Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhai Kalathil Vanthaai
Mazhai Kalathil Vanthaai
Mazhai Kalathil Vanthaai
Ebook148 pages1 hour

Mazhai Kalathil Vanthaai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Mazhai Kalathil Vanthaai

Read more from V.Usha

Related to Mazhai Kalathil Vanthaai

Related ebooks

Reviews for Mazhai Kalathil Vanthaai

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhai Kalathil Vanthaai - V.Usha

    23

    1

    இன்றைக்கும் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.

    அவள் பரபரப்புடன் வார்டு முழுவதும் தேனியைப் போல சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தாள்.

    கவிதா சிஸ்டர்... ப்ளீஸ் ப்ளீஸ்... இஞ்செக்ஷனை நீங்களே போடுங்களேன். உண்மையிலேயே சொல்றேன் சிஸ்டர்... நீங்க போடும்போது வலியே வர்றதில்லே சிஸ்டர்... அந்த கலாவதியும், மீனாவும் மாட்டுக்கு ஊசி போடற மாதிரி குத்துறாங்க சிஸ்டர்...

    நீ கொடுத்துட்டுப் போனியேம்மா கவிதா, மஞ்சள் கலர்ல கடுகு மாத்திரை... ராத்திரி அப்படி ஒரு தூக்கம்மா, சொர்க்கம் போல... காலைல எந்திரிக்கும் போது அவ்வளவு சுறுசுறுப்பா இருந்துச்சு. தலைவலி போன இடமே தெரியலேம்மா.

    சிஸ்டர்... கவிதாதானே உங்க பேரு? இந்த ட்ரஸ்சிங் நீங்களே பண்ணிடுங்களேன். வேற யாரு செஞ்சாலும் கச்சிதமாவே இல்லே சிஸ்டர்... ஒண்ணு ரொம்ப லூசா இருக்குது... இல்லே ஏகப்பட்ட டைட் ஆய்டுது... ப்ளீஸ் சிஸ்டர்.

    இதோ வரேன்... என்ற இரண்டு வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு அவள் சுறுசுறுவென்று இயங்கிக் கொண்டிருந்தாள்.

    மக்கள்! அவர்களைத்தான் எத்தனை நோய்கள் வந்து சரணடைகின்றன! எத்தனை யெத்தனை வலிகள், நோவுகள், நோய்கள்! எவ்வளவு எவ்வளவு காரணங்கள், சிகிச்சைகள், ரணங்கள், மருந்துகள்! மனித உடல் என்பது இயந்திரம்தான். அசெம்ப்ளிங் சரியாக இருந்தாலும், அதன் கட்டமைப்பு ஏதோ ஒன்றில் பிரச்னை வந்து கொண்டுதான் இருக்கும்.

    கவிதா... மேட்ரன் வந்து நிற்பதை அப்போதுதான் கவனித்தாள்.

    குட் மார்னிங் சிஸ்டர்... என்றாள். உடனே புன்னகை மலர்ந்தது.

    பெரிய டாக்டரைப் பாத்தியா?

    இல்லே சிஸ்டர்... ஏன்?

    உன்னை வரச்சொன்னார்...

    எதுக்கு சிஸ்டர்?

    தெரியலேம்மா... டியூட்டி முடிஞ்சதும் போய்ப்பாரு...

    சரி சிஸ்டர்.

    உன் அக்கா எப்படி இருக்கா?

    அப்பப்ப நெஞ்சு வலி வருது சிஸ்டர்... மாத்திரை போட்டுக்க வேண்டியதா இருக்கு... அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனசு வேதனையா இருக்கு சிஸ்டர்.

    டோன்ட் ஒர்ரி... எல்லாம் சரியாய்டும். உன்னை ஒழுங்கா பாத்துக்க. பயங்கரமா இளைச்சுட்டே போற... என்று தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு மேட்ரன் நகர்ந்த போது, அக்காவின் முகம் உள்ளே தோன்றியது.

    அக்கா மட்டுமா அவள்? இல்லை. அம்மாவும் அவள்தான். போன வருடம் வாய்ப்புற்றுநோயால் அப்பா உயிரை விடும் வரை... ஏதோ, பெயருக்குத்தான் குடும்பத் தலைவராக இருந்தார். கண்ணும் கருத்துமாக குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றியது அக்காதான். அப்பாவின் வற்புறுத்தல் அளவுக்கு மீறிப் போனதால்தான் மணவாளனை அவள் திருமணம் செய்து கொண்டாள். அவளைப் பொறுத்தவரை கவிதா கவிதா கவிதா என்று கவிதா மட்டுமே உலகமாக இருந்தாள். ஏன்... இப்போதும் கூட அப்படித்தான்.

    கௌம்பு கவிதா... டியூட்டி நேரம் முடிஞ்சும் வார்டை சுத்திச் சுத்தி வர்ற ஒரே நர்ஸ் நீதான். கௌம்பு... என்று வினோதினி முதுகில் தட்டவும், புன்னகைத்து விட்டு அவள் வெளியில் வந்தாள்.

    படிகளில் ஏறி, பெரிய டாக்டர் முத்தரசுவின் அறை நோக்கி நடக்கும் போது ‘ஏன் அழைத்திருப்பார்?’ என்று யோசனை ஓடியது.

    அவரை வெறும் ‘டாக்டர்’ என்பதோடு நிறுத்திக் கொள்ள முடியாது. பொது வாழ்க்கைக்காகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் அவர். ஐந்து குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து, கல்விச் செலவு முழுமையும் பார்த்துக் கொள்வது, நகர்ப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தும் போது அந்த இடங்களின் வசதி வாய்ப்புகள், சுத்தம் என்று பார்த்து அரசாங்கங்களுக்கு அறிக்கை அனுப்புவது என்று தொழிலுக்கு அப்பாற்பட்டு மன ரீதியாக செயல்படுகிற நல்ல மனிதர் அவர்.

    குட் மார்னிங் டாக்டர்... என்று கதவை நாசூக்காக ஒரு தடவை தட்டி விட்டு உள்ளே போனாள்.

    வெரி குட் மார்னிங்... உக்காரும்மா கவிதா. நைட் டியூட்டிதானே? என்று புன்னகைத்தார்.

    ஆமாம் டாக்டர்... இப்பத்தான் வர்றேன் வேலை முடிஞ்சு. மேட்ரன் சொன்னாங்க.. கூப்பிட்டீங்களா டாக்டர்?

    ஆமாம்மா... என்றவர் அவள் முகத்தை ஒரு முறை வியப்புடன் உற்றுப் பார்த்தார்.

    என்ன டாக்டர்?

    ஆச்சரியமா இருக்கும்மா.

    என்ன டாக்டர்?

    உன் முகம்.

    முகமா?

    ஆமாம்மா... நைட் டியூட்டி பார்த்த களைப்பே தெரியலையே... பூ மாதிரி இருக்கும்மா... ரியலி...

    ஓ நோ... என்றாள் சற்று கூச்சத்துடன்.

    ரெண்டு மணி நேரம் ஜாயின்ட் ரீ ப்ளேஸ்மென்ட் சர்ஜரிலயே போயிடுச்சு டாக்டர். அதுக்குப் பிறகு போஸ்ட் கேர் வார்ட், யூசுவல் இன்ஜெக்ஷன்ஸ், ட்ரக்ஸ்னு முழுசும் வேலை இருந்தது.

    கிரேட் மா கவிதா... என்றார் மலர்ச்சியுடன். டெடிகேஷனோட வேலை செய்யுறதே அழகுதான். ஆனா, அது எல்லார்கிட்டயுமா இருக்கு? இல்லம்மா... கூலிக்கு மாரடிக்கிற ஆட்கள்தான் அதிகம் நம்ம நாட்டுல. வேலையை நேசிக்கிற மனிதர்கள் ரொம்ப கம்மி பர்சன்ட்டேஜ் தான்.

    உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான் டாக்டர்... எதையும் மனப்பூர்வமா செய்யும் போதுதான் மன நிறைவும் திருப்தியும் கிடைக்குது என்கிற தத்துவத்தை உங்க செயல்கள் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தது. என்றாள் அவள் அடக்கத்துடன்.

    வெல் வெல்... என்று சிரித்து விட்டுச் சொன்னார். உன்னை வரச்சொன்னது ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தம்மா... இந்த ஆஸ்பிடல்ல மூணு வருஷம் முடிஞ்சுதில்லையா உனக்கு? ட்ரான்ஸ்ஃபர் போடலாம்னு இருக்கேன்.

    நிமிர்ந்தாள்.

    "என் நண்பன்மா... மாஜி எம்.எல்.ஏ... ஆனால் இப்பவும் நல்ல செல்வாக்கோட இருக்கான். அவனுடைய சொந்த ஊர் விழுப்புரம் தாண்டி இருக்கிற தாழக்குடி கிராமம். அங்க இருக்குற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1