Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kulmohar Marathin Kizhe
Oru Kulmohar Marathin Kizhe
Oru Kulmohar Marathin Kizhe
Ebook104 pages35 minutes

Oru Kulmohar Marathin Kizhe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465773
Oru Kulmohar Marathin Kizhe

Read more from Devibala

Related to Oru Kulmohar Marathin Kizhe

Related ebooks

Reviews for Oru Kulmohar Marathin Kizhe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kulmohar Marathin Kizhe - Devibala

    17

    1

    "வலது காலை எடுத்து வச்சு வாம்மா!"

    குரலைத் தொடர்ந்து, தன் மருதாணி அணிந்த கொலுசுக் கால்களைச் ‘சல்’லென்று உள்ளே பதித்தாள் மோகனா.

    என்ன பங்கஜம் பார்த்துட்டு நிக்கற? மருமக வந்ததும் தலைகால் தெரியலியா? உட்கார வச்சு பால், பழம் குடு!

    வயதான குரல் கட்டளையிட -

    ஐம்பத்தாறு வயது பங்கஜம் தன் பெரிய உடம்பைத் தூக்க மாட்டாமல் தூக்கியபடி உள்ளே ஓடினாள்.

    பெரிய ஹாலின் மத்தியில், அந்தக்கால பாணியில் தொங்கும் தேக்கு மர ஊஞ்சலில் முதலில் போய் உட்கார்ந்தான் ரங்கன்.

    நீயும் உட்காரு மோகனா!

    ரங்கனின் தங்கை சுமதி ஓடி வந்து அண்ணியின் மாலையைச் சரி செய்தாள்.

    ஆரத்தி எடுத்து பால் - பழம் கொடுத்து, உறவுக் கூட்டம் மெள்ள மெள்ள விலக -

    ஏறத்தாழ சொந்த மனிதர்களை மட்டும் வைத்துக் கொண்டது அந்த வீடு.

    சீனிவாசன் உள்ளே நுழைந்தார்.

    சீனிவாசன் - பங்கஜம் தம்பதியருக்கு ரங்கன் ஒரே மகன். அடுத்த வருடம் ஓய்வு பெற இருக்கும் சீனிவாசனுக்கு குடும்ப பாரம் காரணமாக முப்பத்தி மூன்று வயதில் திருமணம். அதனால் ரங்கனுக்கு இப்போது இருபத்தி நாலு.

    அவனுக்குப் பிறகு ஆறு வருட இடைவெளியில் பிறந்தவள் சுமதி.

    ரங்கன் தனியார் நிறுவனமொன்றில் உதவி மானேஜராகப் பணி புரிகிறான். சுமதி கல்லூரியில் படிக்கிறாள்.

    கூட்டம் ஓஞ்சுதா பங்கஜம்? ரயில் பிரயாணம் வேற... குழந்தைகளை உள்ளே அனுப்பி ஓய்வெடுக்க விடு!

    என்ன நீங்க? இன்னும் சாந்தி முகூர்த்தம் முடியலை!

    ஓ... மறந்துட்டேன்!

    ரங்கா, நீ போய் ரெஸ்ட் எடு. நீ வா மோகனா என்னோட. இந்த வீட்டுப் பழக்கங்களையெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?

    மோகனா மௌனமாக மாமியாரைப் பின்தொடர்ந்தாள். புது அண்ணியை, ஆர்வத்துடன் அணுகினாள் சுமதி.

    ‘தபாரு மோகனா! சமையல், வீட்டு நிர்வாகம் இதெல்லாம் தன்னால வரும். நான் இருக்கும்போது உன் தலைல எந்தப் பாரமும் நீ சுமக்கவும் வேண்டாம்!"

    மோகனா தலையை மட்டும் அசைத்தாள்.

    ரங்கன் எங்களுக்கு ஒரே பிள்ளை. வாழ்க்கைல எனக்கும், உங்க மாமாவுக்கும் ஒரே பிடிப்பு அவன்தான். ஒற்றுமைதான் இங்கே மூலதனம். உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

    பதில் சொல்லாமல் மெலிதாகச் சிரித்தாள்.

    அது மட்டுமில்லைமா, இத்தனை பெரிய உத்யோகத்துல இருந்தாலும், நாலு பேர்கிட்ட கலகலப்பாப் பழகினாலும், இயல்புல ரங்கன் ரொம்பவும் மென்மையான குணம் கொண்டவன். அதிர்ந்து பேச மாட்டான். கோபம்னா என்னன்னே அவனுக்குத் தெரியாது. குசும்பு புரியாது. சண்டையை விரும்ப மாட்டான். மொத்தத்துல உன் புருஷன் குழந்தையாட்டமா. இனி இவனை உருவாக்கறது உன் பொறுப்பு!

    சரி அத்தே. ஒற்றை வார்த்தை பதில்.

    சுமதி இருக்காளா மாமீ? கேட்டுக் கொண்டே சுவாதீனமாக உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண்.

    அடடா, வா பூர்ணிமா!

    மோகனாவை நெருங்கி விட்டாள் பூர்ணிமா.

    அடடா... அண்ணி! என்னை நானே அறிமுகப்படுத்திக்கறேன். நான் பக்கத்து வீட்டுப் பூர்ணிமா. வயசு இருபது. ரங்கன் ஆபீஸ்ல ஸ்டெனோவா இருக்கேன். படபடன்னு பேசுவேன். இன்னும் கல்யாணம் ஆகலை. எப்ப ஆகும்னு தெரியலை.

    அப்பப்பா... லொட லொடன்னு உண்டியலை உருட்டிவிட்ட மாதிரி. பயந்துறப் போறா மோகனா!

    எங்கே ரங்கன்?

    உள்ளே ரெஸ்ட் எடுக்குது அண்ணன்!

    அவருக்கென்ன ரெஸ்ட்? நான் விசாரிக்கணுமே அவரை! வீட்ல பேரைச் சொல்லித்தான் கூப்பிடுவேன்... ஆபீஸ்ல மட்டும்தான் சார். உங்களை எப்படி கூப்பிடட்டும்? அண்ணினு கூப்பிட்டா அந்நியமாத் தோணுது!

    அக்கானு கூப்பிடு பூர்ணிமா! அம்மா.

    என்ன வயசு உங்களுக்கு?

    இருபது!

    அடடா! நம்ம ஜாதிதான்! பேரைச் சொல்லிக் கூப்பிட்டா தப்பில்லை. என்ன மோகனா? எங்கே நம்மாள்?

    தடதடவென நடந்தாள்.

    ரொம்ப வெகுளியான பொண்ணு. எல்லாருக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். பாரேன்! அவன் ரூமுக்குள்ள போயிருவா. என்ன பேசுவாளோ தெரியாது. அவனை ஒரு வழி செஞ்சிருவா!

    மோகனா ஒன்றும் பேசவில்லை.

    ஏம்மா, அண்ணி பேச மாட்டாங்களா? சுமதி.

    நாமெல்லாம் புதுசு. சின்னப் பொண்ணு வேற. மிரட்சி இருக்கத்தானே செய்யும். மோகனா, நீ அப்படியே கொஞ்ச நேரம் படுத்துக்கோ!

    மோகனா ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள்.

    அவரவர் சொந்த வேலையாக விலக -

    கதவு திறந்து பூர்ணிமா வெளிப்பட்டாள். இவளை நோக்கி வந்தாள்.

    என்ன மோகனா தூக்கமா?

    இல்லை!

    ஷ்! இப்ப நல்லா தூங்கிரு! அப்புறம் நேரம் கிடக்காது. மேல்படி சங்கதிகள் இன்னிக்குத் தானாமே?

    மோகனா சட்டென நிமிர -

    என்ன பாக்கற? எனக்குக் கல்யாணம் ஆகலைனா? ஆனாத்தானா? ‘பலான’ புத்தகங்கள் ரெண்டு, மூணு படிச்சிருக்கேனே! ரங்கனுக்கு நல்லபடியா அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். உனக்கும் அவசியமா?

    .....!

    என்ன, அப்பலேருந்து நான் பேசிட்டே இருக்கேன். நீ பேசவே மாட்டியா? கேக்க மறந்துட்டேனே! என்னைப் பிடிச்சிருக்கா உனக்கு?

    .....

    இதுக்கும் பதில் இல்லையா?

    இல்லை!

    இல்லைனா?

    மெல்ல உதடுகளைப் பிரித்தாள் மோகனா.

    பிடிச்சிருக்கானு கேட்டியே! அதுக்குத்தான் இந்த பதில் - ‘இல்லை’.

    2

    "உட்காரு மோகனா" கட்டிலில் அவளைப் பிடித்து உட்கார்த்தினான் ரங்கன். அவனும் அருகில் உட்கார்ந்து அவள் தோளைத் தொட்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1