Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varalama Unnodu
Varalama Unnodu
Varalama Unnodu
Ebook248 pages1 hour

Varalama Unnodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Varalama Unnodu

Read more from Anuradha Ramanan

Related to Varalama Unnodu

Related ebooks

Related categories

Reviews for Varalama Unnodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varalama Unnodu - Anuradha Ramanan

    12

    1

    சற்றே திறந்திருந்த அந்தச் செப்பு வாயில் ஈக்கள் மொய்க்கிறது. தன்னைச் சுற்றி இத்தனை பெரிய கூட்டம் நிற்பதையும், அத்தனை ஜோடிக் கண்களும் தன்னை ஈக்களை விடவும் மோசமாய் மொய்ப்பதையும் அறியாதவளாய், இசகு பிசகான நிலையில் தரையில் மல்லாந்து கிடக்கிறாள் அவள்.

    கார்த்திக்கின் தோளைப் பிடித்தபடி, ஜனா எம்பிப் பார்க்கிறான். அது என்னவோ நெஞ்சில் சொல்லத் தெரியாத துக்கம் அடைக்கிறது.

    டேய்... செத்தே போயிட்டாளாடா..?

    அவன், தனது நண்பனின் காதில் கிசுகிசுக்க, அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் திருஷ்டி இவன் பக்கம் திரும்ப, ‘கப்சிப்’பென அடங்குகிறான்.

    ஜனாவுக்குப் போலீஸ் என்றாலே பயம்.

    சின்ன வயதில், எதற்கும் அடங்காமல் அழும் ஜனாவை, அவன் அப்பா இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் பயமுறுத்துவார்.

    டேய்... ஜட்டிய எடுத்து மாட்டுறா. இல்லே... அதோ போலீஸ் வந்துகிட்டேயிருக்கு. ஜட்டி போடாத பசங்களை எல்லாம் வேன்லே பிடிச்சுட்டுப் போய், ஜெயில்லே போட்டுருவாங்க. அங்கே இன்ஸ்பெக்டர் கையில கத்திரிக்கோலை வச்சுகிட்டு...

    அப்பா சொல்வதைக் கேட்கும்போது அவனது மயிர்க்கால்களிலெல்லாம் சிலிர்ப்பு பரவும்.

    இப்பொழுது கூட அந்தச் சிலிர்ப்பு.

    பழைய பயம் இல்லாவிட்டாலும், போலீஸ் என்றாலே ரொம்பவும் மரியாதை கலந்த பக்தி உண்டு.

    எல்லாரும் தள்ளிப் போங்க. கூட்டம் போடாதீங்க. யோவ்... உங்க கிட்டத்தானே சொல்லிட்டிருக்கேன். அறிவில்லே..?

    போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் - தன் பங்குக்கு மரியாதையைத் தேடிப் பிடிக்க முயன்று கொண்டிருக்க...

    ஜனாவைப் போல, கும்பலிலுள்ள அத்தனை பேருமே போலீசுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகத் தெரியவில்லை.

    அவர்கள் பாட்டுக்கு உடம்பை இப்படி அப்படி அசைத்தார்களே தவிர, நகர்கிற வழியாய் இல்லை.

    முதல் நாள் பெய்த மழையில், களிமண் தரை ‘சொத சொத’ வென்றிருக்கிறது.

    அந்த ஈர மண்ணில் தனது ஷிபான் புடவை நனைந்து நாசமாகிப் போனதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாதவளாக அவள்...

    இதற்குள் ஆங்காங்கே செத்துப் போனவளைப் பற்றிய விமரிசனங்கள்.

    நம்ம விறகுக் கடை கோபாலு இல்லே. அவன் மச்சினிப்பா இது. தா, அந்தப் பள்ளிக்கூடத்துல எல்.கே.ஜி.க்கு டீச்சராயிருந்தது.

    அட தெரியும்பா, தெனம் சல்லாத் துணி மாதிரி ஒரு பொடவையச் சுத்திக்கிட்டு ‘டக்குடக்கு’னு நடந்து போகும். எம் மவனுக்குக் கூட இது கிட்ட ஒரு மாதிரி. வயசு தானே. ஒரே சாதியாவும் வேற போயிட்டோம். ‘இன்னாப்பா’ன்னு கேட்டான்; ‘இன்னடா’ன்னு நானும் கேட்டேன். நமக்குத் தெரியாதா? ஏன் வாத்தியாரே... அந்த வயசையெல்லாம் தாண்டித்தானே நீயும் நானும் வந்திருக்கோம். ‘பண்ணிகிட்டா இன்னாப்பா’ன் னான். ‘தோலை உரிச்சு உப்புக் கண்டம் போட்ருவேண்டா படவா’ன்னேன். அப்பாலே என்னா? ‘கப்பு சிப்பு’த்தான்.

    என்ன ஒரு பதினெட்டு, பத்தொம்பது இருக்குமா..? பாரேன், பகவானோட லீலைய? என் வீட்டுல எங்க அம்மா இருக்கா. இந்த ஆவணிக்குத் தொண்ணூறு முடியப் போறது. நித்ய கண்டம் பூர்ணாயிசு. இதுல ஒரு விசேஷம் பாருங்கோ. ஒவ்வொரு தடவையும் எங்க அம்மாவுக்காக வர்ற எமன் வேற யாரையாவது கொண்டு போயிடறான். நேத்து ராத்திரி ஒம்பது மணிக்கு ஆச்சு போச்சுன்னு கிடந்தா கிழவி. அதே நேரத்துல இங்கே இது நடந்திருக்கு. இன்னிக்கு காலமே அம்மா ‘ஜிங்’குனு எழுந்து உட்கார்ந்துட்டா. காப்பியில கரப்புப் புழுக்கை நாத்தம் வர்றதாம். மாமியாருக்கும் நாட்டுப் பொண்ணுக்கும் தகராறு.

    ஏன் சார், பொண்ணு கிடக்கிற கோலத்தைப் பார்த்தா கற்பழிச்சுக் கொலை பண்ணியிருப்பான்னு தோணறது. ஆம் ஐ ரைட்?

    அட போங்க சார். இதைக் கண்டு பிடிக்க ‘ஷெர்லக் ஹோம்ஸ்’ வரணுமாக்கும்? பொண்ணு உடம்புல குந்துமணி எடை தங்கமில்லே. காதுல கழுத்துல எல்லாம் கவரிங். கொலை பண்ணினவன் வேற எதுக்காக...

    இதுக்குத்தான் நான் என் பொண்ணுங் கிட்ட படிச்சுப் படிச்சு சொல்லிட்டிருக்கேன், ‘நாலு பேரை அட்ராக்ட் பண்ற மாதிரி டிரஸ் பண்றதாலே தானே, கண்ட கழிசடைங்க பார்வையே உங்க மேல படறது’ன்னு.

    இதைச் சொன்னவர், சொன்னதோடு நிற்காமல், ஜனாவும், கார்த்திக்கும் நின்ற பக்கம் சாடையாக ஒரு பார்வை பார்த்து ‘த்தூ’ வெனக் காறித் துப்புகிறார்.

    டேய் போகலாமா?

    கீழே விழுந்து கிடப்பவள் - கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக் கொண்டேயிருந்தாள்.

    அவள்-

    பெயர் சரோஜா என்று கார்த்திக் சொல்லித்தான் ஜனாவுக்குத் தெரியும். அனேகமாகப் பல விஷயங்கள் ஜனாவுக்குக் கார்த்திக்தான் குருவாக இருந்து சொல்லிக் கொடுத்திருக்கிறான்.

    சரோஜா-

    அவர்கள் வசிக்கும் தெருவைக் கடந்துதான் பள்ளிக் கூடத்துக்குப் போவாள். வருவாள்.

    ஜனாவின் வீட்டைக் கடக்கப் பிரியப்படாமல் அடுத்த தெரு வழியாகச் சுற்றிக்கொண்டு போனாலும் கார்த்திக்கின் கார் ஒர்க் ஷாப்பின் முகத்தில் விழிக்காமல் இருக்கவே முடியாது. அந்தக் காலனியில், அவனது ஒர்க்ஷாப் அப்படியொரு வசதியான இடத்தில் அமைந்திருந்தது.

    கிழக்குப் பார்த்துக் கூப்பிடு தூரத்தில், சரோஜா டீச்சராக இருக்கும் பள்ளிக்கூடம். வடக்குப் பார்த்து பேனரில் தமன்னாவும், சூர்யாவும் தெரியும் தூரத்தில் ரம்யா ஏர் கண்டிஷன்ட் தியேட்டர். தெற்குப் பார்த்து விசிலடித்தால் கேட்கும் தொலைவில் பெண்கள் பாலிடெக்னிக். மேற்குப் பார்த்து முனகல் சத்தம் கேட்கும் தொலைவில் பிரசவ ஆஸ்பத்திரி.

    கார்த்திக், மேற்கைத் தவிர, மற்ற மூன்று திசைகளிலும் தன் பார்வையை அலையவிட்டபடி, ஒர்க்ஷாப் வாசலில் நிற்கும் ஏதாவது ஒரு காரின் மீது ஆரோகணித்திருப்பான்.

    சரோஜா போகும்போது சத்தமாய்ப் பாடுவான்.

    சினிமாப் பாட்டுக்கள் எல்லாமே கார்த்திக்குக்காகத்தான் எழுதப்பட்டது போல் ஜனாவுக்குத் தோன்றும்.

    நிஜமாகவே சரோஜாவுக்குப் பொன்னான மேனிதான். அந்த மேனி, இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி கபில நிறத்துக்கு வந்து விட்டது.

    சரோஜா, பட்டும் படாமலுமாய், லிப்ஸ்டிக் பூசிக் கொள்வாள். பார்க்கப் போனால், அவள் லிப்ஸ்டிக் உபயோகிப்பதே அவளுடன் படிக்கும் பல பெண்களுக்குத் தெரியாது.

    இது கூட கார்த்திக்தான் சொல்லியிருக்கிறான்.

    அவளுக்குத் தன்னோட உதடு மேல அலாதி நம்பிக்கைடா. உனக்குத் தெரியுமோ? இந்த மாதிரி உதடு இருக்கற பொம்பளைங்க ‘அந்த’ விஷயத்துல ரொம்ப ஞானத்தோட இருப்பாங்க.

    ........

    நான் பாடினா மாத்திரம் கழுத்தை இந்த வெட்டு வெட்டறாளே. இந்த மாதிரி நாசூக்காக லிப்ஸ்டிக் போட்டுட்டு வராளே. இது யாருக்காகவாம்? ‘என்னைக் கவனி’ன்னு சொல்லாம சொல்லத்தானே?

    அவ ஒண்ணும் லிப்ஸ்டிக் போடலை. அவ உதட்டு நிறமே அப்படி...

    மடையா, மடையா, இவளோட தாழம்பூ நிறத்துக்கு இவ உதடு ‘க்ரிம்ஸென் ரெட்’ ஒன் டிராப்பும், ‘ஒயிட்’ பத்து டிராப்ஸும் கலந்தா என்ன நிறம் வருமோ... அந்த நிறம்தான் வரும். இது ‘ஸ்கார்வேட் லேக்’, தினமும் வெத்தலை போடற பொம்பளைக்கு இந்த நிறம் வரலாம். ஆனா, பல்லு முழுக்கக் காவியேறி பார்க்கச் சகிக்காதுடா கண்ணா...

    ‘ஆங்’ கென்று வாய் பிளந்து நிற்பான் ஜனா.

    அப்பேர்ப்பட்ட அவளின் சிவந்த மொட்டு வாயில் ஈக்கள் மொய்ப்பதைவேறு பார்க்கச் சகிக்கவில்லை அவனுக்கு.

    ‘லிப்ஸ்டிக் தித்திக்குமோ?’

    வீட்டுக்குப் போனதும் தன் தங்கை தனலட்சுமியைக் கேட்க வேண்டுமென நினைத்துக் கொள்கிறான்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, சரோஜாவின் புடவை தாறு மாறாகக் கலைந்திருக்கிற சமயத்தில் - அதை ஓர் அல்ப ரசனையுள்ள காவல் துறை புகைப்பட நிபுணர், பாய்ந்து, பாய்ந்து புகைப்படமெடுத்துக் கொண்டிருக்கிறார்.

    இதுல ஒரு ஸ்டில் கேட்டு வாங்கி வச்சுக்கணும்.

    கார்த்திக் ஜனாவை பார்த்துக் கண் சிமிட்டுகிறான்.

    ஜனாவிற்கு, அடி வயிற்றில் வேதனை வட்ட மிடுகிறது. கார்த்திக்கின் பார்வையும் நையாண்டியும் ஜனாவிற்குப் பழக்கமானதுதான் என்றாலும் - அந்த நேரத்தில் ரசிக்கத் தகுந்ததாயில்லை.

    அவன், கார்த்திக்கை இழுத்துக் கொண்டு கிளம்புகிற நேரத்தில் கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது.

    சுமார் ஐந்தடி உயரத்தில் ஸ்தூல சரீரியாய் ஐம்பது வயசு மதிக்கத்தக்க பெண்மணியும் அவளுடன் இருபதிலிருந்து நாற்பது வரை ரகவாரியான பெண்களும் அங்கே வருகிறார்கள்.

    ஸ்தூல சரீரி, சடலத்தைப் பார்த்ததும் ஆங்கிலத்தில் அலறுகிறாள்.

    ஓ மை ஸ்வீட் லிட்டில் கேர்ள். வாட் ஹாப்பண்ட் டு யூமா?

    கார்த்திக், ஜனாவைக் கேட்கிறான்.

    இவ யாருடா?

    இந்த ஸ்கூல் பிரின்ஸிபால்.

    இவ நிக்கறப்ப இருக்கற உயரத்தை விட, படுக்கறப்ப இன்னும் உயரமாவே இருப்பான்னு தோணுது.

    ஷ்...ஷ்...

    ஜனா அவனை அடக்குகிறான்.

    இதற்குள் இன்ஸ்பெக்டர், பள்ளி தலைமையாசிரியையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

    எத்தனை வருஷமா இவங்க ஸ்கூல்லே டீச்சரா இருக்காங்க?

    ஒரு வருஷமாங்க.

    உம். எந்தக் கிளாசுக்கு?

    எல்.கே. ஜி., யூ. கே.ஜி.

    உங்க ஸ்கூல் ரிஜிஸ்தர் பண்ணின ஸ்கூல்தானே?

    ஐயோ, பின்னே இல்லையா? அவர் கரஸ்பாண்டன்ட் இஸ் வெரி ஹானஸ்ட்-

    ஓ.கே. ஸ்கூல்லே இவங்களுக்கு யாரோடயாவது சண்டை - தகராறு உண்டா?

    நோ, நோ.

    முக்கியமா உங்க கூட...

    வாட் டு யூ மீன்?

    இந்த இடத்தில் அந்தச் சரீரத்துக்கும் கழுத்து என்றொரு பாகம் உண்டு என்பது அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டதிலிருந்து தெரிய....

    அவள் பின்னால் வந்திருந்த ஆசிரியைப் படையிலிருந்து ஒரு மூஞ்சூறு குரல் கொடுக்கிறது.

    எங்க மேடத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியாது சார். எங்க அத்தனை பேருக்கும் அவங்க அம்மா போல...

    கார்த்திக் உதட்டில் தொற்றிக் கொண்டிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து, ஜனாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்கிறான்.

    உக்கும்... கிரேடு உசரணும்னா என்ன வேணுமானாலும் சொல்லுவாங்கடா. அம்மாவாமில்லே. ஒவ்வொருத்தியும் பிரசவத்துக்கு இந்த அம்மா வீட்டுக்குப் போகட்டுமே. முடியுதான்னு பார்க்கறேன்.

    இவன் பேச்சு, ஜனாவைச் சிரிக்க வைத்ததோ இல்லையோ - பக்கத்திலிருந்தவரைச் சிரிக்க வைக்கிறது. ‘ஹக்’கெனச் சிரிக்கிறார் அவர்.

    நீ வந்தா வா. நான் போறேன்.

    சட்டெனத்

    Enjoying the preview?
    Page 1 of 1