Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thavamirunthean! Varam Tharuvai…
Thavamirunthean! Varam Tharuvai…
Thavamirunthean! Varam Tharuvai…
Ebook101 pages35 minutes

Thavamirunthean! Varam Tharuvai…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703647
Thavamirunthean! Varam Tharuvai…

Read more from Vidya Subramaniam

Related to Thavamirunthean! Varam Tharuvai…

Related ebooks

Reviews for Thavamirunthean! Varam Tharuvai…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thavamirunthean! Varam Tharuvai… - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    தவமிருந்தேன்! வரம் தருவாய்...

    Thavamirunthean! Varam Tharuvai…

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author//vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    டிஸ்டம்பர் பூச்சிற்குப் பிறகு வீடு புதிது போலிருந்தது. வீடு முழுக்க சாமான் கலைந்திருந்தது.

    ஆனாலும் உங்கப்பா ரொம்பத்தான் படுத்தறார். கிழவிய சிங்காரிச்சு மணைல உக்கார வெச்சா மாதிரி எதுக்கு இப்போ இந்த வீட்டுல காசைக் கொட்டறார்? நாலு நாள்ள பல்லை இளிக்கப் போவது சுவரு.

    அம்மா அலுத்துக் கொள்ள, பத்மினி எதுவும் பேசாது சாமான்களைச் சரி செய்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

    என்ன இப்போ லண்டன்லேர்ந்து பிரின்ஸ் சார்லஸா வரப்போறார்? நம்ம ஆனந்த்தானே. என்னமா இந்த ஆர்ப்பாட்டம் பண்றார்! யாரால முடியுது வீட்டைச் சுத்தம் பண்ண.

    உன்னை யாரு செய்யச் சொல்றது? நீ போ, நா பார்த்துக்கறேன்.

    ஆமா. நீ ஒருத்தி செஞ்சு எந்தக் காலத்துல முடியறது! அம்மா சாமான்களை ஒவ்வொன்றாய் எடுத்துத் தூசு போகத் துடைத்தாள்.

    ஏம்மா, ஆனந்த் வரதுல உனக்கு இஷ்டமில்லையா? இப்படி சலிச்சுக்கற?

    நா அப்படியா சொன்னேன்? அவன் என்ன லண்டன்லயே பொறந்து வளர்ந்தவனா என்ன? இங்கேர்ந்து போனவன்தானே. எதுக்கு இப்படி தாட் பூட்னு ஆரவாரம் பண்றார்னு கேக்கறேன்.

    என்ன இங்க... உங்கம்மா யாரைத் திட்டிட்ருக்கா? இதோ பாரு. வெள்ளை அடிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சதைத்தான் இப்போ செய்தேன். இந்த நேரம் ஆனந்தும் வரான். அவ்ளோதான், பேசாம வேலையைப் பாரு.

    அம்மா தனக்குள் ஏதோ முனகிக் கொண்டே உள்ளே போனாள்.

    ஏம்மா பத்மினி... போஸ்ட்மேன் வந்தாரா? நேத்தே உன் பாஸ்போர்ட் தபால்ல வந்துரும்ன.

    வரும்ப்பா. இன்னிக்கு வந்துடும். இல்லாட்டியும் நாளைக்கு கண்டிப்பா வந்துடும்.

    அது வந்தாத்தானே அதுக்கப்பறம் அந்த லிசாவோ என்னவோ சொன்னயே, அது வாங்கணும்?

    லிசா இல்லப்பா, விசா! பத்மினி சிரித்தாள்.

    ஏம்மா... லண்டன் போய்ட்டா நீயும் பேண்ட் ஷர்ட்டெல்லாம் மாட்டிக்குவாயா...

    அங்கெல்லாம் குளிர் அதிகமார்க்கும்ப்பா. அதுக்கேத்தா மாதிரிதான் போட்டுக்கணும்.

    என்னமோம்மா, நீ நல்லார்க்கணும்னுதான் ஆனந்தனை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வெச்சேன். அவன் வந்ததும் உங்க கல்யாணத்தைப் பேசி முடிக்கணும். உன் கழுத்துல மூணு முடிச்சு விழுந்துட்டா எனக்கொரு பெரிய பாரத்தை இறக்கி வெச்சா மாதிரி.

    ஏம்பா, நா அவ்ளோ குண்டாவா இருக்கேன்? பெரிய - பாரம்ங்கறீங்க.

    அப்பா சிரித்தார்.

    நா போய் மெஸ் மாமி வீட்ல சாப்பாடு சொல்லிட்டு வந்திடறேன், இன்னிக்கு சமையல் வேலை வேணாம்னு சொல்லு உங்கம்மாட்ட.

    அப்பா ஷர்ட்டை அணிந்து பாக்கெட்டில் பர்ஸை எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் சென்றார்.

    எப்படி இருப்பான் ஆனந்தன்! அப்பாவின் கனவுகளுக்கு வர்ணம் கொடுப்பானா...? வெளிநாட்டு வாசம் அவன் தோற்றத்தை இன்னும் அழகாக மாற்றியிருக்குமா? கல்வியும் நாகரிகமும் வெளிநாட்டு வேலையுமாய் ஒரு புது ஆனந்தனாக அவனைக் காண ஆவலாகவே இருந்தது.

    பதினேழு வயதில் அம்மாவுக்குக் கொள்ளி போட்டு விட்டு யாருமற்றவனாய் நின்றிருந்தவனை ஒன்று விட்ட மாமா என்ற முறையில் அப்பாதான் மனது கேட்காமல் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அம்மாவுக்கு அதில் அவ்வளவு சுவாரசியமில்லை.

    சொந்த அக்காவா பாழாப்போறாங்க. அவ்வளவு பேர் இருக்கற இடத்துல உங்களுக்கு மட்டும் எதுக்கு தேவையில்லாத கவலை? எதுக்கு பாரத்தை இழுத்துத் தலை மேல போட்டுக்கறீங்க?

    அன்பு காட்டறதுக்கும் அடைக்கலம் கொடுக்கறதுக்கும் உறவாதான் இருக்கணும்னு இல்லயே.

    உங்களுக்கென்ன... சொல்லிட்டீங்க! எனக்குத் தானே வேலை!

    அவனுக்குன்னு தனியாவா சமையல் செய்யப் போற? இத்தனை நாள் நீ மிச்சம் மீந்து பசு மாட்டுக்குக் கரைச்சுக் கொட்டறதை அவன் சாப்பிட்டுட்டுப் போறான். பசுவோட கஷ்டம் கொஞ்சம் குறையும்.

    அம்மா எரித்து விடுவது போல் பார்த்தாள். கோபப்பட மட்டும்தான் அவளால் முடியும். முடிவெடுப்பதெல்லாம் அப்பாதான்.

    உனக்கு ப்ளஸ்டூ ரிஸல்ட் எப்போ வருது? முதல் நாள் சாப்பிடும்போது அவனிடம் கேட்டார் அப்பா."

    அடுத்த மாசம் வந்துரும் மாமா... நா நல்ல மார்க் வாங்குவேன்னு அம்மாகிட்ட சொல்லியிருந்தேன். என்னோட மார்க்கைத் தெரிஞ்சுக்காமயே அம்மா போய்ட்டாங்க.

    'அம்மா சாமியாய்ட்டாங்கன்னுதானே நீ நம்பற? அப்போ சாமிக்குத் தெரியாதா உன் மார்க்?"

    அவன் புரிந்தாற்போல் சிரித்தான்.

    மேற்கொண்டு என்ன படிக்கணும்னு ஆசைப்படற?

    அவன் பதில் சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

    நீ என்ன படிக்கணும்னு ஆசைப்பட்டன்னு நா சொல்லவா?

    அவன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.

    எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த விஞ்ஞானியாவேன். வெளிநாட்டில் மேற்படிப்பு படிப்பேன். நிறைய மருந்துகள் கண்டுபிடிப்பேன். இந்தியாவை நோயற்ற தேசமாய் மாற்றுவதே என் லட்சியம்.

    ஒரு நோட்புக் முழுக்க நீ எழுதி வெச்சிருந்ததைப் பார்த்தேன்.

    'நீ என்ன சாதிக்கணும்னு நினைக்கறயோ அதைத் திரும்பத் திரும்ப எழுதி வை. அது நிச்சயம் நடக்கும்னு அம்மா சொன்னாங்க. அதான். ஆனா

    Enjoying the preview?
    Page 1 of 1