Kaatrin Niram Karuppu
By Rajesh Kumar
5/5
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsShimla Ramya Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Oomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to Kaatrin Niram Karuppu
Related ebooks
Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 5 out of 5 stars5/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Ulagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Sorkkathin Savee Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/5Koodave Oru Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Sorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Unnai Vittal Yarumillai Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Vithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthan Vilaiyaduven! Rating: 5 out of 5 stars5/5Nizhalin Niram Sivappu Rating: 5 out of 5 stars5/5Andha October 14 Rating: 5 out of 5 stars5/5November Rathirigal Rating: 5 out of 5 stars5/5Akalyavin Aagayam Rating: 0 out of 5 stars0 ratingsVivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsEn Desiya Geetham Rating: 2 out of 5 stars2/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Welldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsSangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsOru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaatrin Niram Karuppu
2 ratings0 reviews
Book preview
Kaatrin Niram Karuppu - Rajesh Kumar
http://www.pustaka.co.in
காற்றின் நிறம் கறுப்பு
Kaatrin Niram Karuppu
Author:
ராஜேஷ்குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
சொப்னாவுக்கு அந்த நடுநிசி இருட்டில் தெரு விளக்குகள் அணைந்து போயிருந்த அந்த குறுகலான ரோட்டில் ஓடுவது சிரமமாய் இருந்தது. எக்கச்சக்கமாய் வியர்த்தது. நுரையீரல்கள் காற்றுக்காகத் தவிக்க இருதயம் வாய் வழியாக வந்து ‘விடுகிறேன்' என்பதைப் போல எம்பியது.
ரோட்டின் வளைவைக் கடக்கும்போது திரும்பிப் பார்த்தாள். அந்த இரண்டு பேர் துரத்திக் கொண்டு வருவது அந்த சாம்பல் இருட்டில் மசமசப்பாய் தெரிந்தது. பூட்ஸ் சத்தம் அவர்கள் வேகமாய் வருவதை உணர்த்தியது
'நீ இந்த வேகத்தில் ஓடினால் இன்னமும் ஐந்து நிமிஷ நேரத்திற்குள் அவர்கள் கையில் பிடிபடப் போவது சர்வ நிச்சயம்!' -சொப்னாவின் மூளைப் பிரதேசத்தில் ஒரு சிவப்புக் கொடி பறந்தது.
'என்ன செய்யலாம்...?'
'யாராவது எதிர்ப்பட்டாலாவது பரவாயில்லை. உதவி கேட்கலாம். இந்த ஏரியாவில் இந்த ராத்திரி வேளையில் அது சாத்தியமில்லை.'
'டெலிபோன் பூத்துக்கு போக வேண்டுமென்றாலும் அரை கிலோ மீட்டர் தூரமாவது...ஓட வேண்டும்.'
'என்னால் முடியுமா...?'
'உடம்பு இப்போது இருக்கும் நிலையில் முடியும் என்று தோன்றவில்லை.'
ஓடிக் கொண்டிருந்தவளின் பார்வை ரோட்டோரமாய் போடப்பட்டிருந்த ஒரு பெரிய சிமெண்ட் குழாயின் மீது பட 'ஒளிந்து கொள்ளலாமா...?' என்று ஒரு விநாடி யோசித்து - அடுத்த விநாடியே குழாய்க்குள் புகுந்து கொண்டாள். உள்ளே படுத்திருந்த நாயொன்று அவளுடைய வருகையில் அதிர்ந்து எழுந்து ஓடியது.
சொப்னாவுக்கு இப்போது மூச்சு வேகமாய் இறைத்தது. தலையிலிருந்து பாதம் வரைக்கும் வெள்ளமாய் வியர்வை. வலது உள்ளங்கையால் வாயை பொத்திக் கொண்டு இடது கையால் இருதயத்தை அழுத்திக் கொண்டு பார்வையை மட்டும் வெளியே போட்டபடி உட்கார்ந்திருந்தாள்.
தட்... தட்...
பூட்ஸின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகரித்தது. சிமெண்ட் குழாய்க்குப் பக்கத்தில் வந்த போது நின்று விட்டது. மூச்சிரைப்போடு இரண்டு பேச்சுக்குரல்கள் பதட்டமாய்க் கேட்டது.
இந்தப் பக்கமாகத்தானே திரும்பினா...?"
ஆமா...
ஆளையே காணலையே...?"
ஆச்சர்யமாயிருக்கு...
அவ திரும்பினதை நீ பார்த்தியா...?
ஆமா...! அங்க பாரு...
என்ன?
சிமெண்ட் குழாய்... உள்ளார பூந்திருந்தாலும் இருப்பா. குனிஞ்சு பாரு...
பூட்ஸ் சத்தம் சிமெண்ட் குழாயை நெருங்க உள்ளேயிருந்த சொப்னாவின் வயிற்றில் பயம் கிடுக்கியைப் போல் கவ்வியது. 'மாட்டிக் கொள்வோம்...நிச்சயமாய் மாட்டிக் கொள்வோம்.' குழாயின் மறுமுனையை நோக்கி வேகமாய் நாலு காலால் தவழ்ந்தாள்.
குழாய்க்குள் குனிந்து பார்த்தவன் கத்தினான். சேது! அவ அந்த பக்கமா போறா...
சொப்னா குழாயின் மறுபக்கம் வெளிப்பட்டு குபீரென்று ஓட மறுபடியும் துரத்தினார்கள். அப்போது கணிசமான இடைவெளி குறைந்திருந்தது.
'பொட்டச்சி என்ன ஓட்டம் ஓடறா...!'
‘அவளால எவ்வளவு தூரம் தான் ஓட முடியும்...' சொப்னா முன்னைக் காட்டிலும் அதிகமாய் வியர்த்துக் கொண்டு வாய் பிளந்து உலக மொத்த காற்றையும் சுவாசிக்க விரும்புபவளைப் போல் மூச்சிறைத்து ஓடினாள். பூட்ஸ் சத்தம் பின்னால் விடாப்பிடியாய் கேட்டது.
'எந்த நிமிஷமும் அவர்கள் தொட்டுவிடலாம்...'
சொப்னாவின் கண்களில் அப்போதுதான் அந்த வெளிச்சப் பொட்டு பட்டது. அசைந்தது. பக்கம் வர வர புரிந்தது.
'சைக்கிளில் யாரோ வருகிறார்கள்'
'கடவுளே! என்னைக் காப்பாற்றிவிட்டாய்!'
சொப்னா ஓடிப்போய் சைக்கிளை பற்றிக் கொண்டாள். அய்யா! என்னை காப்பாத்துங்கய்யா...ரெண்டு பேர் என்னைத் தொரத்திட்டு வர்றாங்க...
சைக்கிளை விட்டு இறங்கியவன் அந்த ஏரியா கூர்க்கா. கையிலிருந்த டார்ச்சை முகத்தில் அடித்து பார்த்து விட்டு நல்ல தமிழில் பேசினான்.
யார் துரத்திட்டு வர்றாங்க...
பின்பக்கம் கையை காட்டிக் கொண்டிருக்கும்போதே அந்த இரண்டு பேரும் ஓடி வந்து வாயில் மூச்சு விட்டுக் கொண்டு நின்றார்கள்.
கூர்க்கா சைக்கிளை ஸ்டாண்டிட்டு நிறுத்திவிட்டு கேட்டான். யார் நீங்க...? எதுக்காக...இந்தப் பெண்ணை துரத்தறீங்க...?
இவ ஒரு காஸெட்டை திருடிட்டு வந்துட்டா...
கேஸட்டா...
ஆமா...
ஏம்மா கேஸட்டை திருடிட்டு வந்தியா...?
இ... இல்லையே...
சொப்னா தலையாட்டிக் கொண்டே பின்வாங்கினாள். அந்த இரண்டு பேரும் அவளை நோக்கி நகர்ந்தார்கள். இவ பொய் சொல்றா
கூர்க்கா கையை நீட்டி மறித்தான். அந்தப் பொண்ணை தொடாதீங்க...நா வேணுமின்னா போலீசுக்கு தகவல் கொடுத்து...
இதோ பார் உன்னோட கூர்க்கா வேலையைப் பார்த்துக்கிட்டு நீ போய்கிட்டே இரு...இது எங்களுக்கும் அவளுக்கும் நடுவில் இருக்கிற பிரச்சனை. நாங்களே அதை தீர்த்துக்கிறோம்...
நான் இந்த ஏரியாவுக்கு கூர்க்கா...எந்த மோசமான சம்பவம் இங்கே நடந்தாலும்... நாளைக்கு போலீஸ் என்னைத்தான் விசாரிப்பாங்க...
என்னடா கதை பேசிட்டிருக்கே...? நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் கையேந்தர பயல் நீ...எங்களுக்கே புத்தி சொல்றியா...? மரியாதையா நகர்ந்து போயிடு...
நான் நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் கையேந்தறவன்தான். ஆனா அந்த காசுக்கு விசுவாசமா இருப்பேன், இந்தப் பொண்ணுகிட்டே நீங்க ஏதோ தப்பா நடந்துக்கப் பார்க்கறீங்க...நான் விடமாட்டேன்.
மரியாதையா நகரு...
மாட்டேன்...
கண்ணிமைக்கிற நேரம் கூட இல்லை. ஒருவனின் கையிலிருந்த மடக்கு கத்தி சட்டென்று தன் உலோக நாக்கை நீட்டிக் கொண்டு கூர்க்காவின் இடுப்புப் பகுதியில் பாய்ந்தது.
ம்...மா...ஆ...ஆ...ஆ...
கூர்க்கா வீறிட்டு மடங்கி சாய, நிலைமை தனக்கு சாதகமாய் இல்லை என்று புரிந்து கொண்ட சொப்னா மறு படியும் ஓட ஆரம்பித்தாள்.
ஏ...ஏய்...நில்லு...
கூர்க்காவின் இடுப்பிலிருந்து-ரத்தமாய் கத்தியை உருவிக் கொண்டு ஆவேசமாய், ஆக்ரோஷமாய் சொப்னாவைத் துரத்த ஆரம்பித்தார்கள் அந்த இருவரும்,
சேது! கொஞ்ச தூரம் போனா மெயின் ரோடு வந்துடும். அதுக்குள்ள அவளை மடக்கியாகணும்.
துரத்தும் வேகத்தை அதிகப்படுத்தினார்கள்.
அவசரப் போலிஸ் பிரிவில் டெலிபோன் துடித்தது. தூக்கத்தை விரட்டுவதற்காக ஜன்னலோரத்தில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் நிதானமான நடையில் போய் ரிஸீவரை எடுத்தார்.
ஹலோ...
அ...அ...அவசர...போ...போலீஸ்?
ஆமா...
ஸ...ஸார்...நான் திரிசூலம்... ஏரியா... சிட்கோ பாக்டரி சைட்டிலிருந்து... கூ... கூர்க்கா லால்ரங் பேசறேன்...
ஏன்...திணறி திணறி பேசறே...? என்ன விஷயம்...?
ஸ...ஸார்...ரெண்டு பே...பேர் என்னை...கத்தியால குத்திட்டாங்க...
என்னது குத்திட்டாங்களா...? இப்ப...நீ எங்கிருந்து பேசிட்டிருக்கே...? குத் தின வங்க யாரு...?
அ...அ...அவங்க யா... யாருன்னு தெரி... தெரியலை... ஏதோ கேஸட்டை...தி...திருடிட்டதா சொல்லி ஒரு பெண்ணை தொறத்திட்டு வ... வந்தாங்க... நான்... தடுத்தேன்... க... கத்தியால் குத்திட்டாங்க ஸார்.
இப்ப...நீ எங்கிருந்து பேசிட்டிருக்கே...?
தி...திரிசூலம்... செகண்ட் கிராஸ் ரோட்டில் இ... இருக்கிற ப... பப்ளிக் பூத்திலிருந்து...பேசறேன்...
அந்த பொண்ணு என்ன ஆனா...?
தெ... தெரியலை ஸார்... இ... இருட்டுல தொறத்திட்டு போ... போனாங்க... நீங்க உடனே போலீஸ் வேன்... ஆம்புலன்ஸோட ஸ்பாட்டுக்கு வாங்க ஸார்...என் உடம்பில் இருந்து ர...ரத்தம் நி...நிக்காம போயிட்டிருக்கு...
இப்ப போலீஸ் வரும்...ஸ்பாட்ல இரு...
சொப்னா ஓட முடியாமல் நின்று மூச்சு வாங்கினாள். இருதயச் சுவர்களில் விதவிதமான தாள லயங்கள். குடல் தசைகளில் ஊசி குத்துகிற தினுசில் வலி. மெயின் ரோட்டுக்குப் போக இன்னும் ஐந்து நிமிஷமாவது ஓட வேண்டும். முடியுமா? இரண்டு மார்புகளுக்கு மத்தியில் பதுக்கி வைத்திருந்த காஸெட் பத்திரமாய் இருக்கிறதா என்று தொட்டு பார்த்துக் கொண்டாள்.
மெயின் ரோட்டுக்குப் போனால் அதை யாரிடமாவது சேர்ப்பித்து விடலாம்.
தட்... தட்...
பூட்ஸ் சத்தம் காதுகளில் மோதியது.
சக்கையாகிப் போன உடம்பில் மறுபடியும் பலத்தை திரட்டிக் கொண்டு ஓட முயல சேலையில் பெருவிரல் மாட்டிக் கொண்டு இடறி விட்டது.
குப்புற விழுந்தாள்.
சுதாரித்து எழுவதற்குள்-
இரண்டு பேரும் ஓடி வந்து சொப்னாவின் மேல் விழுந்தார்கள். பிடரித் தலைமுடியைப் பற்றி தூக்கினார்கள்.
பொட்டக்களத! கேஸட்டை எடுடி...
சொப்னா திமிறினாள்.
எ...என்கிட்டே கிடையாது...
நீ எங்கே வெச்சிருப்பேன்னு எங்களுக்கு தெரியுண்டி...
சொன்னவன் அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மார்புப் பகுதியில் கையை விட்டு கேஸட்டை எடுத்தான். எடுக்க, எடுக்கவே சொப்னா அதை தட்டிப் பறித்தாள்.
ச்சீ...விடடி...
சொப்னா பிடியை விடாமல் பிடிவாதமாய் இருந்தாள். கேஸட்டில் நாடா கழன்று கொண்டு பரபரவென்று வெளியே வர-
இரண்டு பேரில் ஒருவன் ஆத்திரமாகி-கூர்க்காவின் ரத்தத்தில் ஏற்கனவே ஒருமுறை ஸ்நானம் செய்திருந்த பேனாக்கத்தியோடு சொப்னாவின் மேல் பாய்ந்தான்.
போலீஸ் ஜீப்பும், ஆம்புலன்ஸும் உச்சபட்ச வேகத்தில் திரிசூலம் ஏரியாவுக்குள் அந்த நடுநிசி நேரத்தில் நுழைந்தது. செக்கண்ட் கிராஸ் டெலிபோன் பூத்தைத் தேடி- அதற்கு முன்பாய் நின்றது. இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷம், சப்-இன்ஸ்பெக்டர் அஹ்மதும் ஜீப்பினின்றும் குதித்து பூத்தை நோக்கி ஓடினார்கள்.
பூத்துக்கு வெளியே நீட்டிய கால்கள் தெரிந்தது.
கதவைத் தள்ளினார் ஜெயப்பிரகாஷ்.
பூத்துக்குள் கூர்க்கா ஒரு கஷ்டமான கோணத்தில் மடங்கி விழுந்திருந்தான்.
கான்ஸ்டபிள்!
ஸார்...
டார்ச்சை கொண்டாந்து அடி...
"கான்ஸ்டபிள் டார்ச் வெளிச்சத்தை பூத்துக்குள் நிரப்ப கூர்க்கா காக்கி யூனிபார்ம் பூராவும் ஏராளமான ரத்த சேதாரத்தோடு தெரிந்தான். கண்களில் அறைப் பார்வை பார்த்து-பற்களை கிட்டித்து செத்துப் போயிருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் டெலிபோன் ரிஸீவர்-ஒயரில் தூக்கு போட்டுக் கொண்ட மாதிரி காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது.
2
கையில் கத்தியோடு தன்னை நோக்கிப் பாய்ந்தவனைக் கண்டு சொப்னா சற்றே விலகினாள். குறி திசை தவறியது.
சேது! இவ காஸெட்டை விட மாட்டேங்கறா... நாடா வேற கழண்டுகிச்சு.
காஸெட் முக்கியம்...பாண்டி...அது இல்லாம நாம போக முடியாது.
தெரியும்.
சொப்னா காஸெட் நாடாவை பரபரவென்று உருவினாள்.
ஏ...ஏய்... விடு...
'ப்பட்' நாடா தெறித்தது.
சேது...இவளை மொதல்ல முடி...இல்லேன்னா காஸெட் நாடா நாசமாயிடும்...
பாண்டி கத்த சேது மறுபடியும் கத்தியை வாகாய் பற்றிக் கொண்டு சொப்னாவின் முதுகை குறி வைத்து இறக்கினான். அவள் விலகுவதற்குள் கத்தி முந்திக் கொள்ள-சரியாய் தண்டுவடத்தில் அந்த குத்து விழுந்தது.
ஹக்க்...
சொப்னாவின் தலைவலியோடு அண்ணாந்து ஆகாயத்தைப் பார்க்க-கத்தி புதைந்த இடத்தில் ரத்தம் போர்க்கால அவசரத்தோடு வெளியேறிக் கொண்டிருந்தது காஸெட்டைப் பற்றியிருந்த கை தளர்ந்தது.
சேது...
ம்...
முதுகுல பாய்ஞ்ச கத்தியை எடுத்து வயித்திலும் ஒரு சொருகு சொருகிடு...ஒருவேளை இவ உயிர் பிழைச்சுட்டா அதனால கிளம்பற பிரச்சனைகளை சமாளிக்க நம்மாலே முடியாது...
சொருகிட்டா போகுது...
-சொன்ன சேது, சொப்னாவின் முதுகில் இறங்கியிருந்த கத்தியை சிரமமாய் பிடுங்கி-மடங்கி மண்டியிட்டு உட்கார்ந்திருந்தவளை காலால் இடறி மல்லாத்தி வைத்து வயிற்றின் மையப்பகுதியில் ஓங்கி இறக்கினான்.
‘ஹ!'- என்று அலறிய வாய் அப்படியே ஒரு ஸைபர் வடிவில் நிலைத்துப் போயிற்று.