Oru Pahal Oru Iravu
By Sivasankari
5/5
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsOverdose Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Avargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Nooleni Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Pahal Oru Iravu
Related ebooks
Kaadhal Enbathu Ethuvarai? Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Unakkena Manakoyil Rating: 5 out of 5 stars5/5Uravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Ariyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Paravai Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Ini... Rating: 0 out of 5 stars0 ratingsNeengatha Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Etharkkaga? Rating: 1 out of 5 stars1/5Ezhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Sabatham Anaithu Pagangal Rating: 5 out of 5 stars5/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsYathirai Gnanam Rating: 0 out of 5 stars0 ratingsVilai Rating: 5 out of 5 stars5/5Swarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Abitha Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsPachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Avargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oru Pahal Oru Iravu
1 rating1 review
- Rating: 5 out of 5 stars5/5Wow how nicely brought out the whole day with different type of situation as if experienced in person non other than Madam Shiva Sankari can write like this Very interesting thank you
Book preview
Oru Pahal Oru Iravu - Sivasankari
https://www.pustaka.co.in
ஒரு பகல் ஒரு இரவு
Oru Pahal Oru Iravu
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
https://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. காலை 6-00
2. மணி 6-30
3. மணி 7-00
4. மணி 7-30
5. மணி 8-00
6. மணி 8-30
7. மணி 9-45
8. மணி 10-30
9. மதியம் 12-30
10. மதியம் 1-00
11. மதியம் 2-00
12. மதியம் 2-15
13. மதியம் 2-30
14. மதியம் 3-00
15. மதியம் 3-30
16. மாலை 4-00
17. மாலை 6-00
18. மாலை 6-30
19. மாலை 6-45
20. மாலை 7-00
21. மாலை 7-30
22. மாலை 7-45
23. மாலை 8-00
25. மாலை 8-45
26. இரவு 9-15
27. இரவு 9-20
28. இரவு 9-25
29. இரவு 9-40
30. இரவு 9-50
31. இரவு 10-00
32. இரவு 10-20
33. இரவு 10-25
34. இரவு 10-28
35. இரவு 10-30
36. இரவு 10-45
37. இரவு 10-50
38. இரவு 10-52
39 இரவு 11-00
40. இரவு 11-05
41. நள்ளிரவு 12-10
42. விடியல் 3-00
1. காலை 6-00
சென்னைக்குக் குளிர் கண்டு நாட்கள் நாலாகிவிட்டன. அடைமழையாகப் பெய்யாவிட்டாலும் சதா நசநசவென்று ஒரு கணம்கூட நிற்க மாட்டேன் என்று சண்டி பண்ணிக்கொண்டு ஊரை நனைத்து, நடுக்கம் காணவைத்த மழை. போதாத குறைக்கு எந்நேரமும் ‘விய்ங்’ என்று சத்தம் போட்டு வீசிய ஊதக்காற்று. வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாம். ஒரிஸ்ஸாவைப் புயல் கடக்கப் போகிறதாம். வானொலியில் விடாமல் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஒரிஸ்ஸாவில் புயல் தாண்டுவதற்கான அறிகுறி இருந்ததோ இல்லையோ இங்கு சென்னைக்குக் குளிர் ஜூரம் உண்டாகிவிட்டது. பனை மரத்தில் தேள் கொட்டினதற்குத் தென்னை மரத்துக்கு நெரி கட்டிய சங்கதிதான். இதே தினுசில் நாட்கள் மேலும் இரண்டு போனால் ஜன்னி பிறந்து சென்னை பிதற்றத் தொடங்குவது சர்வ நிச்சயம்.
சொதசொதத்த தெருக்களில், கணுக்கால், சாணுயரத்திற்குக் கலங்கிய குட்டைகளாய் நீர் நின்றதென்றால், நந்தனத்தையும், பழைய மாம்பலத்தையும், கோட்டூர் புரத்தையும், துசுக்கென்றால் முழங்கால் ஜலம் தேங்கிவிடும் வாணிமகால் பகுதியையும், இன்னும் சென்னையில் பல இடங்களைப் பற்றியும் கேட்கவா வேண்டும்?
சென்னையும் அதன் ஜீவராசிகளும் நாறித்தான் போனார்கள். மழையைச் சாக்கு வைத்துக்கொண்டு பள்ளிக்கு மட்டம் போட்ட குழந்தைகள், சேறும் சகதியுமாய் குறித்த நேரத்தைத் தாண்டி ஆபீசுக்குப் போய்வந்த ஆடவர், பெண்கள், முகூர்த்தத்தை வைத்துவிட்டு இப்படி வானம் கண்மூடிவிட்டதே, என்னமாய் நம் வீட்டுக் கல்யாணம் நடந்தேறப் போகிறது என்று பயந்து கொண்டிருந்தவர்கள், மூட்டை மூட்டையாய் கட்டிவைத்திருந்த துணிகளைத் துவைக்க, காயப்போட வகையில்லாமல் பேந்தப் பேந்த விழித்த வண்ணான்கள், வியாபாரம் படுத்துவிட்ட வியாபாரிகள், இன்னும் யார் யாரோ, எப்படியெப்படியோ தவிப்பதையெல்லாம் கொஞ்சம்கூட லட்சியம் பண்ணாமல் சென்னை அசல் தூங்கு மூஞ்சியாகவே அன்று காலையிலும் முழித்துக்கொண்டது.
2. மணி 6-30
மழைக்கோட்டு, கையில் குடை என தன் கோபாலபுரம் வீட்டிலிருந்து எட்வர்ட் எலியட் சாலையிலிருந்த ஹோட்டல் பல்லவாவை நோக்கி சம்பத் நடந்துகொண்டிருந்தான். பன்னிரண்டு மாடிகளைத் தன்னுள் அடக்கிக்கொண்டு உயரமாய் நின்றிருந்த பல்லவனில், சம்பத் மானேஜர்.
ஹோட்டலைத் திறம்பட நடத்துவது எப்படி என்ற படிப்பை முடித்துவிட்டு டெல்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உதவி மானேஜராக இருந்தவனை, போன வருஷம் பல்லவனைக் கட்டிய முதலாளி இங்கு மானேஜர் பதவி வகிக்க அதிக சம்பளத்துக்கு வளைத்துப் பிடித்துவிட்டார்.
சம்பத் கெட்டிக்காரன். வேலையில் புலி. அதிகம் வளவள வென்று பேசுபவனில்லை. என்றாலும் வாடிக்கைக்காரர்களிடம் மனிதருக்குத் தக்கபடி பேசத் தெரிந்தவன். கையில் ஏகமாய்ப் பணம் புழங்கும் காரணத்தால் மூன்று நட்சத்திர ஹோட்டலான பல்லவனில் வந்து தங்கிவிட்டு நாகரிகமில்லாமல் நடந்து கொள்ளும் அசல் படிப்பற்ற கிராமத்தானையும், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த தினுசில் அலட்டிக்கொள்ளும் அல்டாப்புப் பேர்வழிகளையும் நாசுக்காய் சமாளித்து திருப்தியடையச் செய்யத் தெரியும் சம்பத்துக்கு.
வழக்கமாய் இத்தனை சீக்கிரம் அவன் ஹோட்டலுக்கு வருபவனில்லை.
எட்டு மணி சுமாருக்கு வந்தால் போதும். இன்று இப்படிக் கொட்டும் மழையிலும் பறந்துகொண்டு வருவதற்குக் காரணம் இருக்கவே செய்தது.
முதல்நாள் இரவு, ஹோட்டலில் ஒரு கலாட்டா.
நெல்லூரிலிருந்து படம் எடுக்க ஆசை கொண்டு சென்னைக்கு விஜயம் செய்துள்ள பையன் ஒருவனுக்குக் கையில் செமத்தியாய் பணம். 509 எண் அறையில் ஒரு வாரமாகத் தங்கி குடி, இத்தியாதி என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறான். பெரிய இடத்துப் பிள்ளை, ஏதாவது சொன்னால் வம்பில் முடியலாம் என்று வாயைத் திறக்காமல் இருந்த சம்பத்தின் பொறுமையை அந்தப் பையன் நேற்றிரவு நன்றாய் சோதித்துவிட்டான்.
எங்கோ வெளியில்போய் போதையை ஏற்றிக்கொண்டு அறைக்குத் திரும்பியவன் தன்னறைக்குப் பக்கத்து அறையான 507-ல் சாவியைப் பொருத்தி கதவைத் திறக்க முயன்றிருக்கிறான். மணி இரவு பதினொன்றரை. 507-ல் இருந்த மிஸ்டர் அண்டு மிஸஸ் கணேஷ் என்னமோ ஏதோ என்று கதவைத் திறந்திருக்கின்றனர். இவன் அவர்களைத் தள்ளிக்கொண்டு உள்ளேபோய் படுக்கையில் உட்கார்ந்ததும் அல்லாமல் ஏடாகூடமாய்ப் பேச வேறு செய்யவே, ரிசப்ஷனுக்குச் செய்திபோய், பின்னர் சம்பத் தூக்கத்திலிருந்து போன் மூலம் எழுப்பப்பட்டு, ஹோட்டலுக்கு வருவதற்குள் அந்தப் பையனுக்கும் கணேஷுக்கும் சின்னதாய்க் கைகலப்புகூட நடந்துவிட்டது. என்ன அவமானம்! இந்தச் சம்பவம் வெளியில் போனால் ஹோட்டலுக்கு அல்லவா இருக்கு?
அதுவும் தவிர, கணேஷ் தம்பதி சம்பந்தப்பட்ட ஒரு சின்ன தவறு முந்தாநாள் இரவுதானே நடந்திருக்கிறது.
ஹோட்டலில் ஏதாவது சிறிய ரிப்பேர்கள் செய்யத் தேவைப்பட்டால் அதை இரவு நேரங்களில், வாடிக்கைக்காரர்களுக்குத் தொந்தரவு இல்லாதபடி செய்வதுதான் எல்லா பெரிய ஹோட்டல்களின் வழக்கமும். அதன்படி சில நாட்களாகப் பல்லவனிலும், சில அறைகளின் வாசற்படியைச் சுற்றி சிமிண்ட் பூச்சு விரிசல் கண்டு, லேசாய் உதிர்ந்து பார்வைக்கு அசிங்கமாய் இருந்ததைக் கொத்தனார் இரவு நேரங்களில் கொத்தி, பூசி, காய்ந்ததும் வர்ணமடித்துக்கொண்டிருக்கிறார். இரவோடு இரவாக வேலையை முடிப்பதால் பகலில் தூசி, தும்பு, குப்பை, செத்தை என்று ஏதும் இருக்காது. முதல் நாள் இரவு 507 அறை வாசலில் இருந்த விரிசலை லேசாய் தட்டி, மேஸ்திரி பூசின நேரத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த கணேஷ் தம்பதி முழித்துக்கொண்டு யாரது, யாரது?
என்று இரண்டு தடவை அதட்டியிருக்கிறார்கள். மேஸ்திரிக்கு அது காதில் விழவில்லையாதலால் அவர் தொடர்ந்து வேலையைக் கவனித்திருக்கிறார். திருடன் ஒருவன் கதவை உடைக்க முயலுகிறான் என்று பயந்த கணேஷ் தம்பதி ரிசப்ஷனை போனில் கூப்பிட்டு உதவிக்கு அழைக்க, அவர்கள் உடனே மேலே வந்து கதவைத் திறக்கவைத்து கொத்தனார் வேலை செய்கிறார் என்று சமாதானப்படுத்தின பிறகு கணேஷ் தம்பதி நிம்மதியாய் தூங்கப் போயிருக்கிறார்கள். விஷயம் இப்படியிருக்கையில் நேற்று ராத்திரி திரும்ப அவர்கள் அறையிலேயே இந்தக் குடிகாரன் கலாட்டா!
மனைவியோடு கண்ணியமாய் உங்க ஹோட்டலில் யாரும் தங்கி, நிம்மதியாய்த் தூங்க முடியாதா, மானேஜர்?
என்று மிஸ்டர் கணேஷ் கேட்டதில் என்ன தவறு?
ஹோட்டல் ஆட்கள் நாலு பேர் குண்டுக்கட்டாய் நெல்லூர் பையனைத் தூக்கி அவன் அறை படுக்கையில் கிடத்துவதற்குள் அவன்தான் என்னமாய் ஆர்ப்பாட்டம் செய்தான்.
‘உன்னைத் தொலைக்கிறேண்டா!’
‘நாளைக்குக் காலையிலே நீ உசிரோட இருக்கமாட்டடா!’
‘என் மேலேயா கை வச்சீங்க? தொலைச்சிப்புடறேன், தொலைச்சி. இந்த ஹோட்டலையே உண்டு இல்லைனு பண்ணிடறேன்’ - ஒரு வழியாய் அடங்கி, மயக்கமாய் அவன் உறக்கத்தில் ஆழ்ந்ததும், கதவை வெளியில் பூட்டிக்கொண்டு, ஆள் ஒருவனை அறை வாசலிலேயே நிற்கச் சொல்லிவிட்டு சம்பத் வீட்டுக்கு