Kadhalaal Valarnthen
5/5
()
About this ebook
Read more from Anuradha Ramanan
Koottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5Kanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Velvet Manasu Rating: 5 out of 5 stars5/5Uravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsKana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Neeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Oru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Agini Ambugal Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingskadhal Regai Rating: 5 out of 5 stars5/5Yetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsOru Nadaipaathai azhugiradhu Rating: 5 out of 5 stars5/5Varalama Unnodu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kadhalaal Valarnthen
Related ebooks
Yaaradhu? Rating: 0 out of 5 stars0 ratingsNenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsThinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Koottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsசொர்க்க வாசல்..! Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipidhal Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsThottal Tholaindhaai! Rating: 0 out of 5 stars0 ratingsImsaigal Rating: 0 out of 5 stars0 ratingsThethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsKolathai Maatravaa Rating: 5 out of 5 stars5/5Osai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyai Oru Muthaliravu Rating: 5 out of 5 stars5/5Koottukkulle Sila Kaalam... Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhikal Velicham Tharum Rating: 4 out of 5 stars4/5Vaa! Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsEn Irantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsVetrik Kudhirai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Poongatru Puthithanathu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethaney Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kadhalaal Valarnthen
1 rating0 reviews
Book preview
Kadhalaal Valarnthen - Anuradha Ramanan
12
1
இந்திரன் - மன்மதா, என் வஜ்ராயுதத்தையும், உன்னையும் சமமாகவே கருதுகிறேன். இன்னும் பார்க்கப் போனால் வஜ்ராயுதத்தை விட - நீ உயர்ந்தவன். வஜ்ராயுதத்தை - முனிவர்களிடம் உபயோகிக்க முடியாது. உன்னை மாமுனிவர்களிடமும் உபயோகிக்கலாம். நீ எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்புபவன்!
-காளிதாசன் - குமாரசம்பவம்
‘எத்தனை வயசிலிருந்து காதலிக்கிறோம்...’
சுந்தரம், மனசுக்குள் தோராயமாய் ஒரு கணக்குப் போட்டுப் பார்க்கிறான்...
‘இருபது...?’
‘ஊம்ஹும்...’
‘பதினைந்து...?’
‘நோ...’
‘பின்னே?’
‘ச்சீ... வெளியில சொன்னா சிரிப்பாங்க...’
‘அட... வெளியில யாருக்குத் தெரியப் போறது... நமக்குள்ளேயே துருவிப் பார்த்துக்கறோம்... இதுல என்ன வெட்கம்?’
‘சரி... எட்டு வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சிருப்பேனா...’
‘கரெக்ட்... எட்டு வயசுலதான்...’
‘யாரை லவ் பண்ணினே...?’
‘உதைப்பேன்டா... அப்ப என்னோட காதலி என்னோட கிளாஸ் டீச்சர் கல்யாணி இல்லே?’
சுந்தரத்துக்கு சிரிப்பு வருகிறது. எதிரில் தெரிந்த கண்ணாடியில் தன்னை ஒருமுறை உற்றுப்பார்க்கிறான்...
அழகு என்று சொல்வதற்கு பிரமாதமாய் எதுவுமில்லை. ஆனாலும் அந்த உயரமும் சற்றே பெண்மை கலந்த கண்களும்...
‘இதுலதான் அவ மயங்கினாளா...’
அவளைப் பற்றி நினைக்கும் போதே - நெஞ்சுக்குள் ஐஸ்கிரீமை வைத்து மூடினாற்போல தண்ணென்ற குளிர்ச்சி.
எட்டு வயசிலிருந்து சுந்தரம்தான் காதலித்திருக்கிறானே தவிர... எவளும் நேற்று வரையில் அப்படியொரு வார்த்தையை அவனிடம் சொன்னதில்லை.
எட்டு வயசில் கல்யாணி டீச்சர்...
மாநிறமாய் - எப்பொழுதும் லைட் கலரில் ஃபுல்வாயில் புடவை அணிந்திருப்பாள். காதில் பெரிய வளையம். அடர்த்தியான கூந்தலை அலட்சியமாய் கறுப்பு உல்லன் நூலினால் முடிந்திருப்பாள். கிட்டப் போனால் சந்தன சோப் வாசனை கிறங்கடிக்கும்...
அவனைச் செல்லமாய் ‘சுந்தர்’ என்று அழைப்பாள். எப்பொழுதாவது அவனை மடியில் தூக்கி அமர்த்திக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுப்பாள்.
குட் பாய்!
அதுவும் பரீட்சையில், முதல் ராங்க் வாங்கினால் இந்தப் பரிசு நிச்சயம் கிடைக்கும்.
அதற்காகவே சுந்தரம் ஒவ்வொரு முறையும், எல்லாப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு வாங்குவான்.
‘மெத்து மெத்’தென்ற கையினால், முதுகில் அவள் தடவும் அந்த நேரம் - சொர்க்கம்!
‘நான் பெரியவனானதும் டீச்சரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்... டீச்சர், என்னை மடியில தூக்கி வச்சுட்டு, தினமும் ‘குட் பாய்’ சொல்லி தடவிக் கொடுப்பாங்க...’
பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கையில், சிரிப்பு அலையலையாய் பொங்கிக் கொண்டு வருகிறது அவனுக்கு...
எட்டு வயசுல டீச்சர்... பத்து வயசுல நடிகையர் திலகம் சாவித்திரி...
‘ஐயோ, டவுன் ஹைஸ்கூலுக்கு எதிர்த்தாப்பல, சினிமா போஸ்டர் ஒட்டுவானுங்க... அதுல சாவித்திரி படத்தைப் பார்த்தபடி, எத்தனை மணி நேரம் நின்னிருப்பேன்...’
‘ஸ்கூல் மணி அடிச்சதும் விழுந்தடிச்சிட்டு ஓடுவேனே...’
‘அந்த நாளுல என்னிக்காவது ஒரு நாள், போஸ்டர்லே சிரிக்கிற சாவித்திரியோட உதட்டைத் தொட்டுப் பார்க்கணும்கறதுதான் என் லட்சியமா இருந்தது...’
யோசித்துப் பார்த்த சுந்தரத்துக்கு, இருபது வயசில் எத்தனைக் குழந்தைத்தனமாய், எத்தனை பெண்களை மனசாரக் காதலித்திருக்கிறோம் என்கிற நினைப்பு - லஜ்ஜைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது...
பதினாறு வயசு வரையில், காதல் என்றால், நமக்குப் பிடித்த பெண்ணின் மடியில் தலை வைத்துப் படுப்பது தான் என்கிற எண்ணம்...
பதினெட்டு வயசில், சினேகிதன் உன்னிகிருஷ்ணன், இவனை தாமிரவருணிக் கரைக்கு அழைத்துப் போய் விலாவரியாகச் சொன்னான்.
எந்தா மோனே... பிரேமிக்கத் தெரியாது?
எல்லாம் தெரியும்... இவன் பெரிய இவன்... சொல்லித் தர வந்துட்டான்...
உன்னிகிருஷ்ணன், வெள்ளையாய் சிரித்தான்.
"சுந்தரம்... ஆ டீச்சர்மேல, நீ காணிச்சது பிரேமம் இல்லையாக்கும். அது பிரியம். சாவித்திரி, மீனாகுமாரி இதெல்லாம் அதே ரேஞ்ச்தான்... ஒரு பெண் குட்டியை நோக்கியால் ஸ்பரிசிக்கணும் போல தோணுனா - அது பிரேமம்... கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருன்னால்... அது மோகம்... ஆ பெண் குட்டிகூட சயனிக்கணும்னு தோணுனா.... அது காமம்... இது எல்லாத்தினும் இங்கிலீஷ்ல ஒரே வார்த்தை ‘லவ்’வாக்கும். தமிழ்லேயும் மலையாளத்துலேயும் நூறு வார்த்தை... அதாக்கும் நம்ம லேங்வேஜ்ஜோட மகிமை...’
அன்று, சுந்தரம் பிரமித்து நின்றான்... இருபது வயசில் தன்னுடன் படித்த, தன்னைவிடவும் ஒரு வருஷம் சீனியரான மாலதி என்கிற பெண்ணிடம் இவன் கொண்ட காதல், ஓரளவுக்கு வெளியில் சொல்லிக்கொள்ளத் தகுதி வாய்ந்ததாகத்தான் இருந்தது.
மாலதிக்குத் தெரியுமோ, தெரியாதோ...
இவன், அவளை ஒரு தேவதை மாதிரிதான் நினைத்தான்.
திருநெல்வேலியில், தனக்கு காதல் பாடம் நடத்திய உன்னிகிருஷ்ணன் மட்டும் அப்போது, இவன் பக்கத்தில் இருந்திருந்தால், கேட்டிருப்பான்...
‘இது லவ்வுல என்ன செக்க்ஷன்டா உன்னி?’
‘மாலதிய, நீ கல்யாணம் கழிக்க நினைக்கறியா...’
‘ஆமா...’
‘முத்தம் தர விருப்பமுண்டோ?’
‘என்னடா நீ அசிங்கம் பிடிச்ச மனுஷனா இருக்கே...’
‘நான் கேட்டதுக்குப் பதில்... முத்தம்...’
‘ஓ.கே. எனக்கு ஆசை தான்...’
‘எவிட?’
‘புரியலே...’
‘நீ ஒரு மனுஷ்யன்... உனக்கு லவ் ஒரு கேடு... எவிட முத்தம் தர விருப்பம்?’
‘முச்சந்தியிலே வச்சா கொடுப்பாங்க... தனியா இருக்கறச்சே தான்...’
‘என்டே குருவாயூரப்பா... நான் கேட்டது அதல்ல மோனே... எவிட...? கன்னமா, உதடா, எவிட?’
‘அ... அது வந்து... உச்சந்தலையில்... இல்லையின்னா புறங்கையில...’
‘நீ உருப்பட மாட்டே...’
‘ஏண்டா?’
‘இது ஒன்லி பிரேமம் குரூப் லவ்தான்... பூப் போட்டு பூஜை பண்ணு...’
சுந்தரம், மானசீகமாய் அவளுக்குப் பூப்போட்டு பூஜை செய்துதான் வந்தான்...
அதனால்தானோ என்னவோ, அவள், தனது கல்யாணப் பத்திரிகையைக் கொண்டு வந்து கொடுத்தபோது தான் அவளை அடையவில்லையே என்கிற ஏக்கத்தை விடவும், ஒரு சாதாரணன் எப்படி அவளை மனைவியாக்கி, அவளுடன் படுக்கலாம் என்கிற கோபம் தான்