Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Arukil Naan
Un Arukil Naan
Un Arukil Naan
Ebook101 pages44 minutes

Un Arukil Naan

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Un Arukil Naan

Read more from Parimala Rajendran

Related to Un Arukil Naan

Related ebooks

Reviews for Un Arukil Naan

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Arukil Naan - Parimala Rajendran

    26

    1

    வீட்டைச் சுற்றிலும் மரம், செடி, கொடிகள் பூத்துக் குலுங்க, சோலை வனத்தில் அமைந்திருப்பதைப் போன்று, சிறிய வீடாக இருந்தாலும் அழகுற காட்சியளித்தது.

    வாசலில் இருந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்ட ராகவன், மேல் துண்டால் வியர்வையை துடைத்துக் கொண்டார். சுற்றிலும் மரங்கள் இருப்பதால், அவரை தழுவிச் சென்ற தென்றல் காற்று, உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் இதமான வருடலைக் கொடுத்தது.

    வேலையில் இருந்தவரை, மனதை ஆட்டிப் படைக்காத தனிமை, ரிடையர்ட் ஆன இந்த ஒரு மாதத்திலேயே அவரை ஆட்டிப் படைத்தது.

    தன் மனக் கவலையை மறந்து, நண்பர்களுடன் சிரித்துப் பேசி, வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர், தனிமை சிறையில் அடைபட்டதைப் போன்று தவித்துப் போனார்.

    உள்ளே சமையலறையில் இருந்து வந்த உருளைக் கிழங்கு குருமாவின் வாசனை, அவரை எட்டியது. பத்மாவின் சமையல் குறை சொல்ல முடியாதது.

    அவள் வைக்கும் சாப்பாட்டை வாய் திறந்து ஏதும் சொல்லாமல் சாப்பிடுவார்.

    ‘‘இன்னைக்கு அவியல் பிரமாதம் பத்மா" சொல்லத் துடிக்கும் மனதை அடக்கிக் கொள்வார்.

    வேண்டாம் ஏதாவது பேசி, அப்புறம் அவள் விடுக்கும் சொல் லம்புகளால் துவண்டும் போகும் மனசை, சமாதானப்படுத்த முடியாது.

    வீட்டினுள் நுழைந்தாள். மாடி அறையில் நந்தினியும், குணாவும் சிரித்துப் பேசுவது கேட்டது. ஹாலைக் கடந்து, உள்ளே வந்து அடுப்படியில் எட்டிப் பார்த்தார். பத்மா சமையலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். மேடையின் அருகே திரும்பி நின்று ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

    பத்மா, தலை வலிக்கிற மாதிரி இருக்கு காபி ஒரு டம்ளர் தர்றியா,

    அவர் குரல் கேட்டு, சீறும் நாகம் போல சடாரென்று திரும்பினாள்.

    "காலையில் எழுந்ததும் தான் காபி குடிச்சாச்சே. அப்புறும் சும்மா, சும்மா என்ன காபி வேண்டிக் கிடக்கு. இன்னும் ஒரு மணி நேரத்தில் டிபன் ரெடியாகி டேபிளுக்கு வந்துடும் சாப்பிடலாம்.’’

    பதில் பேசாமல் மெளனமாக வாசலை நோக்கி நடக்க, மாடிப் படிகளில் இறங்கி வரும் நந்தினி அவரைப் பார்த்தாள்.

    "பாவம் மாமா, எப்படி தான் அத்தையின் அமில வார்த்தைகளைத் தாங்கிக் கொள்கிறாரோ. வழக்கமாக அவரை பார்த்தால் அவள் மனசில் ஏற்படும் பச்சாதாபம் தோன்றியது.

    "மாமா, என்ன வேணும் காபியா, அத்தை வேலையா இருப்பாங்க அதான்... நான் வேணுமினா போட்டு கொண்டு வரட்டுமா?’’

    ‘‘வேண்டாம்மா...’’ அவசரமாக மறுத்தார். "நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வர்றேன். அத்தை கேட்டா சொல்லிடு...’’

    "வர லேட்டமாகுமா மாமா. நானும், அவரும் வேலைக்கு கிறம்பறோம்...’’

    "போயிட்டு வாங்க. நான் லேட்டாத்தான் வருவேன்.’’

    கேட்டைத் திறந்து கொண்டு வெளியில் செல்லும் அவரைப் பார்த்தபடி நின்றவள், அடுக்களையில் நுழைந்தாள்.

    ‘‘அத்தை, இன்னைக்கு உருளைக்கிழங்கு குருமாவா வாசனை மாடி வரைக்கும் வருது.’’

    "ஆமாம் நந்தினி, குணாவுக்கு பிடிச்ச குருமா, உனக்கு பிடிச்ச வாழைப்பூ பொடிமாஸ் செய்திருக்கேன். டிபன் பாக்ஸில் நிறைய வைக்கிறேன். மிச்சம் வைக்காம சாப்பிடு சரியா.’’

    ‘‘சரி அத்தை, நான் குளிச்சாச்சு. எனக்கு இன்னும் ட்யம் இருக்கு. உங்களுக்கு கிச்சனில் ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்.’’

    ‘‘உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். காலை நேரத்தில் நீ வேலைக்கு கிளம்பற வழியைப் பாரு. அடுப்படி வேலை என்னோடதுன்னு சொல்லியிருக்கேனே. நீ எதுக்கு குளிச்சுட்டு, வியர்வை சிந்தணும். நீ போம்மா."

    அன்பாக பேசும் மாமியாரை பார்க்கிறாள். மருமகளிடம் கனிவான பேச்சு. மகனிடம் அன்பான வார்த்தைகள். ஏன் வேலையாட்களின் மனதைக் கூட புண்படுத்தாமல் பேசும் இவள், தாலி கட்டிய கணவனிடம் மட்டும் ஏன் விஷமாக வார்த்தைகளை திராவகமாக வீசுகிறாள். அத்தையின் இந்த இரண்டு முகம் எதனால், மாமாவும், இதுவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல், மௌனத்தை கடைபிடிப்பது எதனால், அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை .

    ***

    2

    டேபிள் முன் அமர்ந்து நந்தினியும், குணாவும் சாப்பிட, அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் பத்மா.

    ‘‘சாப்பிடு குணா. இப்படி இரண்டு இட்லி சாப்பிடறியே வயிற்றுக்கு போதுமா. இனி இரண்டு மணிக்கு நாலு பருக்கை அள்ளி போட்டுப்பே. வீட்டில் சாப்பிடறதையாவது திருப்தியா வயிறு நிறைய சாப்பிடு.’’

    இன்னும் இரண்டு இட்லிகளை வைத்து சாம்பாரை ஊற்றுகிறாள்.

    ‘‘சூடா சாம்பார், இட்லி சூப்பரா இருக்கு அத்தை.’’ -

    ‘‘அம்மா, அப்பா எங்கே காணும்.’’

    "என்கிட்டே கேட்டா எனக்கென்ன தெரியும். வேலையா வெட்டியா எங்காவது போயிருப்பாரு.’’

    ஆபீஸ் போகும்போது, ஒன்பது மணிக்கெல்லாம் பேக்கை மாட்டிக்கிட்டு கிளம்பிடுவாரு.

    இப்ப அந்த புழைப்பும் முடிஞ்சுடுச்சு. சாப்பிட்டு, தூங்கறதை தவிர என்ன வேலை’’

    "ஏன்மா இப்படி சொல்றே. நல்லபடியா வேலைபார்த்து, குடும்பத்தை உருவாக்கிட்டாரு. ரிடையர்ட் ஆனகாலத்தில் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்.’’

    ‘‘அவரு பேச்சை என்கிட்டே பேசாதே. சாப்பிடுப்பா.’’

    இருவரும் காரில் ஏறி, பத்மாவிடம் விடை பெற்று

    Enjoying the preview?
    Page 1 of 1