Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinnanchiru Kiliye!
Chinnanchiru Kiliye!
Chinnanchiru Kiliye!
Ebook134 pages55 minutes

Chinnanchiru Kiliye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603767
Chinnanchiru Kiliye!

Read more from Devibala

Related to Chinnanchiru Kiliye!

Related ebooks

Reviews for Chinnanchiru Kiliye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinnanchiru Kiliye! - Devibala

    http://www.pustaka.co.in

    சின்னஞ்சிறு கிளியே!

    Chinnanchiru Kiliye!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    வீட்டுக்குள் பைக்கை நுழைத்து சுதாகர் பூட்டும்போது இரவு பதினொருமணி. வாசலில் காலை வைக்க குழந்தை நிஷா அலறி அழுதுக் கொண்டிருந்தது.

    சுதாகர் பதட்டமாக உள்ளே வந்தான்!

    அம்மா!

    இவன் குரல் கேட்டதுதான் தாமதம் மூன்று வயது நிரம்பாத நிஷா ஓடி வந்து சுதாகரின் இடுப்பைக் கட்டிக் கொண்டது.

    அப்பா!

    என்னடா தங்கம்? ஏன் அழற?

    பாட்டி என்னை அடிக்கறாங்க?

    சுதாகர் அதைத் தூக்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அப்பா கிடைத்ததும் அழுகை இன்னும் பெரிதானது?

    அழக்கூடாதுடா ராஜாத்தி! அப்பா வந்துட்டேனில்லை?

    இறுக அணைத்து முத்தமிட்டு கண்ணீர் வழியும் முகத்தை நன்றாகத் துடைத்து, மெல்ல கேசத்தை வருடிக் கொடுத்து, உடம்பு முழுக்க இதமான ஸ்பரிசம் தர மெல்ல மெல்ல அதன் அழுகை அடங்கத் தொடங்கிவிட்டது.

    அம்மா வெளியில் வந்தாள்

    நாங்களும் மனுஷங்கதான். காலையில் நீ ஏழு மணிக்கு வெளியில் போனா ஆபீஸ் முடிஞ்சு வர இந்த நேரம் ஆகுது? இவளை சமாளிக்க நாங்க பட்ட பாடு கொஞ்சமில்லை எங்களுக்கும் வயசாகுது. உடம்புல தெம்பில்லை.

    அப்பா பின் தொடர்ந்தார்

    இன்னிக்கு வேலைக்காரி வரலை, காலை ஒன்பது மணிக்கு பவர்கட்! அஞ்சு மணிக்குத்தான் வந்தது. நிஷா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்! கெஞ்சிப் பார்த்தோம். முடியலை நாள் முழுக்க இதை வீட்ல வச்சிருந்து பராமரிக்க எங்களால் முடியலை. சுதாகர் எதுவும் பேசவில்லை.

    ஆரம்ப காலத்தில் மேற்படி புலம்பல்களை கேட்கும் போது மனசு சங்கடப்படும், பல சமயம் கோபம் கூட வரும்! இந்த ஒரு வருஷமாக இது பழகிவிட்டது.

    நிஷாக்குட்டி! சாப்பிட்டியாடா?

    இல்லை!

    ஊட்டி விட நாங்க ரெண்டுபேரும் படறபாடு அந்த கடவுளுக்குத் தான் தெரியும்! சாப்பிடவே மாட்டேன்னு அடம்! நாங்க என்ன செய்ய முடியும்?

    அம்மாவுக்கு இன்னிக்கு சக்கரை இருநூறைத் தாண்டியிருக்கும்! இது அப்பா!

    நீ சாப்பிடறியா இப்ப? அப்பா ஊட்டி விடட்டுமா?

    சரி!

    ஏதாவது இருக்காம்மா,

    சோறும் ரசமும் இருக்கு. அதுவும் ஆறிக்கிடக்கு!

    அனு எங்கே?

    அவ ஸ்நேகிதி கல்யாணத்துக்கு போயிருக்கா! நாளைக்கு சாயங்காலம் வருவா! பிறகு நைட் ட்யூட்டி

    சரி! நான் சூடு பண்ணிக்கிறேன்!

    ஏண்டா? உங்கம்மா இதைக் கூட செய்து தரமாட்டாளா?

    நான் அப்படி எதுவும் சொல்லலையேப்பா! நேரம் பதினொரு மணி கடந்தாச்சு அம்மாவுக்கும் அலுப்பு இருக்குமில்லையா?

    இதுக்கொரு நிரந்தர தீர்வைத் தேடணும் சுதாகர்!

    அப்பா! அதைப் பேசற நேரம் இது இல்லை குழந்தை பசியாறட்டும்!

    காலையில் பேசிக்கலாம்!

    சரிப்பா! நீ ட்ரஸ் மாத்தி முகம் கழுவிட்டு வா!

    நிஷா! நீ தாத்தா கிட்டே இரு.

    வேண்டாம்! அப்பாதான் வேணும்!

    எங்கிட்டேயே இருக்கட்டும்மா!

    குழந்தையை வைத்துக்கொண்டே உடைமாற்றி முகம் கழுவி, என சகலமும் நடந்தது.

    சமையல் கட்டுக்கு வர அம்மா சாதம், ரசத்தை சுட வைத்து, அப்பளமும் பொரிக்க,

    சுதாகர் எடுத்து குழந்தைக்கு ரசம் சாதம் தயாரித்து இதமான சூட்டில் ஏதோ கதை சொல்லிக் கொண்டே மெல்ல ஊட்டத் தொடங்க, அது உற்சாகமாக சாப்பிட்டது. அப்பளம் கேட்டது, ரசம் முடிந்து தயிர் சாதம் சாப்பிட்டது.

    வயிறு நிரம்பிடுச்சு?

    ம்!

    சுதா! நீ ஏதாவது சாப்பிட்டியாப்பா?

    இல்லைம்மா!

    இருக்குடா! நீயும் சாப்பிடு!

    வேண்டாம்! பசிக்கலை நேரம் கடந்தாச்சு கொஞ்சம் மோர் மட்டும் குடு நீங்க ரெண்டு பேரும் போய்ப் படுங்க! நான் குழந்தையை தூங்க வச்சிக்கிறேன்!

    அம்மா அருகில் வந்தாள்!

    இப்படியே இந்த வீட்ல எல்லாம் நடக்கும் சுதா? மாற்றம் வர வேண்டாமா?

    நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான்!

    அதான் ரஞ்சனி போய்ச் சேர்ந்துட்டாளே! அதைவிட ஒரு அதிரடி மாற்றம் வேணும்மா! போய்ப்படும்மா!

    கதவுகளை சாத்தி விளக்கை அணைத்து விட்டு, குழந்தையுடன் பெட் ரூம்க்கு வந்தான்!

    பத்து நிமிடங்களுக்கு ஏதேதோ பேசியபடி அவளைக் கொஞ்சி, முத்தமிட்டு மூக்கைக் கடித்து விளையாடி எல்லாம் செய்து, மெதுவாக அவன் மேல படுத்து அப்படியே உறங்கிப் போனது மூன்று வயது நிஷா!

    மெல்ல ஒரு பூப்பொட்டலம் போல அதை எடுத்து பக்கத்தில் படுக்க வைத்து கழுத்து வரை போர்வையால் மூடினான்!

    அழகான வட்டமுகம் பெரிய கண்கள் செதுக்கிய உதடுகள் நல்ல பால்கோவா நிறம் பிறந்தக் கை, கால்கள்... அழகின் ஒட்டு மொத்த வடிவம் நிஷா!

    அப்படியே ரஞ்சினியின் நகல்!

    ரஞ்சினி பேரழகு! இரண்டு வருடங்கள் காதலித்து நல்ல ஒரு நாளையும் ரசித்து ருசித்து அதன் பிறகு அவளை மணர்ந்தான்! ரஞ்சினி ஏழைப் பெண்!

    தாயில்லை, தகப்பனும், தம்பியும் மட்டும்!

    தம்பி உதவாக்கரை, ஊர் சுற்றி - தகப்பனார் நோயாளி. பள்ளிக்கு மேல் படிக்க முடியாத ரஞ்சினி ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து அங்கு படிப்படியாக உயர்ந்து அப்பா தம்பியை பராமரிக்க, ஒரு எதிர் பாராத சந்திப்பில் இருவரும் பழக்கமாகி அது காதலாகி இரண்டு வருடங்கள் காதலித்து, தம்பி அடிக்க போய் அப்பா இறந்து ரஞ்சினி அனாதையான நேரம் சுதாகர் காதலை வீட்டில் சொல்ல கடுமையான எதிர்ப்பு.

    ஒரு அனாதை இந்த வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது நம்ம குடும்பத்துக்கு ஒரு அந்தர்ஸ்து படிப்பு எல்லாம் இருக்கு! இது சத்திரம் இல்லை.

    போராடிப் பார்த்தான் சுதாகர்!

    அப்பா, அம்மா மூர்க்கமாக வேறொரு பெரிய இடத்துப் பெண்ணைப் பேசி, நிச்சயம் வரை வந்துவிட,

    சுதாகர் சூடாகி அந்த வாரக் கடைசியில் கோயிலில் வைத்து கல்யாணம் - பதிவுத் திருமணம் நேராக ரஞ்சினியோடு வீட்டுக்கு வந்துவிட்டான், கல்யாண கோலத்தில்!

    வீட்டில் பிரளயமே உண்டாகி விட்டது.

    அப்பா ருத்ரதாண்டவம் ஆட, அம்மா மயக்கம் போட்டு விழ, ஓரிரு உறவுக்காரங்கள் கடுப்பாகி சாபங்களைத் தெளிக்க அப்பா. கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டியடிக்க சுதாகர் போன் செய்து, தங்களது கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துவிட்டான்!

    சுதாகர் ஓரளவுக்கு நல்ல பதவியில் இருந்ததால் கம்பெனியில் எல்லா செல்வாக்கும் உண்டு.

    ரஞ்சினி கலங்கிப் போயிருந்தாள்.

    உங்கம்மா மயங்கி விழுந்துவிட்டாங்களே! என்னாச்சோ? நாளைக்கு என் காரணமா நீங்க பழி பாவத்துக்கு ஆளாகணுமா? இந்தக் கல்யாணம் தப்பா?

    அம்மா மயக்கத்துல பாதிக்குமேல

    Enjoying the preview?
    Page 1 of 1