Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madiyil Saayum Neram
Madiyil Saayum Neram
Madiyil Saayum Neram
Ebook98 pages41 minutes

Madiyil Saayum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Madiyil Saayum Neram

Read more from Devibala

Related to Madiyil Saayum Neram

Related ebooks

Reviews for Madiyil Saayum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madiyil Saayum Neram - Devibala

    16

    1

    சடகோபன் கோட்டை மாட்டி, டை முடிச்சை சரி செய்து கொண்டிருந்தார்.

    பார்வதி அருகில் வந்தாள்.

    சதீஷ் புறப்பட்டாச்சா?

    உங்க பிள்ளை சூரியன் உதிக்கறதுக்கு முன்னால் வீட்டைவிட்டு போயிர்றானே! நீங்களே தேவலை!

    கோபன் பெருமையுடன் திரும்பினார்.

    எம்புள்ளைடி! அதான் உழைச்சு உச்சிக்கு வரணும்னு ஒரு உத்வேகம் அவன் ரத்தத்துல ஊறியிருக்கு! இது எனக்கு பெருமைடி!

    போதுமே! எனக்குப் புடிக்கலை!

    என்ன புடிக்கலை? சதீஷ் பொறுப்பை எடுத்துக்கிட்ட பின்னால புதுசா அஞ்சு கோடி ரூபாய்க்கு பிஸினஸ் வந்திருக்கு. இது சாதாரண விஷயமா? சாதனைடி!

    இதப்பாருங்க! உங்க பிஸினஸ் எனக்குத் தெரியாது! எம்புள்ளை முக்கியம் எனக்கு. அவன் நேரா நேரத்துக்கு சாப்பிடறதில்லை! எதுக்குமே அவனுக்கு நேரமில்லை! வாழ வேண்டிய வாலிப வயசு அவனுக்கு. அது மறந்து போச்சா உங்களுக்கு?

    அவர் அருகில் வந்தார்.

    காலா காலத்துல அவனுக்கொரு கல்யாணம் நடக்கணும்! எல்லாரையும் போல எம்புள்ளையும் வாழணும். பேரப் புள்ளைங்களை நான் கொஞ்சணும். இதெல்லாம் நியாயமான ஆசை இல்லையா?

    அவர் சிரித்தார்.

    இதானே? நடக்கட்டும்!

    நடக்கட்டும்னா, உடனே நடந்துடுமா? ஜோசியரை கூப்பிடணும். நல்ல வரனா அமையணும். இது உங்க பிஸினஸ் இல்லை! வாழ்க்கை! நம்ம அந்தஸ்துக்கு குறையாத பொண்ணா இருக்கணும். எல்லாம் பொருந்தணும்!

    அவர் யோசனையுடன் நிமிர்ந்தார்.

    பார்வதி! முதல்ல இந்த சங்கதியை சதீஷ்கிட்ட பேசு! வாழப் போறவன் அவன். ஒருவேளை அவன் மனசுல யாராவது இருக்கலாம். அதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கற கடமை நமக்கு உண்டு!

    நிச்சயமா இருக்காது! நமக்குத் தெரியாம நம்ம மகன் எதையும் செய்யமாட்டான்!

    பார்வதி! அவன் பச்சக்குழந்தை இல்லை! இந்த மாதிரி சங்கதிகளை பெத்தவங்ககிட்ட எந்த பிள்ளையும் உடனே தெரிவிக்கறதில்லை! புரியுதா? உடனே கேட்ரு!

    சரி! இன்னிக்கு ராத்திரியே கேட்டுர்றேன்!

    குரலில் கலக்கம் இருந்தது.

    இதப்பாரு! நம்ம சதீஷ், நாம எதிர்பார்த்ததைவிட நல்லா வந்திருக்கான். அவன் மனசு கோணவே கூடாது. அவன் விருப்பம் எதுவோ, அதுதான் நடக்கணும். புரியுதா?

    சரிங்க!

    இதுவரைக்கும் நம்ம மகன் எந்த ஒரு விஷயத்துலேயும் நம்மை ஏமாற்றினதில்லை! அதை நீ மறக்கக்கூடாது! நம்ம மனசு போல நடக்கற மகனை நாமும் அனுசரிச்சு வாழ முயற்சிக்கணும்! வரப்போற பொண்ணுக்கு நீ மாமியாரா இருக்கக்கூடாது! அம்மாவா இருக்கணும்! சரியா?

    என் மேல உங்களுக்கு சந்தேகமா?

    இல்லை பார்வதி! சதீஷ் நமக்கு ஒரே பிள்ளைங்கற காரணமா, அவன்கிட்ட அதிக உரிமை உனக்குண்டு! அதை பங்கு போட்டுக்க ஒருத்தி வரும்போது உன் குணம் மாறக்கூடாது!

    இதப்பாருங்க! என் குழந்தை வாழணும்னு ஆசைப்படறவ நான்!

    சரி! எனக்கு நேரமாச்சு! ராத்திரி பேசிக்கலாம்!

    கோபன் புறப்பட்டுப் போய்விட்டார்!

    பார்வதி அவசர வேலைகளை முடித்துவிட்டு முதலில் ஜோசியரை வரவழைத்தாள்.

    சதீஷின் ஜாதகம் தயாராக இருந்தது.

    அலசச் சொன்னாள்.

    அவர் அங்கேயே உட்கார்ந்து ஜாதகத்தை அலசத் தொடங்கினார்.

    அம்மா! கல்யாண யோகம் வந்தாச்சு! கூடிய சீக்கிரம் உங்க பிள்ளைக்குக் கல்யாணம் நடக்கும்!

    காதல் கல்யாணமா?

    அதெல்லாம் தெரியலை! ஆனா கல்யாணம் முடிஞ்சும் உங்க பிள்ளை பிரமாதமா இருப்பார். அற்புதமான ஜாதகம் இது!

    அதுபோதும் எனக்கு!

    ஜோசியரிடம் இன்னும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவரைப் போகவிடாமல் உட்கார வைத்துவிட்டு, தரகரை உடனே வரவழைத்தாள்.

    என் பிள்ளை ஜாதகத்துக்கு பொருத்தமான வரன் வேணும். எங்க குடும்ப அந்தஸ்துக்கு கொஞ்சமும் குறையக் கூடாது! பொண்ணு அழகா, படிச்சவளா, நல்லவளா இருக்கணும். பத்துப் பொருத்தமும் பொருந்தணும். கொண்டு வாங்க!

    தரகர் ஆடிப் போனார்.

    சரிம்மா! பாக்கறேன்!

    சீக்கிரம் கொண்டு வரணும்!

    மாலை வரை பார்வதிக்கு இந்த வேலையே சரியாக இருந்தது.

    பிறகு கோயிலுக்குப் போய் மகன் பேரில் ஒரு அர்ச்சனையை நடத்திவிட்டு வீடு திரும்ப இரவு ஏழரை மணி ஆகிவிட்டது.!

    எட்டு மணிக்கு சடகோபன் வந்தார்.

    சதீஷ் உள்ளே நுழையும்போது எட்டரை.

    இது சீக்கிரம்.

    பத்து மணிக்குக் குறைந்து வரமாட்டான்!

    எந்த நேரத்தில் வந்தாலும் ஒரு குளியல் போட்டுவிட்டுத்தான் உள்ளே வருவான்!

    இப்போதும் குளித்துவிட்டு வந்தான்.

    அம்மா பசிக்குது! மத்தியானம் சாப்பிடவே இல்லை!

    வாடா கண்ணு! எல்லாம் ரெடியா இருக்கு!

    அப்பா-பிள்ளை இருவரையும் உட்கார வைத்து உணவைப் பரிமாறினாள்!

    கோடிக்கணக்கான பணம் இருந்தாலும், வேலைக்காரர்கள் இருந்தாலும், பார்வதி பரிமாறுவது மட்டும் தன் கையால்தான்.

    சதீஷுக்கும் அதுதான் பிடிக்கும்!

    சாப்பாடு முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

    சதீஷ்! உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். அருகில் வந்து உட்கார்ந்தாள் பார்வதி!

    சட்டென அவள் மடியில் சதீஷ் தலை வைத்து படுத்துக் கொண்டான்!

    தூக்கம் வருதா கண்ணா?

    இல்லைம்மா! நீ சொல்லு! நான் கேட்டுக்கறேன்!

    அவன் தலையைக் கோதிவிட்டாள்!

    "ஜோசியர்

    Enjoying the preview?
    Page 1 of 1