Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muththangal Theernthu Vidumo
Muththangal Theernthu Vidumo
Muththangal Theernthu Vidumo
Ebook183 pages1 hour

Muththangal Theernthu Vidumo

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465636
Muththangal Theernthu Vidumo

Read more from R.Geetharani

Related authors

Related to Muththangal Theernthu Vidumo

Related ebooks

Reviews for Muththangal Theernthu Vidumo

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muththangal Theernthu Vidumo - R.Geetharani

    1

    மார்கழி மாதத்தின் பனி வாடைக் காற்றும், தூரத்தே உள்ள பெருமாள் கோவிலின் கோபுர உச்சியில் எரியும் சுடர் விளக்கொளியும், கோவில் ஸ்பீக்கரின் ‘கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா...’ வின் ஒலியும்அதிகாலைப் பொழுதை இன்னிசையாக தாலாட்டிக் கொண்டிருந்தது.

    ராதை, தேர்க்கோலம் போடலாமா, இழைப்புள்ளிக்கோலம் போடலாமா என யோசித்து கைக்கு வந்த ரங்கோலி டிசைனை வரைந்து துரிதமாக கலர் கோலப் பொடியும் தகுந்தாற் போல் நிறைத்து - தயாராய் வைத்திருந்த சாணிப் பிள்ளையாரை கோலத்தின் நடுநாயகமாக நிறுத்தி அதன் தலையில் பூசணிப் பூவைச் சொருகி நிமிரவும், வானம் சாம்பல் பூச்சடைந்த தன் போர்வையை விலக்கிக் கொண்டு கிழக்கின் அடிவானில் சூரியக் குழந்தையை பிரசவிக்கும் வேதனையை விளம்பும் முகமாக பொன்வர்ண கிரணக் கற்றைகளை ரேக்குகளாக நீளவிட்டுக் கொண்டிருந்தது.

    பட்சிகளின் டிர் டிர் டிர்ரக்குகள், பால்காரனின் சைக்கிள் மணியோசை என பொழுது புலர்ந்து பரபரப்பாக மலர்ந்தது.

    ராதை சற்று தூரம் தள்ளி நின்று தான் போட்ட கோலத்தின் அழகை ரசித்து திருப்தியுடன் தலையாட்டிக் கொண்டவளாய் உள்ளே சென்றாள்.

    கண்மணியின் பிஞ்சு இதழ்கள் மெல்ல பிளந்திருக்க, முத்துப் பற்களின் வரிசை லேசாய் முகம் காட்டியிருக்க, தொடைக்கு மேலேறிக் கிடக்கும் நீலநிற நைட் ட்ரஸ்ஸினை பொருட்படுத்தத் தெரிந்திராத ஆழ்ந்த உறக்க ஆழியில் அவள் அமிழ்ந்து கிடந்தாள்.

    தூங்கறதைப் பாரேன்... செல்லம்...! கேசத்தை வருடி - பக்கவாட்டில் அமர்ந்து - மென்மையாய் குனிந்து கன்னத்தில் முத்தமிட்டாள் ராதை.

    பொசு பொசுவென்ற கன்னம் மிக மென்மையாய், இதழில் அழுந்தின சுகத்தில் தன்னை மறந்தவளாய் மீண்டும் முத்தமிட்டாள்.

    கண்மணி உறக்கம் கலையாமலேயே மெல்லிய முக சுணக்கத்துடன் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

    போர்வையை முதுகு வரை இழுத்துப் போர்த்தி விட்டு ராதை எழுந்து கொண்டாள். பார்வைக்கு நேராய் தென்பட்ட சுவர்க் கடிகாரம் மணி ஆறைத் தொடப் போகிறது என்பதனை அறிவிக்கும் முகமாக கடிகார களத்தில் முட்களை தொடரோட்டத்தில் ஓட விட்டுக் கொண்டிருந்தது.

    செண்பகவல்லி - ராதையின் அம்மா - இந்நேரம் கூடாரவல்லிப் பூஜை முடித்து பொங்கல், சுண்டல் பிரசாதத்துடன் வெளிப் பிரகாரம் தாண்டி வந்து கொண்டிருப்பாள். ஐந்தே நிமிட நடையில் வீடு வந்து சேர்ந்து விடுவாள் என்பதனை கணித்து - கேஸ் ஸ்டவ்வில் பால் குக்கரை ஏற்றினாள்.

    கூந்தலின் முடிச்சில் லேசாய் ஈரப்பதம் கனிந்து நின்றிருந்ததில் முதுகுப் பிரதேசம் முழுக்க சில்லிப்பு. சமையலறையின் ஜன்னல் வழியே தவழும் இளந்தென்றலின் கனபரிமாணம் கூடும் பொழுதெல்லாம் அடுப்பின் நீலநிற ஜுவாலை ஆட்டம் கண்டது. ஜன்னல் கதவை மெல்ல சாத்தி உள்ளுக்கு இழுத்தாற்போல் கொண்டி போட்டு விட்டு திரும்பினாள்.

    வேலைக்காரப் பெண்மணி கஸ்தூரியின் மகள் சகுந்தலாதான் வந்திருந்தாள்.

    என்ன சகுந்தலா... நீ வந்திருக்கே! அம்மா வரலையா...?

    அக்கா... அம்மாவுக்கு ராத்திரியிலிருந்து விட்டு விட்டு ஜுரம். அதனால தான் நான் வந்தேன்.

    ம்... சரி... சரி... தோட்டத்துப் பக்கமா தான் வேலை கிடக்கு நிறைய. சமையற்கட்டு வேலை உன் பக்குவத்துக்கு தோதுபடாது. நானே பார்த்துக்கிறேன். அம்மாவும் கோவில்ல இருந்து இப்போ வந்துடுவாங்க.

    சரிக்கா...! என்ற சகுந்தலா தோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு சென்றாள். சிலுசிலுவென்ற ஈரக்காற்று சுதந்திரம் கிடைத்த துள்ளலுடன் வெகு தாராளமாய் உள்ளே பிரவேசித்தது.

    கண்ணன் மாடியறையில் எழுந்து விட்டான் என்பதன் அறிவிப்பாக குளியலறையில் நீர் இறைபடும் ஓசை மிகத் துல்லியமாக ஒலித்தது.

    ‘கிணு... கிணுங்’ என்ற சைக்கிள் மணியோசையைத் தொடர்ந்தாற் போன்று ‘சரட்’டென்று மொசைக் தரை தொட்டது அன்றைய செய்தித்தாள். ஊரின் பொல்லாத திருடனைப் பார்த்து விட்டாற்போன்று டாமி தன் கோரப் பற்களைக் காட்டி சீறி விடாமல் குரைத்தது - நாராசமாய் எதிரொலித்தது.

    ஹேய்... டாமி... சும்மாயிருக்கமாட்டே...? என்று அதட்டினவாறே செண்பகவல்லி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

    ராதை, காபி டிகாஷனில் சர்க்கரையைக் கலந்து கண்ணனுக்குத் தனியாகவும், செண்பகவல்லிக்கு சற்றே குறைந்த விகிதத்திலான சர்க்கரை கலந்து தனியாகவும் என காபி டபரா செட்டுடன் கூடத்திற்கு வந்தாள்.

    மொசைக் தரையில் கிடந்த அன்றைய செய்தித்தாளைக் கையிலெடுத்துக் கொண்டவளாய் - செண்பகவல்லி மகளின் முன் வந்து நின்றாள். பூக்குடலையில் இருந்த பிரசாதத்தை மகளிடம் கொடுத்து விட்டு, காபி டபராவுடன் ஜன்னல் பக்கவாட்டில் அவளுக்காகவே என்று போடப்பட்டிருந்த ஈஸி சேரில் சென்று லேசாய் சாய்ந்தவாறு - பேப்பரை மடி மீது வைத்து சர்க்கரையில்லா காபியிலும் சுவை தேடி மிடறு மிடறாய் ரசித்து விழுங்கினாள்.

    அம்மா... கஸ்தூரிக்கு உடம்பு முடியலையாம். சகுந்தலா தான் வந்திருக்கா. தோட்டத்துப் பக்கம் வேலையை பார்க்கச் சொல்லி அனுப்பியிருக்கேன். கண்மணியை பார்த்துக்கோங்க. பேப்பர் எங்கேயும் போயிடாது. நான் அவரை கவனிச்சுட்டு வந்துடறேன்... அடுக்கடுக்காய் பேசினவாறே ராதை காபி டபரா செட்டுடன் மாடியேறினாள்.

    கண்ணன் - பெயருக்கேற்ற ஒரு அழகு. வெண்ணெயில் மையைக் குழைத்தாற் போன்ற ஒரு பொலிவு மின்னும் திரேகக் கட்டு. கறுப்பில் கூட கவர்ந்திழுக்கும் ஒரு வசீகரத்தன்மையை அவனிடம்தான் காண முடியும். ஈர்க்கும் காந்தக் கண்கள். ‘பம்ம்...’மென்று குலுங்கும் கேசக் கற்றையின் ஈரம் துவட்டி, ட்ரையரை ஆன் செய்தவனாய் ட்ரஸ்ஸிங் டேபிளின் முன் நின்றிருந்தான்.

    குட்மார்னிங்... - மென்மையான புன்னகையுடன் காபி டபராவை அவன் முன் நீட்டினாள்.

    ம்... மார்னிங் ராதா..! காபி வாசனை ஆளைத் தூக்குது. இன்னைக்கு என்ன டிபன் கண்ணம்மா...?

    ம்... இட்லி, பொங்கல். சட்னி இனிமேத்தான் ரெடி பண்ணணும்...!

    ஓ.கே...! பிரிப்பேர் பண்ணி நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. ஐ.எஸ்.ஓ. நைன் தௌசண்ட் ஒன்ல ஒரு புராஜெக்ட் கமிட்மெண்ட் இருக்குன்னு சொன்னேனில்லை? அது விஷயமா நான் டெல்லி போக வேண்டி வந்தாலும் வரும்...!

    என்னங்க... திடீர்ன்னு...?

    ம்... சீஃப் இப்போத்தான் செல்லுல பேசினார். ஸோ..., ராதாம்மா... என்னோட ட்ரஸ் செட்ஸ் எல்லாம் நீட்டா பேக் பண்ணிடு ப்ளீஸ். டிபன் நான் வெளியே பார்த்துக்கிறேன்டா செல்லம். கோபிச்சுக்காதே...! முகவாயைச் செல்லமாய் தொட்டு நிமிர்த்தின விரல்களுக்கு முத்தமிட்டவனை எந்த ஒரு சலனமுமில்லாது பார்த்தாள் ராதா.

    நீங்களும்... உங்க ப்ராஜெக்ட் ஒர்க்கும்... எப்போ ரெக்கை முளைக்குதுன்னே தெரியாமல்... என மெல்ல முனகினவாறே பீரோவைத் திறந்து - அவன் வெளியூர் பயணங்களுக்கு என பயன்படுத்தும் மினி கேரிடர் சூட்கேஸில் சஃபாரி செட் ஒன்றும், சாதாரணமான - ஆனால் மிக விலை உயர்ந்த பேண்ட் சர்ட் ஒன்றுமாக எடுத்து வைத்தாள். டவல், பாத் சோப், ஷேவிங் செட் பேக்கையும் ஓரமாக வைத்து ஷட்டரை மூடி ஜிப்பை இழுத்துவிட்டு நிமிர்ந்தவளின் முதுகுக்குப் பின்புறமாயிருந்து அணைத்தான் கண்ணன்.

    "ராதுக்குட்டி... செல்லம்... வர ஒரு நாலு நாளாகிடும் எப்படியும்...

    Enjoying the preview?
    Page 1 of 1