Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjamellam Kadhal
Nenjamellam Kadhal
Nenjamellam Kadhal
Ebook146 pages56 minutes

Nenjamellam Kadhal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Nenjamellam Kadhal

Read more from V.Usha

Related to Nenjamellam Kadhal

Related ebooks

Reviews for Nenjamellam Kadhal

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjamellam Kadhal - V.Usha

    19

    1

    ‘அழகு என்றும் அஸ்தமிப்பதில்லை... ஆனால் அது மற்றொரு அழகிலே ஐக்கியமாகி விடுகிறது’ என்று தாமஸ் பெய்லி சொன்னதுதான் அவள் நினைவுக்கு வந்தது.

    நேற்று வரை மொட்டாக இருந்தது, இன்று அழகிய பூவாக மலர்ந்துவிட்டது.

    உள்ளங்கை அகலத்திற்கு விரிந்து, பளீரென்ற ரோஸ் வண்ணத்தில் நறுமணத்தை வீசியபடி காற்றில் ஆடுகிற ரோஜா மலரை வியந்து பார்த்தபடி உதயா நின்றாள்.

    மொட்டும் அழகாகத்தான் இருந்தது.

    மலரும் அழகாகத்தான் இருக்கிறது.

    ஸோ, ‘அழகான இயல்புடன் இருக்கும் எதுவும் எப்போதும் அழகாகத்தான் இருக்கும் - உருவத்தில் மாறுபாடு வந்தால்கூட,’ என்ற புதிய தத்துவத்தை உணர்ந்து கொண்டவளாக அவள் புன்னகையுடன் ரோஜாவையே பார்த்தபடி நின்றாள்.

    குட் மார்னிங் உதயா... என்று நான்ஸியின் குரல் கேட்டது.

    திரும்பினாள்.

    அதே புன்னகையுடன் குட்மார்னிங் நான்ஸி... என்றாள்.

    என்ன பாத்துக்கிட்டிருக்கே, ராத்திரி மழை கிழை ஏதாச்சும் வந்துதா? என்று நான்ஸியும் பக்கத்தில் வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

    ரோஜா நான்ஸி... அவளுடைய ஒற்றை விரல் அழகாக நீண்டது. நாலு நாளா நானும் கவனிச்சுட்டிருக்கேன் நான்ஸி... மொட்டாவேதான் இருந்தது... இன்னிக்கு சடார்னு மலர்ந்திருக்கு... பாரேன், எவ்வளவு ஃப்ரஷ்! எவ்வளவு ப்யூட்டி! வொண்டர் ஃபுல்...

    நான்ஸியும் ஆர்வத்துடன் பார்த்தாள்.

    என்ன தோணுது நான்ஸி உனக்கு? எனக்கு என்ன தோணுது தெரியுமா? மனுஷனை மென்மைப் படுத்தணும்னே இயற்கையால படைக்கப்பட்ட தேவதைதான் இந்த ரோஜாப்பூன்னு தோணுது... இதைப் பார்க்கற கண்களால எந்த குரூரத்தையும் பாக்க முடியாது... இதை ரசிக்கிற மனசு, எந்த வன்முறையையும் ஆதரிக்காது... என்ன சொல்றே நான்ஸி?

    பதில் சொல்லாமல் நான்ஸி சிரித்தாள்.

    "ஒத்துக்க முடியலையா நான்ஸி? ஏன் சிரிக்கறே?’

    ரோஜாக்களுக்கு புகழ்பெற்ற ஸ்டேட் எது உதயா? என்றபடி நான்ஸி செடியைப் பார்த்தாள். காஷ்மீர்தானே? காஷ்மீர்னாலே சிகப்பு ரோஜாக்கள்தானே கண் முன்னால் வரும்? அங்க இல்லாத வன்முறையா? அங்க ஓடாத ரத்த ஆறா? பூக்களுக்கும் மக்களுக்கும் உறவிருக்கும்னு எனக்கு தோணலே உதயா...

    ‘உண்மைதான்’ என்று அவளுக்கும் உடனே தோன்றியது.

    நான்ஸியின் பேச்சில் நிஜம் இருக்கிறது. பூக்கள் மனிதனை இதமாக்கும் என்றால், இந்த பூக்களின் ராணி மனிதனை புத்தனாகவே அல்லவா ஆக்கி இருக்க வேண்டும்? மாறாக, காஷ்மீரத்தில்தானே துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது?

    அப்படியானால் -

    மனிதனை எதுதான் கட்டுப்படுத்தும்?

    அவன் உள்ளத்தில் எதுதான் அமைதியை விதைக்கும்?

    உதயா...

    நான்ஸி மென்மையாக தன் தோழியின் தோளில் கை வைத்தாள்.

    உதயா திரும்பினாள்.

    ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குற உதயா?

    திடுக்கிட்டு உதயா, தோழியைப் பார்த்தாள்.

    பிடிவாதமா? நானா? என்ன சொல்ற நான்ஸி?

    வறண்டு போச்சு மனசுன்னு சொல்றே... கடமை தவிர வேற எந்த உணர்ச்சியும் இல்லேன்னு சொல்றே. ஆனா ரோஜாவை ரசிச்சுக்கிட்டு நிக்கறே... முரண்பாடா இருக்கு உதயா... உள்ளுக்குள்ள இருக்கிற உதயா என்கிற இளம்பெண்ணை நசுக்கி வெச்சுட்டு, பிடிவாதமா - அழுத்தமா ஒரு செயற்கையான உதயாவா உலவிட்டு இருக்கிறே... ஏன்? ஏன் இந்த பிடிவாதம் உதயா?

    நான்ஸியின் குரலில் ஆதங்கம் தெறித்தது.

    அவள் விழிகள் ஆதரவுடன் சிநேகிதியின் முகம் நோக்கின.

    தவிப்புடன் பார்த்தன.

    இல்லேன்னு எப்பவும் போல சொல்லிவிடாதே... நீ ஒரு அற்புதமான நர்ஸா இருக்கலாம்... ஆனா நான் சைக்காலஜி படிச்சவ... உடலுக்கு மருந்து கொடுக்கறதுதான் நர்ஸ் வேலை... உள்ளம், உணர்வுன்னு தீர்வுகளைத் தேடிப் போறவங்க நாங்க... உன் மனசு நல்லா தெரியுது எனக்கு...

    நான்ஸி ஒற்றை விரலால் உதயாவின் முகவாய் தொட்டு நிமிர்த்தினாள்.

    யோகியை நினைச்சுக் கிட்டிருக்கியா உதயா?

    காத்திருந்தவள்போல் உதயாவின் விழிகளில் முணுக்கென்று நீர் தளும்பிற்று.

    சொல்லு... உன்கூட மூணு வருஷமா பழகிட்டிருக்கேன்... உன்னோட கண்ணசைவு கூட புரியற நிலைமைக்கு வந்துட்டேன்... யோகியை மறக்க முடியாம தவிக்கறே நீ... சொல்லு, நிஜமா இல்லையா?

    உதயா வெளியில் பார்த்தாள்.

    வானம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

    இளம் சூரியனின் கிரணங்கள் தங்கள் பயணத்தை தொடங்கி விட்டன.

    தரையில் வந்து விழும் அந்த பொன் ஒளியைப் பார்த்தபடி அவள் நின்றாள்.

    உள்ளுக்குள்ளே வலி!

    வலி! வலி!

    சாதாரண வலியா அது? இன்னும் ஆறாத பச்சைப் புண்! கிளறிக் கிளறி குருதி கொட்டும் ரணம்! உயிரைப் புரட்டிப் போடுகிற வலி!

    யோகியை நினைக்கும் போதெல்லாம் உடலை ராட்டினம் போல சுழற்றி சுழற்றி வீசியெறிகிற வலி!

    ‘யோகி! யோகி!

    என்னுயிர் யோகி!

    எங்கே போனாய்?

    எப்படி இருக்கிறாய்?

    உயிரோடுதான் இருக்கிறாயா?

    என்னைப் பார்க்காவிட்டால் உயிரே போய்விடும் என்பாயே யோகி!

    மூன்று வருடங்களாக என்னைப் பார்க்காமல், என்னுடன் பேசாமல் எங்கே இருக்கிறாய் யோகி?’

    அணையே உடைந்தபடி பீறிடும் மழைநீர் போல விழிகள் பெருக்கெடுத்தன.

    நான்ஸி பதறிப் போனாள்.

    தோழியின் தோளில் மென்மையாக கையை அழுத்தியபடி சொன்னாள்.

    மன்னிச்சுக்கம்மா உதயா... பழைய நினைவுகளை கிளறிவிட்டுட்டேன்... ரோஜாவைப் பார்த்தபடி குழந்தையாட்டம் நின்னுக்கிட்டிருந்தியே... ஏதேதோ கேள்வி கேட்டு நோகடிச்சுட்டனே... மன்னிச்சுக்க உதயா... என்று குற்ற மனப்பான்மையுடன் அவள் தொண்டை வழுவழுத்தது.

    விழிகளை வினாடியில் சுண்டிவிட்டு உதயா திரும்பினாள்.

    "வருத்தப்படாதே நான்ஸி... உன் நல்ல மனசு எனக்குத் தெரியாதா? என் மேல நீ வெச்சிருக்கிற பரிவும் கருணையும் புரியாதா? யோகியை என்னால் மறக்கத்தான் முடியுமா நான்ஸி? என் உடல் எரிஞ்சு சாம்பலான பிறகும்கூட

    Enjoying the preview?
    Page 1 of 1