Vaazhnthaal Unthan Madiyil
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Ponnaadai Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsPesum Porchithirame Rating: 5 out of 5 stars5/5Then Sinthum Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vaazhnthaal Unthan Madiyil
Related ebooks
Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Ponmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Itharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5Irandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Devathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsUllangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Mayanizhal Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Sila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Valaiyosai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsIrai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Vaasamillaa Malarithu Rating: 5 out of 5 stars5/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Rating: 5 out of 5 stars5/5Ennam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthathu Rating: 3 out of 5 stars3/5Vanathil Oru Maan Rating: 4 out of 5 stars4/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vaazhnthaal Unthan Madiyil
2 ratings0 reviews
Book preview
Vaazhnthaal Unthan Madiyil - R.Sumathi
20
1
"மதனவள்ளி... அடியேய் மதனவள்ளி..."
அழகரசியின் குரல் கொல்லைப்புறத்திலிருந்து வந்தபோது மதனவள்ளி கையளவு கண்ணாடியை முகத்திற்கெதிரே பிடித்துக் கொண்டு ஈர்க்குச்சியால் மையைத் தொட்டு விழிகளில் தீட்டிக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் குரலுக்கு கையிலிருந்த குச்சி நிலைதடுமாறி லேசாக கண்ணில் பட சட்டென்று கண்கள் கலங்கி சிவந்துவிட்டது. சட்டென்று குச்சியை கீழே போட்டுத் திரும்பினாள்.
மதனவள்ளி…
அம்மாவின் குரல் இந்த முறை அதிகாரத்துடன் சேர்ந்து கோபத்தையும் சுமந்து வந்தது.
அவசர அவசரமாக அந்தக் கண்ணாடியில் தன் முகத்தை இப்படியும் அப்படியுமாக அழகுபார்த்தவள், அதை ஆணியில் மாட்டிவிட்டு ஓடி வந்தாள்.
கூடத்தைக் கடந்து கொல்லைப்பக்கம் வந்தவள் அம்மாவைப் பார்த்தாள்.
அழகரசி கட்டியிருந்த ஆடுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மா... ஏன் கூப்பிட்ட?
அழகரசி நிமிர்ந்தாள்.
அவளுடைய விழிகள் மகளைப் பார்த்துத் திகைத்தன.
புத்தம்புது பாவாடை தாவணியில் நின்றிருந்த மதனவள்ளியைப் பார்த்து துணுக்குற்றாள்.
அவளுடைய முகத்தில் அதிகப்படியான அலங்காரம் இருப்பதாகப்பட்டது. காதோரம் முடிகளை இழுத்துப் பறக்க விட்டிருந்தாள்.
ஏண்டி... நீ ஆடு மேய்க்கப் போறியா? இல்லே... ஏதாவது திருவிழாவுக்குப் போறியா? பொட்டியில இருக்கிற புதுசையெல்லாம் ஏண்டி எடுத்து மாட்டிக்கிட்டு நிக்கறே?
அது வந்து... அம்மா நம்ம கஸ்தூரியில்லே... அவ இன்னைக்கு மாரியம்மன் கோவில்ல பால் ஊத்தப் போறாளாம். என்னையும் கூப்பிட்டா. அதான்...
இந்தாயிருக்கிற மாரியம்மன் கோவிலுக்கு எதுக்கடி புதுசு?
அவளும் புதுசா கட்டிக்கிட்டு வர்றா...
ம்... என்ன திடீர்னு பால் ஊத்தப் போறா?
வர்ற வரனெல்லாம் தட்டிக்கிட்டுப் போகுதாம். நாகதோஷம் இருக்காம். தினமும் புத்துக்குப் பாலூத்தச் சொல்லியிருக்காராம் ஜோசியரு. அதான்...
அப்படியா? அதுக்காக அவ தினமும் புதுசு கட்டிக்கிட்டு போனா நீயும் புதுசு கட்டணுமா? நீயும் அவகூட சேர்ந்து பாலூத்திட்டு வேண்டிக்க, உனக்கும் ஒரு நல்ல புருஷன் வரணும்ன்னு.
மதனவள்ளியின் முகத்தில் வெட்கம் என்ற சொல்லுக்கு சிவப்பு நிறம் இருக்கிறது என்பது தெரிந்தது.
போம்மா!
அம்மா அருகே வந்தாள். ஆடுகள் ‘மே’ என கத்திக் கொண்டே அவள் பின்னால் ஓடிவந்தன.
என்னடி வெட்கமா? பொண்ணாப் பொறந்தா ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டித்தானேடி ஆகணும்.
அதுக்கென்ன இப்ப? அவளுக்கு தோஷம். பாலூத்தறா. எனக்கென்ன தோஷமா? தவிர இதெல்லாம் பொய். நாகதோஷமாவது பல்லி தோஷமாவது?
பல்லுலயே போடுவேன். போய் வேலையைப் பாரு. ஆடெல்லாம் போகுது பாரு, போ... போ...
காலில் இருந்த கொலுசுகள் ஒலிக்க கொல்லைப்புற படிகளில் குதித்து குதித்து இறங்கினாள் மதனவள்ளி.
அவளும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் ஆடுகளில் பின்னே ஓடினாள்.
வாசல்பக்கம் வந்தபோது அழகரசி கையில் பால் சொம்புடன் நின்றாள்.
இந்தா... கஸ்தூரி வீட்ல பாலைக் கொடுத்துடு. இருட்டறதுக்குள்ள வந்திடு.
சரிம்மா...
வலதுகையில் பால் சொம்பும் இடது கையில் ஆடுகளை விரட்டக் குச்சியும் சுமந்து சென்றாள் மதனவள்ளி.
அவளுக்கு வழிகாட்டுவதைப் போல் ஆடுகள் ‘மே...மே’ என மூக்கால் கத்துவதைப் போல் கத்திக்கொண்டு முன்னே சென்றன. பின் தொடர்ந்தாள் மதனவள்ளி..
இரண்டு தெருக்களை ஆடுகள் தன்னிச்சையாகக் கடந்தன.
சொல்லிக் கொடுத்ததைப் போல் கஸ்தூரியின் வீட்டு வாசலில் நின்றன.
மதனவள்ளிக்கு அந்த வீட்டைப் பார்வையில் வாங்கியதும் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஓடியது. கைகள் வாசல் கேட்டைத் திறக்க விழிகள் வீட்டின் மாடியிலிருந்த அந்த அறையை நோக்கிச் சென்றன.
சன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் அவளுடைய காதல் தேவனைக் காணவில்லை. மேசைமீது விரித்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் வெள்ளையாய் காற்று படபடப்பது மட்டும் தெரிந்தது.
நிமிடத்தில் ஏமாற்றம் கவ்வியது.
புரிந்துகொண்டதை போல் ஆடுகள் ‘மே...மே’ என சிரித்து நகையாடின.
திரும்பி முறைத்துவிட்டு உள்ளே வரவும் சத்தம் கேட்டு உள்ளிருந்து கஸ்தூரி வரவும் சரியாக இருந்தது.
கஸ்தூரி அழகாக இருந்தாள். தேர்ந்தெடுத்த நடிகையைப் போல் இருந்தாள். பாவாடை தாவணியில் ஒற்றைப் பின்னலை கருநாகம்போல் முன்னே போட்டிருந்தாள். தலைகுளித்து உச்சி எடுத்துக் பின்னி கூந்தலை விரித்துக் காய விட்டிருந்தாள்.
சந்தன சோப்பிலேயே செதுக்கிய சிலையைப்போல் மனம் கமழ வந்து நின்றாள்.
அவளைப் பார்த்ததுமே மதனவள்ளிக்குள் சற்றே பொறாமை வேர்விட்டது.
யப்பா... என்ன அழகாக இருக்கிறாள்!
வா... மதனவள்ளி. போகலாமா?
என்றாள். அவளுடைய கையில் பூஜைக்கு கூடையிருந்தது.
ம்... இந்தா பால்
என சொம்பை நீட்டினாள்.
அதை வாங்கிக்கொண்ட கஸ்தூரியுடன் சேர்ந்து மதனவள்ளி வெளியே வந்தாலும் அவளுடைய விழிகள் அந்த வீட்டை நொடிப்பொழுதில் ஆராய்ந்து அவனைத் தேடின. இல்லை.
மனம் மறுபடியும் ஏமாற்றம் கொண்டது. அந்த உணர்வு மெல்லியதொரு ஊசியை உள்ளுக்குள் இறங்கி கொண்டிருந்தது. அவளுடைய அலங்காரம், காலையிலிருந்து உண்டான துடிப்பு இதெல்லாம் அவனுடைய ஒரு நொடி பார்வைக்காகத்தானே? இன்றைக்கு அந்தப் பார்வை கிடைக்கவில்லை.
இருவரும் வெளியே வந்ததும் கஸ்தூரியைக் கண்ட ஆடுகள் குதித்துக் குதித்து கத்தி தங்களுடைய குஷியை அவளுக்குத் தெரிவித்தன.
ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு அவள் மீது தாவின. ஆசையுடன் அவற்றை வருடிக் கொடுத்த கஸ்தூரி ஒரு ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.
மற்ற ஆடுகள் பெரிய மனிதத் தோரணையில் முன்னேறிக் கொண்டிருந்தன.
இருவரும் பேசிக்கொண்டே வந்தனர்.
வழக்கமாக உங்கண்ணன் புத்தகமே கதின்னு கிடப்பார் எங்கே ஆளைக்காணோம்?
என்றாள் மதனவள்ளி.
அதுக்கென்ன? கம்ப்யூட்டர் க்ளாஸ், டைப் க்ளாஸ், ஹிந்தி க்ளாஸுன்னு எங்காவது போயிருக்கும்
என அலுத்துக் கொண்டாள் கஸ்தூரி.
‘ச்சை... நான் வர்ற நேரத்தில்தான் அவன் போகவேண்டுமா? இன்றைக்கு அவனைப் பார்க்க முடியாதா?’ என அவளுடைய மனதில் ஏக்கம் எழுந்தது.
அதை உணராமல், பேசிக்கொண்டே வந்தாள் கஸ்தூரி.
2
மதனவள்ளியின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. கணேஷை இன்றைக்கு எப்படியாவது பார்த்தே தீரவேண்டும் போல் இருந்தது. பார்க்காவிட்டால் இரவு நிச்சயம் உறக்கம் வராது.
தன் மனத் தவிப்பையெல்லாம் கஸ்தூரியிடம் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள். நடக்க முடியாமல் நின்ற ஆட்டுக்குட்டியை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள். மனதின் ஏக்கம் அப்பொழுதும் அவளை விட்டு செல்லவில்லை. கையிலிருக்கும் ஆட்டுக் குட்டி கணேஷாக மாறக் கூடாதா என்று விசித்திரமானதொரு எண்ணம் உண்டானது.
ப்ச்! இதெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூடத் பிடிக்கலை
திடீரென கஸ்தூரி இப்படிச் சொன்னதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
இதெல்லாம்?
என்றாள்.
இந்த நாக தோஷம் பல்லி தோஷமெல்லாம்தான்.
உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா?
சுத்தமா இல்லை. இதெல்லாம் மூடநம்பிக்கை.