Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sila Nerangalil Sila Anubavangal Part 4
Sila Nerangalil Sila Anubavangal Part 4
Sila Nerangalil Sila Anubavangal Part 4
Ebook166 pages51 minutes

Sila Nerangalil Sila Anubavangal Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303626
Sila Nerangalil Sila Anubavangal Part 4

Read more from Bakkiyam Ramasamy

Related to Sila Nerangalil Sila Anubavangal Part 4

Related ebooks

Related categories

Reviews for Sila Nerangalil Sila Anubavangal Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sila Nerangalil Sila Anubavangal Part 4 - Bakkiyam Ramasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சில நேரங்களில் சில அனுபவங்கள் பாகம் – 4

    Sila Nerangalil Sila Anubavangal Part 4

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சிம்மராசிகளே சிந்தை கலங்க வேண்டாம்

    சிவகுமாரின் பூக்கள்

    சிவலிங்க செட்டியார் பங்களாவில் தபாலாபீஸ்!

    சொந்த ஊரில் சில கேள்விகள்

    சுண்ணாம்பு கேட்டால் அப்படித்தான்

    டீ குடிக்கிற பழக்கம்

    டி.வியில் ஒரு டெலிபோன் பேட்டி

    தலை (தப்பிய) தீபாவளி

    தலைமை உரை தயார்

    தமிழ் தெரியாத புரானா ஆத்மி

    தாம்பூலத் தட்டில் ஒரு ஷாக்!

    தொலையட்டும் விடுங்கள்!

    திருப்தியின் விலை

    துடுக்குமாடிக் கட்டிடங்கள்!

    டி.வி. பெட்டிக்குள் சமையலறை!

    உடம்பு வாகு

    உள்ளதைச் சொன்னால் உபத்திரவேமே

    உங்கள் பேனாவுக்கு மூடி இருக்கா?

    வேட்டியனே! வெளியேறு!

    வலி இழந்த ஒலியினாய்! வா, வா, வா!

    வாங்கிண்டு போறது

    வராதே, சோளமே! வராதே!

    வாழைப் பூ சிந்தனைகள்

    வீடு தேடி வரும் சாம்பார்!

    வீட்டுக்குள் ஒரு யானை குளிக்கிறது!

    வெள்ளைப் பூண்டின் வெற்றி!

    வெங்காயமே! வைபோகமே!

    நாமும் விக்கிரமாதித்த ராஜா ஆகலாம்!

    யானை எப்போது விசிறுவதை நிறுத்தும்?

    விபூதி யோகம்!

    யானை வளர்க்க ஆசையா?

    சிம்மராசிகளே சிந்தை கலங்க வேண்டாம்

    E:\Priya\re-gen\Sila nerangalil\1-min.jpg

    மனிதன் ரொம்ப ஜாக்கிரதையானவன். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் மிக உஷார்ப் பேர்வழி. அரசன், அரசாங்கம், பெற்றோர், சுற்றம் இவர்கள் பேரிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கையில்லை.

    ஏன், கடவுள் பேரிலேயேகூட நம்பிக்கையில்லை. ‘கடவுளே! என்னைக் காப்பாற்று!’ என்று தன்னம்பிக்கைக்குரிய ஒரு தெய்வத்தை வேண்டுவதுடன் நிற்பதில்லை. பல தெய்வங்களின் சகாயங்களை நாடுகிறான்.

    கடவுள்களை அழைப்பதுடன் தேவதைகளையும் ‘தேவதைகளே, என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று தன் பாதுகாப்புக்கு அனைவரையும் அழைக்கிறான்.

    ‘என்னை’ என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டால் அவர்கள் காதில் சரியாக விழுமோ விழாதோ?

    என்னை என்பது ‘எள்ளை’ என்று விழுந்து சகல தேவதைகளும் அவனது நிலத்தில் விளையும் எள்ளைப் பாதுகாக்கப் போய்விட்டால் என்ன செய்வது என்று அற்ப மானிடனுக்குச் சந்தேகம் வந்திருக்கலாமோ என்னவோ.

    ஆகவே தன் உடம்பைக் காப்பாற்ற அழைப்பதைத் தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் தெளிவுபடுத்துகிறான்.

    உடம்பு என்றால் அதிலும் குழப்பம் ஏற்படலாம். ஆகவே பின்னும் குறிப்பாக, என் உடம்பின் இன்ன பாகத்தை, இன்ன தெய்வம் காக்கட்டும். இன்ன பாகத்தை இன்ன தேவதை காக்கட்டும் என்று பிசிறு இல்லாமல் குழப்பமில்லாமல் வரையறுத்துப் பட்டியலிடுகிறான்.

    முதலில் ஜனன உறுப்பு. அங்கே சிருஷ்டித் தெய்வமான பிரம்மா நிலைபெறட்டும். அப்படீன்னா என்ன? இந்தண்டை அந்தண்டை போகாமல் அதே இடத்தில் நிலையாக இருக்கட்டும். ‘உயிர் நிலை’ என்று நாம் குறிப்பிடும் இடம் பிரம்மா நிலைப்படுத்தப்பட்ட இடம்.

    முதலில் அடிப்படையான உயிர் நிலைக்குப் பாதுக்காப்பு செய்துகொண்டுவிட்டான்.

    அப்புறம் பாதங்களில் விஷ்ணு நிலைக்கவும் கைகளில் ஹரனும், தோள்களில் இந்திரனும், வயிற்றினில் அக்னியும், இருதயத்தில் சிவனும், கழுத்தில் அஷ்டவசுக்களும், வாயில் சரஸ்வதி தேவியும், நாசியில் வாயுதேவனும், கண்களில் சூரிய சந்திரனும், காதுகளில் அசுவினி தேவர்களும், நெற்றியில் ருத்திரர்களும், தலையின் முன்பாகத்தை ஆதித்தியர்களும், உச்சியில் மகாதேவரும், சிகையில் (குடுமிப் பகுதி) வாமதேவரும், பின்புறம் பினாகியும், முன்புறம் சூவியும், இடத்திலும் வலத்திலும் பார்வதி பரமேஸ்வரனும் நிலைபெறட்டும் என்று விஞ்ஞாபித்துக் கொள்கிறான்.

    எல்லா அங்கங்களிலும், எல்லாத் தேவதைகளும் அவரவர்க்குரிய இடங்களில் (ஜூரிஸ்டிக்ஷன்) நிலைபெற்று என்னை ரட்சித்தருளட்டும்.

    இத்தனை முஸ்தீபுகளும் புறப் பாதுகாப்புக்கு இன்னும் உடம்புக்குள்ளிருக்கிற ஒவ்வொரு நாடி நரம்புக்கும் பாதுகாப்பாகக் கடவுளர்களையும் தேவதைகளையும் விதவிதமாகக் கூவி அழைக்கிறான். மன்றாடுகிறான்.

    தன் உயிரைக் கருணையுடன் காப்பாற்றும்படி இரைஞ்சுகிறான். ஸ்ரீருத்ரத்தில் வகுந்யாஸம் பகுதியில் பக்தனின் இந்த வேண்டுதல்களைக் காணலாம்.

    ஆனால் தற்போதுள்ள வேகமான வாழ்வில் வேகக்கூட நேரமில்லை. கட்டைகளுக்கும் வரட்டிக்கும் டாட்டா காட்டிவிட்டு, மின்சார அடுப்பில் வைத்து ஐந்து நிமிடத்தில் சாம்பல் தனி, எலும்பு தனியாக ஆக்கித் தந்துவிடுகிறார்கள்.

    குடும்பத் தலைவர்களிடம் முன்பெல்லாம் பூஜைகள் சாஸ்திர சம்பந்தமான சடங்குகள் ஒப்படைக்கப்பட்டன.

    அவர் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வது, காலையிலும் மாலையிலும் கோயிலுக்குச் செல்வது, நாள் நட்சத்திரங்களில் முறையாகச் செய்ய வேண்டிய வழிபாடுகள் செய்வது, நீத்தார் கடன் (தர்ப்பணம், சிரார்த்தம்) மஹாளயம் தருவது போன்றவற்றை ஒழுங்காக ஆற்றிக் கொண்டிருந்தனர்.

    இப்போது அவர்களுக்கு ஓய்வு கிடைக்கமாட்டேனென்கிறது.

    பல வீடுகளில் சுவாமி அலமாரியைத் துடைப்பது, விக்கிரகங்களைத் துலக்குவது, கோலம் போடுவது, புஷ்பங்களால் தெய்வ உருவங்களை அலங்கரிப்பது இதெல்லாம் பெண்மணிகள்தான் சிரத்தையாகச் செய்கிறார்கள்.

    ஆண் மகனார், கன கம்பீரமாக கற்பூரத்தைக் காட்ட மட்டும் வருவார்.

    இல்லத்தரசி வியர்த்துக்கொட்ட நைவேத்தியங்கள் செய்து வந்து சுவாமி முன் பரப்பி வைத்தால் இவர் எழுந்து வந்து நீரைச் சுற்றி, அரை குறையாகத் தெரிந்த மந்திரத்தையோ (சில சமயம் டப்பிங் சரியில்லாத படம் மாதிரி உதடுகள் அசைவதுடன் சரி) நாமத்தையோ கூறிவிட்டு, நம்ம வீட்டு பூஜை அலமாரி ரொம்ப தெய்வீகமா இருக்கில்லே? என்று பாராட்டிவிட்டு பேப்பர் படிக்கப் போய்விடுகிறார். விசேஷ தினமானால் குடும்பம் முழுவதுக்கும் இலையைப் போட்டு தண்ணீர் வைத்து, பரிமாறுகிற வரையில், சகலமும் இல்லத்தரசிதான். (நிச்சயமாக ஒரு கிராம் புண்ணியம்கூட கணவன்மாருக்குக் கிடைக்காது!)

    தற்போது சனீஸ்வர பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குப் பிரவேசிப்பதாகவும், சிம்மராசிப் பெண்மணிகள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் காபராபடுத்தி வைத்து அதற்கு ஏதேதோ நிவாரணமும் சொல்கிறார்கள்.

    ஒரு மாசத்துக்குள் ஹெல்ப்பர் குரு வந்துடறாராமே, குருவாகப்பட்டவர் தயவிருப்பதாலே சனீஸ்வரராகப்பட்டவர் படுத்தமாட்டாராம்.

    ஆகவே சிம்மராசிப் பெண் சிம்மங்கள் தளர்ச்சி அடையாமல் தைரியமாயிருக்கலாமாம். சனி பிரவேசித்தால்தான் பயம்.

    ஆனால் கணவ சாதியைச் சேர்ந்தவர்கள் மனைவி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றாவது இந்த ஸீஸனில் கடவுளை வேண்டிக் கொள்ளலாம்.

    சிவகுமாரின் பூக்கள்

    E:\Priya\re-gen\Sila nerangalil\2-min.jpg

    கந்த சஷ்டிக் கவசம் நினைவில் இருக்கிற அளவுக்கு கீதை சுலோகங்கள் என் நினைவில் பதியவில்லை.

    கீதையையும் சஷ்டிக் கவசத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

    சின்ன வயதில் எதைப் படித்தாலும் நினைவில் பதிந்துவிடும். பெரியவனான பிறகு பதிய வைத்துக்கொள்ள மூளை சிரமப்படுகிறது. ஏன், மறுத்தே விடுகிறது.

    ஔவையாரின் ‘நெல்லுக் கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி’யை என் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் முழுமையாக சொல்லுவேன்.

    எட்டு வயசில் படித்தது எழுபது நிறைந்த பின்னும் ஞாபகத்தில் உள்ளது. ஆனால் எழுபதில் சிவ நாமாவளியையோ வேறு கடவுளர் நாமாவளியையோ, (ஒரு 108 திருநாமங்களை) மனப்பாடம் செய்யப் படாதபாடு படவேண்டியிருக்கிறது.

    கடகடவென்று யாரேனும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஒப்பித்தாரென்றால் கேட்டுப் பாருங்கள். ஏழு அல்லது எட்டு வயசிலேயே மனப்பாடம் பண்ணினதாகச் சொல்லுவார்.

    மூளைக்கு ஏராளமான ஆற்றல் இருந்தாலும் ஞாபக சக்தி என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இளமையோடு இருந்துவிடுவதில்லை.

    குறிப்பிட்ட ஆசாமியின் அத்தியாவசியத் தேவை எதுவோ அந்த அயிட்டங்களில் சிலதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு மற்றவற்றை மூளை மறந்துவிடுகிறது.

    கம்ப்யூட்டர்கூட ‘அதிகமான ஃபைல்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1