்றே!
17
கும்பகோணம் ரோட்டரி கிளப்பினர் நடத்தும் பயனுள்ள மாதாந்திரப் பத்திரிகையின் பெயர் Tank City. (தமிழ் ஆங்கிலம் இரண்டும் உண்டு) சங்க விஷயங்களும் பொது அறிவு விஷயங்களும் நிறையத் தருகிறார்கள்.
அதில் அப்புசாமியின் 'மாஞ்சா மகோத்ஸவம்' என்ற கதையை ஆறு மாதம் (6 இதழ்) எழுதுவதற்கு ஒப்புக்கொண்டு 5 இதழ் எழுதியாச்சு. 4 இதழ் பிரசுரமாயாச்சு. 5'வது அச்சில் 6'வது மூச்சில்!
எத்தனை வருஷங்கள் எழுதிப் பழகியிருந்தாலும் ஓரொரு கதை (அதுவும் தொடர்) எழுதும்போதும் சகலவித பிளட் பிரஷர்களும் ஏற்பட்டு விடுகின்றன.
அர்ஜுனன் குறிப்பிட்டதுபோல
வேபதுஸ்ச சரீரேமே ரோம ஹர்ஷஸ்ச ஜாயதே
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத் த்வக்சைவ பரிதஹ்யதே.
உடம்பு புத்தி எரியுது. காண்டீபம் (பேனா) கை நழுவுது. வாய் உலருது. (எனனாங்கடா கண்ணராவி இது ஏறக்குறைய 68 வருஷம் கதை கட்டுரை எழுதியும் புதுசா ஒண்ணு எழுதணும்னா