Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalaiyil Solkiren Vaa
Maalaiyil Solkiren Vaa
Maalaiyil Solkiren Vaa
Ebook179 pages42 minutes

Maalaiyil Solkiren Vaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465612
Maalaiyil Solkiren Vaa

Read more from Anuradha Ramanan

Related to Maalaiyil Solkiren Vaa

Related ebooks

Reviews for Maalaiyil Solkiren Vaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalaiyil Solkiren Vaa - Anuradha Ramanan

    யார் வெற்றியாளர்கள்

    தமிழக அரசின் இன்றைய நிலை ஒரு ‘கோமா’ நிலைதான்.

    என்று ஜெயலலிதா உடல்நிலை சுகவீனத்தால் அப்பல்லோ சென்றாரோ அன்றே தமிழக அரசும் சூழ்நிலை சுகவீனத்தால் செயல்படாத நிலையாகி விட்டது.

    37 பாராளுமன்ற உறுப்பினர்களையும் 134 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட ஒரு மாநில ஆளுங்கட்சி அரசின் வலிமை என்ன தெரியுமா? நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற சக்தி கொண்டது. இந்த தேர்தலில் ஒரு புரட்சித் தலைவரோ, ஒரு கலைஞரோ, ஒரு ஜெயலலிதாவோ தலைமையில் இருந்தார்கள் என்றால் இப்போது நமது பிரதமர் அமெரிக்கா சென்று இருக்க மாட்டார். ‘தமிழகத்தை தத்துப்பிள்ளையாக ஏற்கிறேன்’ என்று தமிழகத்திற்கு விஜயம் செய்திருப்பார். அந்தகோ... நம் நிலைமை அவலத்திலும் அவலம்; கேவலம் - என்ற நிலையில் ஆளும் அ.தி.மு.க. மூன்று அணிகளாகப் பிரிந்து தமிழகத்தில் நண்டுகளாகவும் டெல்லியில் மண்டுகளாகவும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    உலகளவில் அறிவாளிகளாக கோலோச்சுபவர்கள் நம் தாய் தமிழ் அறிவாளிகள். இன்றைய இந்தியாவில் தமிழக ஆளும் அரசியல் கட்சியினர் அறிவற்றவர்களாக மட்டுமல்ல உணர்வற்றவர்களாகவும் தமிழ்நாட்டை டெல்லிக்கு தாரைவார்க்கக் காத்துக்கிடக்கிறார்கள்.

    இந்திய ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம் நாத் கோவிந்த் (71) அவர்களை தேர்வு செய்துள்ளார்கள். அதே போல் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகளும் - மாயாவதி மற்றும் ராம் விலாஸ் பஸ்வானை தேர்தலில் தோற்கடித்தவரும் - முந்தய காங்கிரஸ் அரசின் சபாநாயகருமான மீரா குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 48 சதவிகித ஓட்டு இருந்தாலும் அதன் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் பலத்தோடு ஏறக்குறைய 61 சதவிகித ஓட்டுக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது

    இந்த நிலை - எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் தேர்வு செய்யப்படுவதற்கு முந்தைய நிலை. மீராகுமார் வேட்பாளராக நியமிக்கப்பட்டபின் போட்டி சற்று கடுமையாகி விட்டது.

    இந்திய அரசியலில் பெரும் மரியாதைக்குரிய தலித் தலைவர் பாபு ஜெகஜீவன் ராமின் மகளும் அரசியல் அனுபவம் அதிகம் கொண்டவருமான மீராகுமாருக்கு காங்கிரசை தாண்டியும் அன்பும், ஆதரவும் தனிப்பட்ட முறையில் உண்டு.

    எனவே ஆளுங்கட்சியின் ஆதரவில் ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றாலும் குறைந்த வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவார். அதே நேரம் எதிர்கட்சியாக இருந்தும் பீகாரின் நிதீஷ்குமார் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அங்கு அவரது கட்சியை விட லல்லு பிரசாத் யாதவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் அதிகம். எனவே பீகார், தமிழக அ.தி.மு.க ஏதேனும் உள்அடி செய்தால் நிலமை மாறவும் செய்யலாம்.

    அன்புடன்,

    ஜி.அசோகன்.

    ‘டச்’ லயே இருங்க

    சினிமா கம்பெனிகள், டைரக்டர்ஸ் ஆபீஸ்கள் இப்படியெல்லாம் சான்ஸ் தேடிக்கொண்டிருந்த சமயம் அது.

    அப்போது நான் வேலை செய்து கொண்டிருந்த ஹோட்டலில் உதவி இயக்குநர்கள், வளரும் கதாசிரியர்கள், இரண்டாம் நிலை நடிகர்கள் தங்குவது வழக்கம். இதுதவிர, புதுமுக இயக்குநர்கள் அங்கே ரூம்போட்டு கதை விவாதம் பண்ணுவதும் உண்டு.

    அந்த ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட் என்ற முறையில் அவர்கள் எல்லோரும் என்னிடம் பழகுவார்கள்.

    ஆனால், நான் அவர்களிடம் வாய்ப்போ அல்லது வாய்ப்புக்கான சிபாரிசோ கேட்டதில்லை. ஏனென்றால் நான் சினிமாவுக்கு சான்ஸ் தேடுவது அவர்களுக்குத் தெரிந்தால், எங்கே அவர்கள் மூலமாக முதலாளிக்குத் தெரிந்து, இருக்கிற இந்த ரிசப்ஷனிஸ்ட் வேலை போய்விடுமோ என்ற பயம்.

    இருக்கிற அதையும் மீறி, அங்கே தங்கியிருந்த ஒரு கதாசிரியரிடம் நான், நான் நன்றாக கதை பண்ணுவேன். கதை சொல்லுவேன். என்னை உங்களிடம் அசிஸ்டென்டாக சேர்த்துக் கொள்வீர்களா? எனக் கேட்டேன்.

    அவர், எனக்கு உதவியாளர் தேவை இல்லை. உங்களிடம் கதை இருந்தால் ஒன்று செய்யுங்கள். இயக்குநர் ஒருவர் தனது அடுத்த படத்துக்காக கதை கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவரிடம் போய்ச் சொல்லுங்கள் என்று கூறி, அந்த இயக்குநரின் அலுவலக முகவரியையும் கொடுத்தார்.

    மறுநாள், அந்த இயக்குநரின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன்.

    ரொம்ப சின்னப்பையனா இருக்கீங்க. கதை சொல்லிடுவீங்களா? இல்ல, எழுதிக் கொடுக்கிறீங்களா? எனக் கேட்டார்.

    சொல்றேன் சார். அதான் எனக்கு லாவகமா வரும் என்றேன்.

    பள்ளி ஆரம்பித்து கல்லூரிவரை கதைசொன்ன அனுபவம் இருக்கிறதே, அது தந்த தைரியம்.

    என்னை மேலும்கீழும் பார்த்த அந்த இயக்குநர், நாளை காலை ஏழு மணிக்கு வாங்க என்று சொல்லி என்னை அனுப்பினார்.

    மறுநாள், சரியாக ஏழு மணி. அந்த இயக்குநர் அலுவலகத்தில் நுழைகிறேன். இயக்குநரையும் சேர்த்து ஏழுபேர் வட்டமாக அமர்ந்து இருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் அனுபவ ரேகைகள். என்னைக் கூர்ந்துபார்த்த அவர்களிடம் அந்த இயக்குநர், பையன் ‘கான்ஃபிடென்ட்’ ஆக இருக்கிறான். என்ன கதைன்னு கேட்டிடலாம் என்று சொன்னார்.

    என்னிடம் திரும்பி தம்பி! இவ்வளவுபேர் முன்னாடி உங்களுக்குக் கதைசொல்ல ஒண்ணும் பிராப்ளம் இல்லையே

    நோ பிராப்ளம் சார் என்றேன்.

    ஆரம்பிங்க என்றார்.

    ஏறக்குறைய இரண்டு மணிநேரம் மூச்சுவிடாமல் கதையைச் சொல்லி முடித்தேன்.

    எல்லோரும் என்னை ஒருவித ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

    இயக்குநர், எனது தோளைத்தட்டி, தம்பி, அருமையா கதை பண்ணிருக்கீங்க. இன்ட்ரஸ்டிங். ஆனா, யூத் ஹீரோ சப்ஜெக்ட் இது. நான் எடுக்கப்போற படம் மிடில்ஏஜ் ஹீரோவ வச்சு. அதனால இந்தக் கதை செட் ஆகாது. ஆனா, நீங்க சினிமாவுக்கு தொடர்ந்து டிரை பண்ணுங்க, நல்லா வருவீங்க. என்று கைகொடுத்து வாழ்த்தியனுப்பினார்.

    அவர்தான் ‘கல்யாணராமன்’, ‘மீண்டும் கோகிலா’, ‘கடல்மீன்கள்’ போன்ற படங்களை எடுத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன். எனது திறமைக்கு முதன்முதலாக உற்சாக ஊசி போட்டவர்.

    அன்று, என் வாழ்க்கையில் நடந்த மேஜிக் இன்றும் என்னால் மறக்க முடியாதது.

    இப்படித்தான், வாழ்க்கை அதிசயமான ஒரு மேஜிக். அது செய்ற மேஜிக் நமக்குப் புரியாது. புரிஞ்சுதுக்கப்புறம் நின்னு நிதானமா யோசிச்சுப்பாத்தா அப்பா... அப்பப்பா...

    எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு புரியும். அப்படித்தான், நான் பவித்திரன் அவர்களைச் சந்தித்ததும். சான்ஸ்தேடி போனபோது ஒரு கம்பெனியில்

    Enjoying the preview?
    Page 1 of 1