Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Roja Karuppu Poonai
Vellai Roja Karuppu Poonai
Vellai Roja Karuppu Poonai
Ebook175 pages1 hour

Vellai Roja Karuppu Poonai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vellai Roja Karuppu Poonai

Read more from Rajeshkumar

Related to Vellai Roja Karuppu Poonai

Related ebooks

Related categories

Reviews for Vellai Roja Karuppu Poonai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Roja Karuppu Poonai - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    இந்தியாவில் ‘காதல் நகர்’ என்று அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது. அது உண்மையில் நகர் இல்லை. அது ஒரு கோயில். அது எந்தக் கோயில் என்று கேட்கிறீர்களா? அதுதான் கஜுராஹோ கோயில். இந்தக் கோயில் உள்ள இடம் மத்திய பிரதேசத்தில் உள்ள ‘பண்டேல்கந்த்’ என்கிற கிராமம். இது பெயரளவுக்குத்தான் கிராமம். ஆனால் இந்த கிராமத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஆறு உள்ளன. இதைத்தவிர இன்னமும் ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள் உள்ளன. இந்த பண்டேல்கந்த் என்கிற கிராமம் இன்றைய தினம் ஒரு செல்வபுரியாக மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்குக் காரணம் கஜுராஹோ கோயிலுக்கு படைபடையாய் அணி திரண்டு வரும் சுற்றலாப் பயணிகள்தான். அந்தக் கோயிலில் அப்படி என்னதான் இருக்கிறது. அதை இந்த நாவலின் 2-வது அத்தியாயத்தில் பார்ப்போம். இப்போது நாவலின் முதல் அத்தியாயத்துக்குள் நுழைவோம்.

    1

    நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, நல்ல தூக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தேவயானி ஏதோ சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்தாள்.

    அறை நீலநிற விளக்கின் ஜீரோவாட்ஸ் வெளிச்சத்தில் இருந்தது. பக்கத்தில் ஒருக்களித்துப் படுத்து லேசான குறட்டையில் இருந்த பாண்டுரங்கன் மெல்ல புரண்டு படுத்து மறுபடியும் தன்னுடைய தூக்கத்தைத் தொடர்ந்தார்.

    தேவயானி எழுந்து உட்கார்ந்தாள்.

    ‘ஏதோ... சத்தம் கேட்டதே!’

    ‘பிரமையா... இல்லை... உண்மையா?’

    ‘பிரமையாய் இருக்க வாய்ப்பு இல்லை. என் காதில்தான் தெளிவாய் விழுந்ததே... ‘தொம்ம்ம்’ என்ற சத்தம்!’

    மெல்ல கணவர் பாண்டுரங்கனின் தோளைத் தொட்டாள்.

    என்னங்க...!

    அவர் முழுவதும் தூக்கம் தெளியாமல் ம் என்றார். போர்வையை நன்றாய் போர்த்திக் கொள்ள முயன்றார்.

    கொஞ்சம் எந்திரிங்க.... தோளைப் பிடித்து உலுக்கினாள்.

    எ...எ... எதுக்கு?

    ஏதோ சத்தம் கேட்டது...

    பாண்டுரங்கன் நீளமான கொட்டாவியோடு எழுந்து உட்கார்ந்தார். தன்னுடைய ஐம்பது வயது மனைவியைக் கோபமாய் பார்த்தார். எரிச்சலாய் கேட்டார்.

    என்ன சத்தம் கேட்டது...?

    தெரியலைங்க... யாரோ சுவரேறி குதிக்கிற சத்தம்.

    இதோ பார் தேவயானி...! வாட்ச்மேன் ஒரு வாரம் லீவுல போனதிலிருந்து உனக்கு ராத்திரியானால் ஒரு பயம் வந்துடுது. பக்கத்து பங்களாவில் ஏதாவது சத்தம் கேட்டாக்கூட நம்ம வீட்ல அந்த சத்தம் கேட்கிறதாய் நினைச்சு பயப்படறே...! நான் ஒரு பப்ளிக் பிராசிக்கூட்டர். கோர்ட்ல தைரியமாய் குற்றவாளிகளுக்கு எதிராய் வாதாடி தண்டனையை வாங்கித்தர்றவன். லாயர்களிலேயே டெரர்ன்னு பெயர் எடுத்தவன். என்னோட மனைவியான நீ இப்படி பயப்படலாமா? இந்த லட்சணத்துல உனக்கு ஐ.பி.எஸ். படிக்கிற மகன் வேற...!

    அய்யோ...! என்னைக் கிண்டல் பண்றதையும் கேலி பேசறதையும் நாளைக்குப் பூராவும் வெச்சுக்குங்க. இப்ப நான் சொல்றதைக் கேளுங்க. கண்டிப்பா நம்ம வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற சுவர் ஏறி யாரோ குதிச்சிருக்காங்க. சத்தம் காட்டாமே எந்திரிச்சுப் போய் ஜன்னல் பக்கமாய் நின்னு எட்டித்தான் பாருங்களேன்...

    ராத்திரியில் ஒரு மனுஷனை நிம்மதியாய் தூங்கவிட மாட்டியே...? பாண்டுரங்கன் நைட் கவுனோடு கட்டிலினின்றும் இறங்கினார். சுவர் அலமாரியில் இருந்த நீளமான டார்ச்சை எடுத்துக் கொண்டார்.

    டார்ச் பட்டனைத் தட்டி வெளிச்சத்தை உயிர்ப்பித்துக் கொண்டார். ஜன்னல் பக்கமாய் போய் பங்களாவின் பின்பக்கத்தை எட்டிப்பார்த்தார். நான்கு தென்னை மரங்களும், ஒரு கொய்யா மரமும், நூறடி நீள காம்பௌண்ட் சுவரும் இருட்டில் லேசான வரைபடம் போல் தெரிந்தது.

    டார்ச்சை உயர்த்திப் பிடித்து வெளிச்சக் கீற்றுகளை அந்த இடத்துக்குக் கொண்டுபோய் இருட்டைக் கழுவினார்.

    தேவயானி அவர்க்குப் பின்னால் நின்றபடி குரல் நடுங்கக் கேட்டாள். என்னங்க.. ஏதாவது தெரியுதா?

    ம்... நல்லாவே தெரியுது...! நாலைஞ்சு யானையும், ஒரு புலியும், ரெண்டு சிங்கமும் நம்ம வீட்டு சுவரேறிக் குதிச்சுட்டு என்ன பண்றதுன்னு தெரியாமே முழிச்சுட்டு இருக்கு...!

    தேவயானியின் முகம் கோபத்தில் ஜிவு ஜிவுத்தது. என்னங்க நீங்க...? நான் சீரியஸாய் சொல்லிட்டிருக்கேன். நீங்க தமாஷ் பண்ணிட்டு இருக்கீங்க...? காவலுக்கு வாட்ச்மேன் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு எவனோ உள்ளே குதிச்சிருப்பான். நல்லா டார்ச் அடிச்சுப் பாருங்க...

    பாண்டுரங்கன் ஜன்னலின் திரைச்சீலையை நன்றாய் தள்ளிவிட்டு க்ரில் கம்பிக்குள் டார்ச்சை நுழைத்து காம்பௌண்ட் சுவர் பூராவும் வெளிச்சத்தைப் பரப்பிப் பார்த்தார்.

    டார்ச்சின் வெளிச்சக் கற்றை ஒவ்வொரு அடியாய் நகர்ந்து போயிற்று. சுமார் 50 அடி தூரம் நகர்ந்த பின் சட்டென்று ஒரு இடத்தில் வெளிச்சம் ‘டெண்ட்’ அடித்தாற் போல் நின்றது.

    காம்பௌண்ட் சுவரோரமாய் யாரோ குற்றுச்செடிகளுக்கு நடுவில் குப்புற விழுந்துகிடந்தார்கள். பாண்டுரங்கனின் கையில் இருந்த டார்ச் நடுங்கியது. முகமும் பின்னங்கழுத்தும் உடனே வியர்த்தது.

    தே...தே...தேவயானி!

    ம்...

    யாரோ காம்பௌண்ட் சுவரோரமாய் விழுந்து கிடக்கிறாங்க.

    எ...எ...என்னது...?

    இப்படி வந்து பாரு...

    தேவயானி பயத்தையும் பதட்டத்தையும் அடக்கிக் கொண்டு ஜன்னல் கம்பிகளுக்கு அருகில் வந்து எட்டிப்பார்த்தாள். குரலில் குளிர் ஒட்டிக் கொண்டது.

    எ...எ...என்னங்க...!

    ம்...

    யாரோ விழுந்து கிடக்கலை...

    பின்னே?

    குரோட்டன் செடிகளுக்குப் பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்காங்க...

    உனக்கு அப்படியா தெரியுது?

    ஆமா...

    உடம்புல அசைவேயில்லையே?

    நீங்க டார்ச் அடிச்சுப் பார்த்ததும் வந்த திருடன் உஷாராகி செடிகளுக்கு நடுவில் அப்படியே படுத்துகிட்டான் போலிருக்கு...!

    இப்ப என்ன பண்ணலாம்?

    உடனே போலீஸுக்கு போன் பண்ணுங்க. போலீஸ் ஸ்டேஷன் ரெண்டு தெரு தள்ளித்தானே இருக்கு! இன்ஸ்பெக்டர் கோவிந்தவாசன் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே வந்துடுவார்...!

    சரி...! நீ இந்த ஜன்னல் பக்கத்திலேயே நின்னு அவனையே பார்த்துட்டு இரு. நான் போன் பண்ணிட்டு வந்துடறேன். சொன்ன பாண்டுரங்கன் தன்னுடய கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த செல்போனை எடுத்து - இரண்டு தெரு தள்ளியிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.

    இன்ஸ்பெக்டர் கோவிந்தவாசன் மறுமுனையில் பேசினார்.

    "ஸார்...! இந்த ஏரியாவில் இப்போ திருட்டுத்தனம் அதிகமாயிருக்கு. ஒரு வாரமாய் ஸ்பெஷல் ரோந்து போட்டிருக்கோம். உங்க வீட்ல வாட்ச்மேன் இல்லாததினால எவனோ ஒருத்தன் உள்ளே புகுந்து இருக்கணும். நான் இப்ப வந்துடறேன் ஸார். ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல அங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1