Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vinaya Oru Vidukathai
Vinaya Oru Vidukathai
Vinaya Oru Vidukathai
Ebook150 pages1 hour

Vinaya Oru Vidukathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vinaya Oru Vidukathai

Read more from Rajeshkumar

Related to Vinaya Oru Vidukathai

Related ebooks

Related categories

Reviews for Vinaya Oru Vidukathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vinaya Oru Vidukathai - Rajeshkumar

    20

    1

    விவேக்கிற்கு அந்த செல்ஃபோன் கால் வந்தபோது அவன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் தன் மாருதியை நகர்த்தமுடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தான். சுற்றிலும் கார்பன் புகை. நாற்பது டிகிரி செல்ஷியஸ் வெய்யில். ப்ளாட்பார டீ ஸ்டாலில் மட்டமான எண்ணெயில் வெந்து கொண்டிருக்கும் வடையின் மணம். அதற்கு சவால்விடும்- பக்கத்து சந்திலிருந்து தயங்கித் தயங்கி முகத்தில் மோதும்- மூத்திர நாற்றம்.

    மேற்குறிப்பிட்ட எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக்கொண்டே செல்ஃபோனில் பேசினான், விவேக்.

    ஃபோன் க்யூ ப்ராஞ்ச்சிலிருந்து. பேசியவர் க்யூப்ராஞ்ச் டி.எஸ்.பி.மார்த்தாண்டம்.

    விவேக்...! நீங்க இப்போ எங்கே இருக்கீங்க...? வீடா.. ஆன் தி... ரோடா...?

    ஆன் தி ரோட்...

    ஸ்பாட்...?

    ட்ரிப்ளிகேன் ஹைரோட்...

    ஏதாவது முக்கியமான வேலையா போயிட்டிருக்கீங்களா...?

    இல்லை... பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போய் சில புத்தகங்களை வாங்கிட்டு வரவேண்டியிருக்கு. அதுக்கு அவசரம் இல்லை. உங்க சைடுல ஏதாவது முக்கியமான விஷயமா மிஸ்டர் மார்த்தாண்டம்...?

    எஸ்...! முக்கியமான விஷயம் மட்டுமில்லை. சீரியஸான விஷயமும்கூட...

    ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடட்டுமா?

    ப்ளீஸ்...

    செல்ஃபோன்கள் ஊமைகளாயின. ட்ராஃபிக் நெரிசல் சற்றே நெகிழ்ந்திருக்க காரை அங்குலம் அங்குலமாய் ரிவர்ஸ் எடுத்து பக்கத்து சந்துக்குள் நுழைந்து பத்து நிமிஷ ஜாக்கிரதையான பயணத்துக்குப் பின் அகலமான அண்ணாசாலையினைத் தொட்டு அந்த போக்குவரத்து ஜோதியில் ஐக்கியமானான்.

    சிவப்பு விளக்கு எதிலும் மாட்டிக் கொள்ளாமல் பச்சையிலேயே பயணித்து க்யூ ப்ராஞ்ச் அலுவலகத்தைத் தொட்டபோது டி.எஸ்.பி. மார்த்தாண்டம் தன் ஆறடி உயரத்தோடும் எழுபத்தைந்து கிலோ உடம்போடும் போர்டிகோ வராந்தாவிலேயே கிடைத்தார். அவருடைய அகலமான மாநிற முகம் இறுகிப் போயிருந்தது.

    வாங்க... விவேக்...!

    விவேக் புன்னகைத்தான். உங்ககிட்டயிருந்து எனக்கு வழக்கமாக கிடைக்கக்கூடிய ஒரு ஸ்பெஷல் புன்னகை இன்னிக்கு மிஸ்ஸிங். ஸோ விஷயம் ரொம்ப ரொம்ப சீரியஸாகத்தான் இருக்கணும்...

    எஸ்...! விஷயம் எல்.கே.ஜி.லெவல்ல இருந்தா உங்களை நான் காண்டாக்ட் பண்ணியிருக்கவே மாட்டேனே...! இது... பி.ஹெச்.டி.லெவல்...!

    இருவரும் வராந்தாவில் நடைபோட்டு பேசியபடியே கடைசியாய் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தார்கள். மார்த்தாண்டம் கதவைத் தாழிட்டுவிட்டு ஒரு பி.வி.சி. சேரைக்காட்டிவிட்டு தன்னுடைய நாற்காலிக்குப் போய் சாய்ந்தபடியே பேச்சை ஆரம்பித்தார்.

    மிஸ்டர் விவேக்! ஒரு மணி நேரத்துக்கு முந்தி சாதாரண தபால்ல எனக்கு ஒரு சின்ன பார்சல் வந்தது. ஃப்ரம் அட்ரஸ் எதுவும் கிடையாது. மெட்டல் டிடெக்டரை வெச்சு டெஸ்ட் பண்ணிப் பார்த்தப்ப உள்ளே எதுவும் அபாயகரமான பொருள் இல்லைன்னு தீர்மானமாய் தெரிஞ்சதும் அதை ஓப்பன் பண்ணிப் பார்த்தேன்.

    உள்ள என்ன இருந்தது...?

    ஒரு வீடியோ கேஸட்... அதோடு இந்த லெட்டர்.

    மார்த்தாண்டம் சொல்லிக்கொண்டே - தன் சர்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த -நான்காய் மடிக்கப்பட்ட கடிதம் ஒன்றை நீட்டினார்.

    விவேக் வாங்கி பிரித்தான். கம்ப்யூட்டரில் ப்ரிண்ட்அவுட் எடுக்கப்பட்ட அதைப் படித்தான்.

    கடமையைக் கண்போல் கருதும் க்யூ ப்ராஞ்ச் போலீஸ் அதிகாரி திரு.மார்த்தாண்டம் அவர்களுக்கு வணக்கம்.

    இத்துடன் உங்களுக்கு ஒரு வீடியோ கேஸட்டை அனுப்பியுள்ளேன். இந்த கேஸட்டில் இடம் பெற்றுள்ள சம்பவம் ஒரு தானியங்கி வீடியோ கேமிராவால் எடுக்கப்பட்டது. நான் பொழுது போக்குக்காக மிருகங்களை வேட்டையாடும் ஒரு ஹண்ட்டர். ஹண்ட்டிங் எனக்கு ஹாபி. அதோடு போட்டோகிராஃபியிலும் வீடியோ கிராஃபியிலும் இண்ட்ரஸ்ட். இரவு நேரங்களில் மிருகங்களின் நடமாட்டத்தைக் கேமிராவில் படம் பிடிப்பதற்காக ஒரு மரத்தில் கேமிராவைப் பொருத்தி இயக்கிவிட்டு மறுநாள் காலை விடிந்ததும் அதில் இருக்கும் கேஸட்டைக் கொண்டு வந்து மிருகங்களின் நடமாட்டம் கேமிராவில் பதிவாகியுள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன் அப்படிக் கொண்டு வந்து போட்டுப் பார்த்த கேஸட்டில் ஒரு விபரீதமான சம்பவம் பதிவாகியிருந்தது. அதை டெக் மூலம் டி.வி.யில் போட்டுப் பார்த்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அதிர்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை அறிய- அனுப்பியுள்ள கேஸட்டை நீங்களே போட்டுப் பார்க்கவும். போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் எனக்குத் தெரிந்தவரை நீங்கள் ஒரு நேர்மையான அதிகாரியாய் இருப்பதால் உங்களுக்கு இந்த கேஸட்டை அனுப்பியுள்ளேன். இந்த விவகாரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு...

    ஒரு பொதுநல விரும்பி.

    விவேக் கடிதத்தைப் படித்துமுடித்துவிட்டு டி.எஸ்.பி. மார்த்தாண்டத்தை ஏறிட்டான்.

    அந்த கேஸட் எங்கே...?

    மேஜையின் ட்ராயரிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

    போட்டுப் பார்த்தீங்களா?

    ம்...

    என்ன பதிவாகியிருக்கு...?

    நான் சொல்றதைக் காட்டிலும் நீங்களே கேஸட்டைப் பார்த்துடறது நல்லது... சொன்ன மார்த்தாண்டம் டேபிளின் மேல் இருந்த டெக்கின் வாய்க்கு கேஸட்டை கொடுத்து டி.வி.யை ஆன் செய்தார்.

    டி.வி. இயக்கம் பெற்றது. ஒரு நிமிஷ நேரத்துக்கு ஒளிப்புள்ளிகளைக் காட்டிவிட்டு திடீரென்று இருட்டின் பின்னணியில் ஒரு காட்டுப் பகுதியைக் காட்டியது. மெலிதாய் நிலா வெளிச்சம் பரவியிருக்க மரங்களும் இலைகளும் ஒரு ஏரியின் தண்ணீர் பரப்பும் மினுமினுத்தது.

    சில்வண்டுகளின் இரைச்சலும் பறவைகளின் விசித்திர சத்தங்களும் கேட்க

    Enjoying the preview?
    Page 1 of 1