Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaalelo
Thaalelo
Thaalelo
Ebook104 pages52 minutes

Thaalelo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465780
Thaalelo

Read more from Devibala

Related to Thaalelo

Related ebooks

Reviews for Thaalelo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaalelo - Devibala

    18

    1

    "நாளைக்கு பர்மிஷன் போட்டுட்டு வந்துடுங்க. வேலை இருக்கு."

    பவித்ரா உத்தரவிடும் குரலில் சொல்ல, வசந்த் திரும்பிப் பார்த்தான்.

    என்ன வேலை?

    நாளைக்கு அட்சய திரிதியை. நகை வாங்கணும். வருஷா வருஷம் வாங்கறதுதானே? புதுசா கேக்கறீங்க?

    பணம் ஏது?

    நான் ஒரு பர்சனல் லோன் ஆபீஸ்ல போட்டு பணத்தைத் தயார் பண்ணி வச்சிருக்கேன். வந்துடுங்க. மூணு வயசுல பெண் குழந்தை இருக்கு. இப்பலேருந்தே சேர்க்கத் தொடங்கினாத்தான், அவ கல்யாண வயசு வரும் போது கஷ்டமில்லாம இருக்கும்.

    வசந்த் பேசவில்லை!

    சரி! டிபனை எடுத்து வை!

    வசந்த் வெளியே வந்து உட்கார்ந்தான். பவித்ராவும் உடைகளை மாற்றிக் கொண்டு வர,

    அம்மா சூடான இட்லிகளைக் கொண்டு வந்து வைத்தாள்.

    சட்னியை எடுத்து வந்தாள்.

    எதுக்காக சட்னி அரைச்சீங்க?

    தொட்டுக்க ஏதாவது வேண்டாமா பவித்ரா?

    தேங்காய் வேண்டாம்னு டாக்டர்கள் சொல்றாங்க. சாம்பார் செஞ்சு வச்சிடுங்க. நாளைக்கு கொலஸ்ட்ரால் வந்துட்டா யாருக்குக் கஷ்டம்?

    ரேவதி போயிட்டாளாம்மா?

    அவ புறப்பட்டு அரை மணி நேரமாச்சுப்பா!

    பவித்ரா கை கழுவப் போனாள்.

    வசந்த்! பக்கத்து வீட்டம்மா, ஒரு நல்ல ஜாதகம் தந்தாங்க! ஜோசியர்கிட்ட காட்டினேன். நம்ம ரேவதிக்கு அது நல்லா பொருந்தியிருக்கு. பையன் படிச்சு, நல்ல உத்யோகத்துல இருக்கான். பாக்கலாமா தம்பி?

    என்னங்க! நேரமாச்சு! வண்டியை எடுக்கறீங்களா?

    வந்துட்டேன் பவித்ரா!

    தம்பி! ரேவதிக்கு இருபத்தி மூணு வயசாகுது. காலம் கடத்தாம அவளை ஒரு இடத்துல கட்டிக் குடுத்துட்டா நல்லதில்லையா?

    வர்றீங்களா?

    ம்! வந்துட்டேன் பவித்ரா. அம்மா நேரமாச்சு! சாயங்காலம் வந்து பேசிக்கலாம்.

    வசந்த் வேகமாக வெளியேற, சில நொடிகளில் பைக் புறப்பட்டுப் போனது!

    அம்மா பெருமூச்சுடன் உட்கார்ந்தாள்.

    வசந்தின் அப்பா காலமாகி பத்து வருடங்கள் ஆகி விட்டன. அந்த நேரத்தில் வசந்த் தன் இறுதிக்கட்ட படிப்பில் இருந்தான்.

    ஒரு வருஷ காலம் ஊர் முழுக்கக் கடனை வாங்கி, அம்மா படாதபாடு பட்டாள்.

    வசந்துக்கு வேலை கிடைத்து விட்டது. தனியாரில் அதிகாரி. எடுத்த எடுப்பில் நல்ல சம்பளம்.

    அவனை விட ஏழு வயது இளையவள் ரேவதி. பள்ளி படிப்பில் இருந்தாள்.

    வசந்த் வேலைக்குப் போய் முதல் மூன்று வருடங்களில் கடன் மொத்தமும் அடைத்து குடும்பம் ஒரு சீரான நிலைக்கு வந்து விட்டது. கொஞ்சம் வசதியான வாழ்க்கையே அமைந்து விட்டது.

    ரேவதி பன்னிரண்டாவது வகுப்பில் இருந்தாள்.

    வசந்துக்கு ஒரு கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என அம்மா துடித்தாள்.

    அவ காலேஜ் படிப்பு முடியட்டும்மா. அவ செட்டில் ஆன பிறகு நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்.

    வேண்டாம்பா! அதுக்குள்ளே உனக்கு முப்பது வயசாயிடும். எதுவுமே காலாகாலத்துல நடக்கணும்.

    அவனது பேச்சை மீறி, அன்று எடுத்த தப்பான முடிவுக்காக அம்மா வருந்தாத நாளில்லை.

    வசந்துக்குக் கல்யாணம் கூடி விட்டது.

    பவித்ரா வாழ வந்து விட்டாள்.

    முதல் ஒரு வாரத்துக்கு பவித்ரா அடக்கமாகத்தான் இருந்தாள். அந்த ஒரு வாரத்தில் திகட்டத் திகட்ட ‘பெண் சுகத்தை’ வசந்துக்குக் காட்டி விட்டாள்.

    பல சாம்ராஜ்யங்கள் சரிந்ததே இதில்தானே!

    வசந்த் மட்டும் விதிவிலக்கா என்ன?

    அவனும் கவிழ்ந்து விட்டான். பவித்ரா புத்திசாலி! புருஷனை எப்படி வளைத்து தன் காலடியில் மண்டி போட வைக்க வேண்டும் என்பதை அழகாகத் தெரிந்து வைத்திருந்தாள்.

    தேனிலவு முடிந்து திரும்பினார்கள்.

    வசந்த் தொலைந்து போயிருந்தான்.

    பவித்ரா அதிகாரத்தைக் கையில் எடுத்து விட்டாள்.

    அவளுக்கு பெற்றவர்களும், ஒரு அக்காவும் நன்றாகக் கற்றுக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.

    இங்கே அம்மா அப்பாவி!

    ரேவதி எதிலும் தலையிட மாட்டாள்.

    அவர்களை ஒரே வாரத்தில் கணித்துவிட்ட பவித்ரா, மிக சுலபமாக ஆட்சியைப் பிடித்து விட்டாள்.

    முதலில் இனிக்கும் பேச்சுத்தான்.

    இவர்களை உட்கார வைத்து செய்வதைப் போல ஒரு பாவ்லா காட்டி, முழுமையாக விழுங்கி விட்டாள்.

    அதை இவர்களே உணரவில்லை!

    லீவு முடிந்து அலுவலகம் புறப்பட்ட அன்றுதான் பவித்ராவின் ஆளுமையும் சர்வாதிகாரமும் வெளிப்பட்டது.

    அம்மா மிரண்டு போனாள்.

    ரேவதிக்கும் அண்ணியின் போக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.

    2

    ரேவதி பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருந்தாள்.

    அவளை என்ஜினீயரிங் படிக்க வைக்க அம்மாவுக்கு ஆசை. அதை வெளிப்படுத்தினாள்.

    சான்ஸே இல்லை! எடுத்த எடுப்புல ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் கட்ட வேண்டியிருக்கும். பணத்துக்கு எங்கே போறது?

    கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டா, எல்லாருக்கும் நல்லதுதானே பவித்ரா?

    யாருக்கு நல்லது? கட்டிக் குடுத்த பொண்ணுகிட்ட சம்பளத்தைக் கேட்டு வாங்க முடியுமா? நாம செலவழிச்சிட்டு, யாரோ அனுபவிக்கணுமா?

    அதுக்காக புள்ளைங்களை விட்ர முடியுமா?

    "நீங்க பெத்த புள்ளை ரேவதி! நீங்க சேர்த்து வச்சிருக்கணும். பொண்ணைப் பெத்துட்டா ஆச்சா? எங்கப்பாவுக்கு நாங்க ரெண்டு பேர். படிக்க வச்சு, கட்டிக்குடுத்து எல்லா செலவையும் அவர்தான் செஞ்சார்.

    Enjoying the preview?
    Page 1 of 1