Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ore Oru Vaarthai
Ore Oru Vaarthai
Ore Oru Vaarthai
Ebook92 pages51 minutes

Ore Oru Vaarthai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703525
Ore Oru Vaarthai

Read more from Indira Soundarajan

Related to Ore Oru Vaarthai

Related ebooks

Reviews for Ore Oru Vaarthai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ore Oru Vaarthai - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ஒரே ஒரு வார்த்தை

    Ore Oru Vaarthai

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    'பெண்ணே சக்தியின் ஆதாரம் – அவள்

    அன்பே அனைத்திலும் மேலாகும்'

    சீதம்மாவுக்கு இடுப்பு வலி எடுத்திடுச்சி... சீதம்மாவுக்கு இடுப்பு வலி எடுத்திடுச்சு...

    - அந்த வல்லபராயர் பங்களாவே நடுங்கும்படி கத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் சேடச்சி.

    பனங்காட்டூரிலேயே வல்லபராயர் பங்களாதான் அநியாயத்துக்கு பெரிசு. நாயக்கர் மகால் கணக்காக பொழுபொழுவென்றும், பளபளவென்றும் இருக்கும். (யாரோ ஒரு கோடி ரூபாய் விலைக்கு கேட்டார்களாம். கேட்ட நபரின் நாக்கை நறுக்கவே போய்விட்டாராம் வல்லபராயர்).

    அப்படி ஒரு பங்களாவின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து போகிறது சேடச்சியின் உற்சாகக்குரல்.

    பங்களாவில் பாந்தபதமாக பாண்டியம்மாளுக்கு என்று அறை ஒன்று உண்டு. உள்ளே பாடம் பண்ணி வைத்திருக்கும் சிங்கம், புலியில் இருந்து இன்றைய நவீன தேவைகளான டி.வி., ஃபிரிட்ஜ் வரை எல்லாமே அதில் உண்டு.

    மொத்த அறையையும் ஏ.சி. செய்து வைத்திருப்பதால் அறைக்கதவில் இருந்து ஜன்னல் வரை எல்லாமே இறுக்கமாக மூடித்தான் கிடக்கும்.

    அதனால் அந்த அறை முகப்பில் மட்டும் செய்தி தேங்கி நின்றது.

    ஆனால் அவளுக்குத்தான் விஷயத்தை முதலில் சொல்லியாக வேண்டும். உத்தரவு அப்படி!

    வல்லபராயர் பங்களாவுக்கே எஜமானியும், பனகாட்டூருக்கே ராணி என்றும் தன்னை சொல்லிக் கொண்டிருப்பவளுக்கு இந்த விஷயத்தைச் சொல்லாவிட்டால் யார் செருப்படிபடுவது?

    அதேசமயம் அவசரப்பட்டுக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் போவதிலும் ஆபத்திருக்கிறது.

    தர்மசங்கடத்தில் அந்த பங்களாவின் வேலை, வெட்டிகள் எல்லாம் என்ன செய்யலாம் என்று தாடையைத் தேய்க்கும் போது, வலி எடுத்துக் கத்தும் சீதம்மாளின் குரல் பெரிதாகவே எல்லோர் காதிலும் விழும்படி கேட்கத் தொடங்கியது.

    'சரி உதை விழுந்தாலும் பாதகமில்லை. கதவைத் திறப்போம்' என்று சேடச்சியே கதவை திறந்து கொண்டு உள்ளே போனாள்...

    சிலீர் என்று ஏ.சி. குளிர் முகத்தில் வந்து அறைந்தது. அவ்வப்போது கிட்டும் அனுபவம்தான். ஒவ்வொரு முறையும் சேடச்சி அதற்காக வியப்பாள். 'ஒரு இடத்தையே இப்படி ஜில்லென்ற வைத்துக் கொள்ள முடியுமா என்ன? ஹும்! பணம் இருந்தால் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாமே...?'

    - கேள்வியும் பதிலும் அவளுக்குள் ஒரு சில நொடிகளில் தோன்றி நுழைந்துவிடும்.

    எதிரில் தெரியும் பாண்டியம்மாளின் ஆகிருதியான உருவம் சர்வத்தை அழைத்துவிடும்.

    பட்டுக்கண்டாங்கி, அள்ளி முடிந்த செருகல் தொண்டை, அதில் கதம்ப மலர்ச்சரம். காதில் கால் கிலோ எடைக்குக் குறையாத தண்டட்டி. கழுத்திலும் ஒரு கைதியை கட்டிப் போடலாம். அவ்வளவு பருமனில் தங்கச் சங்கிலி.

    ஊருக்கே ராணி என்று சொல்லிக் கொள்பவள் பின் என்ன ஈர்க்குச்சிக்கு நூல் சேலையை சுற்றி விட்ட மாதிரியா இருப்பாள்?

    தாயி... இது உள்ளே நுழைந்த சேடச்சி.

    என்னடி... எதுக்கு இப்படி இளப்பெருக்க ஓடி வந்திருக்கறே?

    நம்ம சின்ன அம்மணிக்கு வலி கண்டிருச்சு தாயி...

    அப்படியா? - கேட்ட ஜோரில் பாண்டியம்மாள் அங்கிருந்து ஒரு புயல் காற்றாட்டம் புறப்படத் தொடங்கினாள்.

    ஐம்பத்தைந்து வயதாகிறது. ஆனால் இருபத்தைந்து வயதுக்காரப் பெண்ணைப் போல ஒரு வேகம். நடக்கும் போது பூமி அதிரும். பார்த்தாலும் சருகுகள் பற்றிக் கொள்ளும். அப்படி ஒரு தீட்சண்யம் மிக்க பார்வை.

    பனங்காட்டூரே பாண்டியம்மாள் என்றால் நின்று திரும்பிப் பார்க்கும் போது, அவள் பங்களாவாசிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.

    அவள் ஒரு புயல் காற்றைப் போல புறப்பட்டு வரவும் ஒதுங்கி வழிவிட்டார்கள்.

    தாவி மாடிப்படியில் ஏறினாள் பாண்டியம்மாள்.

    சீதம்மாள் அறைக்குள் ஒரே பாய்ச்சலில் நுழைந்தாள். அந்தப் பெண் முணங்கிக் கொண்டிருந்தது. தலைமாட்டில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தாள் தேவானை. பாண்டியம்மாளைப் பார்க்கவும் புடவை முந்தியை இழுத்துவிட்டு கொண்டு பதவிசாக மாறி மரியாதையாகப் பார்த்தாள்.

    நீ இங்கையா இருக்கே? - தேவானையைப் பார்த்துதான் அந்த கேள்வி.

    ஆமா அத்தை...

    Enjoying the preview?
    Page 1 of 1