Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek Athu Visham
Vivek Athu Visham
Vivek Athu Visham
Ebook156 pages56 minutes

Vivek Athu Visham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek Athu Visham

Read more from Rajeshkumar

Related to Vivek Athu Visham

Related ebooks

Related categories

Reviews for Vivek Athu Visham

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek Athu Visham - Rajeshkumar

    17

    1

    நல்ல தூக்கத்தில் இருந்த விவேக்கை டெலிபோன் குரைத்து எழுப்பிவிட, விவேக் போர்வையை உதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ரிஸீவர் காதுக்குப் போயிற்று.

    ஹலோ...

    சிறைச்சாலை பிரிவு ஐ.ஜி. ராம்மோகன் குரல் கொடுத்தார்.

    ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் மிஸ்டர் விவேக். இந்த அகால நேரத்தில் உங்களை எழுப்பி தொந்தரவு தர்றதுக்காக...

    நோ... ப்ராப்ளம்... ஸார்...! விஷயம் முக்கியமானதாக இல்லாத பட்சத்தில் நீங்க போன் பண்ண மாட்டீங்களே...? எனிதிங்க் இம்பார்ட்டன்ட் ஸார்...?

    எஸ்.... மிஸ்டர் விவேக். அரைமணி நேரத்துக்கு முந்தி சென்ட்ரல் ஜெயில் கண்டெம் சிறையிலிருந்து கைதி ஒருத்தன் தப்பிச்சுட்டான். கைதி பேர் குத்தீட்டி குமார். ஆயுள் தண்டனைக் கைதி...

    எப்படி தப்பினான்...?

    தெரியலை.. சரியா பனிரெண்டு மணிக்கு வார்டன் கண்டெம் செல் பக்கம் ரவுண்ட்ஸ் போயிருக்கார். ஸெல்லில் ஆளைக் காணோம்...

    ஜெயிலுக்குள்ளே நல்லா சர்ச் பண்ணிப் பார்த்தீங்களா ஸார்...?

    பார்த்துட்டோம். அவன் எப்படி தப்பிச்சு போனான்ங்கிற மார்க்கம் பிடிபடலை. அவன் ஒரு மோசமான க்ரிமினல். ஏதோ கட்சி தேர்தல் விவகாரத்துல தகராறு ஏற்பட்டு ரெண்டு பேரைக் குத்தீட்டியால குத்தி கொலை பண்ணியிருக்கான். கீழ்க் கோர்ட்ல தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு ஹைகோர்ட்ல ஆயுள் தண்டனையா குறைஞ்சது... விடியறதுக்குள்ளே அவனை ஜெயிலுக்குக் கொண்டு வந்தாகணும் விவேக். இந்த விஷயத்துல உங்க யோசனையும் அஸிஸ்டன்ஸும் வேணும்.

    ஷ்யூர்...

    நான் இப்போ ஜெயில் காம்பஸுக்குள்ளேதான் இருக்கேன். நீங்க உடனடியா இங்கே வரமுடியுமா?

    இதோ...! கிளம்பிட்டேன்..

    விவேக் ரிஸீவரை வைத்துவிட்டு எழ முயன்ற விநாடி, ரூபலா கேட்டாள். தூக்கக் கலக்கக் குரல்.

    மணி இப்ப என்ன தெரியுங்களா?

    தெரியும்! பனிரெண்டரை...

    கண்டிப்பா நீங்க போயாகணுமா?

    ம்...! காரண காரியம் இல்லாமே ஜெயில்துறை ஐ.ஜி.ராம்மோகன் எனக்கு போன் பண்ணமாட்டார்.

    ரூபலா அலட்சியமாய் கேட்டாள்.

    ஒரு கைதி ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டான். இது தானே கேஸ்?

    விவேக் வேறு ட்ரஸ்ஸுக்கு மாறிக்கொண்டே புன்னகைத்தான்.

    மேலோட்டமா பார்த்தா இதுதான் கேஸ். பட்... அந்த கேஸுக்குப் பின்னாடி ஏதோ விவகாரம் இருக்கு. அந்த விவகாரம் என்னான்னு போனாத்தான் தெரியும்.

    நீங்க கிளம்பற ஜோரைப் பார்த்தா இன்னிக்கு உங்களுக்கு ஏகாதசியாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்...

    ரூபலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே விவேக் மாருதி கார் சாவியைப் பொறுக்கிக் கொண்டு - வாசல்கதவைத் திறந்தபடி வெளியே வந்தான்.

    போர்டிகோவின் ஜீரோவாட்ஸ் வெளிச்சத்தில் கடல் வண்ண மாருதி மினுமினுப்பாய் நின்றிருக்க, விவேக் உள்ளே போனான். ரூபலா காரின் கதவருகே குனிந்தாள்.

    என்னங்க...

    ம்...

    வர ரொம்பவும் லேட்டாகிற மாதிரியிருந்தா ஒரு போன் பண்ணுங்க...

    சரி...

    செல்போன் எடுத்துகிட்டீங்களா?

    இதோ...! சர்ட் பாக்கெட்டிலிருந்து எட்டிப் பார்த்துட்டிருக்கே...! வரட்டுமா ரூபி...! கதவை மறக்காமே லாக் பண்ணிக்கோ...

    ம்... ம்...

    ரூபலா காம்பௌண்ட் கேட் கதவைத் திறந்து வைக்க, கார் வெளியேறியது.

    நள்ளிரவுச் சென்னை சோடியம் வேப்பர் விளக்குகளின் பயத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு பளிச்சென்று இருக்க, விவேக் மாருதியை விரட்டினான்.

    சரியாய் பதினைந்து நிமிஷப் பயணம்.

    சென்ட்ரல் ஜெயில் வந்தது.

    விவேக்கின் காரைப் பார்த்ததுமே சிறை வாசலில் நின்றிருந்த சென்ட்ரிகள் விறைப்பாக உத்யோக சல்யூட்கள் வைத்துவிட்டு அவசர அவசரமாய் கதவைப் பிரித்து வழி விட்டனர்.

    கார் உள்ளே போகும்போதே சிறைச்சாலை முழுக்க ஒரு பதட்டம் அரும்பியிருப்பதை உணர்ந்தான் விவேக். எல்லாப் பகுதிகளிலும் சர்ச் லைட்கள் சுழன்று கொண்டிருந்தன. வாட்ச் அண்ட் வார்ட் டவரின் மேல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஸ்க்வாட் ஒன்று நிழலுருவங்களாய் தெரிந்தது.

    விவேக் காரை மெயின் ப்ளாக்கிற்கு செலுத்தி அங்கு ஏற்கெனவே நின்றிருந்த இரண்டு ஜீப்களுக்கு பின்னால் கொண்டு போய் மௌனமாக்கினான்.

    கீழே இறங்கும்போது ஐ.ஜி. எதிர்கொண்டார்.

    வாங்க விவேக்...!

    விவேக் அவரோடு கை குலுக்கிவிட்டு இணைந்து நடந்தான்.

    குத்தீட்டி குமார் எப்படி தப்பிச்சான்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா ஸார்...?

    முடியலை...! போலீஸ் டாக்கை வரவழைச்சு குத்தீட்டி குமார் செல்லிலிருந்து ஸ்மெல் பண்ணவிட்டோம். அது ஜெயிலோட பேக் போர்ஷனுக்குப் போய் குரைச்சுட்டு அன்ரெஸ்ட்டா அங்கேயும் இங்கேயும் ஓட ஆரம்பிச்சுட்டது. எங்களால எதையுமே கெஸ் பண்ண முடியலை.

    செல் எந்தப் பக்கம்..?

    ப்ளீஸ்... கம் திஸ் சைட்...

    ஐ.ஜி. ராம்மோகன் மெயின் ப்ளாக்கிலிருந்து பிரிந்துபோன கடப்பைக்கல் வராந்தாவில் கூட்டிக் கொண்டு போனார். வார்டன்களும், ஜெயிலர்களும் கைகளில் டார்ச்சுகளோடு தொலைவில் அலைந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் நாய் யோசித்து யோசித்து குரைக்கும் சத்தம் காற்றில் கலந்து எதிரொலித்தது.

    கண்டெம் செல் வந்தது.

    மற்ற கைதிகள் ஜன்னல் கம்பிகளில் முகம் பதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    செல் வாசலில் நின்றிருந்த ஜெயில் சூப்ரிண்டெண்டன்ட், ஐ.ஜி.யையும் விவேக்கையும் பார்த்ததும் வேகநடை போட்டு பக்கத்தில் வந்து அட்டென்ஷனில் நின்றார். சல்யூட் வைத்து தளர்ந்தார்.

    விவேக் கேட்டான்.

    செல்லிலிருந்து ஆள் எப்படி வெளியே வந்தான்...?

    ஆசிட் ட்ராப்ஸை பூட்டுக்குள்ளே விட்டு பிரேக் பண்ணியிருக்கான் ஸார்... இதோ பார்த்தீங்களா? உருகி உருக்குலைந்து போன பூட்டை எடுத்துக் காட்டினார்.

    ஆசிட் அவனுக்கு எப்படி கிடைச்சது...?

    தெரியலை ஸார்.

    மிஸ்டர் சூப்ரிண்டெண்டன்ட்! இந்த பதிலை நீங்க சொல்லக்கூடாது. இந்த பதிலை நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக சஸ்பெண்ட் கூட செய்யப்படலாம்...

    "ஸார்! என் ஒரு வார லீவு முடிந்து இன்னிக்குத் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1