Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil Manithargal
Vaanavil Manithargal
Vaanavil Manithargal
Ebook111 pages45 minutes

Vaanavil Manithargal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703630
Vaanavil Manithargal

Read more from Vidya Subramaniam

Related to Vaanavil Manithargal

Related ebooks

Reviews for Vaanavil Manithargal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil Manithargal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    வானவில் மனிதர்கள்

    Vaanavil Manithargal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மழை எதுக்குப் பெய்யறது தாத்தா?

    உலகம் குளிக்கறதுக்காக. செழிக்கறதுக்காக.

    மழை எப்படிப் பெய்யும்? வானத்துக்கு எங்கேயிருந்து தண்ணி கிடைக்கும்?

    சூரியன் சுட்டெரிக்கும் போது அந்த வெப்பத்துல கடல் ஆறு எல்லாத்திலயும் இருக்கற தண்ணில கொஞ்சம் ஆவியாகி மேலே போய் மேகமாகி, மேகம் குளிரும் போது மறுபடியும் மழையாப் பெய்யறது.

    கடல்லேர்ந்து மேல போற தண்ணி மறுபடியும் கடலுக்கே திரும்பிவராப் போல நாமளும் மறுபடியும் அம்மா வயித்துள்ளயே போயிடுவோமா?

    தாத்தாசிரித்தார். பேரன் ரிஷியை வாஞ்சையோடு பார்த்தார்.

    சொல்லு தாத்தா! மறுபடியும் அம்மா வயித்துக்குள்ளயே போயிடுவோமா?

    இல்லை கண்ணா! போக மாட்டோம்.

    அப்போ எங்கே போவோம்?

    இந்த மண்ணுக்குள்ளே போவோம். மண்ணோட மண்ணாகிப் போவோம். உடம்புக்குள்ள இருக்கற பஞ்ச பூதமும் வெளில இருக்கற பஞ்ச பூதங்களோட ஐக்கியமாயிடும். மண் மண்ணோட, தீ தீயோட, வாயு வாயுவோட, ஜலம் ஜலத்தோட, ஆகாயம் ஆகாயத்தோட.

    நாலு வயதுக் குழந்தைக்கு இந்த தத்துவம் புரிகிற வயதில்லை. இருந்தாலும் அது மலர்ந்து சிரித்தது.

    யப்பாடா! அம்மா வயித்துக்குள்ள போக மாட்டோம் இல்லையா? நிம்மதி வேற எங்க வேணா போகலாம் அதை விட!

    ஏண்டா கண்ணா அப்படி சொல்ற?

    எங்கம்மா கொடிய ராட்சஸி! பூதம் சினிமாவிலெல்லாம் கண்ணை உருட்டி நாக்கைத் தள்ளி முறைக்குமே அந்த மாதிரி. அது வயித்துக்குள்ள யார் போவா திரும்பவும்? குழந்தை தலையைச் சிலுப்பிக் கொண்டு சொல்ல, தாத்தா அவனைக் கவலையோடு பார்த்தார்.

    இந்த அளவுக்கு குழந்தை பேசுகிறதென்றால் எந்த அளவுக்குத் தன் தாயின் மீது இதற்கு கசப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்? தாயை சேய் வெறுக்கலாமா? தாய்மையின் உன்னதத்தை தாயே உணர வில்லை என்றால் சேய் எங்ஙனம் உணரும்? சேஷ தாத்தா பெருமூச்சு விட்டார். முற்றத்தில் கொட்டிக் கொண்டிருந்த மழையில் முற்றம் நிறைந்து தாழ்வாரத்திலும் நீர் மேலேறிக் கொண்டிருந்தது.

    ஏன்னா! நீங்க சாப்பிடவரேளா...? அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள் கமலி. அவர் மனைவி.

    அனந்து இன்னும் வரலையே...

    அங்க என்ன பிரச்சினையோ? வந்துடுவான். அது வரை நீங்க எதுக்குப் பட்டினி கிடக்கணும்? அவன் எப்போவரானோ?

    வைதேகி அவனோட வந்துடுவாளா?

    வராம எங்கே போவா? பொம்மனாட்டி இருக்கற இடத்துல இருந்தாத் தானே மரியாதை?

    அவங்களுக்குள்ளே அப்படி என்ன சண்டை கமலி? எதுக்கு வைதேகி கோவிச்சுண்டு போனா?

    ஹும்! புருஷன் பெண்டாட்டி சண்டைக்குக் காரணமேது? சின்ன வயசுல நாமளும் தான் போட்டிருக்கோம்... கமலி சிரித்தாள்.

    ஆனா நீ கோவிச்சுண்டு உங்காத்துக்கு ஒருநாள் கூட போனதில்லையே?

    அது அந்தக்காலம்! இப்பல்லாம் பொம்மனாட்டிகள்ளாம் படிச்சவாளோல்லியோ? இப்படித் தான் இருப்பா.

    ரிஷி தாத்தாவைத் தொட்டுக் கூப்பிட்டான்.

    என்னடா கண்ணா?

    உங்களுக்கு ஒண்ணும் தெரியலை. அம்மா ஏன் போனான்னு சொல்லட்டுமா?

    என்னடா...? எதுக்கு...? சேஷு குனிந்தார்.

    "அம்மாவுக்கு இந்த வீடு பிடிக்கலையாம். இதை வித்துட்டு பட்டணத்துல பிளாட் வாங்கணுமாம். இங்கேயிருந்து தினமும் ஆபீசுக்குப் போயிட்டு வரது அவளுக்குக்

    கஷ்டமாயிருக்காம்!" குழந்தை சொல்ல சேஷு திடுக்கிட்டு மனைவியைப் பார்த்தார்.

    குழந்தை ஏதோ உளர்றதுன்னா!

    குழந்தைகள் தான்டி உண்மையைச் சொல்லும்! கண்ணா! அப்பா இதுக்கு என்னடா சொன்னான்?

    ‘அப்பா முடியாதுன்னார். அம்மா அவரைத் திட்டினா. சரியான மடிசஞ்சின்னா. இதெல்லாம் ஒரு வீடா? இங்கே மனுஷா இருப்பாளா? நான் போயிடறேன் எங்கம்மாவாத்துக்கு. இனிமே இங்கே வரவே மாட்டேன்.

    உங்களோட மறுபடியும் நான் வாழணும்னு நீங்க ஆசைப்பட்டா இந்த வீட்டை வித்துட்டு சிட்டியில பிளாட் வாங்கிட்டுச் சொல்லுங்கோ வரேன்'னா. காலம்பற எழுந்து என்னையும் கிளம்புடா ரிஷின்னு வரச்சொல்லிக் கூப்பிட்டா, நான் வரமாட்டேன்னுட்டேன்! பொத்து பொத்துன்னு முதுகுல என்னை அடிச்சா பாருங்கோ... இன்னும் எரியறது' குழந்தை சட்டையை அவிழ்த்து முதுகைக் காட்ட விரல்கள் முதுகில் வரிவரியாய் பதிந்து சிவந்திருந்தது.

    அட ராட்சஸமே...! கமலிப்பாட்டி முணுமுணுக்க ரிஷி தாத்தாவைப் பார்த்துச் சிரித்தான். நான் சொல்லலையா? அதையே தான் பாட்டியும் சொல்றா பாரு.

    ராட்சஸம்ங்கறது மனுஷனா இல்லைடா குழந்தே குணம். எல்லாருக்குள்ளயும் இரண்டு குணமும் எப்பவும் இருக்கும்.

    என்ன இரண்டு குணம்?

    ஒண்ணு ராட்சஸ குணம். இன்னொண்ணு சத்வ குணம். அதாவது சாத்வீகமான தெய்வ குணம்.

    எங்கம்மா கிட்ட இல்லாத குணம்!

    அப்படியெல்லாம் பேசக் கூடாது ரிஷி. பெரியவாளை மதிக்கணும்.

    ஆனா அம்மா மட்டும் ஏன் உங்களை மரியாதை இல்லாம பேசறா?

    சரி வா! நாம சாப்பிடப் போகலாம் சேஷு எழுந்து கொண்டார்.

    கமலி இருவருக்கும் தட்டு வைத்தாள். குழந்தைக்கு சூடு பறந்த சாதத்தை மையாகக் குழைத்து நெய்யும் ரசமும் விட்டுப் பிசைந்து வைத்தாள்.

    ஏன் தாத்தா! இந்த வீட்டை வித்துடுவியா நீ..?

    நீ என்ன சொல்றே? வித்துடலாமா வேண்டாமா?

    வேணாம் தாத்தா... ப்ளீஸ்!

    ஏண்டா கண்ணா? இந்த வீட்டுல என்ன இருக்கு? இது மடிசஞ்சி வீடு! எதுக்கு இது?

    "இதான் தாத்தா அழகு! பார். பெரிய வாசல். பெரிய கூடம். பெரிய அடுக்களை. மச்சுப்படி இந்த முற்றம் மட்டும் எவ்வளவு அழகு! அதுவும் மழை பெய்யும் போது இந்த முற்றத்துல சடசடன்னு விழுந்து இது நிரம்பி. இதுல நான் கப்பல் விடும் போது இது இன்னும் ரொம்ப அழகு. இந்த வீடு மாதிரி பெரிசு எங்கேயும் வராது தாத்தா! நீ இதைக் கண்டிப்பா விற்கக் கூடாது. அப்படி வித்தா

    Enjoying the preview?
    Page 1 of 1