Nee Sirithal Naan Siripean
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5
Related to Nee Sirithal Naan Siripean
Related ebooks
Linga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Nandriyudan… Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsVanthana Avan Vanthana? Rating: 0 out of 5 stars0 ratingsIni Aval Urangattum Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKaasalavu Nesam! Rating: 0 out of 5 stars0 ratingsVirunthukku Vaanga! Rating: 0 out of 5 stars0 ratingsKalavupona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsKalyanam! Kacheri! Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nee Nirainthaai Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsநீதான் என் காதலி Rating: 0 out of 5 stars0 ratingsபாப விமோசனம் Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Katcheri Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsBaagirathi Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Vikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Sirithal Naan Siripean
0 ratings0 reviews
Book preview
Nee Sirithal Naan Siripean - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
Nee Sirithal Naan Siripean
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் உடனே ஒரு கடுதாசி எழுதிப் போடு. வீடு கிடைக்கிற வரைக்கும் ஆபீஸிலேயே தங்கிக்க வசதி உண்டோல்லியோ?
இருக்கும்
ஜாக்கிரதையா இரு. அது கிராமாந்திரம். மனுஷாள்ளாம் தங்கமா பழகுவா. அதே நேரம் பகைச்சுண்டா ஊரே திரண்டு வந்து எதிர்க்கும். உன் முன் கோபத்தை எல்லாம் இங்க காட்டறா மாதிரி அங்க காட்டிடாதே
ஆச்சா... இன்னும் ஏதாவது இருக்கா?
சீனிவாசன் பெட்டியை மூடியபடி கேட்டான்.
வேறென்ன? வேளாவேளைக்கு சாப்டு,சனிக்கிழமையானா எண்ணை தேய்ச்சு குளி.வாரத்துக்கு ஒருதரம் கடுதாசி எழுதிப்போடு, லீவு கெடைச்சா ஒரு முறை இங்க வந்துட்டு போ. சம்பளத்தை அனாவசியமா செலவழிக்காதே,உங்க பாங்க்லேயே போட்டு வெச்சுடு.
சீனிவாசன் மணி பார்த்தான். இன்னும் ஏதாவது சொல்லணும்னா ஒரு இன்லன்ட் கவர்ல எழுதிப்போடு.
எனக்கு டிரெயின் போய்டும் நான் கிளம்பறேன். நில்லு உன்னை நமஸ்காரம் பண்றேன். அப்பா வந்தா சொல்லு.
சீனுவாசன் அம்மாவை நமஸ்காரம் பண்ணிக் கொண்டு கிளம்பினான்.
அப்பா நேராக ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். எஸ் ரெண்டு கோச்சின் அருகிலேயே நின்றிருந்தார்.
வேணும்கறதெல்லாம் எடுத்துண்டுருக்கயா?
ம்.
புது ஊர்,புது சூழ்நிலை.வேலைல கவனமா இரு.போனதும் வீடு பார்த்துக்கோ, சாப்பாட்டுக்கும் ஏதாவது வழி பண்ணிக்கோ,இன்னும் ஒன்றரை வருஷம் தான். நான் ரிடயர் ஆய்டுவேன் அப்பறம் நீ எந்த ஊர் போனாலும் உன்னோட நாங்களும் வந்துடுவோம். உனக்கும் சாப்பாட்டு பிரச்சனை இருக்காது.வண்டி புறப்படப்போறது ஏறிக்கோ.
சீனு ஏறிக்கொண்டான். ஜன்னல் வழியே அப்பாவுக்கு கை காட்டினான்.
ஊர் விட்டு ஊர் செல்வது ஒரு விதத்தில் விடுதலையாயிருந்தது. காலையில் கண் விழிப்பது முதல் இரவு கண் உறங்குவது வரை அப்பாவும் அம்மாவும் மாற்றி மாற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதும் காலையில் கண் விழிப்பது கண் உறங்குவது வரை அப்பாவம் அம்மாவும் மாற்றி மாற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதும் அவன் அதைக் கேட்டு கொண்டிருப்பதும் அவன் அதைக் கேட்டு முதல் இரவு விழிப்பது கண் உறங்குவது வரை அப்பாவும் அம்மாவும் மாற்றி மாற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதும் அவன் அதைக் கேட்டு கொண்டிருப்பதும் அவன் அதைக் கேட்டு கண் உறங்குவது வரை அப்பாவும் அம்மாவும் மாற்றி மாற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதும் அவன் அதைக் கேட்டு கொண்டிருப்பதும் அவன் அதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதும் அவனுக்கு அலுத்து விட்டது. ஆறு மணிக்கு மேல் அரை நிமிடம் தூங்கி விடக்கூடாது என்பது அப்பாவின் எழுதப்படாத சட்டம்.
ரெண்டு வேளை சந்தியா வந்தனம் பண்ணா விட்டால் அம்மாவின் புலம்பல் காதை செவிடாக்கிவிடும். சமையலும் அப்படித்தான்.
திங்கட்கிழமை என்றால் பறங்கிக்காய் சாம்பார், கத்திரிக்காய் கறி, டிபன் இட்லி. செவ்வாய்கிழமை வெண்டக்காய் கறி, பூசணிக்காய் சாம்பார், டிபன் புளித்த தோசைமாவில் ரவையும், மைதாவும் கலந்து தோசை. வியாழன் கீரை மசியல், கத்திரிக்காய் சாம்பார், டிபன் பொங்கல், வெள்ளிக்கிழமை கேரட் கறியும், ஏதாவது ஒரு காய் போட்டு சாம்பாரும் டிபன் ரவா உப்புமா சனிக்கிழமை ரசம், பெங்களூர் கத்திரிக்காய் போட்டு கூட்டு டிபன் சேமியா உப்புமா ஞாயிறன்று வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி டிபன் சப்பாத்தி அல்லது பூரி. அம்மாவின் இந்த மெனு மாறவே மாறாது. வறுத்து பொரித்தது, என்று கேட்டால் முறைப்பாள். உடம்புக்கு கெடுதல் என்பாள். வெஜிடபிள் பிரியாணி, பிரிஞ்சி, சப்பாத்தி குருமா அல்லது சென்னா, சாண்ட்விச், பிஸிபேளா என்று வித விதமாய் சாப்பிட நாக்கு அலையும். ஆனால் முடியாது. மசாலாவும் கிசாலாவும் நமக்கு பழக்கமில்ல. உடம்புக்கும் ஆகாது. எப்போது கேட்டாலும் இது தான் பதில். நாக்கு கெஞ்சினால் ஹோட்டல் தான் கதி.
அதுவும் எப்போதாவது தான். புரொமோஷனோடு இந்த அய்யம்பேட்டைக்கு டிரான்ஸ்பர் செய்த போது சீனிவாசன் கொஞ்சம் கூட வருத்தப்படவேயில்லை.
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்கும்பகோணம் வந்து விடும்.நினைத்த போது போய் நல்ல சாப்பாடு சாப்பிடலாம். பெரிய ஹோட்டலில் தந்தூரி ஐட்டம்களை சுவைக்கலாம். யாரும் கேட்பாரில்லை.
ஏழு ஏழரை வரை தூங்கினால் கூட எட்டு மணிக்கு வங்கியில் இருக்கலாம். பகல் தூக்கமும் போடலாம். நிறைய சினிமா பார்க்கலாம். வாரத்திற்கொரு முறை சந்தியா வந்தனம் செய்தால் போயிற்று. மொத்தத்தில் சுதந்திரமாயிருக்கலாம் என்று நினைத்த போது சந்தோஷமாயிருந்தது.
வண்டி விடியற்காலம் கும்பகோணம் ஸ்டேஷனில் நின்றது சீனிவாசன் இறங்கினான். முதலில் ஸ்டேஷன் குழாயில் முகம் கழுவி பல் தேய்த்துட்டு பிளாட்பாரக் கடையில் சூடாக காப்பி வாங்கிக் குடித்தான். வெறும் வெந்நீருக்கு ஐந்து ரூபாய் தண்டம் அழுது விட்டு வெளியில் வந்தான். இப்போதைக்கு பெட்டி வைத்து குளித்து உடை மாற்றி சற்று ஓய்வெடுக்க ஒரு இடம் வேண்டும் என்பதால் நல்ல லாட்ஜாகப் பார்த்து அறை எடுத்தான். ஆட்டோ ஒன்று பேசிக்கொண்டு எட்டு மணிக்கு அய்யம் பேட்டைக்குப் போய் மானேஜரைப் பார்த்து பணியில் சேர்ந்தான்.
எங்க தங்கப் போறீங்க? வீடு பார்த்தாச்சா?
இல்ல சார் இனிமே தான்.
இங்க வீடு சுலபமா கிடைச்சுடும். ஆனா எல்லாத்துக்கும் கும்பகோணம் போணும். பஸ் சர்வீஸ் அபூர்வம் தான். ஸ்கூட்டர் இருந்தா செளகர்யம்.
என் ஸ்கூட்டர் இங்க கொண்டு வர ஏற்பாடு பண்ணிட்டேன் சார். அநேகமாக நாளைக்கு வந்துடும்.
வெரிகுட் அப்புறம் என்ன? கும்பகோணத்துலேயே தங்கிக்கலாமே இங்க விட அங்க வசதி அதிகம்.
பார்க்கணும் சார்.
ஓகே போய் வேலையைப் பாருங்க.
சீனு வெளியில் வந்தான். கேஷியர் அமரும் கண்ணாடி கூண்டுக்கு வந்து அமர்ந்தான். சின்ன பிராஞ்ச் என்பதால் மொத்தம் நாலு பேர் தான் வேலையில் இருந்தார்கள். கூட்டமும் குறைவு தான்.
அன்று வேலை முடிந்து கிராமத்தை சுற்றி பொழுது போக்காய் நடந்தான். காவிரியின் கிளை நதி ஒன்று ஊரை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. கதைகளில் வர்ணிக்கப்படுவது போலவே ஆற்றங்கரை, அரசமரம், சின்ன பிள்ளையார் கோயில், என்று எதற்கும் குறைவில்லை.
தம்பி யாரு... ஊருக்குப் புதுசா?
பின்னால் குரல் கேட்டது பெரியவர் ஒருவர் நின்றிருந்தார்.