Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jodi Thevai
Jodi Thevai
Jodi Thevai
Ebook98 pages46 minutes

Jodi Thevai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465841
Jodi Thevai

Read more from Devibala

Related to Jodi Thevai

Related ebooks

Reviews for Jodi Thevai

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jodi Thevai - Devibala

    16

    1

    சாவித்ரி சேலையை மாற்றி முகத்திலுள்ள பவுடரை சரி செய்து கொண்டிருந்தாள்.

    அத்தே ரெடியா?

    வந்துட்டேன் பவித்ரா!

    சாவித்ரி வெளியே வந்ததும் சமையல்காரி ருக்மணி டிபன் டப்பாக்களுடன் தயாராக நின்றாள்.

    வாங்கி தன் கைப்பையில் சாவித்ரி வைத்துக் கொண்டாள்.

    ரமேஷ் ஹாலில் உட்கார்ந்து ஷூவுக்கு லேஸ் கட்டிக் கொண்டிருந்தான்.

    பவித்ரா! நீ டிபன் சாப்பிட்டியா?

    ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட் மட்டும் சாப்பிட்டேன். வாங்க டயமாச்சு!

    உனக்கு ஆபீஸ் கார் வரலியா ரமேஷ்?

    வந்துடும்மா!

    சாவித்ரி திரும்பிப் பார்த்தாள். அவள் கணவர் வாசுதேவன் பூஜையறையில் கண் மூடி உட்கார்ந்திருந்தார்.

    வர்றேங்க!

    ஒரு குரலை மட்டும் கொடுத்துவிட்டு பவித்ராவுடன் வாசலில் இறங்கினாள்.

    பவித்ரா ஸ்கூட்டியை இயக்க, சாவித்ரி பின்னால் ஏறிக் கொண்டாள்.

    அது போக்குவரத்தில் கலந்தது!

    சாவித்ரி ஒரு வங்கியில் உத்யோகம் பார்ப்பவள்.

    இன்னும் ஆறு வருஷம் சர்வீஸ் இருக்கிறது! மூச்சுப் பிடித்து முழு சர்வீஸ் போட்ட பிறகுதான் வெளியே வரவேண்டும் என்ற வைராக்யம் கொண்டவள்!

    கணவர் வாசுதேவன் தனியாரில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் அதிகாரியாக இருந்தவர்.

    போன வருஷம்தான் வாலன்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டார்.

    மூன்று குழந்தைகள் -

    மூத்தவள் கல்பனா - கல்யாணமாகி ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை!

    அடுத்தது ரமேஷ் - இன்ஜினியரிங் முடித்தவன். தனியாரில் அதிகாரி - பெரிய சம்பளம். சமீபத்தில் கல்யாணமானவன்.

    கடைசியாக அவன் தங்கை ரூபா - அவளுக்கும் திருமணமாகி 2 வயதில் ஒரு பையன்!

    ரமேஷ் காதல் கல்யாணம். பவித்ராவும் உடன் வேலைபார்க்கும் என்ஜினியர். சகல புத்திசாலித் தனங்களும் நிறைந்த சாதுர்யமான பெண்.

    பவித்ரா வருவதற்கு முன்பு சாவித்ரி பஸ் பிடித்துத்தான் வேலைக்குப் போவாள்.

    பவித்ரா வந்த பிறகு மாறிவிட்டது!

    உங்க பேங்க் வழியாலதான் நான் போறேன். இறக்கிவிட்டுட்டுப் போயிர்றேன்!

    ரொம்ப தேங்க்ஸ்மா!

    வாசுதேவன் கட்டாய ஓய்வு பெறுவதில், சாவித்ரிக்கு இஷ்டமேயில்லை!

    எல்லாரும் வேலைக்குப் போயிடுவோம். நீங்க மட்டும் வீட்ல இருந்து என்ன செய்வீங்க?

    இதப்பாரு சாவித்ரி. எனக்கு BP இருக்கு! பழைய ஹெல்த் இல்லை! ஆபீஸ் வேலை அதிகம். டார்ச்சர் தாங்க முடியலை! ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் குடுத்தாச்சு! சொந்த வீட்ல இருக்கோம். ரமேஷ் வேலைக்குப் போறான். எதுக்காக இனிமே கஷ்டப்படணும். என்னால முடியாது! பூஜை, புஸ்தகம், டீ.வினு நான் ரிலாக்ஸ்டா வாழப்போறேன்! ஆளை விடு!

    ஆமாம்மா! அப்பாவுக்கு முடியலைனா, விட்ரேன்!

    எனக்கு மட்டும் முடியுதா ரமேஷ்? ஒடம்புல எத்தனை உபாதைகள் தெரியுமா?

    நீயும் வாங்குடி! வீட்ல எனக்கும் போரடிக்காம பேச்சுத்துணைக்கு ஆச்சு!

    அவசியமே இல்லை! நான் வேலையை விடமாட்டேன்!

    அவர் விட்டு விட்டார். மொத்தமாக வந்த பணத்தில் கொஞ்ச நஞ்சம் கடன்களை அடைத்துவிட்டு மீதியை சேமிப்பில் போட்டுவிட்டார்.

    அம்மாவால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை என்று வீட்டோடு இருந்து சகலமும் பார்த்துக் கொள்ளும்படி ஒரு ஆளைத் தேடினான் ரமேஷ்!

    38 வயது ருக்மணி கிடைத்தாள்.

    பத்து வருஷங்களுக்கு முன்பே கணவனை இழந்தவள். குழந்தைகள் இல்லை!

    பொறுப்பாக குடும்பத்தை கவனிப்பாள் என்று தோன்ற, சாவித்ரிதான் ஏற்பாடு செய்தாள்.

    அற்புதமான சமையல் - நல்ல வேலைத்திறன். உழைக்க அஞ்சாத பெண்மணி!

    ருக்மணி பொறுப்பேற்று

    ஒருவருடம் ஆகிவிட்டது.

    இதோ பவித்ராவும் வந்துவிட்டாள்.

    எல்லாரும் படித்தவர்கள்.

    ஒரு பல்கலைக் கழகம் போல குடும்பம் சீராக ஓடுகிறது!

    சாவித்ரி எதிலும் கண்டிப்பு! மனதில் பட்டதைப் பேசிவிடுவாள்.

    கணவனோ, மகனோ யாராக இருந்தாலும் கவலைப்படமாட்டாள்.

    ரமேஷுக்குக் கல்யாணம் நிச்சயமானதும், அவனை உட்காரவைத்துப் பேசிவிட்டாள்.

    இதப்பாரு ராஜா! இதைப்பிடி!

    என்னம்மா?

    நம்ம குடும்ப பட்ஜெட். எதையும் விடாம எல்லாத்தையும் எழுதியிருக்கேன். இது செலவு!

    எங்கிட்ட ஏன் இதைக் காட்டற?

    காட்டணும்! உனக்குக் கல்யாணம் ஆகப்போகுது! இந்தச் செலவுக் கணக்கை நாலா பிரிச்சுப்போம்! அப்பா பென்ஷன், என், உன் சம்பளம், பவித்ரா சம்பளம் - ஆளுக்கொரு பகுதினு குடுத்துடணும். மீதியை சேமிப்போ, செலவோ அவரவர் இஷ்டப்படி செஞ்சுடலாம்!

    ரமேஷுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது!

    பவித்ராவை கல்யாணம் முடித்து அழைத்து வந்த மூன்றாம் நாள் சொன்னான்.

    நல்ல ஐடியா. செஞ்சிடலாமே!

    சாவித்ரிக்கு சந்தோஷமாகி விட்டது! சகோதரிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

    மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குக் குடும்பம் இருந்தது!

    சாவித்ரி, பவித்ராவை அழைத்துக் கேட்டே விட்டாள்.

    பவி! உனக்குத் தனியாக் குடித்தனம் பண்ணணும்னு ஆசை எதுவும் இருக்கா? இருந்தா தப்பில்லை! அதையும் நிறைவேத்திடலாம்!

    மாமியாரை அதிசயமாகப் பார்த்தாள் பவி!

    என்ன பாக்கற?

    இல்லை... இத்தனை வெளிப்படையா மனசுல பட்டதை கவலைப்படாம பேசறீங்களே!

    தப்பாம்மா?

    "நிச்சயமா

    Enjoying the preview?
    Page 1 of 1