Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gayathri Manthiram
Gayathri Manthiram
Gayathri Manthiram
Ebook119 pages1 hour

Gayathri Manthiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465759
Gayathri Manthiram

Read more from Devibala

Related to Gayathri Manthiram

Related ebooks

Reviews for Gayathri Manthiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gayathri Manthiram - Devibala

    12

    1

    தரகர் எதிரில் உட்கார்ந்திருந்தான் பிரபு!

    என் சகோதரிகளுக்கெல்லாம் வரன் பார்த்துக் கல்யாணம் செஞ்சு வச்சது நீங்கதான்!

    ஆமாம் தம்பி. இன்னிக்கு மூணு பேருமே அமோகமா வாழறாங்களே!

    ஆமாம். அதனாலதான் நான் இங்கே வந்திருக்கேன்!

    உங்களுக்கு இன்னும் ஆறு மாசம் கழிச்சுத்தான் ஜாதகத்தையே எடுக்கணும். இப்ப கிரகங்கள் சரியில்லை. நேத்துதான் உங்கம்மா கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்!

    நான் வந்தது வேறு விஷயம். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்...

    ஏதாவது காதல் சங்கதியா?

    இதுவரைக்கும் இல்லை. இனிமேல்தான் காதலிக்கணும். அதுக்காக உங்க கிட்ட பேசத்தான் வந்தேன்!

    நான் என்ன செய்யணும்?

    எனக்கு பொருத்தமான ஜாதகத்தை நீங்க எடுத்துக் குடுக்கணும். அந்தப் பொண்ணு படிச்சு, அழகா, கண்யமான குடும்பத்தைச் சேர்ந்தவளா இருக்கணும்...

    உங்கம்மாவும் இதைத்தான் சொல்லியிருக்காங்க!

    என்னைப் பேசவிடுங்க! அம்மா எதிர்பார்க்கிற மாதிரி குணங்கள் உள்ள ஒருத்தியை எனக்குக் காட்டுங்க. இந்த ஆறு மாசத்துல அவளை நான் காதலிக்கணும்!

    எதுக்கு?

    அம்மா சொல்றது தப்புனு நான் சொல்லலை. ஆனா முன்பின் தெரியாத ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டி ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்லை!

    பலபேர் கல்யாணம் இங்கே அப்படித்தானே தம்பி நடக்குது?

    இல்லீங்க! அப்படி நடக்கறது குறையுது. காதல் கல்யாணம் கூடிப் போச்சு. பழகி ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழத் தொடங்கினா வாழ்க்கைல ஒரு ருசி இருக்கும். அர்த்தம் இருக்கும்!

    அதுவும் நிஜம்தான்!

    ஆனா எங்கம்மா ஜாதகம் பாக்கணும்னு பிடிவாதமா இருக்காங்க. அப்பாவும் உயிரோட இல்லை. கடைசிவரைக்கும் அம்மாவைக் கண் கலங்காம வச்சுக் காப்பாத்தணும்னு ஆசைப்படறேன்!

    நல்ல பிள்ளை நீங்க...

    அதனால பொருத்தமான ஜாதகத்தை முதல்ல புடிச்சிட்டு, அப்படிப்பட்ட பெண்ணை நான் தேடிப்பிடிச்சு காதலிக்கத் தொடங்கிட்டா, ரெண்டு பேர் விருப்பமும் கை கூடும்!

    இது நடக்குமா தம்பி?

    தரகரே! இது நடக்கணும். நடக்க வைக்கணும். மத்தவங்க மாதிரி இல்லாம நான் வித்யாசமா யோசிக்கறேனா?

    சரி! ஜாதகப் பொருத்தம் பார்த்து பெண்ணை நான் கொண்டு வர்றேன். காதலிக்கறது உங்க சாமர்த்தியம்!

    அம்மாவுக்கு இது தெரிய வேண்டாம்...

    சொல்லிட்டீங்க இல்லை? நான் மாற மாட்டேன்!

    பிரபு வெளியே வந்தான்.

    ‘ஜாதகம் பொருந்தி ஒரு பெண் அமைஞ்சா அவ என்னை விரும்பணும். வேறு காதல் அவளுக்கு இருந்தா பிரச்னை!’

    ‘அவளைத் தேடி நான் போய், அவ மனசுல இடம் புடிச்சு... நடக்கற காரியமா இது?’

    ‘காதல் தானா வரணும். அதைத் தடியால அடிச்சுக் கனிய வைக்க முடியாது!’

    பிரபுவுக்குள் பல குழப்பங்கள் இருந்தன.

    ‘சரி! வாழ்க்கைல எதையாவது அடையணும்னு ஒரு சவால் இருந்தாதான், சுவாரசியம் இருக்கும்!’

    ‘ஒரு இலக்கு வேணுமில்லையா?’

    மாலை வீடு திரும்பும்போது பெரியக்கா அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

    எப்பக்கா வந்தே?

    ஒரு மணி நேரம் ஆச்சுடா பிரபு! அவரோட அத்தை இங்கே அடுத்த தெருவுல இருக்காங்க. பாக்க வந்தேன். நீ தான் எங்க வீட்டுப் பக்கமே வர்றதில்லை!

    நேரமில்லைக்கா...

    சரி! அம்மாவைக் கூட்டிட்டுப் போய் ஒரு வாரம் என்னோட வச்சுக்கட்டுமா?

    எதுக்குக்கா?

    இதென்னடா கேள்வி? அம்மாவைக் கூட்டிட்டுப் போக காரணம் வேணுமா? எனக்கு குடும்பத்தை விட்டுட்டு இங்கே வர முடியாது. அம்மா வரலாமில்லையா?

    அம்மாவைக் கேளு!

    என்னம்மா? வர்றியா என்கூட?

    இல்லைடி! பிரபு சாப்பாட்டுக்கு திண்டாடுவான். துணி தோய்க்கத் தெரியாது. ஒரு காபி போடக் கூட பழகலை. பாவம்! அவனை விட்டுட்டு எப்படி வர முடியும்?

    எத்தனை நாளைக்கு உன் மகனை இப்படி மடில கட்டிட்டு அலையப் போறே?

    அவனுக்கு ஒருத்தி வந்துட்டா அவனை ஒப்படைச்சிட்டு நான் ஒதுங்கிடுவேன். அப்ப உங்க எல்லார் கூடவும் வந்து தாராளமா இருக்கேன்!

    அம்மா! அப்படி நீ போயிட முடியாது! எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா, உன்னை விட்ருவேனா? அதுக்கப்புறம் இந்த வீட்டை விட்டு நீ நகர முடியாது. என்கூடவே தான் இருக்கணும்...

    அம்மா முகத்தில் பெருமிதம்.

    இந்த மாதிரி அம்மாக்கோண்டுகளா இருக்கற ஆம்பிளைங்க, ஒருத்தி வந்துட்டா அவ பின்னால அலைவானுங்க!

    மாமா அப்படித்தானா?

    அதுல என்ன சந்தேகம்? நான் கிழிச்ச கோட்டை உங்க மாமா தாண்டுவாரா?

    புருஷன்களை இப்படி அடிமைப்படுத்தி வைக்கற பொம்பளை வர்க்கம் நல்லாருக்குமா?

    டேய்! கொன்னுடுவேன்!

    மூன்று பேரும் கலகலவென சிரித்தார்கள்.

    இந்தக் குடும்பம் என்னிக்கும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும்!

    அம்மா சொல்ல,

    பிரபுவுக்கு வரன் பாரேன்மா!

    ஆறு மாசம் கழிச்சுத்தான் ஜாதகத்தை எடுக்கணும் அகிலா. இப்ப கல்யாணம் நடக்காது...

    சரி. நான் புறப்படறேன்!

    மாப்ளை, குழந்தைங்களோட ரெண்டு நாள் இருக்கற மாதிரி வாம்மா!

    முயற்சி பண்றேம்மா!

    அவள் புறப்பட்டு விட்டாள்.

    அம்மா இரவு சமையலுக்கான ஆயத்தங்களில் இறங்கினாள். பிரபு கூடமாட உதவிகள் செய்வான். அதைக்கூட அம்மா அனுமதிக்க மாட்டாள்.

    அந்தக் கால பெண்களுக்கு அடுப்படியில் ஆண்கள் வேலை செய்தால் பிடிக்காது.

    அம்மாவால் முன்பு போல இப்போது முடிவதில்லை. மன உறுதியால் சகலமும் நடத்துகிறாள்.

    அம்மா நல்லவள். கூடுமானவரை கடுஞ்சொல் வராது. யாரையும் கஷ்டப்படுத்த தெரியாது.

    பேராசை இல்லை. அப்பா கொடுத்ததை வைத்து சிக்கனமாகக் குடும்பம் நடத்தி பெண்களை கரை சேர்த்தவள். இப்போதும் பிரபு தரும் சம்பளத்தில் குடும்பம் நடத்தி, பணத்தை மிச்சப்படுத்துகிறாள். அதற்காக குடும்பத்தில் எந்த ஒரு குறையும் இருக்காது.

    அக்கம்பக்கத்திலும் நல்ல நட்பு. விசாலம்மாவை யாருமே மோசம் என்று சொல்ல மாட்டார்கள்.

    பிரபு வந்து படுத்து விட்டான்.

    ‘ஜாதகம் அமைந்து விடும். என் விருப்பப்படி காதலும் ஒருவேளை கை கூடலாம். இங்கு வாழ வரும்போது நல்ல விதமாக இருக்க வேண்டும்!’

    ‘காதலிப்பதே அதற்குத்தானே?’

    ‘குடும்பத்தில் நல்லவிதமாக நடந்து கொள்ளும் இயல்பும், நான் காதலிக்கும் பெண்ணிடம் இருக்க வேண்டும்!’

    ‘ஆறு மாசத்தில் ஒருத்தியை சகல குணங்களுடனும் முழுமையாகத் தயார்படுத்தி அதன் பிறகுதான் தாலிகட்ட வேண்டும்!’

    மூன்றாவது நாள் செல்போனில் தரகர் வந்தார்.

    தம்பி! நீங்க கேட்ட மாதிரி ஒரு பெண் அமைஞ்சிருக்கா! சாயங்காலம் வர்றீங்களா?

    கண்டிப்பா! அதைவிட எனக்கென்ன வேலை?

    பிரபு, மாலை ஆறு மணிக்கு தரகர் எதிரே இருந்தான்.

    "பெண்

    Enjoying the preview?
    Page 1 of 1