Uruga Marukkum Meluguvarthikal
()
About this ebook
Read more from Anuradha Ramanan
Kanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Neeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Velvet Manasu Rating: 5 out of 5 stars5/5Uravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5Koottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5kadhal Regai Rating: 5 out of 5 stars5/5Agini Ambugal Rating: 5 out of 5 stars5/5Oru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Kana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Oru Nadaipaathai azhugiradhu Rating: 5 out of 5 stars5/5Kadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5Maalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uruga Marukkum Meluguvarthikal
Related ebooks
Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Mazhai Mega Mayilgal Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Jayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsThottil Sugam Rating: 5 out of 5 stars5/5Unnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsMuthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsKanna Unnai Thedugirean Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Minmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Vannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Ullam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsThenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Idhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Ponmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Oru Kovil Rating: 4 out of 5 stars4/5
Reviews for Uruga Marukkum Meluguvarthikal
0 ratings0 reviews
Book preview
Uruga Marukkum Meluguvarthikal - Anuradha Ramanan
7
1
"இத்தனை வயசுக்குப் பிறகு இது அவசியமா...?"- முதலிரவுக்காக அங்கீகரிக்கப்பட்ட அறையில், காலையில் புதுசாய் அறிமுகமானவளின் வரவுக்காகக் காத்திருந்த ரங்கராஜன், மிகத் தாமதமாக யோசித்துப் பார்த்தான்.
வேறு வழியில்லை. இந்த பந்தத்தில் சிக்கியே தீர வேண்டிய நிலைமை. அவனுக்காக இல்லா விட்டாலும், ஜனனிக்காக வேனும் அவன் திருமணம் செய்து கொண்டேயாக வேண்டிய நிர்ப்பந்தம்.
இத்தனை நாள் ஜனனியைப் பார்த்துக் கொள்ள அவள் அம்மா இருந்தாள். தங்கையைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், அதே சமயத்தில் அவளைக் காப்பாற்றுவதே தனது லட்சியமாய் ஓடி ஓடி சம்பாதித்துக் கொண்டிருந்தான் ரங்கராஜன்.
காலம் முழுக்க அந்த வயசான மனுஷி துணை வருவாளா...? ஒரு நாள் ‘பொக்’கெனப் போய்விட்டாள்.
பெற்றவள், பிணமாகக் கிடப்பது கூட அறியாமல், அவள் அருகிலேயே சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பதினைந்து வயசுச் சிறுமி!
புது மனைவிக்காக காத்திருக்கும் நேரத்திலும் ஜனனியைப் பற்றிய கவலைத்தான்...
சாந்தி முகூர்த்தக் கட்டிலில் அமர்ந்து, பழசையெல்லாம் நினைத்துப் பார்க்க - என்னமோ போல்தான் இருக்கிறது. என்ன செய்வது? வெட்ட வெட்ட, ஒட்டிக் கொண்டே வரும் நினைவுகளை விரட்ட முடியவில்லையே அவனால்...
அம்மா இறந்த அன்று-
ரங்கராஜன் மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பிய போது...
தலைக்கு ஒரு மணைப் பலகையை வைத்து, திறந்த வாயை மூட மறந்து- நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அம்மா. பக்கத்தில் மாலை நேரப் பால் கார்டு, சீந்துவாரின்றி... கதவு உட்பக்கம் தாழிட்ட நிலையில்...
ஜனனி, அம்மாவை ஒட்டினாற் போல அமர்ந்து, விளையாட்டுச் சமையலில் ஈடுபட்டிருந்தாள். அம்மாவின் முகத்தில் அவள் சிறுபிள்ளைத்தனமாய் பூசியிருந்த பவுடரும், தாயின் நரைத்த கூந்தலில் அவள் செருகியிருந்த செம்பருத்திப் பூவும், ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த ரங்கராஜனுக்கு முதலில் சிரிப்பை வரவழைத்தாலும்...
இத்தனை அமர்க்களத்திலும் இந்த அம்மா நிச்சிந்தையாகத் தூங்குவது விநோதமாகத் தோன்ற...
ஏய் ஜனனி, கதவைத் திற....
ஹை... அண்ணா வந்தாச்சு! அம்மாவ்... அண்ணா வந்தாச்சு....
சிறு குழந்தையைப் போல, இரண்டு கைகளையும் தட்டிக் குதித்தபடி அவள் கதவைத் திறக்காமல் தட்டாமாலை சுற்ற....
இத்தனைக்கும் அம்மா ஆடாமல், அசையாமல், திறந்த வாயை மூடாமல் கிடக்க... உதட்டோரத்தில் ஒரு ஈ சர்வ சுதந்திரமாய் உட்கார...
மூளையை நோக்கி பளீரென சவுக்கடி கொடுத்தாற்போலத் துடித்துப் போய் நின்று விட்டான் அவன்.
கதவைத் திறடி!
எனக்கு என்ன வாங்கிண்டு வந்திருக்கே.... சொன்னாத்தான் கதவைத் திறப்பேன்...
சுருக்கத்திற... நான் உள்ளே வந்து சாக்லேட் எடுத்துத் தரேன்...
ரங்கராஜன் பரபரக்க...
நிஜம்மா தரணும். ஏமாத்தக் கூடாது...
அவள், அரை மனசுடன் கதவைத் திறக்க....
ஓடி வந்து, தாயின் உடலைத் தொட்டவன், அது குளிர்ந்து கட்டையாய்க் கிடப்பதையும், இனி அவள் எழுந்திருக்கப் போவதில்லை என்பதையும், நிதரிசனமாய்த் தெரிந்திருந்தும் ‘அம்மா, அம்மா’வெனக் கதறி, கன்னத்தை, தோளை, அழுந்தப் பற்றிக் குலுக்கி.....
ஜனனி... அம்மாவுக்கு என்ன ஆச்சு ஜனனி...?
ஒண்ணும் ஆகலையே. இங்கே தான் படுத்துண்டிருக்கிறாளே... கொஞ்ச நாழி முன்னாடி தண்ணீ கொண்டாடின்னு கேட்டா. எடுத்துண்டு வந்து தர்றத்துகுள்ள இந்தக் குழந்தை கை விடாம நை நையின்னு அழுது தீர்த்துடுத்து... ‘இரும்மா குழந்தையைத் தூங்கப் பண்ணிட்டு வரேன்’னு சொன்னேன்... அப்புறம் நான் ஆராரோ பாடினேனா... குழந்தையும் தூங்கிடுத்து. அம்மாவும் தூங்கிட்டா. எப்படி... சமத்து அம்மா... பட்டு அம்மா... பவுடர் பூசி, பூ வச்சு விட்டிருக்கேன் பாரு... ஜோராயிருக்கு இல்லே... அம்மா எழுந்துண்டு... யாரு இப்படி டிரஸ் பண்ணி விட்டதுன்னு கேட்டா... என்னைக் காமிச்சுக் கொடுக்காதேண்ணா... திட்டுவா...
வயசுக்கும், பேச்சுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லாமல் உளறும் தங்கையையே வெறித்துப் பார்த்தான் ரங்கராஜன்.
அம்மா இனிமே எழுந்திருக்கவே மாட்டா ஜனனி... செத்துப் போயிட்டா...
அவன் சொல்வது அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ... மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை இழுத்து அணைத்து முகத்துடன் முகம் பதித்து, அவன் தான் பச்சைக் குழந்தை போல் தேம்பி அழுதான்.
அண்ணன் அழுவது ஜனனிக்கு புதுசாக இருந்தது. இதுவரையில் தினம் தினம் அவள்தான் எதற்காகவாவது அடம் பிடித்து அழுவாள். இல்லா விட்டால் இவளைப் பெற்ற பாவத்துக்காக அம்மா அழுவாள். அப்பொழுதெல்லாம் இவர்களைச் சமாதானப்படுத்துபவன் ரங்கராஜன்தான்.
இன்று அவனே அழுவது அவளுக்கு அதிசயமாக இருந்தது.
அதற்குப் பின் கூட்டம் கூடியதும், அம்மாவைக் குளிப்பாட்டி எடுத்துப் போனதும், துக்கம் விசாரிக்க வந்த அண்டை அயல் பெண்களெல்லாம் இவளைக் கட்டிக் கொண்டு புலம்பியதும்...
எல்லோரும் அழுவதைப் பார்க்கையில் ஜனனிக்கும் அழுகை பிதுங்கிக் கொண்டு வந்தது. எதற்காக அழுகிறோம் என்கிற பிரக்ஞை இல்லாமலேயே ‘ஓ’வென்று அழுதாள்.
அம்மாவின் காரியங்களை முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த ரங்கராஜன், தங்கையை அழைத்து அருகில் அமர்த்தி; தலையை வருடிக் கொடுத்தான்.
அழாதே ஜன்னி... அம்மா போயிட்டா என்ன... நான் தான் இருக்கேனோல்லியா... எதுக்கு அழறே... உம்?
நீ சாயந்திரமே சாக்லேட் தர்றேன்னு சொன்னே தரவேயில்லையே...
இவளது நிலையைக் கண்டு அழுவானா, சிரிப்பானா...?
இன்று நேற்றில்லை, கடந்த ஏழெட்டு வருடங்களாகவே, ஜனனி ரங்கராஜனுக்கு ஒரு சுமையாய்...
அம்மாவுக்கு நாள் கழித்துப் பிறந்த பெண்... இவள் பிறந்த போது ரங்கராஜனுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் இரண்டாவது ஆண்டில் படித்துக் கொண்டிருந்தவன் விடுமுறையைக் கொண்டாட விசிலடித்தபடி வீட்டிற்குள் நுழைந்தவன்- அம்மாவின் உப்பிய வயிற்றைப் பார்த்து அதிர்ச்சியுற்று நின்றான்.
அப்பா, மகனின் முகத்தில் விழிக்கக் கூடத் தெம்பில்லாமல் திண்ணையோரத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
இத்தனை வயசுக்கு மேல... தோளுக்கு மேல உசந்த பிள்ளைய வச்சுண்டு, இந்தக் கண்ராவி எல்லாம் வேண்டாம்தான். வெளில தலைகாட்ட முடியலைடா ரங்கா... தூக்கு மாட்டிண்டு செத்துடலாம் போல இருக்கு...
சீச்சீ... என்னம்மா... என்னத்துக்கு தப்பு செஞ்சுட்டாப்பல இதுக்குப் போய் அலட்டிக்கறே... எனக்கு இத்தனை வருஷம் கழிச்சு, ஒரு தம்பியோ, தங்கையோ பொறக்கப் போறது சந்தோஷத்துக்குரிய விஷயம் இல்லையா... எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு...
ரங்கராஜன், நிஜமாகவே மகிழ்ந்து தான் போனான். ஆனால், ஜனனி பிறந்த இரண்டாவது மாதம் அப்பா பாரிச வாயுவினால் தாக்கப்பட்டுப் படுத்த படுக்கையாய்க் கிடந்ததும், ஜனனியின் இரண்டாவது வயதில் அவர் கண்ணை மூடியதும் நினைத்துப் பார்த்தால்...
‘இந்தப் பெண்- எல்லோரும் சொல்வதைப் போல துக்கிரியோ’ என்றுதான் எண்ண வைக்கும்-
ஊரார், அவளை அப்படித்தான் அழைத்தனர்.
அம்மாவோ, மற்றவர்கள் தன் மகளை இப்படிக் கரிப்பதைக் காணச் சகியாமல், வீட்டுக்குள்ளேயே மூடி