Vellai Iruttu
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vellai Iruttu
Related ebooks
Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsIni... Ragini Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsNenjellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsEastmen Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathirkuriya Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKili Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsKagithapoo Thean Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vanakam Rating: 0 out of 5 stars0 ratingsChicago Secret Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vazhum Pullankuzhalkal Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratingsDecember Pournami Rating: 0 out of 5 stars0 ratingsAbaaya Noyali Rating: 0 out of 5 stars0 ratingsSaathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsUn Vaanam En Arugil Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKezhe Vizhatha Nizhal and Manam Iranthu Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsMuyandral Madivaai Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Yaaro! Rating: 0 out of 5 stars0 ratingsKeezhe Vizhatha Nizhal Rating: 5 out of 5 stars5/5Kavitha Nagar Kadaisi Theru Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vellai Iruttu
0 ratings0 reviews
Book preview
Vellai Iruttu - Rajeshkumar
ராஜேஷ்குமார்
வலைதளத்தில் சிக்கிய வைர வரிகள்:
ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் பல்வேறு வகையான கருத்துக்கள் சொல்லப்பட்ட போதிலும் இதுதான் முடிவானது என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. கோடைகாலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும் மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. அதே சமயம் உடம்புக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே. இப்படி குடிப்பது சிறுநீரகங்களுக்கு கூடுதல் பளு தருவதாகத் தான் அமையும். ஏ.ஸி. அறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தாகம் எடுக்காது. என்றாலும் அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம்.
1
சென்னையின் புறநகர்ப்பகுதி.
விடிவதற்கு இன்னமும் முப்பது நிமிடம் மீதியிருந்த அந்த வைகறை இருட்டில் ஒரு மினிவேன் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருக்க அதன் முதுகில் ஒரு ப்ளக்ஸ் போர்டு கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. கழுத்தில் மப்ளரோடு இருந்த ராகவன் வேனை ஓட்டிக் கொண்டிருந்தான். சிகரெட் புகையும் வாயோடு தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த இளைஞனைக் கூப்பிட்டான். குரலில் ஏதோ ரகசியம் பேசுகிற தொனி!
இளங்கோ..!
சொல்லு...!
அந்த இளங்கோ உதட்டிலும் சிகரெட் தொற்றியிருந்தது.
மணி எத்தனை...?
அஞ்சே முக்கால்
இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்பாட்டுக்குப் போய் சேர்ந்துடுவோம். இருட்டு கரையறதுக்கு முன்னாடி ஃப்ளக்ஸ் போர்டைக் கட்டிட்டு யார் கண்ணிலும் படாமல் ஸ்பாட்டை விட்டு கிளம்பிடணும்...
வழியில் செக்போஸ்ட் ஒண்ணு இருக்கு...
செக்போஸ்ட்காரன் ஏதாவது பிரச்னை பண்ணினான்னா போனைப் போட்டு குடுத்துட வேண்டியதுதான்...
ராகவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் யாரோ அழைப்பதற்கு அடையாளமாய் ஒளிர்ந்தது.
இளங்கோ...! என்னை யாரோ கூப்பிடறாங்க. எடுத்து யார்ன்னு கேளு..!
இளங்கோ தன் விரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த கடைசி சென்டிமீட்டர் சிகரெட்டை வெளியே சுண்டி எறிந்துவிட்டு வைப்ரேஷனில் ஒளிர்ந்து கொண்டு இருந்த செல்போனை எடுத்து இடது காதுக்குக் கொடுத்தான். மறுமுனையில் ஒரு குரல் கேட்டது.
என்ன... ஸ்பாட்டுக்குப் போயிட்டீங்களா?
போயிட்டிருக்கோம்...!
விடிஞ்சு வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடி ஃப்ளக்ஸ் போர்டை அந்த பைபாஸ் ஃபைவ் ரோடு கார்னர்ல ஃபிக்ஸ் பண்ணிடணும்.
பண்ணிடுவோம்...!
எல்லாமே திட்டம் போட்டபடி நடக்கணும்!
நடக்கும்...
சரி.. ஏதாவது பிரச்னைன்னா எனக்கு போன் பண்ணு!
மறுமுனை செல்போனை அணைத்து விடவே வேனை ஓட்டிக் கொண்டிருந்த ராகவன் கேட்டான்.
போன்ல யாரு...?
நமக்குப் படியளக்கிற பெருமாள்.
ரொம்பவும் பயப்படறார் போலிருக்கு!
பின்னே.. பயம் இருக்காதா?
இளங்கோ சொன்ன விநாடி வேன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அந்த செக்போஸ்ட்டின் குறுக்குக் கம்பத்துக்கு முன்பாய் நின்றது. செக்போஸ்ட் செண்ட்ரி கையில் ஆறு செல் பெரிய டார்ச்சோடு வேனை நெருங்கினார்.
வேன் எங்கே போகுது...?
பொன்னேரி.
வேன்ல என்ன...?
ஃப்ளக்ஸ் போர்டு...! சா.ம.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளர் அனல் புண்ணியகோடியின் பிறந்த நாள் விழா ஃப்ளக்ஸ் போர்டு.
"உள்ளே ஃப்ளக்ஸ் போர்டு மட்டும்தானா...? இல்லே வேற ஏதாவது இருக்கா...?’
வேற ஒண்ணும் இல்லை...! வேணும்ன்னா பார்த்துக்க.
செக்போஸ்ட் செண்ட்ரி ஒரு நம்பாத பார்வையோடு வேனுக்குள் ஏறிப் பார்த்தார். ஃப்ளக்ஸ் போர்டின் மேல் டார்ச்சின் வெளிச்ச வட்டத்தை வீசினார். போர்டில் ‘அனல் புண்ணிய கோடி’ தன் தலைக்கு மேல் இரண்டு கைகளையும் உயர்த்தி பெரிதாய்க் கும்பிடு போட்டபடி சிரித்தார். பல்வரிசை கொட்டை கொட்டையாய் தெரிந்தது. அவருடைய போட்டோவுக்கு கீழே கவிதை வரிகள் ஓடியிருந்தன.
வாழும் வள்ளலே! புண்ணிய பூமியே!
இன்று உனக்குப் பிறந்த நாள்.
உன் தொண்டர்களாகிய
எங்களுக்குச் சிறந்த நாள்.
ஏழை மக்களுக்கு தங்களுடைய
துன்பங்களை மறந்த நாள்.
உனக்கு வாழ்த்துக்களைச் சொல்ல
அணி அணியாய் வருகிறோம்.
செக்போஸ்ட் செண்ட்ரி டார்ச் வெளிச்சத்தை அணைத்துவிட்டு தலையசைத்தார். மூங்கில் கம்பு மேல்நோக்கி உயர்ந்தது.
ம்... போங்க...!
வேன் நகர்ந்தது.
ராகவன் பெருமூச்சுவிட்டான்.
நல்லவேளை... ஆர்.சி.புக் கேட்கலை...!
செண்ட்ரிக்கு ட்யூட்டி முடியற நேரம். அதுவும் தூக்கக் கலக்கம் வேற.. அதுதான் அதிகமாய் குடையலை...!
வேன் வேகம் எடுத்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடம் -
பொன்னேரி பைபாஸ் ஐந்து சாலைகளின் சங்கமத்தோடு வந்தது. சுற்றிலும் போடப்பட்டு இருந்த சோடியம் வேபர் விளக்குகள் வெளிச்சத்தை உச்சபட்சமாய் உமிழ்ந்து அந்த இடத்தை ஒரு வெளிச்சக் காடாய் மாற்றியிருந்தன.
வேனை ஒரு மின்சார கம்பத்துக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினார்கள். சுற்றும் முற்றும் பார்த்தார்கள். எந்த திசையிலும் ஆள் நடமாட்டம் இல்லை என்பது ஊர்ஜிதமானதும் ஃப்ளக்ஸ் போர்டை இறக்கி தூக்கிக் கொண்டு போய் மின்சாரக் கம்பத்தோடு சேர்த்து வைத்துக் கட்டினார்கள்.
இளங்கோ கேட்டான்.
ஸ்டிக்கரை நீ ஒட்டறியா... நான் ஒட்டட்டுமா?
நீயே ஒட்டு...! என்னைவிட நீதான் உயரம்!
சொன்ன இளங்கோ தன் கையில் வைத்து இருந்த நீண்ட கவரைப் பிரித்து அந்த ஒரு அடி நீளமுள்ள இரண்டு ஸ்டிக்கர்களை எடுத்தான். கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட ராகவன் ஃப்ளக்ஸ் போர்டு அருகில் போய் நின்றான். அனல் புண்ணிய கோடி ஃப்ளக்ஸ் போர்டில் சிரித்துக் கொண்டிருக்க அவர்க்குக் கீழே தெரிந்த வாசகங்களைப் பார்த்தான்.
‘வாழும் வள்ளலே! புண்ணிய பூமியே
இன்று உனக்குப் பிறந்த நாள்’ என்ற வரிகளைப் படித்துவிட்டு கையில் இருந்த ஒரு ஸ்டிக்கரைப் பிரித்து ‘பிறந்த நாள்’ என்ற வார்த்தையின் மேல் ‘இறந்த நாள்’ என்னும் வார்த்தையை ஒட்டினான். பிறகு கடைசி இரண்டு வரிகளில் உள்ள ‘உனக்கு வாழ்த்துக்களைச் சொல்ல அணி அணியாய் வருகிறோம்.’ என்ற வரிகளில் உள்ள ‘வாழ்த்துக்களைச் சொல்ல’ என்னும் வார்த்தையின் மேல் ‘மலர் வளையங்களை வைக்க’ என்று அச்சிட்ட ஸ்டிக்கரை ஒட்டினான்.
இளங்கோ இப்போது முழு ஃப்ளக்ஸ் போர்டையும் வாய்விட்டுப் படித்தான். வாழும் வள்ளலே! புண்ணிய பூமியே! இன்று உனக்கு இறந்தநாள். உன் தொண்டர்களாகிய எங்களுக்கு சிறந்த நாள். ஏழைமக்களுக்கு, தங்களுடைய துன்பங்களை மறந்த நாள். உனக்கு மலர்வளையங்களை வைக்க அணி அணியாய் வருகிறோம்.
சூப்பர்!
என்றான் ராகவன்.
கிளம்பலாமா?
ம்
இருவரும் வேனுக்குள் ஏறிக் கொண்டார்கள்.
வேன் கிளம்பி சிறிது தூரம் போனதும் இளங்கோ தன் செல்போனை எடுத்து அதில் இருந்த சிம்கார்டை எடுத்துவிட்டு வேறு ஒரு சிம்கார்டை போட்டு சில எண்களைத் தட்டினான்.
மறுமுனையில் ரிங் போய் குரல் கேட்டது. முரட்டு தொனி.
யாரு...?
ஜம்பு பேசறேன்..!
எந்த ஜம்பு...?
நீ அனல் புண்ணியகோடியின் வலது கை மெய்யப்பன்னு நினைக்கிறேன்.
ஆமா...! நீ யாரு...?
"நான் யார்ன்னு உனக்குத் தெரியாதபோது உன்கிட்டே பேசி பிரயோஜனம் இல்லை. நீ செல்போனை அனல் புண்ணியகோடிகிட்டே குடு...! ஒரு முக்கியமான விஷயத்தை