Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumbi Paar
Thirumbi Paar
Thirumbi Paar
Ebook94 pages55 minutes

Thirumbi Paar

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465797
Thirumbi Paar

Read more from Devibala

Related to Thirumbi Paar

Related ebooks

Reviews for Thirumbi Paar

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumbi Paar - Devibala

    17

    1

    "என்னங்க! இது சரிப்படுமா?"

    நீ என்ன சொல்ற மீனாட்சி?

    அந்தப் பொண்ணு ஜீவிதா ரொம்ப மாடர்னா இருக்கா! நாலு ஆங்கில வார்த்தைகளுக்கு மத்தில ஒரே ஒரு தமிழ் வருது! ஏகப்பட்ட நண்பர்கள் கூட்டம்! பொண்ணு பாக்கப்போன எடத்துல நம்மகிட்ட அதிகமாப் பேசலை! இவ மருமகளா வந்தா, நமக்கு சரிப்படுமா?

    அப்பா சிரித்தார்.

    ஏன் சிரிக்கறீங்க?

    உன் பையன் அவளை விரும்பியாச்சு! இது காதல் கல்யாணம். நாம தடுத்தாலும் நடக்கும். நாமே சம்மதிச்சு நடத்திவச்சிட்டா, நமக்கு கௌரவம்!

    அம்மா பேசவில்லை!

    இதப்பாரு! காலம் மாறுது! நீயும் உன்னை மாத்திக்கணும். மருமகள்னு வந்துட்டா, காலைல அஞ்சு மணிக்கு எழுந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வானு எதிர்பாக்காதே! நீ எங்கம்மாவுக்கு செஞ்சே! உனக்கது நடக்கும்னு நம்பாதே!

    இல்லீங்க! அவளுக்கு நான் மாமியாரா இருக்கணும்னு ஆசைப் படலை! அம்மாவா இருக்கேன்!

    அவ உனக்கு மகளா இருக்க ஒப்புக்கணுமே!

    ராமு நமக்கு ஒரே மகன்!

    இருந்தா என்ன? ஜீவிதா ஒட்டுதலா இருந்தா, நாம ராமுகூட இருப்போம். இல்லைனா போயிட்டே இருப்போம்!

    எங்கே போவோம்? நமக்கு வயசாகுது! கைல பணமும் இல்லை! உங்களுக்கு வந்த மொத்தப் பணத்துல பொண்ணுங்க கல்யாணத்தை நடத்தியாச்சு! பென்ஷனும் இல்லை! உங்க சொத்துனு சொல்ல என்ன இருக்கு? ஆரம்ப நாள்ல கட்டின இந்த வீடு ஒண்ணுதான்! இதைப் பாத்துக்கிட்டு ஒக்காந்தா பசி தீருமா?

    மீனாட்சி! நீ ரொம்பத்தாண்டி யோசிக்கற!

    இல்லீங்க! இது யதார்த்தம்!

    இல்லை! காம்ப்ளெக்ஸ்! இன்னி வரைக்கும் வாங்கற சம்பளத்தை ராமு உங்கிட்டக் கொண்டு வந்து தர்றான். நீ குடும்பத்தை நடத்தறே! ஜீவிதா வந்தா ஆட்சி கைமாறும்னு நீ பயப்படறே!

    அதெல்லாம் இல்லீங்க!

    அதான் உன் குரல் உனக்கே கேக்கலை மீனாட்சி! எல்லா காலத்துலேயும் நம்ம ஆட்சியே நடக்கணும்னு எதிர்பாக்கக்கூடாது! அது மாறும்! மாற்றத்தை ஜீரணிக்க மனசைப் பக்குவப்படுத்திக்கணும் மீனாட்சி!

    அம்மா பேசவில்லை!

    வரட்டும்! வாழத் தொடங்கட்டும்! இப்பவே ஆளை எடைபோடாதே!

    ராமுகிட்ட என் மனசுல உள்ளதைச் சொல்லட்டுமா?

    வேண்டாம்னு தோணுது! அவளை அவனுக்குப் புடிச்சிருக்கு. நீ இப்பவே குறை கண்டா, உன் மேல சின்னதா அவனுக்கொரு விரிசல் விழும். தேவையா? பாத்துக்கோ!

    மீனாட்சி அதற்குமேல் பேசவில்லை!

    ராமு தனியாரில் பர்ச்சேஸ் அதிகாரியாக இருக்கிறான். ஜீவிதாவை ரெண்டு வருஷங்களாகக் காதலிக்கிறான். ஜீவிதாவின் அக்காவுக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது! தடை விலகிவிட்டது. வீட்டில் இருவரும் விவரத்தைச் சொல்லிவிட்டார்கள்!

    ஜீவிதாவும் நடுத்தர வர்க்கம்தான்.

    அப்பாவுக்கு ரயில்வேயில் உத்தியோகம். அம்மா ஸ்கூல் டீச்சர். ஒரு அக்கா, ஒரு தங்கை! தங்கை படிக்கிறாள். பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்றில் ஜீவிதா பணிபுரிகிறாள். வேலை விஷயமான சந்திப்பில் தொடங்கி ராமுவுடன் காதல் மலர்ந்துவிட்டது!

    விவரத்தை வீட்டில் சொல்ல, பெண் பார்க்கும் படலம் முடிந்து, நிச்சயதார்த்தத் தேதி குறிக்கப்பட்டது!

    அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்தது! கல்யாணம் போல ஜீவிதாவின் அப்பா நடத்திவிட்டார். அடுத்த மாதம்

    முதல் வாரம் கல்யாணம். தேதி குறிக்கப்பட்டுவிட்டது!

    ராமுவுக்கு இரண்டு சகோதரிகள். இருவருக்கும் கல்யாணம் முடிந்து விட்டது!

    அம்மா அவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

    அம்மா! மாடர்னா இருந்தா, மனசு மோசமா இருக்கணும்னு அவசிய மில்லை!

    நீ இப்பவே குறைகண்டா, போகப் போக நிம்மதி இருக்காது!

    மீனாட்சி பேசவில்லை!

    ஜீவிதா தினமும் இரவு 10 மணிக்கு ராமுவுக்கு போன் செய்வாள். வெகுநேரம் பேசுவாள்.

    மீனாட்சி ரிசீவரை எடுத்துவிட்டால் கூட, ஓரிரு வார்த்தைகள் ஒப்புக்கு.

    ஜீவிதா ஓரிரு தடவை அவனுடன் இங்கு வந்துவிட்டு, ஐந்தே நிமிஷங்களில் புறப்பட்டுப் போனதுண்டு.

    ஆனால் ராமு அவள் வீட்டுக்குப் போய் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வருவான்.

    இதெல்லாம் மீனாட்சிக்குப் பிடிக்கவில்லை!

    கல்யாணத்துக்கு முன்னால அடிக்கடி அங்கே போனா, மரியாதை கெட்டுப் போகும்!

    நீ பேசாம இரேன் மீனாட்சி!

    இல்லீங்க! அவளுக்கு ஏத்தம் கண்டுடும். எடுத்துச் சொல்லவும் என்னை நீங்க விடறதில்லை!

    அப்பாவுக்குக் கவலை தொடங்கிவிட்டது!

    ‘மீனாட்சிக்கு என்ன காரணமோ தெரியலை... ஜீவிதாவைப் பிடிக்க வில்லை! கழுத்தில் தாலி ஏறும் முன்பே இந்த கதினா, ஜீவிதா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்புறம் என்னாகும்?’

    ‘நான் ராமுகிட்டப் பேசணுமா?’

    ‘எதைனு பேச முடியும்? அந்தப் பொண்ணு இங்கே எப்படி வாழப் போறானு தெரியாம, ஏடாகூடமா பேசிட்டு, மூக்கை உடைச்சுக்க முடியுமா?’

    ‘கூடாது! வர்றது வரட்டும்!’

    ராமுவுக்கு அவர்கள் கோட், சூட், பட்டு வேட்டி, மோதிரம், செயின், பிரேஸ்லெட்

    Enjoying the preview?
    Page 1 of 1