Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil Kutram
Vaanavil Kutram
Vaanavil Kutram
Ebook99 pages33 minutes

Vaanavil Kutram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vaanavil Kutram

Read more from Rajeshkumar

Related to Vaanavil Kutram

Related ebooks

Related categories

Reviews for Vaanavil Kutram

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil Kutram - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    ஒன்று

    அந்தச் சிறிய டேப்ரிகார்டரில் ஒற்றை ஸ்பீக்கரிலிருந்து கந்தர் ஷஷ்டி கவசம் மெலிசான வால்யூமில் தவழ்ந்து கொண்டிருக்க பழைய மாடல் பிம்பாம் சுவர்க் கடிகாரம் சற்றுக் கரகரத்த சுருதியில் ஆறு முறை அடித்தது.

    ஜன்னலுக்கு வெளியே மாலை நேரம் மந்தாரமான சூரிய வெளிச்சத்தில் இருந்தது.

    வெங்கடேசன் சாயங்கால பூஜையை முடித்துக் கொண்டு அந்தக் குறுகலான பூஜையறையை விட்டு வெளியே வந்தார். ஐம்பத்திரண்டு வயதுக்கு இன்னமும் திடகாத்திரமாகவே தெரிந்தார். வெற்று மார்பில் நரைத்த முடி புசுபுசுத்தது.

    மைய அறையில் போடப்பட்டிருந்த ஈஸி சேரில் உட்கார்ந்தவர். பக்கவாட்டில் தெரிந்த கதவுக்கு அப்பால் பெரியவள் காதம்பரியும், சின்னவள் அஞ்சலாவும் கல்யாணப் பத்திரிகைகளைப் பிரித்து வைப்பதில் மும்முரமாய் இருப்பதை உணர்ந்தார்.

    பூஜை புனஸ்காரமெல்லாம் முடிஞ்சுதா? - குரல் கேட்டுத் திரும்பினார் வெங்கடேன்.

    மனைவி பார்வதி டம்ளரை நீட்டியபடி நின்றிருந்தார். அவளைப் பார்த்ததுமே மனசில் நிற்கிற சமாச்சாரங்கள் - இரண்டு பெரிய சைஸ் குங்குமப் பொட்டு அமெரிக்கன் டயமண்ட் பதித்த தங்க மூக்குத்தி.

    - வெங்கடேசன் பால் டம்ளரை வாங்கிக் கொண்டதும் பார்வதி தூணுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி சொன்னாள்.

    "மத்தியானம் தரகர் சாம்பசிவம் வந்திருந்தார்.

    என்னவாம்?

    வேற வேலையா இந்தப்பக்கம் வந்தாராம். கல்யாண வேலையெல்லாம் எந்த அளவுல இருக்குன்னு பார்த்திட்டுப் போக உள்ளே நுழைஞ்சாராம்.

    அந்த ஆளுக்கும் பொழுது போகணுமே?

    ஆனா எனக்கென்னவோ அவர் விஷயத்தோடதான் வந்தார்ன்னு படுது...

    ஏன் அப்படிச் சொல்றே...?

    சந்தடி சாக்கில் விசாரிச்சார்

    என்ன?

    தங்கம் விலை திடுதிப்பென்று உசந்துடுச்சே... என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டார்.

    அதுக்கென்ன அர்த்தம்.

    நீங்களே சொல்லுங்க...

    பேசின பவுனை நம்மால போட முடியுமான்னு தரகருக்கு சந்தேகம்.

    இது தரகருக்கு வந்த சந்தேகமா எனக்குத் தோண்ல்லீங்க.

    பின்னே...?

    மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு வந்த சந்தேகத்தை தரகர் உரசிப் பார்த்துட்டு போக வந்திருக்கார்.

    சில விநாடிகள். மவுனம் காத்த வெங்கடேசன் பின் தலையை ஆட்டினார்.

    இதில் தப்பெதுவும் இருக்கறதா எனக்குப் படலை...

    தப்பு இல்லையா?

    ஆமா...! நேரடியா கேக்காம... தரகர் மூலமா நாசூக்கா விசாரிச்சிருக்காங்களேன்னு நாம சந்தோஷப்படணும்...

    நம்ம வார்த்தையில நம்பிக்கை இல்லாமத்தானே இப்படி விசாரிச்சிருக்காங்க. சொன்ன நகையைப் போடாம் நாம் ஏமாத்திருவமா என்ன...?

    நீ... உன் பக்கத்தை மட்டும் பார்த்துப் பேசிட்டிருக்கே... கொஞ்சம் அவங்க கோணத்திலிருந்தும் பாரு...

    எனக்கென்னமோ தரகர் வந்தது மனசுக்கு சுருக்ன்னு இருக்கு.

    வெங்கடேசன் அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

    காதாம் பரி வலது காலை லேசா விந்தி விந்தி நடக்கறாங்கறதைக் காரணம் காட்டி எத்தனை பேர் அவளைத் தட்டிக் கழிச்சிட்டுப் போயிருக்காங்க. அப்படி இருக்கறப்போ இவங்க அவளை கல்யாணம் பண்ணிக்க முன் வந்ததே பெரிய விஷயம்... உடம்புல குறையுள்ள பெண்ணைக் கூட்டிட்டுப் போறோம்... வாங்கற சீர் செனத்தியையாவது குறையில்லாம் வாங்கிக்கணும்ன்னு அவங்க நினைக்கறதுல என்ன தப்பு...?

    பார்வதி மறுத்து என்னவோ சொல்ல வந்தபோது - உள் அறைக்குள்ளிருந்து அஞ்சலாவும் அவளைத் தொடர்ந்து - காலை சற்றே விந்திக் கொண்டு - பேசியபடியே - காதம்பரியும் வெளிப்பட்டார்கள்.

    அஞ்சலா... நீ எவ்வளவு பத்திரிகை எடுத்திருக்கே...?

    என்னோட ஃப்ரென்ட்ஸுக்காக... வெறும் இருபதுதான்...

    இருபது போதுமா?

    என் கல்யாணம்ன்னா அட்லீஸ்ட் இரு நூறாவது வேணும்...! உன் கல்யாணத்துக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்சை மட்டும் கூப்பிட்டா போதும்ன்னு நினைக்கிறேன்...

    காதம்பரி நெருங்கி வந்து இன்னும் கொஞ்சம் பத்திரிகைகளை அவள் கையில் திணித்தாள்.

    "இந்தா இதையும்

    Enjoying the preview?
    Page 1 of 1