Anbukku Panjamillai
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kanneerum Aanandham Rating: 0 out of 5 stars0 ratings
Related to Anbukku Panjamillai
Related ebooks
Agni Puthri Rating: 0 out of 5 stars0 ratingsAmma Pillai Rating: 5 out of 5 stars5/5Naaloru Poo Malarum Rating: 0 out of 5 stars0 ratingsAanathikkam Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Innoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsKakitha Roja Rating: 5 out of 5 stars5/5Innoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsMalargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Idhayam Pohuthe! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Penn Ondru Kandean! Rating: 5 out of 5 stars5/5Paneer Nathi Rating: 4 out of 5 stars4/5Aagayam Arugil Varum Rating: 0 out of 5 stars0 ratingsGopura Vaasal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anbukku Panjamillai
1 rating0 reviews
Book preview
Anbukku Panjamillai - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
அன்புக்கு பஞ்சமில்லை
Anbukku Panjamillai
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
குத்துவிளக்கை ஏற்றி விட்டு எல்லா மின் விளக்குகளையும் அணைத்து விட்டு குத்துவிளக்கின் முன் அமர்ந்தார் பார்த்தசாரதி.
இப்படி வந்து உட்காரு மைத்ரி
பூஜையறை வாசலருகில் நின்றிருந்தவளை அழைத்தார்.
மைத்ரி அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.
இந்த தீபச்சுடரையே உற்றுப்பார் மைத்ரி. மனசு இந்த சுடரில் ஒரு முகமாகணும். வேற எந்த வித சிந்தனையும் இருக்கப்படாது. இதைப் பார்த்துண்டே இருந்தா மனசு மெல்ல மெல்ல அமைதியாகும் பார். சஞ்சலங்கள். தேவையில்லாத பரபரப்பு எல்லாம் குறையும் மனசுக்குள்ள ஒரு வெற்றிடம் ஏற்படும் எல்லாத்தையும் கடந்த ஒரு சூன்ய நிலைக்கு போகும். காத்துல மிதக்கறாப்பல தோணும். எண்ணங்களற்ற இந்த சூன்ய நிலையும், மிதக்கும் உணர்வும் உன்னை மெல்ல பதப்படுத்தும். அமைதியைக் கொடுக்கும். இதை விட்டு வெளில வரவேணாம்னு தோணிடும். இதுக்கு முன்னாடி இந்த உலகம், இதன் நிறங்கள், சுகங்கள், வாசனைகள் எல்லாமே தூசி...
மைத்ரி அவர் கூறியவைகளை உள் வாங்கிக் கொண்டு எண்ணங்களை ஒருமுகப்படுத்த முயன்றாள். குழம்பிய குட்டை மெல்ல மெல்ல தெளிவது போல் மனம் தெளிய ஆரம்பித்தது. தூசிகள் மறைந்தன. அத்தை, நாணா, ரேவதி, பாலா, அப்பா எல்லாருடைய உருவங்களும், கலங்கி கரைந்து காணாமல் போக சூன்யம் பிடிபட்டது. உடம்பு மிதக்க ஆரம்பித்தது. வெகு நேரம் மிதந்து கொண்டிருந்தவளை பார்த்தசாரதி, இன்று இது போதும் மைத்ரி
என்றபடி கலைத்தார். மைத்ரேயி கண் விழித்தாள். அவரை நன்றியோடு பார்த்தாள்.
நீங்க சொன்னது நிஜம் தான் மாமா. மனசு இப்போ ரொம்ப அமைதியா இருக்கு. இந்த அமைதி எனக்கு நிரந்தரமா கிடைக்கணும். கிடைக்குமா?
எல்லாத்தையும் அறுத்தெறி மைத்ரி. ஒவ்வொரு முடிச்சா அறுக்க அறுக்க ஆனந்தம் தன்னால வரும். உறவுகள் எல்லாமே உணர்வுகளுக்கு தொந்தரவு தான். எது மேலயும் அளவுக்கதிகமா பாசம் வெக்கப்படாதுன்னு அதான் ஞானிகள் சொல்லி வெச்சுருக்கா.
மைத்ரேயி தலையசைத்தாள். பெருமூச்சு விட்டாள்.
பார்த்தசாரதி எழுந்து மின்விளக்கைப் போட்டார். மைத்ரேயி குத்து விளக்கை எடுத்து ஸ்வாமி மண்டபத்தில் வைத்தாள். நாலு நாள் முன்பு வரை கூட நினைக்கவில்லை. கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோகும் என்றும், பங்களா வாழ்விலிருந்து இப்படி ஒரு சின்ன இடத்தில் வாசம் செய்வோமென்றும், கண்மூடி கண் திறப்பதற்குள் எல்லாம் தலை கீழாய் விட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் அப்பா. அறுபது வயசில் அவருக்கேற்பட்ட சபலம் ரேவதி என்னும் ஒரு வசந்தசேனை அந்த பங்களாவிற்குள் காலடி எடுத்து வைத்த போது மைத்ரேயிக்கேற்பட்ட அதிர்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல. அம்மா இருந்திருந்தால் அப்பா இப்படி செய்திருப்பாரா தெரியவில்லை. ஆணுக்கு மட்டும் ஏதோ ஒரு பெண் துணை தேவைப்பட்டுக் கொண்டே இருக்குமா? அப்பா செத்திருந்தால் அம்மா பத்தினியாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் உலகம், அப்பா செய்ததை சகஜமாய் எடுத்துக் கொண்டது. ஒரு வேளை அப்பாவின் இந்த புது காதல் தெரிந்து தான் அம்மாவின் இதயம் பலவீனமாகி அவளை வாரிக் கொண்டு போய்விட்டதோ என்னவோ. வீட்டில் பதினெட்டு வயதுப் பெண் இருக்க அப்பாவுக்கு ஏன் இப்படி புத்தி போயிற்றென்று தெரியவில்லை. அப்படி ஒன்றும் ரேவதி பெரிய அழகியுமில்லை. எப்படி அவளோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்ட தென்று தெரியவில்லை. முப்பது வருஷம் குடித்தனம் பண்ணிய அமமாவிடம் இல்லாத எதை அவளிடம் கண்டு விட்டார் என்று தெரியவில்லை. மைத்ரி பெருமூச்சு விட்டாள். கல்யாணமாகி பதினோரு வருஷம் குழந்தை பிறக்காமல் ஏங்கி தன்னை வருத்தித் தவமிருந்து அம்மா தன்னைப் பெறுவானேன் பதினாறு வயசில் அம்போவென்று விட்டு விட்டு செத்துப் போவானேன்? இதற்கு, தான் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வந்துடறேன் மைத்ரி, கதவை தாப்பாள் போட்டுக்கோ
பார்த்தசாரதி ஷர்ட் பட்டன் போட்டபடி சொன்னார்.
அவர் போனதும் மைத்ரேயி கதவைத் தாளிட்டு விட்டு வந்து அமர்ந்தாள்.
அம்மா செத்துப் போய் நாலு வருடத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டது.
அம்மா செத்துப் போன ஆறாம் மாதம் அப்பா ரேவதியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மைத்ரேயி அப்பாவையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தாள்.
யாரு இவங்க?
இவளை இனிமே அம்மான்னு கூப்டலாம்
என்ற அப்பாவை புருவம் சுருக்கிப் பார்த்தாள். எதுவும் சொல்லாமல் நகர்ந்தாள். ரேவதியைப் பார்த்தால் நல்லவளாகத் தெரியவில்லை. இடுப்பு சதையும் இறங்கியிருந்த மார்பும் அவள் மீது நல்ல அபிப்ராயத்தை தரவில்லை. அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை கூட இருக்க வேண்டுமென்று தோன்றியது. மைத்ரேயி அதன் பிறகு அப்பாவிடமும் பேசவில்லை. ரேவதியிடமும் பேச விரும்பவில்லை. ரேவதி மேலே விழாத குறையாய் உபசரித்தாள். மைத்ரேயியிடம் மிகவும் பாசமாயிருப்பதாகக் காட்டினாள். தன்னை ஒரு நல்ல தாயாய் அவள் ஏற்றுக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டாள். மைத்ரிக்கு சிரிப்பு தான் வந்தது. கூடவே எரிச்சல் வந்தது.
ப்ளீஸ்... எனக்குப் பசிக்கும் போது நான் சாப்ட்டுக்கறேன். எனக்கு எது வேணும்னாலும் செய்துக்க ரெண்டு கையும் காலும் இருக்க உங்க வேலையை நீங்க பார்த்துக் கோங்க போதும்
ஒருநாள் பட்டென்று சொல்லி விட்டாள். ரேவதியின் முகம் கறுத்தது. அதன் பிறகு தான் மைத்ரேயியிடம் அவளுக்கு வன்மம் வளர்ந்திருக்க வேண்டும். துச்சமாய் மதிக்கப்படுவதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. அவமானப்படுத்தியவளை பதிலுக்கு அவமானப்படுத்தாமல் தூங்குவதில்லை என்று காத்திருந்தது ரேவதியின் மனம். மைத்ரி முடிந்த வரை அவர்கள் எதிரில் கூட போவதைத் தவிர்த்து ஒதுங்கினாள். தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று தன் வட்டத்தை சிறிதாக்கிக் கொண்டாள். இவள் வட்டம் சிறிதாக ஆக ரேவதியின் வட்டம் பெரிதாயிற்று. அவள் அதிகார எல்லை கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைந்து கொண்டே வந்தது. வேலைக்காரர்கள் அவளுக்குப் பயப்பட ஆரம்பித்தார்கள். அவள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து முடித்து விட்டு ரகசியமாய் அவளைத் திட்டினார்கள்.
மைத்ரேயிக்கு வீடு வெறுத்துப் போயிற்று. அப்பாவின் திருமணம் அவருடைய தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட அவளால் அதை சரி என்று ஏற்க முடியவில்லை. ஒரு வேளை ரேவதி நல்ல குணமுள்ளவளாய் இருந்திருந்தால் இந்த உறுத்தல் நாளடைவில் மறைந்து போயிருக்குமோ என்னவோ! ஆனால் அப்பாவின் கண்களுக்கு ரேவதியிடம் ஒரு குறையும் தெரியவில்லை. அவளுக்கு நகைகளாய் வாங்கிக் கொடுத்து தள்ளினார். அவள் புடவை துணிமணிகளுக்கு ஒரு தனியறையே கட்ட வேண்டுமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு குவிந்திருந்தது. இரண்டாவது மனைவி என்பதால் மட்டும் இந்த அன்பல்ல. அவளுடைய அழகு. தங்கள் இருவருக்குமிடையே