Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maappillai Ragasiyam Sollava
Maappillai Ragasiyam Sollava
Maappillai Ragasiyam Sollava
Ebook100 pages46 minutes

Maappillai Ragasiyam Sollava

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Maappillai Ragasiyam Sollava

Read more from Devibala

Related to Maappillai Ragasiyam Sollava

Related ebooks

Reviews for Maappillai Ragasiyam Sollava

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maappillai Ragasiyam Sollava - Devibala

    10

    1

    "பையன் எம்.டெக். படிச்சிருக்கான். எம்.பி.ஏ. முடிச்சிருக்கான். பெரிய கம்பெனியில வேலை. மாதச் சம்பளம் இங்கியே ரெண்டு லட்சம். ஒரு தடவை வெளிநாடு போயிட்டு வந்தா, லட்சக் கணக்கா அள்ளிட்டு வர்றான். திருவான்மியூர்ல சொந்த வீடு. வெளிநாட்டுக் கார்! அப்பா, உயிரோட இல்லை. அம்மாவும், கல்யாணம் ஆன ஒரு அக்காவும்தான்! உங்க பொண்ணு ராஜாத்தி மாதிரி இருக்கலாம்!"

    தரகர் அடுக்கிக் கொண்டே போனார்.

    அப்பா, அம்மா இருவருக்கும் மகிழ்ச்சி.

    பையன் பேரு வினோத். பார்க்க லட்சணமா இருப்பான். எதிர் பாக்கறது படிச்ச பொண்ணை; நல்ல குடும்பத்தை.

    எங்க துளசியும் பி.டெக் படிச்சிருக்காளே! அவளும் கிட்டத்தட்ட அம்பதாயிரம் சம்பாதிக்கிறா. அழகான பொண்ணு. ஒரே பொண்ணுங்கிற தால எல்லாம் சேர்த்து வச்சிருக்கோம். சீரும் சிறப்புமா செய்வோம். சரி! பெண் பார்க்க வரச் சொல்லிடுங்களேன்.

    அந்த நடைமுறை சம்பிரதாயங்கள் வேண்டாம்னு பையன் சொல்றான். ‘நெட்ல சாட் பண்ணி முதல்ல பேசிடறேன்! அப்புறமா நேர்ல சந்திக்கலாம்’னு சொல்றான்!

    துளசி வெளியே வந்தாள்.

    அவரோட ஈ.மெயில் ஐ.டி. இருக்கா?

    கொண்டு வந்திருக்கேன்மா. தரகர் எடுத்துக் கொடுத்தார்.

    இப்ப வீட்ல இருப்பாரா?

    இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே! இருப்பார்.

    இப்பவே பேசிடலாம்!

    துளசி அதை வாங்கிக் கொண்டு கம்ப்யூட்டர் முன் போய் உட்கார்ந்தாள்.

    இன்டர்நெட்டில் இணைப்பு தந்து, ‘நெட் மீட்டிங்’ முறையில் கம்ப்யூட்டரை இணைக்கத் தொடங்கினாள்.

    சில நிமிடங்களில் வினோத் திரையில் தெரிந்தான். அவன் வீடு தெரிந்தது. அம்மா இருந்தார்கள்.

    ஹாய்! நான் துளசி! தரகர் எல்லா விவரங்களையும் தந்தார். அதான் நெட்ல வந்துட்டேன்!

    வெரிகுட்! அம்மா! இப்படி வா!

    அம்மா வந்தார்கள்.

    அந்தப் பொண்ணு துளசி இவங்கதான்!

    நமஸ்காரம் ஆன்ட்டி! இது எங்க அப்பா, அம்மா!

    இருவரும் பரஸ்பரம் வணங்க, வினோத், துளசி சரளமாக பேசத் தொடங்கி விட்டார்கள்.

    அந்தப் பேச்சில் இரு குடும்பத்துக்கும் எல்லாரையும் பிடித்து விட்டது!

    அம்மா! எனக்கு துளசியை பிடிச்சிருக்கு! உனக்கு?

    வாழப்போறவன் நீதான். உன் திருப்திதான் எனக்கு முக்கியம்!

    துளசி! உங்க அபிப்ராயம் என்ன?

    வெளிப்படையாக கேட்டே விட்டான்!

    எனக்கு சம்மதம்! அப்பா, அம்மாவிடம் துளசி கேட்க, அவர்களும் தலையாட்ட,

    மற்ற சங்கதிகளை எப்பப் பேசறது வினோத்? துளசியின் அப்பா கேட்டார்!

    இனி பெரியவங்க நீங்க பேசிக்குங்க! எங்களுக்கு வேலை இல்லை.

    நாங்க ரெண்டு பேரும் வந்து உங்கம்மாவை பாக்கறோம்!

    ஒண்ணு செய்வோம். நல்ல ஒரு ஏஸி ரெஸ்ட்டாரெண்ட்ல டேபிள் புக் பண்ணுவோம். ஒரு நல்ல டின்னர் சாப்டுட்டு ஜாலியா எல்லாம் பேசி முடிவெடுப்போம். என்ன துளசி?

    குட் ஐடியா!

    நாளைக்கே புக் பண்ணிடவா?

    பண்ணிடுங்க!

    புக் பண்ணிட்டு நேரம், இடத்தை நான் சொல்றேன். நீங்க மூணு பேரும் வந்துடுங்க! நான் எங்கம்மா, அக்காவோடு அங்கே வந்துர்றேன்!

    இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    துளசியின் அப்பா, அம்மா உற்சாகமானார்கள்.

    எங்கும் போகாமல் கம்ப்யூட்டர் வந்த பிறகு வீட்டுக்குள் இருந்தபடியே ஒரு கல்யாணம் தீர்மானிக்கப்பட்டது.

    என்ன ஒரு விஞ்ஞான வளர்ச்சி!

    அரை மணி நேரத்தில் ஒரு பெரிய ஓட்டலைச் சொல்லி, நேரத்தையும் வினோத் கொடுத்து விட்டான்!

    துளசி! உனக்கு திருப்திதானே?

    பிடிச்சிருக்குப்பா! அவர் வெளிப்படையா இருக்கார். பாசாங்கு இல்லை. இந்தக் காலத்துல இதுதான் முக்கியம்!

    கோயில்ல வச்சு கல்யாணத்தை சிம்பிளா பண்ணுங்கனு சொல்லிடுவாரா? நீ எங்களுக்கு ஒரே மகள். நல்லா, பெரிசா செய்யணும்னு ஆசைப்படறோம்!

    அதையெல்லாம் பேசிக்கலாம்மா! அப்பா! நியாயமான விருப்பங்களை சொல்றதுல, தப்பில்லை. அவர் மாப்பிளையா பந்தா காட்டாம உங்களுக்கு பிள்ளையா இருக்கக் கூடியவரா இருந்தா மட்டுமே நீங்க ஒப்புக்கிட்டா போதும்! இது பழைய காலம் இல்லைப்பா. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். ரெண்டு குடும்பம் நட்பால இணையனும். அப்பத்தான் உறவு என்னிக்கும் நீடிக்கும்!

    அதாம்மா எங்களுக்கு வேணும்!

    அப்பா! நான் வெளில போயிட்டு வந்திர்றேன்!

    துளசி புறப்பட்டு விட்டாள்.

    துளசி படபடவென நிறைய பேசமாட்டாள். ஆனால் தேவைக்கு நன்றாகவே பேசுவாள்!

    துளசிக்கு முன் கோபமும், பிடிவாதமும் கொஞ்சம் தூக்கலாக உண்டு! சொன்னபடி நடக்க வேண்டும். ஒளிவு மறைவு கூடாது! நேரே ஒன்று, மறைவில ஒன்று என இரண்டு முகங்கள் இருந்தால் அவளால தாங்கிக் கொள்ள முடியாது!

    இந்த குணம் மாற வேண்டும் என அம்மா சொல்வாள்!

    நான் எதுக்காக என்னை மாத்திக்கணும்!

    அப்படி இல்லம்மா! கோடு போட்டு நீ வாழ்ந்தாலும், எதிராளி அந்தக் கோட்டுக்குள்ளே நிக்கணும்னு நீ கட்டாயப்படுத்த முடியாது. பலவித குணாதிசயங்கள் உள்ள மனுஷங்க நம்மைச் சுற்றி இருப்பாங்க. அவங்க கூடத்தான் நாம வாழ்ந்தாகணும்!

    அவசியம் இல்லை. அந்த மாதிரி ஆட்களை நான் ஒதுக்கிடுவேன்!

    இதுதான் துளசியின் காரெக்டர்!

    வினோத் அதற்கு தோதாக இருப்பவன் போலத் தெரிகிறது!

    அதனால்தான் துளசிக்குப் பிடித்து விட்டது!

    துளசி அரை நாள் அலுவலகம் போய் திரும்பி விட்டாள்.

    மாலை ஏழு மணிக்கு சந்திப்பு என பதிவு செய்யப்பட்டிருந்தது!

    துளசி ஒரு ஜீன்ஸும், டாப்சும் அணிந்து கொண்டாள்.

    துளசி! இந்த ட்ரஸ்லதான் வரப்போறியா?

    ஏன்மா?

    இல்லை...ஒரு கல்யாணப் பேச்சு நடக்கப் போகுது! அந்த நேரத்துல இந்த மாதிரி...?

    "எனக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1