Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vida Maattan Vivek
Vida Maattan Vivek
Vida Maattan Vivek
Ebook172 pages1 hour

Vida Maattan Vivek

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vida Maattan Vivek

Read more from Rajeshkumar

Related to Vida Maattan Vivek

Related ebooks

Related categories

Reviews for Vida Maattan Vivek

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vida Maattan Vivek - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    முன்னொரு காலத்தில் தமிழ் வளர்த்த சங்கத்துக்கும், இந்த இருபதாம் நூற்றாண்டில் சல்பேட்டா கள்ளச் சாராயத்துக்கும் பெயர் போன மதுரையில் ஒரு, ஞாயிற்றுக் கிழமை.

    நேரம்: மாலை ஆறு மணி.

    இடம்: ஹோட்டல் அசோகாவின் ஏர்கண்டிஷன் கசியும் கான்பரன்ஸ் ஹால். ஹால் ஜனங்களால் நிரம்பியிருக்க - ஏர்கண்டிஷன் காற்று சூடேறிக் கொண்டிருந்தது. ஹாலின் குறுக்கேயும் நெடுக்கேயும் - முக்கோண கலர் தோரணங்கள். துணி பேனர்கள். பேனர்களில் விதவித வாசகங்கள்.

    சட்டத்தை காக்கும் கூர்வாளாம்

    விவேக் அவர்களே! வருக! வருக!

    மாவீரன் விவேக்கை மதுரை மண்

    வரவேற்கிறது

    காவல்துறையின் கலங்கரை விளக்கமே!

    வருக! வருக!

    ஹால் முழுக்க பத்து தீபாவளிகளின் உற்சாகம். நிமிஷத்திற்கொருதரம் கைத்தட்டல் ஒரு சின்ன பூகம்பமாய் ஹாலை நடுக்கிக் கொண்டிருந்தது. விவேக் மேடையில் - மைக்கை கையில் ஏந்தி நடு நாயகமாய் நின்றிருந்தான். இள நீல வர்ண ஷபாரி ட்ரஸ். கண்களை இறுக்கமாய் அணைத்த குளிர் கண்ணாடி - மணிக்கட்டில் மின்னும் பொன்னிற ரோலக்ஸ் வாட்ச்.

    மேடையின் பின்னணியில் - சிவப்பு வெல்வெட் துணியில் மஞ்சள் பட்டு நூல் 'சிட்டி லைட் ஆர்ட்ஸ் கல்சுரல் அகாடமி' என்னும் எழுத்துக்களை சீராய் எம்பிராய்டரி செய்திருந்தது.

    விவேக்கின் கணீர் குரல் மைக்கின் உடம்பில் பட்டு சதுர ஸ்பீக்கர் பெட்டிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

    நம் சமூக அமைப்பு ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் அலைகளை தடுத்து நிறுத்துவது எவ்வளவு சிரமமோ... அதைவிட அதிக சிரமம் நம் சமூக அமைப்பில் நிகழும் குற்றங்களை தடுத்து நிறுத்துவது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க போலீஸ் துறை எவ்வளவு நவீனமான முயற்சிகளை கடைபிடித்தாலும் - சில குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள். நான் இந்த துறையில் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதலாய் - எத்தனையோ வழக்குகளை கையாண்டிருக்கிறேன். இந்தத் துறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு குற்றவாளிகளைக் கண்டு பிடித்திருக்கிறேன். என்னுடைய மனதில் இருக்கும் ஆசையெல்லாம் இதுதான். குற்றம் செய்யப் போகிறவர்களின் மனதில் என்னுடைய பெயர் உறுத்தலாய் இருக்க வேண்டும். குற்றத்தைச் செய்தால் 'விட மாட்டான் இந்த விவேக்!' என்கிற ஒரு சின்ன பயம் அவர்களுடைய மனதில் நிரந்தரமாய் இருக்க வேண்டும்...

    ஹாலில் ஒரு பூகம்பம் உண்டான மாதிரி கைத்தட்டல் எழுந்தது. கைத்தட்டல் அடங்கியதும் விவேக் தொடர்ந்தான்.

    சிட்டி லைட் ஆர்ட்ஸ் கல்சுரல் அகாடமியின் சார்பாக எனக்கு அளிக்கப்படும் இந்த பாராட்டு - போலீஸ் துறைக்கே அளிக்கப்படும் பாராட்டாக நான் எண்ணுகிறேன். இந்த அளவில் என்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டு - அகாடமி ஏற்பாடு செய்துள்ள - 'நேர்க்கு நேர்' நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளை சந்திக்கவும் - அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ஆர்வமாயுள்ளேன். இப்போது கேள்வி நேரம...

    மறுபடியும் கைத்தட்டல் எழுந்து அடங்கியது.

    விவேக் உருண்டை மைக்கோடு - மேடையின் முன்புறம் வந்தான். ஒவ்வொருவராய் எழுந்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள்.

    விவேக்! எங்கள் ஊரான மதுரையைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

    எனக்கு பிடிச்ச ஊர்கள்ல மதுரையும் ஒண்ணு. வயித்துக்கு வஞ்சனை செய்யாத ஊர். ராத்திரி பனிரெண்டு மணியானாலும், நாலு வகை சட்னி, மிளகாய் பொடி நல்லெண்ணையோடு மல்லிகைப்பூ மாதிரி இட்லி எந்த ஊர்ல கிடைக்கும்?

    உங்க முழுப் பேரென்ன?

    விவேக்தான்! அப்பா அம்மா வெச்ச பேரே அவ்வளவு தான்.

    கொலையாளிகளைப் பிடிக்கப் போகும் போது உங்களுக்குப் பயமாய் இருக்காதா?

    யூனிபார்மை மாட்டும் போதே... பயத்தை கழட்டி வெச்சுடற ஒரே டிபார்ட்மெண்ட்... போலீஸ் டிபார்ட் மெண்ட்தான். அதையும் மீறி எனக்கு பயமா இருந்தா உங்களுக்கு தகவல் தர்றேன். வாங்க. உங்க கையை இறுக்கமா பிடிச்சுகிட்டு போய் - கொலையாளியை பிடிக்கிறேன்...

    விவேக்! ரூபலாவையும் மதுரைக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்களா?

    இதோ! முதல் வரிசையில் என் இல்லாள் - விவேக் சொன்னதும் ரூபலா எழுந்து - கூட்டத்தைப் பார்த்து வணக்கம் சொல்ல - கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

    க்ரைம் எழுத்தாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

    வடுவூர் துரைசாமி அய்யங்காரை...

    பெண் எழுத்தாளர்களில் யாரைப் பிடிக்கும்?

    வை.மு கோதை நாயகி அம்மாளை...

    நடிகர் கமலைப் பற்றி உங்கள் கருத்து?

    ஒரு அபூர்வ நடிகர்...

    ரஜினியைப் பற்றி?

    ராஜாதி ராஜா...!

    ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ் பற்றி உங்களுடைய உண்மையான கணிப்பு என்ன?

    'மெட்ராஸ் போலீஸைக் காட்டிலும் ஒரு பர்செண்ட் புத்திசாலித்தனமானவர்கள். ஆனால் கல்ப்யூட்டர்களின் அடிமைகள்..."

    உங்களுக்கு பகைவர்கள் இருக்கிறார்களா?

    பகை எனக்குப் பகை...

    போன தேர்தலில் நீங்கள் யார்க்கு ஓட்டு போட்டீர்கள்?

    ஓட்டுப் போட பணம் கொடுப்பதும், ஒருவர் யார்க்கு ஓட்டு போட்டார்ன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்றதும் சட்டப்படி குற்றம்.

    நீங்கள் போன நாடுகளில் உங்களுக்குப் பிடித்தமான நாடு எதுன்னு சொல்ல முடியுமா?

    வெளிநாடுகள் சுத்தமாக இருக்கலாம். ஜனங்கள் சிவப்பாக இருக்கலாம். வானளாவிய கட்டிடங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு பிடித்தது இந்த அழுக்கான இந்தியாதான். இங்கே - காரில் ஒரு நாய் அடிபட்டால் 'த்ஸொ ... த்ஸொ' சொல்லி ஒரு சில விநாடிகளாவது அனுதாபப்படுகிறோம். ஆனால் வெளிநாடுகளில் காரில் ஒரு மனிதன் அடிபட்டால் கூட - ஒரு குப்பையை பார்க்கிற மாதிரி பார்த்து விட்டு போகிறார்கள். மனிதாபிமானம், மனித நேயம் நிரம்பியிருக்கிற இந்தியாவைத்தான் எனக்கு பிடிக்கிறது...

    கரகோஷம் பிய்த்துக் கொண்டு போயிற்று.

    கும்பலின் மத்தியிலிருந்து - கல்லூரி மாணவி மாதிரி தோற்றமளித்த ஒரு பெண் எழுந்து நின்றாள். கரகோஷம் அடங்கியதும் அந்தப் பெண் கேள்வியைக் கேட்டாள்.

    மிஸ்டர் விவேக்! நானும் என் தோழியும் ஒரே ஆணை காதலிக்கிறோம். எங்களில் அவர் யார்க்கு சொந்தமானவர்? இதில் இருக்கக்கூடிய ஒரே பிரச்னை அந்த ஆண் நீங்கள் தான்...

    என் அருமைத் தங்கைகளே! உங்கள் ரூபலா அண்ணி ரொம்பவும் பொல்லாதவள்...

    நீங்கள் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் திணறிய கேஸ் எது?

    அப்படியொரு கேஸ் இனிமேல் தான் வர வேண்டும்.

    பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸாரே கற்பழிப்பு செய்வதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    ஒவ்வொரு துறையிலும் இதயம் இல்லாத சில பேர் இருப்பதுண்டு. போலீஸ் துறையும் அதற்கு விதி விலக்கில்லை.

    "துபாய் நாட்டுச்

    Enjoying the preview?
    Page 1 of 1