Suriyagrahanam
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsVeezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5
Related to Suriyagrahanam
Related ebooks
Sollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsAmma Pillai Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Vikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Kaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Penn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Ammavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSavithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5Kakitha Roja Rating: 5 out of 5 stars5/5Melam Kotta Vaa Rating: 0 out of 5 stars0 ratingsKanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Saayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Theertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Vasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kodu Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Suriyagrahanam
1 rating0 reviews
Book preview
Suriyagrahanam - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
சூரியகிரகணம்
Suriyagrahanam
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
1
பால்கனிச் சுவரிலிருந்து கொஞ்சமாகக் குனிந்து எட்டிப் பார்த்தால் பிள்ளையார் கோயில் தெரியும். பிள்ளையாரின் தொந்தியும் பக்கத்தில் எரியும் தீபச் சுடரும் தட்டில் உள்ள விபூதி கிண்ணமும் தெரியும். விடிகாலை நேரத்தில் அபிஷேகமும் தீபாராதனையும் தினமும் நடக்கும். கணேசன் கொஞ்சம் குனிந்து பிள்ளையாரை தரிசனம் செய்ய முயலும் போது இரவு பெய்து பால்கனியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வழுக்கியது. தலை குப்புற உடம்பு தரை நோக்கிச் சென்றது.
சட்டென்று விழிப்பு கண்டது. தூக்கத்தில் உடம்பு திடீரென்று கீழே விழுவது போல் ஆடியது. குப்பென்று ஏதோ பயம் உடம்பை நடுக்கியது. என்ன கனவு இது? கணேசன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு கழுத்து திருப்பி மணி பார்த்தான். மணி மூன்றே கால். அதற்குப் பிறகு உறக்கம் வரவில்லை. எழுந்து வெளியில் வந்தான். வீடே நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.
ஹாலில் மாமா மட்டும் படுத்திருந்தார். மெல்லிய குறட்டை ஒலி ஹாலை நிறைத்திருந்தது. மற்ற அனைவரும் அவரவர் அறையில் படுத்திருந்தனர். கணேசன் வெளிக்கதவு திறந்து வெளியில் வந்த போது காற்று சிலீரென்று முகத்தைத் தாக்கியது. கார், ஷெட்டுக்குள் விடப்பட்டிருந்ததால் போர்டிகோ காலியாக இருந்தது. நீளப்படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான்.
அந்த விடிகாலை ஈரப்பதமும் ஈரக்காற்றும் இதமாக இருந்தது. இந்த நிசப்தத்தில் ஜேசுதாஸின் ஏதேனும் பக்திப்பாடல் அருகில் ஒலித்தால் எப்படி இருக்கும்? யோசித்து கற்பனையிலேயே ஆனந்தப்பட்டான். அம்மாமிக்கு பாட்டு பிடிக்காது. எந்தவகையான சங்கீதமும் அவளை அசைக்காது. மாமா அதற்கு நேர்மாறானவர். மாமாவுக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அளவு கடந்த ஈடுபாடு உண்டு. மாமா வீட்டில் இருக்கிறார் என்பதை மெல்லிய ஸ்தாயியில் ஒலிக்கும் இசையே காட்டிக் கொடுத்துவிடும். பின்னணியில் சங்கீதம் இல்லாமல் மாமாவால் எந்த வேலையும் செய்ய இயலாது.
மாமாவின் புத்திர சிகாமணி முரளிக்கு மேல்நாட்டு சங்கீதத்தில் மட்டுமே மோகம். சீனு அந்த விஷயத்தில் அம்மாமியைப் போலத்தான். வித்யா மட்டுமே மாமாவைப் போல இருந்தாள். ஜாடையிலும் சரி ரசனையிலும் சரி.
திருநெல்வேலியிலிருந்து கணேசன் முதன்முதலில் இங்கு வந்த புதிதில் அந்த வீட்டின் விதவிதமான குணாதிசயங்களைக் கண்டு குழம்பிப் போனான். அம்மாமியின் அடக்கியாலும் குணமும், முரளி சீனுவின் அலட்டல் குணங்களும் அதிகம் பேசாத வித்யாவின் சுபாவமும், தானுண்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கிவிடும் மாமாவின் குணமும் கண்டு யாரோடு எப்படிப் பழகுவது என்று புரியாமலே நிறைய நாள் திகைத்திருக்கிறான். ஊரை விட்டு ஏன் வந்தோம் என்று கூடத் தோன்றும். அம்மாமிக்கு அவன் வந்ததில் அவ்வளவாக இஷ்டம் இல்லை.
அதை அழுத்தந்திருத்தமாக சொல்ல இயலாத நிலையில் பேசாமல் இருக்கிறாள்.
போர்டிகோ விளக்கு திடும்மென்று எரிய கணேசன் திரும்பினான்.
யாரது கணேசனா
என்று கேட்ட குரல் அம்மாமியுடையது.
நாந்தான்
என்றான்.
என்ன இந்த நேரத்துல இங்க?
தூக்கம் வரலை…
அப்டின்னா ஒரு காரியம் செய். எழுந்து போய் கிணத்துலேர்ந்து தண்ணி இறைச்சு தோட்டத்துக்கு கொட்டு.
கணேசன் எழுந்து தோட்டத்து கிணற்றை நோக்கி நடந்தான். அம்மாமி லைட்டை அணைத்து கதவைத் தாழிடாமல் சார்த்திக் கொண்டு உள்ளே போய் மீண்டும் படுத்தாள்.
கணேசன் வாளியை கயிற்றில் கட்டி ஜகடையில் நுழைத்து வேகமாக உள்ளே இறக்கினான். மோட்டார் போட்டு ரப்பர் குழாய் மூலம் தோட்டத்திற்கு நீர் இறைக்க வசதியிருந்தும் அம்மாமி பெரும்பாலான நாட்கள் அவனைத்தான் கிணற்றில் நீர் இறைத்துக் கொட்டச் சொல்கிறாள். கணேசனுக்குத் தன் அம்மாவின் மீதுதான் கோபம் வந்தது. அவளால்தான் அவன் மாமா வீட்டுக்கு வர நேர்ந்தது. வியாபார விஷயமாக திருநெல்வேலி வந்திருந்த மாமா, தங்கையைப் பார்த்து விட்டுப் போகும் எண்ணத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தார். ஆனால் அம்மா அவர் தலையில் சுமை ஏற்றி அனுப்பி விட்டாள்.
பாவம் அவள் என்ன செய்வாள். அப்பா இப்படி ஈனமாக நடந்து கொள்வார் என்று யாருக்குத் தெரியும்? நாற்பது வயதில் நாய் குணம் என்று சொல்வது நிஜம்தான். இல்லையென்றால் தோளுக்கு வளர்ந்த பிள்ளையையும் பெண்ணையும் வைத்துக் கொண்டு புதுசாய் ஒரு பெண் துணை தேடத் தோன்றுமா என்ன? அதுவும் பிறன்மனை! வெட்கமாயில்லையா என்று அம்மா அழுதாள். திருக்குறளில் பிறன்மனை நோக்குதலின் கேவலம் பற்றி சொல்லியிருப்பதைச் சொல்லி திருத்த முயன்ற போது சிரித்தார்.திருக்குறள் எப்பொ எழுதினதுன்னு தெரியுமா உனக்கு?
என்றார்.
எப்பவோ…
எப்பவோ இல்ல! ஆயிரக்கணக்கான வருஷங்களாறது. ஸோ, திருவள்ளுவர் காலத்துலயே இது நடந்திருக்கு. எவனோ எவன் பொண்டாட்டியவோ பிராக்கெட் போட்டிருக்கான், அதான் திருவள்ளுவனும் எழுதி வெச்சுட்டு போயிருக்கான். என்னவோ ஊர்ல உலகத்துல நடக்காததை நாம் செய்துட்டா மாதிரி பேசறயே!
அம்மா துவண்டு போனாள்.
ஒருநாள் அப்பா அவளையும் இழுத்துக் கொண்டு காணாமல் போனார். அப்போது கணேசன் பி.ஏ. பரிட்சை எழுதியிருந்தான். அம்மா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டாள்.
கணேசா பாஸ் பண்ணிடுவாயில்லையா?
நிச்சயமா…
நல்ல மார்க்கு வருமா?
கண்டிப்பா வரும்.
இந்தக் குடும்பம் உன்னைத்தாண்டா நம்பியிருக்கு. நீ தலையெடுத்து தான் இதை ஒரு வழிக்கு கொண்டு வரணும். வருவயா?
வருவேனம்மா.
பரீட்சை ரிசல்ட் வந்தது. கணேசன் சொன்னபடி நல்ல மார்க் வாங்கியிருந்தான். பட்டம் வாங்கினவுடன் ராஜ உத்யோகம் கிடைத்து விடும் என்பது அம்மாவின் கனவு. அதனால்தான் அது கனவாகவே போயிற்று. உத்யோகம் என்பது குதிரைக் கொம்பு என்பது கணேசனுக்கும் அனுபவத்தில் புரிந்தது. நல்ல உத்யோகம் என்பது தொடுவானம் போல இதோ இதோ என்று கைக்கெட்டாமல் போய்க் கொண்டிருந்தது. மளிகைக்கடையில் கணக்கெழுதினான். நகைக்கடையில் கொஞ்ச நாள் வேலை பார்த்தான். மூட்டை தூக்கக் கூட அவன் தயாரான நிலையில் தான் மாமா ஊருக்கு வந்தார்.
வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமும் பரிமாறும் போதே அம்மா கண்ணீரோடு அப்பா ஓடிப்போன கதையையும் அவர் காதில் போட்டாள்.
கணேசன் பட்டம் வாங்கியிருக்கான். நீ தயவு வெச்சா அவனுக்கு ஏதாவது ஒரு வேலை தேடித் தரமுடியும். எங்க குடும்பம் வாழறதும் சாகறதும் உன் கைலதான் இருக்குண்ணா.
என்று அவள் கெஞ்சியதும் மாமா அவனையும் தன்னோடு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
ஏம்மா நானும் போய்ட்டா நீயும் புவனாவும் எப்டி தனியா…
இருந்துப்போம்டா…! ஒரு பயமும் இல்லை. புவனா படிச்சு முடிச்சதும் நடேசமுதலியார் நடத்தற ஸ்கூல்ல அவளுக்கு வேலை கிடைக்க முதலியார் கிட்ட சொல்லி வச்சுட்டேன். நீ அங்க போய் சமத்தா இருந்து நல்ல வேலை தேடிக்கப்பார்.
ஏம் மாமா நல்லவர்தான். ஆனா அம்மாமி எப்டியிருப்பா?
அவளைப் பத்தி என்னடா? அப்டியே அவ முகத்தைக் காட்டினாலும் நீ பொறுத்துக்கத்தான் வேணும். எங்களை நினைச்சுக்கோ. பொறுமை வந்துடும்…
சரிம்மா… ஆனா போட்டுக்க நல்லதா பாண்ட் சட்டை கூட இல்லையே. எல்லாம் காலர்கிட்டயும் கையடிலயும் கிழிஞ்சு கிடக்கு.
அம்மா ஒரு நிமிடம் யோசித்தாள்.சரி, நா எப்டியாவது நாளைக்கு பணம் தரேன். நீ நாலு ரெடிமேட் ஷர்ட் வாங்கிக்கோ.
சொன்னபடி மறுநாள் மாலை அம்மா அவனிடம் ஆயிரம் ரூபாயைத் திணித்தாள்.டிரெஸ் வாங்கிண்டது போக மிச்சத்தை செலவுக்கு வெச்சுக்கோ
என்றாள்.
ஏதும்மா பணம்?
அம்மா பதில் சொல்ல விருப்பப்படாதவள் போல தன் வேலைகளில் ஆழ்ந்திருந்தாள். கணேசன் பணத்தோடு கடைத்தெரு பக்கம் போனான்.
ரெண்டு செட் ட்ரெஸ்ஸும், பனியன் ஜட்டி என்று சிலதும் வாங்கிக் கொண்டது போக முன்னூறு ரூபாய் மிஞ்சியது. நல்லதாக பெட்டி கூட இல்லை. இருப்பதில் கொஞ்சம் வர்ணம் போகாமல் இருந்த ஒரு டிரங்குப்பெட்டியை பரணிலிருந்து இறக்கித் துடைத்து தன் சாமான்களை அடைத்துக் கொண்டான்.
ஏண்டா பெட்டிய தூக்க முடியுமா உன்னால?
முடியும் மாமா?
சரி வா!
என்றதும் விசுவாமித்திரனுக்குப் பின்னால் சென்ற ராமனைப் போல கணேசன் பவ்யமாக பெட்டியோடு மாமாவைத் தொடர்ந்தான்.
ரயிலடிக்கு அம்மாவும் வந்தாள். கண்கள் கலங்கியிருந்தது.நல்லபடியா நடந்துக்கோ என்ன?
என்ற அம்மாவின் கழுத்து மூளியாயிருப்பதை அப்போதுதான் கவனித்தான் கணேசன். மஞ்சள் கயிற்றில் ஒரு பவுனில் கோர்த்திருந்த திருமாங்கல்யத்தோடு சரடையும் காணவில்லை, பகீரென்றது.
வண்டி கிளம்ப நேரமிருந்தது. மாமா கடையில ஏதோ சாமான் வாங்கப்போயிருந்தார். கணேசன் மெல்ல அம்மாவிடம் கேட்டான்.
தாலிச்சரடு எங்கம்மா?
அறுத்துப் போட்டுட்டேன். அந்த தங்கத்தை வித்துத்தான் உனக்கு பணம் கொடுத்தேன்.
அவன் அதிர்ந்து போனான்.
அந்த கயிற்றைக் கட்றவனுக்குன்னு சில கடமைகளும் நியதிகளும் இருக்குடா கணேசா. அதுலேர்ந்து அவர் தப்பிச்சு ஓடிப்போனப்பறம் அந்த கயத்துக்கு பொம்மனாட்டி மட்டும் எதுக்கு மரியாதை குடுக்கணும்? இது என் கழுத்துல தாலியா இருக்கறதை விட உன் உடம்புல சட்டையா இருக்கிறது அவசியம்னு தோணித்து. அதான் அவுத்துட்டேன்.
அம்மா பெருமூச்சு விட்டாள்.
கணேசன் பிரமிப்போடு அம்மாவைப் பார்த்தான். மானசீகமாக நமஸ்கரித்தான். ரயில் புறப்படுவதற்கான விசில் சத்தம் கேட்டது.
அம்மா கண்ணுக்கு மறைந்தாள். மனசுக்குள் நிறைந்தாள்.
2
அப்பாவுக்குப் பின்னால் பழைய டிரங்குப்பெட்டியோடு வந்தவனை அனைவரும் வியப்போடு பார்த்தார்கள்.புது வேலைக்காரனாப்பா?
முரளியின் கேள்வியில் திமிர் இருந்தது.
வாய மூடுடா!
மாமா அடிக்குரலில் சொல்லிவிட்டு உள்ளே போக கணேசனும் தயங்கி உள்ளே சென்றான்.
வெகு காலமாக எந்தவிதமான போக்குவரத்துகளும் சந்திப்பும் இல்லாத குடும்பங்கள். மாமா அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.திருநெல்வேலில எனக்கு ஒண்ணுவிட்ட தங்கை காமாட்சின்னு இருக்கிறதா சொல்லுவேன் இல்லையா? அவ பிள்ளை கணேசன்.
இங்க என்ன வேலையா வந்திருக்கான்?
அம்மாமி கேட்டதும், மாமா ஒருகணம் மெளனமானார்.அப்பறம் சொல்றேனே. மொதல்ல எங்களுக்கு சாப்பாடு எடுத்து வை பசிக்கறது… குளிச்சுட்டு வரோம். கணேசா கொல்லைப் பக்கம் பாத்ரூம் இருக்கு போய் குளிச்சுட்டுவா
மாமா அவனை அனுப்பி வைத்தார். அவன் வருவதற்குள் மாமியிடம் விஷயம் சொல்லியிருப்பார் போலும். மாமி அதற்குப் பிறகு எதற்கு வந்தான் என்று கேட்கவில்லை. ஆனால் அவள் முகம் கல்லுப்போல இறுக்கிக் கிடந்தது. அவள் பரிமாறிய அன்னத்தில் மருந்துக்குக் கூட பரிவில்லை.
வீட்டின் பின் பக்கம் உபயோகமற்று இருந்த ஒரு அறையை சுத்தம் செய்யச் சொல்லி அதில் அவனை தங்கிக் கொள்ளச் சொன்னார். பத்துப் பதினைந்து நாட்கள் வரையில் மாமா வேலை பற்றி எதுவும் சொல்லவில்லை. வெட்டியாய் உட்கார்ந்து சாப்பிட்ட போது உடல் கூசியது.
மாமி சொன்ன எடுபிடி வேலைகளைச் செய்தான். மிச்ச நேரத்தில் தோட்டத்தை தனக்கு தெரிந்த வரையில் சீர்படுத்தினான். புதிதாய் சில செடிகளை நட்டு வைத்தான். தேவையற்று முளைத்திருந்த புற்களைப் பிடுங்கிப் போட்டான். வீட்டை விட தோட்டம் மனசுக்கு இதமாய் இருந்ததால் நிறைய நாழி தோட்டத்திலேயே கழித்தான். அவனோடு அதிகம் யாரும் பேசாதது வேறு மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது. மாமாவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழில். சொந்தமாய் பாக்டரியும் நிர்வாக அலுவலகமும் வைத்திருந்தார். ஒரு மாதம் கழித்து மெதுவாக வேலை பற்றி மாமாவிடம் கேட்டான். தோடி ராகத்தில் ஆழ்ந்து போயிருந்தவர் அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
டைப்பிங் தெரியுமா உனக்கு?
தெரியாது.
வெறும் பி.ஏ. பட்டம் இப்பொ எதுக்கும் பயன்படாது கணேசா. அனுபவம் வேணும். மொதல்ல அப்ரண்டிஸா நம்ம கம்பெனில சேர்ந்துக்கோ. சம்பளம் கம்மிதான். எல்லாத்தையும் கத்துக்கோ. வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்னா நிறைய கத்துக்கணும். பொறுமையா இருக்கணும். அவமானம் தாங்கணும். உறுதியா இருக்கணும். உன்னால முடியுமா? எதுக்கு கேக்கறேன்னா வந்து ஒரு மாசம் கழிச்சுதான் நிதானமா வேலை பத்தி கேக்கற. உனக்கு வேகம் இருந்திருந்தா வந்த மறுநாளே என் பின்னாடி ஓடி வந்திருக்கணும். நான் சொல்லாமயே எல்லாத்தையும் கத்துக்க முயற்சி செய்திருக்கணும். பச்சைக்கொடியை நான் திருநெல்வேலிலயே காட்டியாச்சு. மறுபடியும் நான் காட்டணும்னு நீ எதிர்பார்க்கக் கூடாது.
மாமா சொல்லச்சொல்ல நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. தன்மீதே எரிச்சல் வந்தது. தலை குனிந்து நின்றான்.
இன்னிக்காவது கேட்டயே, சந்தோஷம். ஒம்போது மணிக்கு ஆபீஸுக்குப் போ. நா சொல்லிடறேன். என் சொந்தம்னு அங்க உனக்கு எந்த சலுகையும் கிடைக்காது. புரிந்ததா? ஆனா திறமைக்கு நிச்சயம் மரியாதையும் உயர்வும் உண்டு. ஐ விஷ்யூ ஆல் தி பெஸ்ட்.
மாமா போய்விட்டார். கணேசன் குளித்து பளிச்சென்று உடையணிந்து நெற்றியில் விபூதி இட்டு, அம்மாமியை நமஸ்காரம் பண்ணுவதற்கு வந்தான்.
நன்னாரு! மாமாக்கு கெட்ட பேர் வராம நடந்துக்கோ. தோட்டத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ
அம்மாமி உள்ளே போனாள்.
கம்பெனி பெரிதாக இருந்தது. நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நிர்வாகப்பிரிவில் நிறைய பெண்கள் இருந்தார்கள். கம்ப்யூட்டர் செக்ஷன் தனியாக இருந்தது. ஏஸி செய்யப்பட்டிருந்தது. லேசாக வழுக்கை விழுந்திருந்த சிகப்பான மனிதர் ஒருவர் கணேசனை அழைத்தார்.
உட்காருங்க.
உட்கார்ந்தான்.
பேப்பர் வெயிட்டை உருட்டியபடியே பேசினார் அந்த மனிதர்.
"நான்தான் ஏ.ஓ. அதாவது அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸர். சம்பள பில்லுல கையெழுத்து போடறவன். நீ முதலாளிக்கு சொந்தம்னு எனக்கு மட்டும்தான் தெரியும். வேற யாருக்கும் தெரியாது. நீயும் சொல்லக் கூடாது. முதலாளியவோ மத்தவங்களையோ தெரிஞ்சா மாதிரியும் காட்டிக்கக் கூடாது.
உன்னோட வேலை இப்போதைக்கு கோடவுண்லதான். ராமெட்டீரியல்ஸ் எல்லாம் வரும். இறக்கி வெச்சுக்கணும். எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுக்கணும். எதுவும் குறையப்படாது. குடுத்ததுக்கு கணக்கு சரியா இருக்கணும். கோடவுண் ரெண்டு பில்டிங் தள்ளி இருக்கு.
உன் அப்பாய்ண்ட்மெண்ட் இதுல இருக்கு. அட்டெண்டென்ஸ்ல கையெழுத்து போட்டுட்டு நீ போகலாம். தென்… இங்க பங்க்ச்சுவாலிட்டி முக்கியம். ரெண்டு நிமிஷம் லேட்டா வந்தா கூட ஆப்ஸென்ட்தான். சம்பளம் கட். அதே நேரம் உன் வேலை பாராட்டும் படியா இருந்தா டபுள் இன்க்ரிமென்ட் கூட கிடைக்கும். இன்ஸென்டிவ் கிடைக்கும். ஸோ… கரெக்டா ஒன்பது மணிக்கு நீ உன் வேலையை ஆரம்பிச்சுடணும். லேட்டுங்கற சமாச்சாரமே வேண்டாம்."
கணேசன் அவர் நீட்டின கவரை எடுத்துக் கொண்டு கோடவுண் சாவியை பெற்றுக் கொண்டு நடந்தான்.
கோடவுண் வந்து சாவி போட்டு திறந்ததும் முதல் காரியமாக தன் அப்பாய்ண்ட்மெண்ட் கடிதத்தை பிரித்து படித்தான். சம்பளம் எவ்வளவு போட்டிருக்கிறது என்று. எழுநூறு என்றிருந்தது. இவ்வளவுதானா…? கணேசனின் உற்சாகம் சட்டென்று வடிந்தது. சற்றுநேரம் சோகமாக உட்கார்ந்தான். பிறகு ஒரு