Meendum Thodarum
5/5
()
About this ebook
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsBharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsOor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Kaadhal Othigai Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5
Related to Meendum Thodarum
Related ebooks
Iranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Dhayalan Theerpu Rating: 5 out of 5 stars5/5Unakku Mattum Solvean Rating: 5 out of 5 stars5/5Poi, Poiyai Thavira Verillai...! Rating: 5 out of 5 stars5/5En Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mugam Rating: 0 out of 5 stars0 ratingsThorkathe Thozha Rating: 0 out of 5 stars0 ratingsAnamikavuku Anjali Rating: 5 out of 5 stars5/5Naan Oru A Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsTime To Murder Rating: 5 out of 5 stars5/5Avargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Thottral Jaippai Rating: 5 out of 5 stars5/5Makeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Maranathin Niram Manjal Rating: 5 out of 5 stars5/5Imaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Iravil Arugil Nizhalil... Rating: 5 out of 5 stars5/5Crime Sooravali Rating: 5 out of 5 stars5/5Million Dollar Unmai Rating: 5 out of 5 stars5/5Please... Please... Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsIniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalargal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Re... Re... Rating: 5 out of 5 stars5/5Mannikka! Manamillai, Mannikka...! Rating: 0 out of 5 stars0 ratingsPogathey Vara Mattai Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratings...Endral Aval Rating: 0 out of 5 stars0 ratingsMannikkavum Veru Vazhi Illai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Meendum Thodarum
1 rating0 reviews
Book preview
Meendum Thodarum - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
மீண்டும் தொடரும்
Meendum Thodarum
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அவன்
2. அவள்
3. இவள்
4. அவன்
5. அவள்
6. இவள்
7. அவன்
8. அவள்
9. இவள்
10. அவன்
11. அவள்
12. இவள்
13. அவன்
14. அவள்
15. இவள்
16. அவன்
17. அவள்
18. இவள்
19. அவன்
20. அவள்
21. இவள்
22. அவன்
23. அவள்
24. இவள்
25. அவன்
26. அவள்
27. இவள்
முன்னுரை
முன்குறிப்பு: இங்கே அவன், அவள், இவள் என்கிறது மூன்று தொடர்கதைகள் துவங்குகின்றன. இந்த மூன்று தொடர்களும் முடியும்போது இவை மீண்டும் தொடரும் என்கிற ஒரேக்கதையின் கிளைக்கதைகள் என்பது புரியும்.
1. அவன்
அவன் செத்துப் போயிருந்தான்.
சற்று முன் அவன் பிடித்த சிகரெட் நெடி இன்னும் காற்றில் உயிரோடு இருந்தது, சாம்பல் கிண்ணத்தில் இன்னும் முழுமையாக அணையாமல் பாக்கியிருந்த ஒரு கங்குப்புள்ளியிலிருந்து நூலாக புகை வந்து கொண்டிருந்தது. டியூப்லைட் அருகில் பல நிமிடங்களாக ஒரு பச்சியை குறி வைத்துக் காத்திருக்கும் ஒரு பல்லி அவனைத் திரும்பிப் பார்க்க வில்லை, .காற்றுக்கு திடீர் கர்ப்பமாகி உடனே கருக்கலைத்துக் கொண்டிருந்த திரைச் சீலைகளும் அவளைக் கண்டு கொள்ள வில்லை . சுவரில் ஓவியமாக தொங்கிக் கொண்டிருந்த விவேகானந்தரும் சும்மா தான் இருந்தார். போராட்டத்தில் எகிறி தரையில் விழுந்த அந்தப் புத்தகம் மட்டும் மல்லாந்து விழுந்ததால் தன் பக்கங்களை விசிறி துடித்துக் கொண்டிருந்தது. அவன் வயிற்றிலிருந்து பெருகி அகன்ற உறைந்த கருஞ்சிவப்பு ரத்தத் தீவுக்கடியில் பெட்ஷீட் கிளிகள் இன்றும் இணை பிரியாமல் கொஞ்சிக் கொண்டு தானிருந்தன.
தான் பிடித்திருந்த கத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். நிதானமாக சேகரமாகிய கடைசி சொட்டு ரத்தம் அதன் முனையிலிருந்து சொட்டி தரையில் இருந்த மற்ற புள்ளிகளோடு சேர்ந்து கொண்டது.
வியர்வையில் அவள் உடலும் அதனால் உடைகளும் நனைந்திருந்தன. அவள் பிடி தளர்ந்து கத்தி 'டினார்" என்று கீழே விழுந்து எகிறி இன்னொரு குட்டி 'டினார்' தந்து புரண்டு விழுந்தது.
மெல்ல நகர்ந்து நாற்காலியில் அமர்ந்தாள், விழிகள் திறந்தபடி இறந்திருந்த அவனைப் பார்த்தாள்.
உங்கள் கண்களில் மட்டும் எப்படி காந்த சக்தி ? கண்களா அவை இல்லை... தூண்டில்கள்! என் இதயத்தை அருகில் இழுத்து சிக்க வைத்த தூண்டில்கள்!
அவன் மீசை முடிகளின் மோடி தெறித்து விழுந்த ஓர் ரத்தத் துளி காய்ந்து கொண்டிருந்தது.
உங்கள் மீசையைப் பற்றி பதினாறு வரிகளில் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன் தெரியுமா ? ம்கூம்... அதை இப்போது சொல்ல மாட்டேன். வெட்கமாக இருக்கிறது. அந்த மிசை என் மனதை வருடும் இறகு.
அவன் உதடுகளிரண்டும் பிரித்து மேல் வரிசைப் பர்கள் பளிச்சிட்டன.
ஆமாம், அதெப்படி உங்களை யாரும் இன்னும் பற்பசை விளம்பரத்திற்க்கு அழைக்காமல் இருக்கிறார்கள்? அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது உண்மை தான் முத்ததின் போது சமர்ததமாக இருக்கின்றனவ என்ன? சில சமயம் காயப்படுத்தி அடயாள சின்னம் கூட . போடுகின்றனவே, அவை வன்முறை இச்சை கொண்ட தீவிரவாதிகள்! ஆனால் ரசிக்க வைக்கும் மீண்டும் மீண்டும் ஏங்க வைக்கும் தீவிரவாதம்!
அவனுடைய நீளமான கைகளில் ஒன்று படுக்கயில் கிடக்க மற்றொன்று படுக்கைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.
இனி மேல் உங்களை சந்திப்பதென்றால் ஒரு நிபந்தனை முதல் காரியமாக உங்கள் இரண்டு கைகளையும் பின் பக்கமாக வைத்து ஒரு கயிறு போட்டு கட்டி விட்டுதான் பக்கத்தில் உட்காருவேன். சம்மதமா? ஏன் என்றா கேட்கிறீர்கள்? உங்களுக்கு, காரணம் தெரியாதாக்கும்? நம் உதடுகள் பேசிக் கொண்டும் காதுகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் கைகளுக்கு உங்கள் கைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதே சதா வேலையாக இருக்கிறதே... ஒ ரு இடத்தில் ஒழுங்காக அவை இருந்தால்தானே? அ ங்கே இங்கே என்று பதுங்கிப் பாய்ந்து என் கைகளை சுலபமாக வென்று. -- பிறகு என் அவஸ்தைகள் பற்றி அவற்றுக்கு கொஞ்சமாவது கவலை உண்டா? இரவில், தனிமையில் என் தலையணையை உங்கள் முகமாக நினைத்து முத்தம் தான் கொடுக்க இயலும். ஆனால் என் தலையணைக்கு கைகள் ஏது?
கைகள் கொண்ட தலையணைக்கு நான் எங்கேப் போவேன்?'
அவள் அவனை வெறித்துப் பார்த்தபடி வெகுநேரம் பொம்மை மாதிரி அப்படியே அமர்ந்திருந்தாள்.
அங்கிருந்த தொலைபேசியின் மணி அவளைக் கலைத்தது. திரும்பிப் பார்த்தாள். அது தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.
எழுந்து அருகில் சென்றாள், எடுக்க கை நீண்டது. நின்றது. மீண்டும்வந்து அமர்ந்து கொண்டாள். அடிக்கட்டும்.
அதுபிடிவாதமாக தொடர்ந்து அடித்தது ஒரு கட்டத்தில் ஓய்ந்தது. எழுந்தாள், தொலைபேசி அருகில் வந்தாள்.
எடுக்க வேண்டும். எண்கள் தொட வேண்டும்.
ஹலோ, போலீஸ் கண்ட்ரோல் ரும்
என்று குரல் வரும்.
சொல்ல வே ண் டு ம், என்னவென்று ? வாக்கியம் அமைத்துப் பார்த்தாள்.
சார். இங்க ஒரு கொலை நடந்துடுச்சி, விலாசம் சொல்கிறேன் வாங்க தொப்பியை செஞ்சது நான் தான், இதைத் தவிர்க்க முடியலை, எனக்கு வேறு வழி தெரியலை, கத்தியால குத்திட்டேன், நிறைய ரத்தம் கொஞ்ச நேரம் துடிச்சான். அப்புறம் செத்துட்டான். நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேயே இருப்பேன், வாங்க வந்து என்னைக் கைது பண்ணிக்குங்க.
அவ்வளவுதானே? சரி, சொல்லி விடலாம்,
தொலைப்பேசி நோக்கி நீண்ட அவள் கை மீண்டும் நின்றது.
ஏன்? நான் ஏன் தண்டனை பெற வேண்டும்? நான் செய்தது குற்றமா இல்லை தர்மமா? நான் வழங்கியது தீர்ப்பு! நியாயமான ஒரு தண்டனை! ஒரு நேர்மையான நீதிபதியாகத்தான் நான் செயல்பட்டேன். என்னிடம் அதற்கான அதிகாரம் கிடையாது என்பதுதான் குறை.
நான் சரணடைந்து, குற்றவாளிக் கூண்டில் நின்று. தீர்ப்புவாங்கி ,தூக்கு மேடையேறி சாகத்தான் வேண்டுமா? நான் பாவம் இல்லையா? அப்பாவி இல்லையா சட்டத்தின் பார்வையில் மட்டும் தானே குற்றவாளி? அதாவது… சட்டம் என்னைப் பார்த்தால் தானே?
இங்கே நடந்ததை யாரும் பார்க்கவில்லையே! இந்த பல்பி, திரைச் சீலை, புத்தகம், கட்டில், பெட்ஷீட் கிளிகள் எல்லாம் சாட்சி சொல்லாதே... பிறகு ஏன் நான் தாண்டமாக வலிய சென்று சரண்டைய வேண்டும்?
மாட்டேன்! நான் வாழ வேண்டும், அதற்கு இந்தக் கொலையை மறைக்க வேண்டும், எப்படி?
2. அவள்
பவித்ரா ஆணியில் மாட்டியிருந்த விகடன் சைஸ் கண்ணாடியில் பார்த்து -ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக் கொண்டாள். துப்பட்டாவை சரி செய்து கொண்டாள். அடுப்பு பகுதிக்கு வந்து காபி கலந்து குடித்தாள். டவரா, டம்ளரைக் கழுவி கவிழ்த்து விட்டு மோஜையிலிருந்து ஃபைலையும், வீட்டு சாவியையும் எடுத்துக் கொண்டாள்.
தன் போர்ஷனுக்கு வெளியே வந்து இரட்டைக் கதவுகளை இழுத்துப் பூட்டினாள், கதவில் முருகர் படம் ஒட்டியிருந்தது.
முற்றத்தில் கை பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த எதிர்போர்ஷன் இளைஞன். குட் மார்னிங்
என்று இனித்தான்.
"ஹலோ! இந்த ஸ்டோர்ஸ்ல இருக்கிற அத்தனை பேருக்கும் நீங்க குட்மார்னிங் சொல்றீங்களா? அதென்ன எனக்கு மட்டும்? அதென்ன கரெக்ட்டா நான் வெளிப் வர்றப்பதான் தண்ணி அடிப்பீங்களா ? சரி, அப்பப்ப ஒரு குட்மார்னி, .ஒரு இனிப்பு. பூகம்பம், சுனாமின்று எதாச்சும் பேச்சு கொடுக்கறது... ஆக்சுவலா உங்க மைண்ட்ல என்ன இருக்கு? எனக்குத் தெரியும். இது லவ் இல்லை . ஒரு வேளை நான் பதிலுக்கு இளிச்சி, சிக்னல் கொடுத்தா ஒரு நாளைக்கு உங்க போர்ஷனுக்குக் கூப்புட்டு என்னைத் தொடரணும். அதானே? சொல்லுங்க சார்! அதானே…? என்று தினம் கேட்கத் தோன்றும், ஆனால் கேட்டதில்லை. பயமில்லை. சூழ்நிலை!
அவன் தான் ஸ்டோர்ஸின் ஓனர், எதிர்த்துக் கொண்டால் பல சொகரியங்கள், சலுகைகள் ரத்தாகலாம், எனவே, வேறு வழியில்லாமல் பேசுவாள், உயிரே இல்லாமல்.
இன்றும் தனக்கே கேட்காமல், குட் மார்னிங் என்றாள்.
லைப்ரரிக்கா.
இல்லை சார்.
பின்னே?
இன்ட்டெர்வியூ."
எந்த கம்பெனி
வழியுது சார்.
என்ன ?
தண்ணி வழியுது பாருங்க பக்கெட்ல, வர்றேன்.
சொல்லாம போறீங்களே.
அதான் வர்றேனேனே...
விரைவாக வெளியேறி சாலையில் நடந்தாள்.
தெருமுனை யில் அந்த டெலிபோன் பூத்துக்குள் வந்து, இந்தாம்மா சாவி
என்று வைத்து. நான் புறப்படட்டுமா?
என்றாள்.
கண்னாடி அணிந்த அம்மா, டிபன் சாப்ட்டியா பவித்ரா?
என்றாள்.
இல்லம்மா,
உப்புமா பண்ணி வெச்சிட்டுத்தானே வந்தேன். பாக்கலையா?
பசிக்கலைம்மா. காப்பி போட்டு குடிச்சிட்டேன்.
சாமி கும்புட்டியா?
"ஒரு