Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusami Seitha Kidney Thaanam
Appusami Seitha Kidney Thaanam
Appusami Seitha Kidney Thaanam
Ebook121 pages48 minutes

Appusami Seitha Kidney Thaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303679
Appusami Seitha Kidney Thaanam

Read more from Bakkiyam Ramasamy

Related to Appusami Seitha Kidney Thaanam

Related ebooks

Related categories

Reviews for Appusami Seitha Kidney Thaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusami Seitha Kidney Thaanam - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமி செய்த கிட்னி தானம்

    Appusami Seitha Kidney Thaanam

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy
    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. என்னிடம் வாலாட்டாதீர்கள்

    2.அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

    3.அப்புசாமி கலந்துகொண்ட க்விஸ்!

    4. அப்புசாமி செய்த கிட்னி தானம்

    5. ஸயண்டிஸ்ட் அப்புசாமி

    6. முறுக்கிக்கொண்டார் அப்புசாமி

    7. லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்

    1. என்னிடம் வாலாட்டாதீர்கள்

    தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள்,என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள்..

    ஜிப்பா, பனியன் இவைகளைக் கழற்றிவிட்டு, தனது தேக காந்தியைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அப்புசாமி, ஏய், என்ன இது, ஆட்டு வியாபாரி பிடித்துப் பார்க்கிற மாதிரி கையைப்போட்டு என்னவோ திருகுகிறாயே? என்றார்.

    என்ன ஆச்சரியம்! என்றாள் சீதாப்பாட்டி.

    பிரைமரி வாக்ஸினேஷன் தழும்புகூடக் காணோமே. உங்களுக்குக் குழந்தையில் அம்மையே குத்தவில்லையா?

    அப்புசாமி சும்மா இருந்திருக்கக்கூடாதா? பெருமிதத்துடன், குழந்தையில் மட்டுமல்ல, அதற்கப்புறம் இதோ இன்றைய தேதி வரையில் ஒரு அம்மை குத்தற இன்ஸ்பெக்டர் பயலிடமும் நான் மாட்டிக்கொண்டது இல்லை! என்று சொல்லித் தொலைத்து விட்டார்.

    அவ்வளவுதான்.

    "ஸ்மால் பாக்ஸ் இராடிகேஷனுக்காக ஸ்கீம் மேலே ஸ்கீம் போட்டு, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து காம்ப்பெய்ன் நடத்துகிறார்கள் ஒருபுறம். இன்னொருபுறம் இந்த மாதிரி இல் லிட்ரேட்ஸ் அம்மை குத்திக் கொள்ளாததை ஒரு சாமர்த்தியமாக நினைத்துக் குதிக்கிறார்கள்!' என்று பொரிந்து தள்ளிவிட்டாள் சீதாப்பாட்டி.

    எப்போதோ யாரோ அம்மை குத்திக் கொள்வதைப் பார்த்தே மயக்கமாக விழுந்தவர் அப்புசாமி. தரைச் சக்கரம்மாதிரி எதையோ வைத்துக் கொண்டு சரக் சரக் என்று அம்மைக்காரன் குடைகிற குடைசலை எவனால் பொறுக்க முடியும்?என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டார்.

    சீதாப்பாட்டி, பா. மு. கழக பிரசிடெண்டின் கணவர் இன்னமும் தன் ஆயுளில் வேக்ஸினேட் செய்து கொள்ளவில்லை என்றால், எனக்கு அது பெரிய அவமானம் இல்லையா? என்றாள்.

    அப்புசாமி எரிச்சலுடனும், கோபத்துடனும், கை, யாருடையது, உங்க அப்பனுதா? தாத்தனுதா? என் கைடீ, என் கை. என்று சொன்ன விதம் சீதாப்பாட்டியையே சிரிக்க வைத்துவிட்டது.

    கணவனைச் சீண்டும் நோக்கத்துடன்உங்களுக்கு இப்போது பெரிய கோல்டன் ஆப்பர்சூனிடிஎன்றாள் சீதாப்பாட்டி. ரஷ்யன் வேக்ஸின் வந்திருக்கிறது.‘வெரிகுட் எஃபக்ட் ரிமார்க்கபிள் ரியாக்ஷன்'. நீங்கள் சிரமமே பட வேண்டாம். பா. மு. க. வுக்கு இதோ இப்போ சொல்லி அனுப்பினால், அடுத்த நிமிடம், அவர்களே ஏற்பாடு பண்ணி விடுவார்கள். உங்களுக்குச் சகல மரியாதையுடன் அம்மை குத்துவார்கள். அவர்களுக்கும் பெருமை உங்களுக்கும் சேஃப்டி...

    அப்புசாமி, தபீல், தபீல், தபீல் என்று தலை தலையாய்ப் போட்டுக்கொண்டார். அம்மை குத்திக்கொள்வது என்ன அதிரசமா, மைசூர்பாகா, இப்படி ஓட ஓட உபசரிக்கிறாயே? அம்மை குத்துவதற்குப் பதில் என் தலையில் ஓர் ஆணியை வேண்டுமானாலும் அடி! என்று சொல்லிக்கொண்டே நழுவி விட்டார்.

    சீதாப்பாட்டி இந்தச் சம்பவத்துக்கப்புறம்‘இதோ வந்துவிட்டார்கள் அம்மை குத்த' என்று அடிக்கடி பயமுறுத்தி வேடிக்கை பார்ப்பது சகஜமாகி விட்டது.

    இருந்தாற்போலிருந்து அப்புசாமி, ஷேவிங் செய்து கொண்டிருக்கும்போது, க்விக்! க்விக்! சீக்கிரம்! சீக்கிரம்!ஐயையோ! அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் ஓடுங்கள்,என்று வாசலிலிருந்து குரல் கொடுப்பாள்.

    "சீதே! சீதே! ஐயோ, நான் என்ன செய்யட்டும்?' என்று அப்புசாமி, ஷேவிங் செட், தண்ணீர், கண்ணாடி எல்லாவற்றையும் மேஜை டிராயரில் போட்டு மூடிவிட்டுக் குடுகுடுவென்று இங்கும் அங்கும் ஓடி, ஒரு வழியாக ஸ்க்ரீன் மறைவில் போய்ப் பதுங்கிக் கொள்வார்.

    ஒரு நிமிடமாகும், இரண்டு நிமிடமாகும், ஐந்து நிமிடமாகும். முகத்தில் அப்பிக்கொண்டிருந்த சோப் உலர்ந்து அப்புசாமியின் மோவாய்ச் சதையை உறிஞ்சப் பார்க்கும்.‘என்னது, பீடைகள் இன்னுமா வரவில்லை?' என்று நினைத்தபடி மெதுவான ரகசியக்குரலில், சீதே... சீதே... என்று கூப்பிடுவார்.

    சீதாப்பாட்டியிடமிருந்து கலகலவென்று சிரிப்புத்தான் வரும்.

    ஸ்கிரீனுக்கு இந்தப் புறமாக வந்து எட்டிப் பார்த்துக் கொண்டே, ஐயோ பாவம், ரொம்ப பயந்துட்டீங்களா? மை டீப்பஸ்ட் ஸிம்ப்பதீஸ். ஒருத்தரும் வரவில்லை. வெளியில் வந்து கண்ட்டினியூ யுவர் ஷேவிங்... என்று பரிகாசம் செய்வாள்.

    அப்புசாமி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ஓகோ! இது விளையாட்டா? அந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதம்மே. எதெதுலே விளையாடுவது என்றில்லை? என்று உறுமுவார். ஆனால் சீதாப்பாட்டி தன் விளையாட்டை நிறுத்தவில்லை. ராஜபாளையத்தான் வரும் வரைக்கும்.

    சீதாப்பாட்டி, துணிச்சல் காரிதான். எத்தனையோ நெருக்கடியான கட்டங்களில் அவள் எஃகு மனுஷி மாதிரி நடந்து கொண்டு நிலைமையைச் சமாளித்திருக்கிறாள். ஆயிரம் சீதாப்பாட்டிகளுக்கு அவளால் தனியாகப் பதில் சொல்ல முடியும்.

    இப்படித்தான் ஒரு நாள்.

    ஐயோ, ஐயோ, கதவைத் திறங்கள்... க்விக்! க்விக்!... ஐ அம் இன் டேஞ்ஜர்! என்று பா. மு. கழகத்துக்குப் புறப்பட்ட சீதாப்பாட்டி திரும்பி ஓடிவந்து படபடவென்று இடித்தாள். என்னவோ ஏதோ என்று கதவைத் திறந்தார் அப்புசாமி.

    ஓ மை காட்! என்று வீட்டுக்குள் ஒரே பாய்ச்சல் பாய்ந்து கதவைச் சாத்தினாள் சீதாப்பாட்டி. நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். தி ரெச்சட் பிட்ச்! அவளுக்கு மூச்சு இரைத்தது.

    ஜன்னல் வழியே அப்புசாமி எட்டிப் பார்த்தார். தெரு நாய் ஒன்று தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது

    ஒன்றையும் காணோமே சீதே! ஒரு பொறுக்கி நாய் தான்... அப்புசாமி பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சீதாப்பாட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தார்.‘நாய்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அவள் உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது!

    பளிச்சென்று புரிந்தது அப்புசாமிக்கு.

    ஏன் சீதே நாய் என்றால் உனக்கு?

    சிம்ம சொப்பனம். என்றாள் சீதாப்பாட்டி. அதுவும், ஒரு ஹைட்ரோ ஃபோபியா கேஸைப் பார்த்ததிலிருந்து... ப்ளீஸ்... கதவைச் சரியா‘போல்ட்' போடுங்கள். விண்டோவையும் சாத்துங்கள்.

    விண்டோவைச் சாத்துவதோடு விட்டாரா அப்புசாமி? நாய் ஒன்று வாங்கி வருவதென்று அந்த நிமிடமே நிச்சயம் பண்ணிவிட்டார்.

    மூன்றாம் நாளே முழங்கால் உயரத்துக்கு ஒரு நாய் வந்து சேர்ந்தது. அப்புசாமி குடுகுடுவென்று உள்ளே போனார். பீரோவைத் திறந்தார்.

    வெடவெடவென்று உதறல் எடுக்க, சீதாப்பாட்டி பீரோவை மறித்தாள்.நத்திங் டூயிங்.. டாக்ஸ் ஆர் ஸ்ட்ரிக்ட்லி ப்ரொகிபிடட்... சும்மா கொடுத்தாக்கூட அந்த நாய் இங்குவரக்கூடாது! என்றாள்.

    அப்புசாமி, சே நகரு! இந்த வீட்டுக்கு ஒரு நாய் இருந்தாக வேண்டும்!என்று வள்ளென்று விழுந்தார். சீதாப்பாட்டிகுற்றுயிரானாள்.

    எண்ணூறு ரூபாயை நாய்க்காரனிடம் கொடுத்த அப்புசாமி, ஆமாம். திடீரென்று நாளைக்கே பட்டையை அறுத்துக்கொண்டு உன் இடத்துக்கு ஓடிவந்து விடுமோ? என்று சந்தேக விளக்கம் கேட்டுக்கொண்டார். தூணில் கட்டிப்போட்டிருந்த நாயைப் பெருமையோடு பார்த்தான் நாய்க்காரன்.

    "மனுஷாள்

    Enjoying the preview?
    Page 1 of 1