Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arththamulla Arattai
Arththamulla Arattai
Arththamulla Arattai
Ebook222 pages1 hour

Arththamulla Arattai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Arththamulla Arattai

Read more from Rajeshkumar

Related to Arththamulla Arattai

Related ebooks

Reviews for Arththamulla Arattai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arththamulla Arattai - Rajeshkumar

    22

    அர்த்தமுள்ள அரட்டை

    4-ஆம் பாகம்

    1

    விவேக் டி.வி.யின் ஸ்போர்ட் சேனலில் குத்துச் சண்டை விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்க, சமையலறையினின்றும் வெளிப்பட்ட ரூபலா ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டி.வி.யை அணைத்தாள்.

    ரூபி..! ஏன் டி.வி.யை ஆஃப் பண்ணிட்டே?

    இந்த கண்ராவி விளையாட்டையெல்லாம் பார்க்காதீங்க. இதெல்லாம் ஒரு விளையாட்டா..? காட்டு மிருகங்கள் கூட இப்படி சண்டை போட்டுக்காது.

    ரூபி..! குத்துச் சண்டையும் மற்ற விளையாட்டுகளைப் போல் ஆரம்பத்தில் சில பாதுகாப்பான விதிகளோடுதான் இருந்தது. ஆனால் போகப் போக விதிகள் தளர்த்தப்பட்டு இப்போ இது மரண விளையாட்டு மாதிரி ஆயிடுச்சு. கடந்த வாரம் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த லைட் வெயிட் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் அமெரிக்காவின் லியா வெண்டர் ஜான்ஸன் மெக்ஸிகோவின் ஜீசஸ் சாவேஸுடன் மோதினார். இருவர்க்கும் இடையே கடும்போட்டி நடந்தது. ஜீசஸ் சாவேஸ் விட்ட மூர்க்கமான குத்தில் நிலை குலைந்து விழுந்த ஜான்ஸன் சாம்பியன் பட்டத்தோடு உயிரையும் இழந்தார். இடி போன்ற அடி தலையை தாக்கியதால் மூளை, சிறுநீரகம் மோசமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணத்தை தழுவினார்.

    அடப்பாவமே! இப்படியொரு விளையாட்டு தேவைதானா..?

    அமெரிக்காவில் மக்கள் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கணும்ன்னு கடுமையாய் போராடத்தான் செய்யறாங்க. ஆனா அரசாங்கம் அதைக் கண்டுக்கிறதேயில்லை. 1920 -ம் வருஷத்திலிருந்து இதுவரைக்கும் அதாவது 85 வருட காலத்தில் சுமார் 900 பேர் இந்த விளையாட்டில் உயிர் விட்டுள்ளார்கள். மரணம் ஏற்படும் என்று தெரிந்தே மோதுவது சரியல்ல. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கூட பிற்காலத்தில் மூளை பாதிக்கப்படுவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். சிலர்க்கு உடம்பின் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பத்தடி நடக்கக் கூட சிரமப்படுகிறார்கள். இதையெல்லாம் போராட்டக்காரர்கள் எடுத்துச் சொல்லி விளையாட்டை தடை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; குறைந்தபட்சம் பாதுகாப்பாக வீரர்கள் மோத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளைப் போல பிரத்யேக தலைக்கவசம், கைகளில் பெரிய அளவிலான மிருதுவான க்ளவுஸ், விதிகளை மீறி கடுமையாய் தாக்கும்போது வெற்றிப் புள்ளிகளைக் குறைப்பது போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மரணம் போன்ற இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

    விவேக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசற்படியிலிருந்து சந்தேகக்கடல் சங்கீதா மெல்ல எட்டிப்பார்த்து கேட்டாள்.

    அங்கிள்..! நீங்க பிஸியா இருக்கீங்களா? நான் உள்ளே வரலாமா..?

    ரூபலா தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைத்தாள். அதுதான்... வந்துட்டியே... அப்புறம் என்ன..? வா... வா... உள்ளே வா..! உன்னோட சந்தேக மூட்டையை அவிழ்த்து ஒவ்வொரு கேள்வியாய் கேட்டுகிட்டு இரு... எனக்கு சமையல் கட்டுல வேலை இருக்கு.

    ஒரு நிமிஷம் ஆன்ட்டி..!

    என்ன..?

    என்னோட முதல் கேள்வியே சமையல் பற்றித்தான்..!

    அப்படியா..! சமையல் பற்றிய கேள்வின்னா அதை என்கிட்டயே கேட்கலாமே..? அங்கிளை ஏன் டிஸ்டர்ப் பண்றே?

    அது வந்து ஆன்ட்டி...

    என்ன இழுக்கறே..?

    கேள்வி என்னமோ சமையலைப் பத்தித்தான்... இருந்தாலும் அந்த கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்...

    ரூபலா விவேக்கிடம் திரும்பினாள்.

    பார்த்தீங்களா அவளை..! என்னை எவ்வளவு அழகா மட்டம் தட்டறா..?

    அய்யோ... ஆன்ட்டி..! நான் உங்களை மட்டம் தட்டலை. நிஜமாவே அந்த கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியாது...

    அப்படி என்ன பெரிய கேள்வி..? கேளு மொதல்ல!

    சங்கீதா சில விநாடிகள் தயங்கிவிட்டு தொடர்ந்தாள். ஆன்ட்டி..! வெளிநாட்ல இப்போ ஜி.எம்.வெஜிடபிள்ஸ்ன்னு புதுசா ஒருவகை காய்கறிகள் வந்து இருக்காம். அது மாதிரியான காய்கறிகளை சமைத்து சாப்பிடறதுதான் உடம்புக்கு ரொம்பவும் நல்லதாம். அதைப்பத்தி ஸ்டார் ந்யூஸ் சேனல்ல சொன்னாங்க. எனக்கு அது சரியா புரியலை. அதான் அங்கிள் கிட்டே கேட்டுட்டு போலாம்ன்னு வந்தேன்..! உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களே சொல்லுங்க ஆன்ட்டி..!

    என்னது! ஜி.எம்.வெஜிடபிள்ஸா?

    ஆமா... ஆன்ட்டி...

    நான் கேள்விப்பட்டதே இல்லையே?

    நீங்க கேள்விப்பட்டிருக்க மாட்டீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும் ஆன்ட்டி! அதான் அங்கிள்கிட்டே கேள்வி கேட்க வந்தேன்...

    என்னங்க! இவ சொல்ற மாதிரி ஜி.எம்.வெஜிடபிள்ஸ் என்கிற பேர்ல காய்கறிகள் இருக்கா..?

    இருக்கு...! எந்த ஒரு செயற்கை உரமும் போடாமே இயற்கை உரங்களை மட்டுமே உபயோகப்படுத்தி காய்கறிகளை உற்பத்தி பண்ணும்போது அந்த காய்கறிகளில் மனித உடம்புக்கு தேவையான எல்லா தாதுசத்துக்களும் கிடைக்கறது. இது மாதிரியான காய்கறிகளைத்தான் ஜி.எம்.வெஜிடபிள்ஸ் ன்னு சொல்றாங்க.

    அது என்ன ஜி.எம்..? அந்த எழுத்துக்களுக்கு முழு அர்த்தம் என்ன..?

    ஜெனிடிக்கலி மாடிஃபெய்ட் (GENETICALLY MODIFIED) என்ற வார்த்தைகளோட முதல் ரெண்டு எழுத்துக்கள்தான் ஜி.எம்...! நம் உடலில் சில அலர்ஜி நோய்கள், உள்ளுறுப்பு கோளாறுகள் ஏறபடுவதற்கு மரபணுக்களும் காரணம். நம் உடலில் பரம்பரை பரம்பரையாக இருக்கும் அணுக்கூறு என்ற செல் உடலில் பலவிதமான கோளாறுகளை உண்டாக்குபவை. இப்படி மரபு வழியாக ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்துவது சிரமம். மனித உடல் எப்படியோ அதே போல்தான் சில காய்கறிகளிலும் மரபணு குறைபாடுகள் உள்ளன. உடலில் உள்ள மரபுக் கூறுகளை மாற்றினால் எப்படி நோய் வராமல் தடுக்க முடியுமோ அது போல் இப்படிப்பட்ட காய்கறிகளில் உள்ள தீமையான மரபுக் கூறுகளைப் பிரித்து மாற்றியமைத்தால் தப்பான மரபுக் கூறு இல்லாத ஆரோக்கியமான காய்கறிகள் நமக்கு கிடைக்கும். சில பேர்க்கு கத்திரிக்காய், சேனைக்கிழங்கு சாப்பிட்டால் உடம்பில் நமைச்சல் ஏற்பட்டு அலர்ஜி நோய்கள் உண்டாகும். இதே கத்திரிக்காயிலும் சேனைக் கிழங்கிலும் உள்ள அலர்ஜியை ஏற்படுத்தும் மரபுக் கூறுகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு நல்ல மரபுக் கூறுகளை சேர்த்துவிட்டால் போதும். கத்திரிக்காயையும் சேனைக் கிழங்கையும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    இந்தியாவுக்கு இந்த ஜி.எம்.வெஜிடபிள்ஸ் வந்தாச்சா..?

    இந்தியாவில் இப்போது அதிகாரபூர்வமாய் ஜி.எம். முறையில் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது பருத்தி மட்டுமே. காய்கறி உற்பத்திக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படலை. எப்படியும் அடுத்த சில வருஷங்களில் இந்தியாவின் எல்லா காய்கறிக் கடைகளிலும் ஜி.எம். வெஜிடெபிள்ஸ் கூடை கூடையாய் விற்பனைக்காக காத்துகிட்டு இருக்கும்.

    அந்த நாள் சீக்கிரமாவே வரட்டும்... ரூபலா சொல்லிவிட்டு சமையலறைக்குள் போய்விட விவேக் சங்கீதாவிடம் திரும்பினான். உன்னோட கேள்வி நேரம் முடிஞ்சுதா..? இன்னமும் இருக்கா?

    இன்னும் ஒரே ஒரு கேள்வி அங்கிள்.

    கேட்டுடு...

    உலகத்திலேயே பெரிய பயணிகள் கப்பல் குயின் எலிஸபெத்-2 ன்னு சொல்றாங்க. அது உண்மையான செய்தியா அங்கிள்?

    உண்மையானதுதான்.

    அதுல எத்தனை பேர் பயணம் செய்யலாம்?

    மூவாயிரம் பேர் பயணம் செய்யலாம். கப்பலோட மொத்த பரப்பளவு ஐயாயிரம் சதுர மீட்டர். நல்லா கவனி ‘அடி’ அல்ல. மீட்டர்.

    இந்த கப்பலில் என்னென்ன இருக்கும்?

    சாதாரண ஹோட்டலிலிருந்து நட்சத்திர ஹோட்டல் வரைக்கும் உண்டு. இது தவிர ரெஸ்டாரெண்ட், காபி பார், ஃப்ரூட் ஸ்டால், ஒரு சின்ன பஜார், சினிமா தியேட்டர், நீச்சல் குளம், ஒரு பார்க்ன்னு எல்லாமே உண்டு...

    "அடேங்கப்பா..!’

    பயணிகள்ல ஒருத்தர்க்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டா உடனே அவரைக் காப்பாற்ற மருத்துவமனையும் ஸ்பெசலிஸ்ட் டாக்டர்களும் உண்டு. எல்லாவித நோய்களுக்கான மருந்துகளும் கிடைக்கும். இது தவிர தினப் பத்திரிகை அச்சடிக்க பெரிய பிரஸ்ஸும், ஒரு பத்திரிகை அலுவலகமும் உண்டு...

    அப்போ... அது ஒரு ஊர்ன்னு சொல்லுங்க அங்கிள்.

    ம்... சொல்லலாம்... இந்த கப்பலோட வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர். ஒரு கார் மாதிரியே கடலில் பறக்கும்.

    "இந்தக் கப்பல் எந்த நாட்டுக்கு சொந்தமானது?

    சங்கீதா கேட்ட இந்த கேள்விக்கு ப்ரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது என்று விவேக் பதில் சொன்னான்.

    2

    வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழைந்த விவேக், ரூபலா டல்லாக சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் எதிரில் போய் உட்கார்ந்தான்.

    என்ன ரூபி...! டி.வி.சீரியல் பார்க்கிறதைக் கூட தியாகம் பண்ணிட்டு இப்படி உட்கார்ந்திருக்கே...? என்னாச்சு...?

    மத்தியானத்திலிருந்து ஒரே தலைவலிங்க....

    மாத்திரை எடுத்துக்க வேண்டியதுதானே?

    ரெண்டு மாத்திரை சாப்பிட்டாச்சு... சூடா ஒரு காப்பியும் ஒரு டீயும் விழுங்கியாச்சு. பின்னந்தலையில் ‘திம்’மென்று உட்கார்ந்திருக்கிற தலைவலி கொஞ்சம் கூட அசையலை.

    என்ன மாத்திரை சாப்பிட்டே?

    ரூபலா பெயரைச் சொன்னாள்.

    அது தலைவலிக்கு நல்ல மாத்திரையாச்சே...? மாத்திரை சாப்பிட்ட பத்தாவது நிமிஷம் வலி தலை தெறிக்க ஓடிடுமே...

    ஓடலையே...

    "அப்படீன்னா

    Enjoying the preview?
    Page 1 of 1