Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Thevathai
Kalyana Thevathai
Kalyana Thevathai
Ebook95 pages46 minutes

Kalyana Thevathai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465766
Kalyana Thevathai

Read more from Devibala

Related to Kalyana Thevathai

Related ebooks

Reviews for Kalyana Thevathai

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Thevathai - Devibala

    15

    1

    "நாள் தள்ளிப் போயிருக்கு குரு! அவ குளிச்சு அம்பது நாளாச்சு!"

    அம்மா பார்வதி சொல்ல, குருவின் முகம் குபீரென மலர்ந்தது!

    எங்கே பகவதி?

    கோயிலுக்குப் போயிருக்கா! இப்ப வந்துடுவா! டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம். அவங்க உறுதிப் படுத்திட்டா, நமக்கும் சந்தோஷம்!

    சரிம்மா! ரெண்டு பேரும் அரைநாள் லீவு போட்டுக்றோம்! நீயும் கூட வா

    மூணு வருஷமா எதுவும் வயித்துல வரலியேனு கவலைப்பட்டுட்டு இருந்தேன். கடவுள் கண் திறந்துட்டார்.

    பதினைந்து நிமிடங்களில் பகவதி வந்து விட்டாள்.

    டிபனை சாப்டுட்டு புறப்படலாம் பகவதி.

    சரி அத்தே

    குரு, பகவதி இருவருமே எம்.சி.ஏ. படித்தவர்கள். பெரிய நிறுவனத்தில் நல்ல உத்யோகம். கை நிறைய சம்பளம். சொந்த வீடு, கார் என சகல வசதிகளும் ஏற்கனவே உண்டு! குருவுக்கு அப்பா இல்லை! அம்மா மட்டும். ஒரு சகோதரி - அக்கா - உள்ளூரில் தன் குடும்பத்துடன். சின்னக் குடும்பம்.

    பிரச்னை எதுவும் இல்லாமல் இனிமையாக நடக்கும் குடும்பம்.

    இவர்கள் புறப்படும் நேரம், வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பகவதியின் அம்மா காமாட்சி பணத்தைக் கொடுத்து விட்டு பரபரவென உள்ளே நுழைந்தாள்.

    இன்னிக்கு உனக்கு அம்பது நாள்டா. இனிமே தாமதிக்கக் கூடாது! டாக்டர்கிட்ட உன்னைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்.

    பார்வதி - குருவின் முகம் படக்கென மாறியது.

    நாங்க மூணு பேரும் டாக்டர்கிட்டத்தான்மா கிளம்பறோம்.

    ரொம்ப நல்லதாப் போச்சு. நானும் வர்றேன்.

    பகவதி, உங்கம்மாவுக்கு நீ தகவல் சொன்னியா?

    இல்லீங்க அத்தே. தெனமும் ஃபோன் பண்ணும் போது அம்மா விசாரிப்பாங்க. இன்னிக்குக் காலைல கேட்டாங்க. குளிக்கலைனு சொன்னேன். வந்துட்டாங்க.

    பரவால்லை! நாலு பேருமா போகலாம். குரு சொல்ல,

    மாப்ளை! அம்மாவை எதுக்குக் கஷ்டப்படுத்தறீங்க? அவங்க வீட்ல இருக்கட்டும். நாம போகலாம்

    குரு ஏதோ பேச வாயெடுக்க,

    பார்வதி குறுக்கிட்டு, ஆமாம்டா! இதுக்கு இத்தனை பேர் எதுக்கு? அவங்க வந்தாச்சே. நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க.

    அத்தே! நீங்களும் வாங்க.

    வேண்டாம்மா. வீட்டு வேலைகளை நான் பாக்கறேன்.

    குரு காரை வெளியே உருவினான்.

    அதற்குள் மகளைத் தடவி, முத்தமிட்டு, நான் கும்பிடற தெய்வங்கள் என்னைக் கைவிடலை என ஆரம்பித்து காமாட்சி ஒரு நாடகமே நடத்திக் கொண்டிருந்தாள்.

    மகள் மேல் காமாட்சிக்கு உயிர். அதில இரண்டாவது கருத்து இருக்க முடியாது. காமாட்சிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பகவதி. அடுத்தது ஒரு மகன் - சம்பத். கணவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். காமாட்சி குடும்பத் தலைவி.

    மகளிடம் உள்ளது வெறி பிடித்த பாசம்.

    உள்ளூரில் இருப்பதால், வீட்டுக்கோ, பகவதியின் ஆபீசுக்கோ வந்து ஒரு முறையாவது பார்த்து விட்டுப் போய் விடுவாள். தவிர, தினமும் ஐம்பது தடவை ஃபோன் செய்வாள். மகள் ஆபீஸ் முடித்து வீடு திரும்பும் வரை விழித்திருந்து அவள் படுக்கப் போன பிறகுதான் காமாட்சி உறங்குவாள்.

    கணவர், இது ரொம்ப அதிகம் எனச் சொல்லி அலுத்து விட்டார்.

    மகன் சம்பத் - பேங்கில் வேலை செய்பவன். அவனும் இதுபற்றி பேசவில்லை.

    மகள் விஷயத்தில் அளவுக்கு மீறின காமாட்சியின் தலையீடு படிப்படியாக புகுந்த வீட்டு மனிதர்களை பாதிக்கத் தொடங்கி விட்டது.

    மகளைப் பார்க்க வரும் சமயம், அவள் சமையல்கட்டில் வேலையாக இருந்தால், நீ செய்யாதே. நான் செய்யறேன் என பறித்து வேலை செய்வாள்.

    விளையாட்டாக பகவதியை யாராவது விமர்சனம் செய்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முகத்தில் அடித்த மாதிரி பதில் பேசி விடுவாள்.

    குருவின் உள்ளூர் அக்கா மீனாட்சி இதில் அடிபட்டவள்.

    அம்மாவை எச்சரிக்கத் தொடங்கி விட்டாள்.

    பழக்கத்தில் மருமகள் பகவதியை பார்வதி புரிந்து கொண்டு விட்டாள்.

    விட்றி மீனா! என் மருமகள் நல்ல பொண்ணு. அவங்கம்மா எப்படி இருந்தா எனக்கென்ன?

    அதில்லைம்மா. இவ மனசை விஷமாக்கிடப் போறா.

    பகவதி ஆகமாட்டா.

    குரு ஆரம்ப காலத்தில் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவனையே உறுத்தும் அளவுக்கு காமாட்சியின் போக்கு இருந்தது.

    அதை அவன் பேசத் தொடங்க -

    அம்மா அடக்கி விட்டாள்.

    விடு குரு! எதுவும் சொல்லாதே. இந்த ஒரு வருஷ பழக்கத்துல பகவதியை நான் புரிஞ்சுகிட்டேன். நம்ம எல்லாரையும் நேசிக்கறா. ஒரு வார்த்தை தப்பா பேசறதில்ல. ஆயிரம்தான் ஆனாலும் அவளுக்கு அம்மா. அவங்களை நாம விமர்சனம் பண்ணினா மனசு சங்கடப்படும்.

    அப்படி இல்லைம்மா. தலையிடவும் ஒரு அளவு இருக்கில்லையா?

    அதை நாம சொல்ல வேண்டாம். தானா புரிஞ்சுகட்டும். உங்க மத்தில உள்ள தாம்பத்ய உறவு எப்பவும் இனிமையா இருக்கணும்பா.

    பகவதி சம்பளத்தை வாங்கியதும் மாமியார் கையில் கொண்டு வந்து தருவாள்.

    "இதப்பாரும்மா. இனி குடும்பத்தை நடத்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1