Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penalla Penalla Rojapoo
Penalla Penalla Rojapoo
Penalla Penalla Rojapoo
Ebook143 pages1 hour

Penalla Penalla Rojapoo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Penalla Penalla Rojapoo

Read more from V.Usha

Related to Penalla Penalla Rojapoo

Related ebooks

Reviews for Penalla Penalla Rojapoo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penalla Penalla Rojapoo - V.Usha

    20

    1

    விடிந்தும் விடியாததுமான மிக இளம் காலைப் பொழுது. கொய்யா மரக்கிளைகளில், வேம்பு - அத்தி - செம்பருத்தி என்று பச்சைக்கிளைகளில் பட்சிகளின் உற்சாகமான ஆரவாரம். எங்கோ வெகு தொலைவில் இருக்கும் பெருமாள் கோவிலில் காண்டாமணி அடிக்கும் ஓசையின் மிக மெல்லிய கீதம்.

    ஓவியா பழக்கடை வாசலில் வந்து நின்றாள்.

    இயற்கையின் நியதி மாறாத விடியல், மிக ரம்மியமாக அடிவானக் கிழக்கில் உதயமாகி விட்டதைப் பார்த்தபடி நின்றாள்.

    பறவைகளின் ரீங்காரம் அந்த அதிகாலை அழகுக்கு பின்னணி இசை சேர்த்தது.

    கண் மூடி நின்றாள் அவள்.

    இதைவிட அமைதி என்று எதைச் சொல்ல முடியும்? இதைக்காட்டிலும் சொர்க்கம் என்று எதை அழைக்க முடியும்?

    தாயின் காலடியில் சொர்க்கத்தைக் கண்டார் ஒரு மத அருளாளர். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ என்றார் ஒரு பகுத்தறிவாளர்.

    ஆனால் அவளைக் கேட்டால் வேறு விதமாகத்தான் சொல்லுவாள்.

    இந்த அழகான சின்னஞ்சிறு வீடு; சிமிழ் மாதிரி தோட்டம்; தாயுமானவராக இருந்து அவளை இமை போல வளர்த்து வரும் அப்பா - அவருடைய கிராமத்து மணம், சுவையான சமையல், அளவான பேச்சு, உற்சாகமான செயல், நெகிழ்வான மனசு இப்படி போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இந்த அதிகாலை விடியல் காட்சியை விட சொர்க்கம் என்பது எங்கே இருக்கிறது?

    புத்தம் புது டிகாஷனின் வாசம் வந்தது.

    ‘அட, அப்பா எழுந்து விட்டாரா?’

    இன்னொரு தடவை அந்த அடிவானச் சிவப்பு அழகைப் பார்த்தாள். விருட்டென்று ஒரு மைனா கொய்யாக்கிளையிலிருந்து கொஞ்சும் மைனாவாகப் பறந்த காட்சி போனஸாகக் கிடைக்க, அதையும் ஆசையுடன் பருகிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

    பாலை பாத்திரத்தில் விட்டு அடுப்பில் ஏற்றிக் கொண்டிருந்தார் அப்பா.

    அட எழுந்துட்டியாம்மா ஓவியா? ஏம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினாத்தான் என்னம்மா? ராத்திரி கூட ரொம்ப நேரம் கண் விழிச்சு புஸ்தகம் படிச்சுக்கிட்டிருந்தியே... போம்மா, போய் படுத்துக்க... என்றார் அவளைப் பார்த்து கரிசனத்துடன்.

    இல்லப்பா... இன்னிக்கு ஸாலரி டே இல்லையா? டெலிபோன்ஸ் ஸ்டாஃப் மொத்தப் பேரும் வந்து நின்னுடுவாங்கப்பா... தவிர, தீபாவளி வேற பக்கத்துல வந்தாச்சு... டி.டி. எடுக்கற கியூவும் பெரிசா இருக்கும்பா... அதான் சீக்கிரம் எழுந்துட்டேன். நீங்க நகருங்கப்பா, நான் காபி கலக்கிறேன்... அவள் தலை முடியை ஒருங்கிணைத்து கொண்டையாக்கியபடி அப்பா விடம் விரைந்தாள்.

    என்னம்மா இது?

    என்னப்பா?

    இப்பல்லாம் தெனமுமே வேலை அதிகமா இருக்கு ஆபிஸ்ல... களைச்சுப் போய் நீ வர்றதைப் பாத்தா என்னடா இதுன்னு கவலையா இருக்கு... இதுல தீபாவளி, ஸாலரின்னு வேற கூடுதல் வேலைன்னா எப்படிம்மா? என்றபோது அவரிடம் வருத்தம் வெளிப்படையாகத் தெரிந்தது.

    நீங்க மொதல்ல உக்காருங்க சொல்றேன் என்று அவரை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு அவள் வேகமாக பாலையும் டிகாஷனையும் கலந்தாள். அளவாக சர்க்கரை சேர்த்து இரண்டு கோப்பைகளில் விட்டுக் கொண்டு ஒன்றை நீட்டினாள்.

    நீயும் உக்காந்து குடிம்மா... நான் பாத்துக்கறேன் சமையலை... என்ற அப்பாவைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.

    அய்யோ, ஏம்பா இப்படி இருக்கீங்க? இது ஏழை நாடுப்பா! நேத்திக்கு பாங்க்ல ஒரு பையனைப் பாத்தேன்... பத்தொம்பது இருபது வயசுதான் இருக்கும்... ஒரு மெல்ட்டமெஷ் கம்பெனில வேலை பண்றான்... சம்பளம் என்ன தெரியுமா? ஆயிரத்து நானூறு. தெனம் ஆறு டு ஆறு இருந்து வேலை செஞ்சா பத்து ரூபா பஸ் சார்ஜ் கைல கெடைக்குமாம்... பி.ஏ எகனாமிக்ஸ் படிச்ச பையன்... ரொம்ப பரிதாபமா இருந்ததுப்பா எனக்கு... இப்படி உழைப்பும் உழைப்பாளிகளும் துன்பத்துல கெடக்கிறது எப்படிப்பா ஒரு நல்ல ஆட்சிக்கு லட்சணமா இருக்க முடியும்? தெரியலேப்பா... இதையெல்லாம் பாக்கும்போது நான் ராணிப்பா! கம்பீரமா உக்காந்து கவர்ன்மென்ட் வேலை செஞ்சு கண்ணியமா சம்பாதிக்கிறேனே, இதைப் போய் குறைபட்டுக்கலாமா?

    பாதி காபியை நிறுத்தியபடி அப்பா, நீ என்ன வேணா சொல்லும்மா... மனுஷன் மண்ணை மறந்தான், மழை மனுஷனை மறந்தது... விளை நிலங்களை எல்லாம் பட்டா போட்டு வித்தான், கருமேகங்கள் எல்லாம் அவனை விட்டு ஓடிப்போச்சு... எங்க பாத்தாலும் சுயநலம்... அப்புறம் எப்படிம்மா உழைப்புக்கு மரியாதை இருக்கும்? என்றார் பெருமூச்சுடன்.

    உண்மைதாம்பா... நகரம், கிராமம்னு முன்னெல்லாம் ரெண்டு பிரிவுகள் இருந்தது... வாய்க்கால், வரப்பு, தோட்டம், பயிர், பம்பு செட்டுன்னு சின்ன வயசுல நான் பார்த்த கிராமம் என் கண்ணைவிட்டு மறையவே இல்லப்பா... ஆனா அந்த கிராமமெல்லாம் இப்ப இல்லையேப்பா? பட்டணத்தைத் தேடி வந்துட்டாங்களே எல்லாரும்... யார் செஞ்ச குற்றம்பா இது? என்றாள் அவளும் கவலையுடன்.

    ஓவியா...

    என்னப்பா?

    நிஜமாவா சொல்றே? இன்னும் நம்ம அழகாபுரி ஞாபகம் இருக்காம்மா உனக்கு? அந்த மலை கிராமம் இன்னும் உன் மனசுல அழியாமலா இருக்கு?

    ஆமாம்பா... ஊட்டி தாண்டி முதுமலை போகிற வழில தானேப்பா எங்கேயோ இருக்கு அது? அப்ப நான் சின்னப் பொண்ணில்லே? ரொம்ப ரொம்ப சின்னவ நான் அப்போ... சிலுசிலுன்னு காத்து, மலை, மேகம், பச்சை மரம்னு அப்படியே ஞாபகம் இருக்குப்பா... இன்னும் கூட நமக்கு இடம் இருக்கில்லே அங்கே?

    ஆமாம்மா... பாழா கெடக்கு... என்றபோது அப்பாவின் குரல் நொந்திருந்தது. "அடிப்படையா விவசாயி தான்னாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1