Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounam Pesattum
Mounam Pesattum
Mounam Pesattum
Ebook89 pages41 minutes

Mounam Pesattum

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465858
Mounam Pesattum

Read more from Devibala

Related to Mounam Pesattum

Related ebooks

Reviews for Mounam Pesattum

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounam Pesattum - Devibala

    11

    1

    அனுவைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள். வீடு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.

    அம்மா காலை நாலு மணிக்கே எழுந்து குளித்து பூஜை முடித்து சமையல் கட்டுக்குள் புகுந்து விட்டாள்.

    அப்பாவும் பரபரப்பாக இருந்தார்.

    அனு உறங்கிக் கொண்டிருந்தாள்.

    கீதா! அனுவை எழுப்பு! அவங்க வரும்போதுகூட இவ தூங்கிட்டு இருப்பாளா?

    அம்மா சத்தம் போட்டாள்.

    அனும்மா! எழுந்து குளிச்சு, ட்ரஸ் பண்ணு! - அக்கா கீதா அவளை அசைத்து எழுப்ப,

    விடுக்கா! ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் தூங்க முடியுது!

    அம்மா வந்து விட்டாள்.

    நல்லா இருக்குடி. உன்னைத்தான் பெண் பார்க்க வர்றாங்க. நீயே பொறுப்பில்லாம இருந்தா எப்படி?

    அம்மா! சத்தம் போடாதே. நான் பாத்துக்கறேன். - கீதா அனுவை அணைத்து முத்தமிட்டு, கொஞ்சி ஒருமணி நேரத்துக்குள் குளிக்க வைத்து, நல்ல சேலையைக் கட்டி விட்டு, அழகாக அலங்காரம் முடித்து விட்டாள்.

    அம்மா! இப்ப வந்து பாரு உன் பொண்ணை!

    அம்மா வந்து பார்த்தாள்.

    அனு மகாலஷ்மி போல இருந்தாள்.

    கீதா! இந்தப் பெருமையெல்லாம் உனக்குத்தான். அவளைக் கட்டுப்படுத்த உன் ஒருத்தியாலதான் முடியுது.

    பாவம்மா! அவ குழந்தை.

    சரிதான். இன்னொரு வீட்டுக்குப் போய் குப்பை கொட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு! இன்னமும் குழந்தையா இருக்க முடியுமா?

    அனு எம்.காம். படித்து முடித்து இன்னும் அக்கவுன்ட்ஸ் சம்பந்தமாக சில படிப்புகளையும் முடித்து ஒரு வங்கியில் அதிகாரியாக இருக்கிறாள். வயது இருபத்தி மூன்று. அது ஒரு வெளிநாட்டு வங்கி. ஒரு ஜாதகம் நன்றாகச் சேர்ந்து விட்டது. பையன் ஒரு தூதரகத்தில் அதிகாரி. பெரிய சம்பளம். ஒரே பிள்ளை - புகைப்படம் அனுப்பி - பிடித்து விட்டது. அப்பா விசாரித்ததில் கண்ணியமான குடும்பம் எனத் தெரிய, பார்க்க வர சம்மதித்து விட்டார்கள்.

    சொந்த வீடு, கார் என வசதியாக வாழும் பிள்ளை விட்டார்.

    இன்னும் அரைமணியில் வந்து விடுவார்கள்.

    அம்மா! நான் கோயிலுக்குப் போயிட்டு வெளி வேலைகளை முடிச்சிட்டு, மத்யானமா வர்றேன்.

    கீதா புறப்பட -

    என்னடீ நீ? அனுவைப் பெண் பார்க்க வரும்போது - அக்கா நீ இருக்க வேண்டாமா?

    வேண்டாம்னுதான் நான் கிளம்பறேன்மா!

    என்னக்கா நீ?

    இதப்பாரு அனு! நான் வாழலை. விவாகரத்து ஆகி இப்ப பிறந்த வீட்ல இருக்கேன். என்னைப் பற்றி அவங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் வரும். அது ஒரு வில்லங்கமா வந்து நிக்கணுமா?

    என்னக்கா பேசற நீ? இது நம்ம சொந்த விஷயம். நீ பட்ட வேதனைகள் எங்களுக்குத் தானே தெரியும்?

    அனு! புதுசா வர்றவங்க அதை யெல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க!

    அதுக்காக? எங்களுக்கு அனு ஒரே மகள்னு பொய் சொல்ல முடியுமா கீதா?

    அம்மா! நான் உன்னைப் பொய் சொல்லச் சொல்லலை. ‘மூத்தவ கீதாவுக்குக் கல்யாணம் ஆயாச்சு’னு ஒரு வார்த்தை நீ சொல்லிட்டா, கீதா எங்கேனு யாரும் கேக்கப் போறதில்லை. நேர்ல நான் இருந்தா, ‘நீங்க என்ன செய்யறீங்க’னு ஒரு கேள்வி வரும். நான் பதில் சொல்ல வேண்டி வரும். இந்த சூழ்நிலைல அது வேண்டாம். அனுவை அவங்க மனசுக்குப் பிடிச்சுப் போனா, மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சமா படும். அப்புறம் சொல்லிக்கலாம்.

    இல்லைக்கா! இதை நான் ஒப்புக்கலை. நீ என் கூடவே இருக்கணும். அவங்க பாக்க வர்றது என்னைத்தான். இதப்பார்! நீயும் ஒரு பட்டதாரி! உத்யோகம் பார்த்து மாசம் பதினஞ்சாயிரம் ரூபாய் சம்பாதிக்கறே. உன் கால்ல நிக்கற. உனக்கும் ஒரு சமூக அந்தஸ்த்து இருக்கு. நீ போகக் கூடாது!

    அனு, அக்காவைத் தடுத்து நிறுத்தி விட்டாள்.

    சரி! உனக்காவது நல்ல வாழ்க்கை அமையட்டும்!

    சொன்ன நேரத்துக்கு கார் வந்து வாசலில் நின்றது. நாலு பேர் வந்தார்கள்.

    பையனின் அப்பா, அம்மா, பையன், நாலு வயதில் ஒரு சிறுவன் என நாலு பேர்.

    வரவேற்பு, அறிமுகம் எல்லாம் முடிந்தது.

    அந்தக் குழந்தை துறுதுறுப்பாக இருந்தான். உள்ளே ஓடினான்.

    எங்க பேரன்! என் சொந்தப் பேரன் இல்லை. தங்கையோட பேரன். எங்க வீட்லதான் எப்பவும் இருப்பான்!

    குழந்தை உள்ளே ஓடி வந்தான்.

    கீதாவை அவனுக்குப் பிடித்துப் போய் அவளிடம் கொஞ்ச ஆரம்பித்தான்.

    சரி! பெண்ணைப் பாக்கலாமா?

    கீதா, அனுவை அழைத்துக் கொண்டு வந்தாள். அனு நமஸ்காரம் செய்தாள்.

    இது எங்க மூத்த பொண்ணு கீதா! செக்ரட்டேரியேட்ல வேலைபாக்கறா.

    கீதா கை கூப்பினாள்.

    உங்க குடும்பமும் இதே ஊர்லதான் இருக்கா?

    ஆமாம்மா!

    அதற்கு மேல் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அனுவிடம் பொதுவாகப் பேசினார்கள். எல்லாருமே கலகலப்பாக இருந்தார்கள்.

    பையன் மதுவிடம் அம்மா மெதுவாகக் கேட்டாள்.

    உனக்குப் புடிச்சிருக்கா?

    Enjoying the preview?
    Page 1 of 1